
Originally Posted by
rajaramsgi
விஸ்வரூபம் படத்தில் ஒரு பாடலை கமலஹாசன் எழுத மற்ற பாடல்களை அண்ணன் வைரமுத்து எழுதி இருக்கிறார். ஆடியோ ரிலீஸ் போட்டோக்களில் அண்ணனை காணோம். ராஜா சார் வருகிறார் என்று தவிர்த்து விட்டாரா அல்லது வர முடியாத சூழ்நிலையா? யார் கண்டார்கள். அது இருக்கட்டும். இந்த வார ஆனந்த விகடனில் அண்ணன் ஒரு கேள்விக்கு பதில் சொல்லி இருக்கார் பாருங்கள்..
இதோ.. உலக மகா யோக்கியரின் பதில்.
ரங்க கோபாலன், வந்தவாசி: ''எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் நீங்கள் ரசிப்பது?''
வைரமுத்து: ''அவரது அறச் சீற்றம். ஒரு நாள் காலையில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது.
'நான் ஜெயகாந்தன் பேசுகிறேன்.’
'வணக்கம்; வைரமுத்து பேசுகிறேன்.’
'என் மகள் திருமண வரவேற்புக்கு உங்கள் மண்டபம் தேவைப்படுகிறது.’
'அது உங்கள் மண்டபம்; எடுத்துக்கொள்ளுங்கள்.’
'பொன்மணி மாளிகை’ பெயரிட்டுத் திருமண அழைப்பிதழ் அச்சிட்டவர், ஓர் இசையமைப் பாளரைச் சந்தித்து அழைப்பிதழ் தந்தாராம்.
'கட்டாயம் வருகிறேன்’ என்ற உறுதிமொழி தந்து அழைப்பிதழைப் பிரித்த இசையமைப்பாளர், திருமண மண்டபத்தின் பெயரைப் பார்த்ததும் திகைத்துப்போனாராம். 'நான் அங்கு வர முடியாதே’ என்று நெளிந்தாராம்.
விசுக்கென்று எழுந்து வாசல் வரை சென்ற ஜெயகாந்தன் விறுவிறுவென்று திரும்பிவந்து, 'நீதான் திருமணத்திற்கு வரப்போவதில்லையே! உனக்கெதற்கு அழைப்பிதழ்?’ என்று அழைப் பிதழைப் பறித்துக்கொண்டு வெளியேறிவிட்டா ராம்.
இந்தச் சம்பவத்தை ஒரு நண்பரின் வாய்மொழியாக அறிந்தேன்.
கண்ணதாசன் வரியைப் பொருத்தி ஜெயகாந் தனை நினைத்துக்கொண்டேன்.
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?’ ''
Bookmarks