-
11th May 2013, 05:19 AM
#741
Junior Member
Platinum Hubber
11.5.1973
உலகம் சுற்றும் வாலிபன் தமிழகத்தில் நடத்திய . சாதனை துளிகள் .
தமிழ் நாட்டில் 36 இடங்களில் 39 திரை அரங்கில் வெளியானது .
39 அரங்கிலும் 50 நாட்களை கடந்தது .
25 அரங்குகளில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது .
30 அரங்குகளில் 75 நாட்களை கடந்தது .
20 அரங்குகளில் 100 நாட்களை கடந்தது .
4 அரங்குகளில் வெள்ளி விழா ஓடியது .
மதுரை - திருச்சி நகரம் - 200 நாட்களை கடந்தது .
-
11th May 2013 05:19 AM
# ADS
Circuit advertisement
-
11th May 2013, 08:04 AM
#742
Senior Member
Diamond Hubber
1941-இல் வெளிவந்த எம்ஜியார் அவர்கள் நடித்த 'சாயா' படத்தின் அபூர்வ விளம்பரம்.
-
11th May 2013, 09:08 AM
#743
Junior Member
Platinum Hubber
KAVALKARAN -1967
SUPER FIGHT SCENE
-
11th May 2013, 11:10 AM
#744
Junior Member
Regular Hubber

Originally Posted by
esvee
உலகம் சுற்றும் வாலிபன் -1973
11.5.2013
40 வது ஆண்டு நிறைவு நாள் .
சில வரி செய்திகள் .......கேள்விபட்டதும் - கேள்வி படாததும் .
1970ல் ஜூன் மாதத்தில் முதல் விளம்பரம் வந்தது .
''உலகம் சுற்றும் தமிழன் ''.
இயக்கம் - ப . நீலகண்டன் .
இசை - குன்னக்குடி வைத்தியநாதன் .
பின்னர் அறிவிப்பு
'' உலகம் சுற்றும் வாலிபன் ''
இயக்கம் - எம்ஜியார் .
இசை - மெல்லிசை மன்னர் .
லக்ஷ்மி - ஸ்ரீவித்யா - ராஜஸ்ரீ - முதலில் நடிப்பதாக இருந்தது .
பின்னர் மஞ்சுளா - லதா - சந்திரகலா என்று முடிவானது .
மெல்லிசை மன்னரின் இசையில் இரவும் பகலும் பதிவான பாடல்கள் .
பாடகர் திலகம் டி எம் எஸ் - எஸ் பி பாலசுப்ரமணியம் - ஜேசுதாஸ் - சுசீலா - ஜானகி - ஈஸ்வரி இனிய குரல்களில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டது .
உலகம் சுற்றும் வாலிபனோடு .......
நினைக்கும் போது தனக்குள் ...சிரிக்கும் போது
இரண்டு பாடல்கள் இடம் பெறவில்லை .
படம் முடியும் தருவாயில் சீர்காழியின் வெண்கல குரலில்
''நமது வெற்றியயை நாளை சரித்திரம் சொல்லும் '' பாடல் பதிவானது .
1971 - ஜூன் மாதத்தில் முதல் முறையாக எச் எம் வி இசைத்தட்டு வெளியானது . பரபரப்புடன் விற்பனையானது .
1971- பொம்மை சினிமா மாத இதழில் மக்கள் திலகம் தனது
வெளி நாட்டு படப்பிடிப்பு அனுபவ தொடரை ''திரைக்கடல் ஓடி திரைப்படம் எடுத்தோம் '' என்ற தலைப்பில் அக்டோபர்
1972 வரை எழுதினர் .
1970 செப்டம்பரில் படப்பிடிப்பு துவங்கி 1973 ஏப்ரல் வரை
பல தடங்கல்கள் - அதிகார மிரட்டல் - நெருக்கடி - போன்ற தொல்லைகளை தாண்டி மக்கள் திலகம் படத்தை முடித்து
11.5.1973 அன்று சென்னை மற்றும் 36 இடங்களில் 39 அரங்கில் வெளியிட்டார்.
''1931-1973 வரை தென்னிந்திய பட வரலாற்றில் முதல் முறையாக இந்த படம் எல்லா சாதனைகளை முறியடித்து 1977 வரை no -1 இடத்தில இருந்தது உலகமறிந்ததே .
