-
6th April 2013, 03:12 PM
#2501
Senior Member
Seasoned Hubber
நடிகர்திலகத்தின் காட்சி finish பண்ணும் போது character -action -mood ஆகிய அனைத்தையும் ஒரு சிறு gesture மூலம் establish பண்ணும் அழகு.
நூற்றுக்கு நூறு உண்மை. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு காட்சியிலும் இதனை நாம் காணலாம். இதனை நான் முன்பே வேறொரு பதிவில் சுட்டிக் காட்டியிருக்கிறேன். உதாரணத்திற்கு மணமகன் தேவை படத்தைக் கூற விரும்புகிறேன். பானுமதியின் வீட்டிற்கு முதல் முறை வரும் போது காரில் வருவார். அப்போது அவர் வீட்டில் காரை நிறுத்தி விட்டு உள்ளே போக வேண்டும். காரை நிறுத்தி, இன்ஜினை அணைத்து விட்டு சாவியை எடுத்துக் கொண்டு வந்து அந்த காட்சியை முடிப்பார். அதன் பிறகு காட்சி வீட்டிற்குள் தொடரும். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு காட்சியிலும் முடிக்கும் போது ஒரு ரிதம் இருக்கும், perfect finish இருக்கும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
6th April 2013 03:12 PM
# ADS
Circuit advertisement
-
6th April 2013, 03:23 PM
#2502
Senior Member
Seasoned Hubber
அன்பு நண்பர் P_R அவர்களுக்காக
நடிகர் திலகத்தின் அழுகைக் காட்சிகள் - தொடர்
பொதுவாக இக்காலத்தில் பரவலாக ஒரு தவறான அல்லது மிகையான அபிப்ராயம், நடிகர் திலகத்தின் படங்களில் வரும் அழுகைக் காட்சியைப் பற்றி நிலவி வருகிறது. அந்த myth உடைக்கப் பட வேண்டும் என்பதே இத் தொடரின் நோக்கம்.
அழுகை பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களில் திரைப்படங்களில் இடம் பெறும். இதனைப் பற்றித் தனியாக விரிவாக எழுதலாம். முதலில் உதாரணங்களைக் கூற முற்படுகிறேன். அதன் பின்னர் அந்த பல்வேறு விதமான சூழ்நிலைகள் தானாகவே விளக்கி விடும்.
பெரும்பாலானோர் பார்த்திராத, அல்லது ஒதுக்கியிருக்கக் கூடிய படம் தாம்பத்யம். நான் ஏற்கெனவே சொன்னது போல் அரைகுறை அல்லது அரை மனதோடு உருவாக்கப் பட்டது போல் தோற்றமளிக்கக் கூடிய தொழில் நுட்பங்களைத் தாண்டி, நடிகர் திலகம் என்னும் மாமேதை ஒளிரும் காட்சிகள் அடங்கிய சில படங்களில் இதுவும் ஒன்று. இதனுடைய மைனஸ் பாயிண்டுகளை எழுத ஏகப் பட்ட பக்கங்கள் வேண்டும். ஆனால் சிங்கம் ... அதன் மேன்மை குறையாமல் அப்படியே இருக்கும் படம் தாம்பத்யம்.
நடிகர் திலகத்தை விரும்புபவராக ராதா வருவார். ஆனால் அவர் விரும்புவது நடிகர் திலகத்திற்கு தெரியாது. ஆனால் நன்கு பழகிய நண்பராக நடிகர் திலகம் கருதி பழகி வருவார். ராதா தொடர்பான காட்சிகள் பின்னோட்டமாக வரும். ஒரு கட்டத்தில் ராதா இறந்து விடுவார். அப்போது நடிகர் திலகம் அழுகையைக் காட்ட வேண்டிய சூழல்.
தமக்கு மிகவும் பரிச்சயமான ஒருவர் இறக்கும் போது நாம் வருத்தப் படுவது அழுவது உண்டு என்றாலும் அது மிகவும் ஆழமான வருத்தமாக இராது. நாம் அதற்கு பச்சாதாபப் பட்டு மிகவும் தெரிந்தவர் இறந்து விட்டாரே என்பதற்கு எவ்வளவு வருத்தம் வருமோ அந்த அளவிற்குத் தான் வருந்துவோம், அதற்கு ஏற்ற வகையில் தான் நம்முடைய அழுகையும் இருக்கும். இதனை இக்காட்சியில் நடிகர் திலகம் தன் அழுகையின் மூலமாகவே அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார். ஒரே ஒரு முறை அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் உச்சரிப்பார் ... அவ்வளவு தான் ...
வாசு சார் ,இந்தக் காட்சியை முடிந்தால் வீடியோவில் தரவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதில் பொதிந்துள்ள நுட்பமான உணர்வை நடிகர் திலகத்தின் நடிப்பில் அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.
இன்னும் பல படங்களிலிருந்து இத் தொடருக்கான விஷயங்கள் வர உள்ளன.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
6th April 2013, 03:42 PM
#2503
Junior Member
Newbie Hubber
தாம்பத்யம் ஒரு surprise package . முதல் காட்சியில், கொலை குற்றம் சாட்ட பட்டு போலீஸ் தேடி கொண்டிருக்கும். வீட்டுக்கு வரும் அவரிடம், hostility காட்டும் பிள்ளைகளிடம், அவர் காட்டும் reaction ......
-
6th April 2013, 04:12 PM
#2504
Junior Member
Seasoned Hubber
Even in the remake of Prem Nagar & Avataar both ANR & Rajesh Khanna not showing
their expression which is required for that film. I have watched recently the telegu
version of VM where ANR delivering the dialogue without any expression/emotions.
That particular walk of our NT from the step during the song scene of Kalaimagale
is enough why our NT incomparable actor with anyone in the world. Simlilary the
case of with Avataar. Rajesh Khannan not showing the correct expression throughout
the film whereas in Vazhkai everyone can see the difference why our NT the University of
acting.
-
6th April 2013, 04:25 PM
#2505
Mr. Gopal sir,
namadhu threadil ennaikkum humour shortage kidaiyaadhu. especially Mr. Ganpat sir's humours are 'must enjoy' category. Previously mr_karthik's posts also carry needful humours. But avar kindaladippadhu mostly about artists, not about hub members (now we miss those humours)..
humours are always enjoyable till they are not crossing the boundries.
-
6th April 2013, 04:34 PM
#2506
Mr. (Neyveli) Vasudevan sir,
Thanks for the clipping of 'Vaazhkai' the great movie. What an expression in that scene.
Mr.Raghavendar sir, we can raise up our collars as it is one of 'after 80' movies.
I must watch the full movie today.
-
6th April 2013, 09:23 PM
#2507
Junior Member
Newbie Hubber

Originally Posted by
adiram
Mr. Gopal sir,
namadhu threadil ennaikkum humour shortage kidaiyaadhu. especially Mr. Ganpat sir's humours are 'must enjoy' category. Previously mr_karthik's posts also carry needful humours. But avar kindaladippadhu mostly about artists, not about hub members (now we miss those humours)..
humours are always enjoyable till they are not crossing the boundries.
ரொம்ப நன்றி ஆதிராம் சார். கார்த்திக்,சாரதா இருவரையும் ஞாபக படுத்தி கொண்டே இருப்பதற்கு. உங்கள் செல்வாக்கை உபயோக படுத்தி, அவர்களை திருப்பி, திரிக்கு இழுத்து வாருங்களேன். புண்ணியமாய் போகும்.
-
6th April 2013, 11:34 PM
#2508
Senior Member
Seasoned Hubber
நகைச்சுவைக்கு என்றே நமது திரைப்படப் பட்டியலில் அடுத்து இடம் பெறப் போகும் மணமகன் தேவை படம் பிரசித்தி பெற்றது. தன்னுடைய தங்கை பெயரையே தன்னுடைய இன்னொரு உருவமாக பாவித்து அதற்கு சூட்டி ஒரே சமயத்தில் தன்னை காதலிக்கும் இளைஞர்களை சாமர்த்தியமாக சமாளிக்கும் பெண்ணின் வாழ்க்கையில் சந்திக்கும் சம்பவங்களே படத்தின் கரு. இப்போதைக்கு இது போதும். மணமகன் தேவை திரைப்படத்திலிருந்து ஒரு நிழற்படம், நகைச்சுவையாக உருவாக்கப் பட்டுள்ளது இங்கே நம் பார்வைக்கு.
