-
20th January 2013, 12:49 PM
#1411
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Vankv
என் அப்பா 45% பத்மநாப ஐயர், 20% barrister, 35% தா.ஒ.தா. ராஜசேகர்!! அப்பா கோபப்படும்போது இந்த அனைவரதும் உடல் மொழி ஒன்றாக தெரியும். அப்பா! 'hope you are comfortable up there!!, luv u!!

'
So as my grand pa.(mom's side). Both of them will be smiling at us on this strange remembrance and will be confortable up there .
-
20th January 2013 12:49 PM
# ADS
Circuit advertisement
-
20th January 2013, 12:50 PM
#1412
Junior Member
Newbie Hubber
Ganpat,
Great "alakshiyam" from your side.
-
20th January 2013, 02:50 PM
#1413
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Vankv
என் அப்பா 45% பத்மநாப ஐயர், 20% barrister, 35% தா.ஒ.தா. ராஜசேகர்!! அப்பா கோபப்படும்போது இந்த அனைவரதும் உடல் மொழி ஒன்றாக தெரியும். அப்பா! 'hope you are comfortable up there!!, luv u!!

'
இதுதான் அவரின் சாதனை!
பாசமலர் பார்த்துவிட்டு வீடு திரும்பும் எந்த ஆணும தன் தங்கைக்கு ஒரு முழம் பூவாவது வாங்கி செல்வான்.
திருவிளையாடல் பார்த்த எவரும் ஒரு தடவை சிவன் கோவிலுக்கு செல்வர்.
தங்கப்பதக்கத்தை மனைவி சகிதம் பார்க்கும் எவனும் "அந்த காட்சி"யில் தன்னையும் அறியாமல் அருகில் அமர்ந்திருக்கும் மனைவியின் கையை பற்றுவான்.வியந்து திரும்பும் அவன் மனைவியின் பார்வையிலிருந்து அவன் விழிகளிலோடும் நீரை, அரங்க இருட்டு மறைக்கும்.வெளியே வந்த மனைவிக்கு இன்னுமொரு அதிசயம்..தன் முசுட்டுக்கணவனா "ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வீடு போலாமா?" என வினவுவது! பாவம் அவள் எப்படி அறிவாள்? அது நோபல் பரிசு பெறத்தக்க "சவுத்ரி effect " என்று!
இவ்வளவு ஏன்? நேற்றைய நிகழ்ச்சியில் (Vijay TV) வ.உ.சி. யின் கொள்ளுப்பேரன் சொல்கிறார்."நான் என் பாட்டனாரை நேரில் கண்டதில்லை. அந்த குறையை "கப்பலோட்டிய தமிழன்" திரைப்படம் தான் தீர்த்து வைத்தது" என்று.
இன்னொரு ரசிகர், தன் தாயை நான்கு வயதில் பறிகொடுத்துவிட்டு சிலகாலம் சென்றபின் தன் தந்தையுடன் "நான் பெற்ற செல்வம்" திரைப்படத்திற்கு சென்றதையும் அங்கு "நான் பெற்ற செல்வம்" பாடலின் போது தன் தந்தை விம்மி அழுவதைப்பார்த்த தான், காரணம் அறியாது திகைத்ததையும் நினைவு கூர்ந்தார்.
தெய்வ பக்தி,தேசபக்தி,அன்பு,பாசம்,காதல்,வீரம்,கம்பீரம்,பெ ருந்தன்மை இவற்றின் ஊற்றல்லவோ அவர் ஏற்ற வேடங்கள்.
முடிவாக தலைவர் அழுது நடிப்பதை கிண்டல் செய்து செக்கச்லோவாக்கியா திரை நிபுணர்களும்,மிருனாள் சென்னும், ஆண்கள் அழக்கூடாது என சொல்லியுள்ளதாக RP ராஜநாயகம் என்பவர் தன் பதிவில் எழுதியிருந்ததிற்கு நான் கொடுத்த பதில்:
நல்ல வேளை...
செக்கோஸ்லோவாக்கியர்களோ,மிருணாள் சென்னோ இதை பார்க்கவில்லை!
மேலும் மிருணாள் சென் கமல் அழுது பார்த்ததில்லை..
ஆண் அழுகைக்கே bench marks..
சிவாஜி தங்கபதக்கம் படத்தில் தன் மனைவியின் உடல் முன் அழுவது.
நடிகர் சாமிக்கண்ணு உதிரிப்பூக்கள் படத்தில் தன் தாயை இழந்த சிறுவனுக்கு மொட்டை போட தலையில் கத்தி வைத்து விட்டு அழுவது.
மகாநதியில் கமல் தன் மகளை சிகப்பு விளக்கு பகுதியிலிருந்து மீட்டு வந்து விட்டு வீட்டில் அவள் தூக்கத்தில் உளருவதைப்பார்த்து அழுவது..
என்னது ஆண்கள் அழக்கூடாதா?
to hell with Mirunal sen and the Czechoslovakians.
Last edited by Ganpat; 20th January 2013 at 02:53 PM.
-
20th January 2013, 03:07 PM
#1414
Junior Member
Devoted Hubber
ref: # 1524
Dear Gopal,
இருக்காதா பின்னே!
எனக்கும் அவருக்கும், ஒரே பேர், ஒரே ஜன்ம நட்சத்திரமில!!
Last edited by Ganpat; 20th January 2013 at 03:10 PM.
-
21st January 2013, 09:51 AM
#1415
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Vankv
பீம்சிங்- நடிகர் திலகம் கூட்டணியின் படங்களில் வரிசைப்படி எனக்குப்பிடித்தவை:
1- படித்தால் மட்டும் போதுமா
2- படிக்காத மேதை
3- பாசமலர்
4- பாவமன்னிப்பு
5- பார் மகளே பார்
6- பாலாடை
7- சாந்தி?
8- பாலும் பழமும்
9- பச்சை விளக்கு
10- பலே பாண்டியா
மற்றவை பார்க்கவில்லை
பலே பாண்டியா- பந்துலு- பீம்சிங் இல்லை.
எனது top 10- NT -பீம்சிங் கூட்டணியில்.
1)படிக்காத மேதை.
2)பாக பிரிவினை.
3)ராஜா ராணி.
4)பாச மலர்.
5)படித்தால் மட்டும் போதுமா?
6)பாலும் பழமும்.
7)பார் மகளே பார்.
8)பாவ மன்னிப்பு,
9)பாலாடை.
10)பாதுகாப்பு.
-
21st January 2013, 10:51 AM
#1416
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Vankv
இதென்ன தனியான ஒரு screen play? சரி சரி, சொந்த அனுபவம் போல. கண்பட்டண்ணாவும் கோவாலண்ணாவும் ஒண்ணோ?
sorry, I couldn't help myself laughing!
சகோதரி,
என்னையும் ஆபத்தில் மாட்டி, ID cancel பண்ண வழியா? நல்ல பீம்சிங் ரசிகை! நல்ல பாசமலர் தங்கை!!!
-
21st January 2013, 11:22 AM
#1417
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Vankv
இதென்ன தனியான ஒரு screen play? சரி சரி, சொந்த அனுபவம் போல. கண்பட்டண்ணாவும் கோவாலண்ணாவும் ஒண்ணோ?
sorry, I couldn't help myself laughing!
சரி சரி, சொந்த அனுபவம் போல.
1974 ஆம் ஆண்டு சென்னை சாந்தி திரையரங்கில்,இவ்வாறு நான் செய்திருந்தால் "தர்ம அடி" கிடைத்திருக்கும்.
1981 ஆம் ஆண்டிற்கு பின் இப்படத்தை பார்க்கும் பேறு எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.
கண்பட்டண்ணாவும் கோவாலண்ணாவும் ஒண்ணோ?
ஆம் .. அறிவால்,நகைச்சுவை உணர்வால்,ரசனையால்,நேர்மையான மனதினால்,வணங்கும் தெய்வத்தால்,பெற்ற பட்டத்தால் (Degree),பணி புரிந்த நிர்வாகத்தால்,'சில' பலவீனங்களால்,,
இல்லை..துடிப்பால்,சக்தியால்,தோற்றதால்,தைரியத்தால், ஜாதகத்தால்....
sorry, I couldn't help myself laughing!
என்னே உங்கள் ஹாஸ்ய உணர்வு !!
-
21st January 2013, 12:12 PM
#1418
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Vankv
..........
அம்மணி,
NT யின் double role ,triple role ,nine roles ரசிக்க படும் திரிகளில், அவர் ரசிகர்களால், சக ரசிகர்களின் double role , triple role ரசிக்க படுவதில்லை, தண்டனை உண்டு என்று உணர்ந்த பின்னும் , துணிந்து double role எடுத்து கொள்வேனா சகோதரி.
-
21st January 2013, 12:35 PM
#1419
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Vankv
Oh come on, it's a joke. I know you two are really TWO, both of you are online now. It's me and my quirky sense of humor!!!

அப்பாடா! ஹாஷ்யம்தானா? பயந்து நடுங்கி காய்ச்சலே வந்து விட்டது சகோதரி.
-
21st January 2013, 12:36 PM
#1420
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Vankv
Let me suggest something; why don't you two go to one of those special NT movie releases and authenticate your id's?
one of the moderators saw us together in person.
Bookmarks