-
17th April 2013, 03:28 PM
#2751
Senior Member
Seasoned Hubber
நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியோ அல்லது அதனுடைய சாதனைகளைப் பற்றியோ அல்லது அப்படங்களின் டைட்டில்களை மீண்டும் பயன் படுத்துவது பற்றியோ நமக்கு எந்த அளவிற்கு கவலை உள்ளதோ அதற்கு மேல் தயாரிப்பாளர்கள் அல்லது சம்பந்தப் பட்ட கலைஞர்களுக்கு இருக்க வேண்டும். வீரபாண்டிய கட்டபொம்மனாகட்டும், கர்ணனாகட்டும், நாம் தான் குரல் தருகிறோமே யன்றி சம்பந்தப் பட்ட தயாரிப்பாளர்கள் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. இதே போல் தான் படங்களுக்கு டைட்டில் வைக்கும் விஷயமும். சரஸ்வதி சபதம் படத்தைப் பொறுத்த மட்டில் தயாரிப்பாளர் ஏ.பி.என். தரப்பைக் கேட்காமல் டைட்டில் வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. இதனைப் பற்றி அவர்களுக்கும் அதே அளவு கவலை அக்கறை இருக்க வேண்டும். அவர்கள் நடிகர் திலகத்தின் படங்கள் மேலும் அவர் மேலும் நம் அளவிற்கு ஈடுபாடும் அபிமானமும் வைத்திருப்பார்களா என்பது தெரியவில்லை. உதாரணம் திருவிளையாடல் திரைப்படத்தின் மறு வெளியீடு.
எனவே நாம் அவசரப் பட்டு உணர்ச்சி வேகத்தில் குரல் கொடுப்பதற்கு முன் இவற்றைப் பற்றி முழுதும் அறிந்து கொள்வதே சிறந்தது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
17th April 2013 03:28 PM
# ADS
Circuit advertisement
-
17th April 2013, 04:29 PM
#2752
Senior Member
Seasoned Hubber
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் 3000 ஆவது சிறப்புப் பதிவு - தாம்பத்யம் - முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. அருமை
-
17th April 2013, 05:12 PM
#2753
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Vankv

you can't get politer than this, can you?
நீங்கள் ஒரு நல்ல ஓவியக்கலைஞர் என்பதை நான் அறிவேன். ஆனால் அதற்காக கையில் தூரிகையைப்பிடித்து இப்படி கண்ட இடங்களிலா வர்ணம் தீட்டுவது?
உண்மையை சொன்னால், நீங்கள் என்னை சரியாக அறியாததால் எழுந்த கேள்வி இது.
என்னிடம் பழகியவர் சொல்வார்கள்..நான் ஆழ்கடலைப்போல
அமைதியானவன் என்று.
சில நேரங்களில் சில விஷயங்களை தெளிவு படுத்த,மனதில் செலுத்த,
இப்படி வறுத்தால் தான் சரிபட்டு வரும்..
-
17th April 2013, 05:26 PM
#2754
Junior Member
Devoted Hubber