Last edited by RAGHAVENDRA; 6th April 2013 at 11:38 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
7th April 2013, 12:24 AM
#2509
There will always be some combos that you would dream of that may be hard to materialise. But still even the remote possibility of such combo will make you mouth watering. Such a combo when it becomes a reality will give immense pleasure to one and all. No, I am not talking about the Sachin - Ricky of MI. Though they are yet to fire in unison, our thread's Sachin and Punter have set up a great momentum. It is a pleasure to read the current series and in addition when you are additionally served with delectable delicacies by Prabhu and Ganesh [the later nicely mixing it with the traditional Cauvery Kusumbu] what more do you want? Please continue as i lean back in my arm chair and enjoy it.
Vasu Sir,
Glad to see you back. Hope you are completely recovered from the illness.
Regards
-
7th April 2013, 10:33 AM
#2510
Junior Member
Devoted Hubber
நண்பர்கள் திரு.கோபால்,ஆதிராம் அன்புடன் அளித்த பாராட்டுக்களுக்கே, கிறு கிறுத்து நின்ற என்னை,கீழேயே தள்ளி விட்டது நண்பர் முரளி அவர்களின் கனிவான பாராட்டு.
இவ்வகையில் சில சமயம் பாராட்டுகளுக்கு நன்றி சொல்வது கூட சிக்கல் ஏற்படுத்தி விடும்.எப்படி?
ஒரு ராமாயண நாடகம் நடந்து முடிந்தவுடன் அதில் அனுமனாக நடித்த ஒரு பெரிய நடிகரை அனைவரும் மேடையேறி பாராட்டினர்.அதை ஏற்றுக்கொண்டு பேசிய அவர் அடக்கத்துடன்,"இந்த பாராட்டில் பெரும்பகுதி எனக்கு அனுமாராக ஒப்பனை செய்தவரையே சாரும்!" என அறிவிக்க,அந்த ஒப்பனைக்காரர் (என் போன்ற ஒரு அப்பாவி) உடனே மைக்கை பிடித்து,"அண்ணா, என்னை அளவுக்கதிகமாக புகழ்கிறார்! நான் என்ன அப்படி பிரமாதாமாக ஒப்பனை செய்து விட்டேன்.ஒரு வால் ஒன்றை ஓட்டினேன்.அவ்வளவுதான்!!" என் அதை விட அடக்கமாக சொன்னாராம்.
மேலும் ராமாயணமும் மகாபாரதமும் யார் சொன்னாலும் சுவையாக இருக்கும்.அதைப்போல அல்லவா நம் தலைவர் புராணமும்!ஒவ்வொரு நண்பரும் தன பங்கிற்கு தலைவர் நடித்த ஒரு காட்சியை விவரிக்கையில்,அப்படியே மனம் மிக இலேசாகி விடுகிறதே!நண்பர் கோபால் அவர் பாணியில் தலைவரை உலக மகா நடிகர்கர்களுடன் ஒப்பிடுகையில் மனம் பூரிக்கிறதே!அப்பொழுது ராமருக்கு அணில் செய்த சிறு உதவியைப்போல
நானும் என் பங்கிற்கு ஏதாவது எழுத மனம் விழைகிறதே!இதெல்லாம் தன்னிச்சை செயல்கள்
(reflex actions) அல்லவா?
ஆயிரக்கணக்கில் அற்புதமான பதிவுகளை இட்டு அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் நண்பர்கள்,முரளி,பார்த்தசாரதி,பம்மலார் போன்றோர் மனம் மகிழ என் பதிவுகள்
அமையுமெனில் அதை விட எனக்கு மகிழ்ச்சியளிப்பது வேறு எதுவாக இருக்க முடியும்?
எல்லா வகையிலும் நான் இந்த மய்யம் அமைப்பிற்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
Bookmarks