Dear Sir,
A very nice compilation of events and statistics of Makkal Thilagam Starrer Ulagam Sutrum Valiban especially on the multiple hindrances he faced and problems that was deliberately created for him by once his own people of the DMK.
I am sure, you will also remember, while competition between artists was set aside and Nadigar Thilagam the then president of Nadigar Sangam, declared openly his support to Makkal Thilagam mentioning if that harassment continues by mis using the power of DMK, his theater would not hesitate to screen Ulagam Sutrum Valiban.
I am quite surprised even now, how come this magnanimity of Nadigar Thilagam was never quoted by anybody? This shows, the nature of others Vs nature of Nadigar Thilagam and how NT's various good deeds was deliberately put to back-burner on many occasions.
Not only Ulagam Sutrum Valiban was the highest grosser breaking all the previous records of Tamil Film Industry, Ulagam Sutrum Valiban turned out to be the highest grosser retaining no.1 position among Makkal Thilagam MGR Films till 1977 be it is Tamilnadu based collection (or) Chennai based Collection. None of the Makkal Thilagam Films post Ulagam Sutrum Valiban could manage to break the record of Ulagam Sutrum Valiban.
It is one of my favorite movie too as you are aware of.
Last edited by Sowrirajann Sri; 11th May 2013 at 11:12 AM.
-
11th May 2013, 11:56 AM
#745
Junior Member
Platinum Hubber
I am quite surprised even now, how come this magnanimity of Nadigar Thilagam was never quoted by anybody? This shows, the nature of others Vs nature of Nadigar Thilagam and how NT's various good deeds was deliberately put to back-burner on many occasions.
sowri sir
only kumudham weekly magazine quoted the matter in cine news at the time of usv released in may 1973.
-
11th May 2013, 12:29 PM
#746
Junior Member
Regular Hubber

Originally Posted by
esvee
I am quite surprised even now, how come this magnanimity of Nadigar Thilagam was never quoted by anybody? This shows, the nature of others Vs nature of Nadigar Thilagam and how NT's various good deeds was deliberately put to back-burner on many occasions.
sowri sir
only kumudham weekly magazine quoted the matter in cine news at the time of usv released in may 1973.
EssVee Sir,
Surprising !
How come Kumudham an anti-sivaji magazine quoted that information ? May be they wanted to create some problem for Nadigar Thilagam Too I guess
-
11th May 2013, 12:48 PM
#747
Junior Member
Devoted Hubber

Originally Posted by
esvee
11.5.1973
உலகம் சுற்றும் வாலிபன் தமிழகத்தில் நடத்திய . சாதனை துளிகள் .
தமிழ் நாட்டில் 36 இடங்களில் 39 திரை அரங்கில் வெளியானது .
39 அரங்கிலும் 50 நாட்களை கடந்தது .
25 அரங்குகளில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது .
30 அரங்குகளில் 75 நாட்களை கடந்தது .
20 அரங்குகளில் 100 நாட்களை கடந்தது .
4 அரங்குகளில் வெள்ளி விழா ஓடியது .
மதுரை - திருச்சி நகரம் - 200 நாட்களை கடந்தது .
உலகம் சுற்றும் வாலிபன் சூப்பர் வசூலையும், சாதனையையும், மக்கள் திலகத்தின் சம கால நடிகர்கள் நெருங்கி முறியடிக்கவே இல்லை. பொன்மனச் செம்மல் என்றுமே வசூல் திலகம். உலகம் சுற்றும் வாலிபன் திரைப்பட தகவல்களை நிறைய தந்த நண்பருக்கு நன்றி.
Last edited by masanam; 11th May 2013 at 12:54 PM.
-
11th May 2013, 12:50 PM
#748
Junior Member
Veteran Hubber
படம் சொல்லும் பாடம்

மரம் நடுவீர்..மழை பெறுவீர்...பிராண வாயு பெற்று உயிர் வாழ்வீர்..
பெருகி வரும் வாகனங்களாலும், தொழிற்சாலைகளில் ஏற்படும் புகையினாலும் வளிமண்டலத்தில் கரியமில வாயு அதிகரித்து பிராண வாயு குறைந்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.அதே போல் மரங்களின் குறைவினால் மழையும் பொய்த்து போகும் சூழ்நிலையும் ஏற்படுகிறது..அதனால் அரசாங்கமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்..இப்படி சத்தமில்லாமல் புதுச்சேரியில் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ஒருவர் சுமார் 20 ஆண்டுகளாக மரங்களை நட்டு வருகிறார்.இவர் பெயர் எம்ஜிஆர் சிவா...இவர் சொந்தமாக, மரக்கன்றுகளை வளர்த்து வருகிறார்..அப்படி வளர்த்த கன்றுகளை கோயில்கள் மற்றும் பள்ளிகளில், பூங்காக்களில் தன் நண்பர்களுடன் சென்று நடுகிறார்..இவர் சொந்தமாக புதுச்சேரியில் நட்ட மரங்கள் 20 ஆயிரத்தை தாண்டும்..லட்சக்கணக்கான மரங்களை வழங்கியிருக்கிறார்...அந்த மரங்கள் தழைத்து வளர்ந்து இன்னும் இவர் புகழ் பாடுகின்றன..மேலும் இவர் அன்னை தெரசா அவர்களை சந்தித்து நினைவு பரிசு வழங்கி இருக்கிறார்..
இவருக்கு எப்படி மரக்கன்று நடுதலில் இந்த ஆர்வம் வந்தது என்று கேட்டபோது அவர் கூறியது...நான் சிறு வயதிலிருந்தே எம்ஜிஆரின் தீவிர ரசிகன்..அவரது நற்பண்புகள், கொடைத்தன்மை என்னை மிகவும் கவர்ந்தது..அவரை போல நிறைய செய்யாவிட்டாலும் நம்மால் முடிந்த எதாவது செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தினால் அவரது பெயரிலே 'பாரத ரத்னா எம்ஜிஆர் சமூக நலப்பேரவை என்ற அமைப்பை தொடங்கினேன்..அந்த அமைப்பின் மூலம் நிறைய நற்பணிகள் செய்து வருகிறேன்.அதில் முதன்மையாக மரம் நடும் சேவையை செய்து வருகிறேன்..மேலும் இந்த அமைப்பின் மூலம் ரத்த தானமும் செய்து வருகிறேன்..இதற்கெல்லாம் மூல காரணம் நான் தெய்வமாக வழிபடும் எம்ஜிஆர்தான் என்று கூறுகிறார்..மேலும் இவர் வேறு வீட்டுக்கு மாறும்போது, எந்த தெய்வத்தின் படத்தையும் வைக்காமல் எம்ஜிஆர் படத்தை மட்டும் வைத்து கற்பூரம் ஏற்றி குடி போனார் என்பதை அவர் சொல்லும்போதே உணர்ச்சிவசப்பட்டு போகிறார்.மேலும் இவரது தோட்டத்தில் அடிபடும் பறவைகள் நிறைய வந்து விழுகின்றன..அந்த பறவைகளை பாதுகாப்புடன் கூண்டில் வைத்து சிகிச்சை செய்து, தினமும் அவற்றிற்கு உணவு கொடுத்து பராமரிக்கிறார்..இவற்றில், பருந்து மைனா குயில்கள், புறாக்கள், பச்சை கிளில்கள் இன்னும் பல...குணமானதும் அவற்றை வானில் பறக்க விடுகிறார்..இவர் செய்யும் சேவையை மறக்காத பறவைகள் இவர் தோட்டத்திற்கே வந்து கூவும் காட்சிகள் இன்றும் மனதை கொள்ளை கொள்ளும்..இப்போது கூட அவர் கூண்டில் ஒரு பருந்து சிகிச்சை பெற்று வருகிறது..இவர் போன்ற லட்சக்கணக்கான எம்ஜிஆர் பக்தர்களை தந்த நமது தெய்வத்தை போற்றுவோமாக..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
11th May 2013, 12:53 PM
#749
Junior Member
Regular Hubber

Originally Posted by
esvee
திரு சவுரி சார்
நீங்களே சொல்லுங்கள் ....
மக்கள் திலகம் பற்றி யார் குறைத்து மதிப்பிட்டாலும் அது சரியல்ல என்று அறிவீர்கள் அல்லவா ?
'' படித்த - மிகவும் படித்த - அறிவு ஜீவிகளுக்கு தனிப்பட்ட முறையில் தான் விரும்பிய , நேசிக்கும் நாயகன்
சாதிக்க முடியாத சாதனைகளை விட இன்னொருவர் அதிகம் பெற்று புகழ் அடைந்தால் அந்த புகழை
விளம்பரத்தால் வந்தது
திராவிடத்தால் வந்தது
பணம் கொடுத்து வாங்கியது
நடிக்கவே தெரியாது
என்றெல்லாம் எதிர் மறை தாக்குதல் நடத்தி மனதளவில் சந்தோஷப்படும் கனவான்கள் பற்றி
என்ன சொல்ல ?
உண்மையான ரசிகன் உள்ளவரை மக்கள் திலகம் என்றென்றுமே எதிலுமே முதல்வர் .
நிச்சயம் தவறுதான் எஸ்வி சார்...யாரையும் யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஒவ்வொரு நடிகருக்கும் அவருடயதான தனித்தன்மை நிச்சயம் உண்டு.
மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் மட்டுமே அனைத்து திரை உலக துறைகளிலும் தலைசிறந்து விளங்கினார்கள் என்பது யாராலும் மறுத்து பேச முடியாது.
மக்கள் திலகம் அவர்கள் நல்ல நடிப்பையும் வசனம் பேசும் புலமையும் பெற்றவர் என்பது உண்மையான ஒத்துகொள்ளகூடிய ஒரு விஷயம் தான்..உதாரணம் : பாசம், பெட்ட்ரால்தான் பிள்ளையா, காஞ்சி தலைவன், நாடோடி மன்னன், மதுரை வீரன் etc .
அதேபோல நடிகர் திலகம் அவர்களும், காதல், நடனம் மற்றும் சண்டைகாட்சியில் பட்டையை கிளப்பியவரே. அதையும் யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. காதல் காட்சிகள், படங்கள் ஆயிரம் வந்தாலும்..காதல் காட்சிகளில் திறமை காட்டிய பல நடிகர்களை விட, அவர்கள் படங்களை விட என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பது ஒரே ஒரு வசந்த மாளிகை தான் என்பது நடிகர் திலகத்தின் மிகபெரிய எதிரி கூட ஒத்துகொள்வார்கள். அதே போல வாள்பயிர்ச்சி, குதிரையேற்றம், சிலம்பம், மற்றும் மசாலா சண்டைகாட்சிகள் இதிலும் கூட நடிகர் திலகத்தின் வல்லமை, அனைவருக்கும் புரியவைத்த ஒன்று...உதாரணம் : காத்தவராயன், உத்தமபுத்திரன், என்தம்பி, சிவந்த மன், தர்மம் எங்கே, தங்கசுரங்கம், ராஜா மற்றும் பல படங்களை கூறலாம்.
இதில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால், MGR என்றால் ஒரு மக்களை கவரும் மசாலா மற்றும் Entertainment வகையை சேர்ந்த திரைப்படம் என்ற ஒரு formulavai தயாரிபாளர்களும், விநியோகஸ்தர்களும் வைத்திருந்தார்கள் அந்த வட்டத்தை விட்டு அவர்கள் வர விரும்பவில்லை.
அதைப்போல நடிகர்திலகத்தை எடுத்துகொண்டால் நல்ல ஒரு குடும்ப படம், இதிகாச சரித்திர காவியங்கள், வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்கள், தெய்வாம்சம்கொண்ட படங்கள் இதை தான் பெரும்பாலும் தயாரிபாளர்களும் விநியோகஸ்தர்களும் விரும்பினார்கள்..
இது மக்கள் திலகத்தின் குற்றமோ அல்லது நடிகர் திலகத்தின் குற்றமோ அல்ல...ஆயினும் அவர்கள் இருவருமே தங்களுடைய Domain அல்லது Speciality விட்டு விலகி அவ்வபோது மற்ற விஷயங்களை கொண்ட படங்களை செய்து வெற்றியும் கண்டிரிகிரார்கள் என்பது தான் உண்மை.
இதை அனைவரும் உணர்ந்தால் வாக்குவாதம் என்ற ஒன்று வராது ! ஆனால் விறுவிறுப்பு என்பது இரு ரசிகர்களுமே இழப்பார்கள்..!
Last edited by Sowrirajann Sri; 11th May 2013 at 01:05 PM.
-
11th May 2013, 12:54 PM
#750
Junior Member
Veteran Hubber
எம்ஜிஆர் சிவாவின் தோட்டம்
Bookmarks