Originally Posted by
KCSHEKAR
பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி இன்று (17-04-2013) அதிகாலை காலமானார்.
அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்போம்.
ஒரு மேதைப் பாடகரின் மறைவிலிருந்து நாம் மீள்வதற்குள் இப்படி ஒரு பேரிடியா?
இசைக்கும் மெல்லிசைக்கும் உள்ள வித்தியாசத்தை நமக்கு புரியவைத்த மன்னர் அல்லவோ இவர்?
இவர் இசையில் பாவ மன்னிப்பு பட பாடல்கள் ஒரு bench மார்க் ஆகிவிடவில்லையா?
நம் வாழ்நாளை இன்பகரமாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கிய சில மேதைகளில் இவரும் ஒருவரல்லவா!
வணங்குகிறோம் மன்னா.!!
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா என்ற உங்கள் பாடலையே மனதில் நன்றியுடன் நிறுத்தி,கண்ணீருடன் விடை கொடுக்கிறோம்.
காற்றுள்ளவரை உங்கள் பாடல்கள் இருக்கும்.
-
17th April 2013, 05:38 PM
#2755
Junior Member
Devoted Hubber
நண்பர் வாசுதேவன் அவர்களே,
பதிவு எனும் பெயரில் தாம்பத்தியம் படத்திற்கு ஒரு ஒலிச் சித்திரம் வழங்கியுள்ளீர்.
அருமை.
150 பதிவிற்கே இங்க மூச்சு முட்டறது.ஏதோ நானும் பாணபட்டர் போல பாடிக்கொண்டிருக்கிறேன்.
3000 தாண்டியும் இப்படி ஒரு வேகமா !!விட்டா இன்னும் 325 பட ஒலிச் சித்திரங்களும் வந்து விழும் போலிருக்கே!!
நன்றி.
-
17th April 2013, 05:45 PM
#2756
Mr. Neyveli Vasudevan sir,
Congradulations for your wonderful 3,000+ posts. Each and every post of yours is a record of NT movies.
In the great path of "THUNAI" , now you have analised "THAAMBATHYAM" in your own way with beautiful stills as additional attarction.
I always submit double appreciation for those who analyse "AFTER 80" movies of NT. (indha vishayaththil naan Raghavendar sir katchi).
There are wonderful gems in that period. In the same way I like 'Anbulla Appa' and 'Kudumbam oru koil' also.
Soryy to say, I have watched this 'Thaambathyam' movie just one time only, due to some reasons. But now I want to see it again, because of your wonderful writing.
-
17th April 2013, 06:24 PM
#2757
நெய்வேலி வாசுதேவன் அவர்களே
'தாம்பத்யம்' பதிவு சற்று நீளம். அதைப்பிரித்து ஐந்து பாகங்களாய் பதித்திருக்கலாம். பதிவின் தரம் மிக மிக அருமை.
சில திரிகளில் கவனித்தேன். ஒவ்வொரு புகைப்படத்தையும் தனித்தனியே பதித்து பதிவின் எண்ணிக்கையை கூட்டிக்கொள்வோர். தங்கள் அபிமான நடிகரின் ஒரே புகைப்படத்தை பல கலர்களில் மாற்றி மாற்றி போட்டு எண்ணிக்கையை அதிகமாக்குவோர் நிறைந்திருக்க, நீங்களோ இவ்வளவு பெரிய பதிவையும் ஏகப்பட்ட நிழற்படங்களையும் ஒரே பதிவில் தந்து அசத்துகிறீர்கள். அற்புதம், அற்புதம்.
-
17th April 2013, 07:15 PM
#2758
Junior Member
Devoted Hubber

Originally Posted by
adiram
நெய்வேலி வாசுதேவன் அவர்களே
சில திரிகளில் கவனித்தேன். ஒவ்வொரு புகைப்படத்தையும் தனித்தனியே பதித்து பதிவின் எண்ணிக்கையை கூட்டிக்கொள்வோர். தங்கள் அபிமான நடிகரின் ஒரே புகைப்படத்தை பல கலர்களில் மாற்றி மாற்றி போட்டு எண்ணிக்கையை அதிகமாக்குவோர் நிறைந்திருக்க, நீங்களோ இவ்வளவு பெரிய பதிவையும் ஏகப்பட்ட நிழற்படங்களையும் ஒரே பதிவில் தந்து அசத்துகிறீர்கள். அற்புதம், அற்புதம்.
ஒ! இதுதான் திரியை பற்ற வைப்பதா?
-
17th April 2013, 07:38 PM
#2759
Senior Member
Seasoned Hubber
அண்ணா திரையரங்கில் சொர்க்கம் திரைப்படம் சமீபத்தில் திரையிடப் பட்ட போது பொன்மகள் வந்தாள் பாடலுக்கு ரசிகர்களின் அளப்பரை காணொளி
தரவேற்றிய நண்பருக்கு உளமார்ந்த நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
17th April 2013, 07:49 PM
#2760
Senior Member
Seasoned Hubber
கர்ணன் நிழற்படங்களைத் தொகுத்து ஒரு அஞ்சலிக் காணொளியாக ...
தரவேற்றிய நண்பர் விஜயகுமார் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks