பிரதீப் பாலு சார்,
இது வரை பார்க்காத பல அபூர்வமான புகைப்படங்கள். நன்றி. மேலும் பல புகைப்படங்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். மேலும் இந்தப் புகைப்படங்கள் தொடர்பான விபரங்களையும் இயன்ற அளவுக்கு தரவேண்டுகிறேன். தொடர்ச்சியாக இந்தத் திரியில் தங்களை எதிர்பார்க்கிறேன்.
Last edited by jaisankar68; 11th February 2013 at 05:53 PM.
ரூப் சார்,
மதுரை வீரன் படத்தில் தீர்த்தகரைதனிலே பாடல் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய பாடல். நாடோடி படத்தில் கண்களினால் காண்பதெல்லாம் மனதினிலே பார்த்துவிட்டேன் என் பாட்டினிலே ஒருவன் வந்தான் என்ற பாடல் பி.சுசிலா அவர்கள் பாட நடுவே டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் குரலில் ஹம்மிங் மட்டும் வரும். இரண்டு பாடல்களையும் பல முறை சிறுவயதில் கேட்டிருக்கிறேன். தற்போது அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. உலகம் சுற்றும் வாலிபன் பாடல் படத்தின் நீளம் கருதி படமாக்கப்படவில்லை என அறிகிறேன். மேலும் சிரித்து வாழ வேண்டும் படத்தில் வரும் கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் பாடலும் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காகப் பதிவு செய்யப்பட்டது. நீளம் கருதி குறைக்கப்பட்டு பின்னர் சிரித்து வாழ வேண்டும் படத்தில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. அண்ணா நீ என் தெய்வம் , உன்னை விட மாட்டேன் படப் பாடல்கள் கேட்டிருக்கிறேன். நவரத்தினம் படத்தில் மானும் ஓடி வரலாம் பாடல் படம் வெளிவந்த தருணத்தில் மட்டுமல்லாமல் 1987ஆம் ஆண்டு தலைவர் நம்மை விட்டுப் பிரிந்த சமயத்தில் எங்கள் ஊரில் அப்படம் திரையிடப்பட்ட போதும் அந்தப் பாடலைப் பார்த்திருக்கிறேன். பின்னர் அது என்ன காரணத்தினாலோ நீக்கப்பட்டுள்ளது. (குடித்தவரைப் போல நடித்து தனியே வீட்டை விட்டு வந்த பெண்ணுக்கு அறிவுபுகட்டுவதாக வரும் காட்சி). உங்களிடம் அண்ணாவைப் பார்க்கிறேன் என்ற பாடல் விஜய் டிவியில் மட்டும் ஒளிபரப்பப்படுகிறது. பிற விசிடி மற்றும் டிவிடிகளில் நீக்கப்பட்டுள்ளது.
ரூப் சார், 500 பதிவுகள் தந்தமைக்கு வாழ்த்துக்கள். இன்றும் அற்புதமான பல பதிவுகளை தர வேண்டுகிறேன். தொடரட்டும் தங்கள் சேவை.
வ.ஜெய்சங்கர் & ஜெ. வள்ளிநாயகம்.
Last edited by jaisankar68; 11th February 2013 at 06:15 PM.
இதோ தங்களுக்கென நாடோடி படத்திற்காக பதிவு செய்யப் பட்டு படத்தில் இடம் பெறாத, ஆனால் நம் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்ற மெல்லிசை மன்னரின் அற்புத கானம். இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் அந்தக் காலத்தில் இப்பாடலைக் கேட்ட நாட்கள் நெஞ்சில் நிழலாடும்.
இப்பாடல் படத்தில் இடம் பெறாதது மிகவும் மன வருத்தமே.
கண்களினால் காண்பதெல்லாம்
மன*தினிலே பார்த்து விட்டேன்
என் காட்சியிலே ஒரு கடவுள் இல்லை
மன சாட்சியென்றே நீ இருந்தாய்
கண்களினால்..
முல்லைக் கொடிக்கு தேர் கொடுத்தாய்
முத்து நகையை வாழ வைத்தாய்
நெல்லின் மணிபோல் பாலில் நெய்போல்
நெஞ்சில் இருந்தே நீ சிரித்தாய்
வ*ள்ள*ல் ம*ன*மே பிள்ளை குணமே
அள்ளி அணைக்கும் தாய் அல்ல*வோ
ஹா ஹா ..ஹா .ஹா..
கண்களினால்... காண்பதெல்லாம்
உன்னைத் தொட*ர்ந்தே நான் வந்தேன்
ஓசை கேட்டே நான் சிரித்தேன்
சொன்ன* மொழியில் உள்ள*ம் அறிந்தேன்
த*ன்னை ம*ற*ந்தே த*வ*ழுகின்றேன்
இன்ப*மேனும் துன்ப*மேனும்
பாதி பெற*வே நான் வ*ந்தேன்
ஹா ஹா ..ஹா .ஹா..
கண்களினால் ...காண்பதெல்லாம்
மன*தினிலே பார்த்து விட்டேன்
என் காட்சியிலே ஒரு கடவுள் இல்லை
மன சாட்சியென்றே நீ இருந்தாய்
kangalinal kanbadhellam
manadhinile parththu vitten - en
katsiyile oru kadavulillai
mana satsi enren niyirunthay
(kangalinal)
mullaik kodikku ther koduththay
muththu nagaiyai vaza vaiththay
nellil mani pol palil ney pol
nenjsil irunthe ni siriththay
vallal maname pillai guname
alli anaikkum thayallavo
aha..aha..aha..a...a,,,
(kangalinal)
unnaith thodarnthe nan vanthen
osai kette nan siriththen
sonna moziyil ullam arinthen
thannai maranthe thavazugiren
inbamenum thunbamenum
padhi perave nan vanthen
aha..aha..aha..a...a,,,
(kangalinal)
film : nadodi
singer : ps,
lyric : kannadasan
music : msv
actors : mgr, sarojadevi
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
முதற்கண் 800 பதிவுகளை என்னால் முடிந்த வரை சிறப்பாக செய்ய உதவிய திரு.வினோத் சார், திரு. ராமமூர்த்தி சார் இருவருக்கும் எனது நன்றிகள்.
மேலும் அவ்வப்போது அலைபேசியிலும் திரியிலும் வாழ்த்துக்களும் உற்சாகமும் நல்கிய நல்உள்ளங்கள் திருவாளர்கள். ரவிச்சந்திரன், கலியபெருமாள் விநாயகம், செல்வகுமார், சைலேஷ் பாசு, ரூப்குமார், பிரதீப் பாலு, மற்றும் வாசுதேவன், ராகவேந்திரா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள்.
பல அறிய தகவல்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த மய்யம் திரிக்கு நன்றிகள். பல நீண்ட நாள் கனவுகள் இத்திரியின் மூலம் நனவாகியுள்ளன. மேலும் பல தொடர்ந்த பங்களிப்பில் ....
மக்கள் திலகம் பற்றி நெகிழ்ச்சியான சம்பங்களை பல இடங்களில் தொடர்ந்து சொல்லி வருபவர் பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள். ஆனால் மக்கள் திலகத்துடனான அவரது புகைப்படம் இது வரை எங்குமே நான் பார்த்ததில்லை. வைத்திருப்பவர்கள் பதிவிட வேண்டுகிறேன்.
Bookmarks