-
13th May 2013, 02:02 PM
#1
Junior Member
Newbie Hubber
பிரச்சினை அது இல்லை . ஒரு மாநில கட்சி ,ஒரு தேசிய கட்சி என்று இருந்திருந்தால் balanced ஆக இருந்திருக்கும். ஒரே கட்சி இரண்டாகி, அதே ஆட்கள் இரண்டிலும் பிரித்து, மாறி மாறி ஆட்சி செய்யும் வினோதம் ,நம் மாநிலத்தில் மட்டுமே. காங்கிரஸ் வந்திருந்தால் பாலும் தேனும் ஓடியிருக்கும் என்ற நம்பிக்கை ரொம்பவே ஓவர். காமராஜ் ஆட்சி இன்றைய சூழ்நிலையில் யார் வந்தாலும் கனவுதான். என்னையே தேர்ந்தெடுத்தாலும் SherShaw அல்லது lee kwan yu ஆட்சிதான் try பண்ணுவேன்.
ஆனால் இங்கு தேசிய கட்சிகளுக்கு நாம் ஒரு hope கூட கொடுக்காததால் முல்லை பெரியார்,பாலாறு, காவேரி,ஹோகனேகல் ,இலங்கை பிரச்சினை, மீனவர் பிரச்சினை மற்றும் நிதி ஒதுக்கீடு அனைத்திலும் நம் மாநிலம் வஞ்சிக்க படுகிறது.
சரி,சரி எதையோ ஆரம்பித்து விட்டோம். நடிகர்திலகத்தை தொடர்வோம்.
Last edited by Gopal.s; 13th May 2013 at 04:38 PM.
-
13th May 2013 02:02 PM
# ADS
Circuit advertisement
-
13th May 2013, 04:10 PM
#2
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
ஆனால் இங்கு தேசிய கட்சிகளுக்கு நாம் ஒரு hope கூட கொடுக்காததால் முல்லை பெரியார்,பாலாறு, காவேரி,ஹோகனேகல் மற்றும் நிதி ஒதுக்கீடு அனைத்திலும் நம் மாநிலம் வஞ்சிக்க படுகிறது.
சரி,சரி எதையோ ஆரம்பித்து விட்டோம். நடிகர்திலகத்தை தொடர்வோம்.
நண்பர் சவுரி சொன்னதில் எந்த தவறும் இல்லை.
தமிழ் நாட்டின் கலாசார சீரழிவிற்கு காரணம் திராவிட கட்சியே.
சரியான சமயத்தில் அந்த கட்சியை விட்டு வெளியே வந்ததால் தான்
நம் மாநிலத்தின் இரண்டு பிறவிமேதைகள் தப்பினர்.(நடிப்பரசர்,கவியரசர்)
அவர்களுக்கு அங்கு கிட்டிய அவமானம் நாடறிந்ததே.
அங்கு பல கலைஞர்களுக்கு இடமில்லை.ஒரே ஒருவருக்குத்தான் இடமுண்டு.
இப்பொழுதுள்ள காங்.என அழைக்கப்படும் கட்சி காங்கிரஸ் கட்சியே இல்லை.(காலி ஹார்லிக்ஸ் பாட்டிலில் போடப்பட்டுள்ள மைதா மாவு)மகாத்மா காந்திக்கும் சோனியா காந்திக்கும் உள்ள ஒற்றுமைதான் இந்திய தேசீய காங்கிரசிற்கும்,இந்திரா காங்கிரசிற்கும் உள்ள ஒற்றுமை.
அதே சமயம் 1972 இல் நம் சாத்தான் ஒரு குட்டியும் போட்டு விட்டதால்,இரண்டும் மாறி மாறி செங்கோலோச்சி வருகின்றன.நீங்கள் சரியாக சொன்னதுபோல,நாம்(தமிழ் மக்கள்) 45 ஆண்டுகளாக நேரடியாக குண்டர்களிடம் report செய்யாமல்,அவர்களின் இரு அடியாட்களிடம் report செய்வதால்,
கிடைக்கவேண்டிய ஊதிய உயர்வு,பதவி உயர்வு அனைத்தும் பறி போய் அம்போ என்று நிற்கிறோம்.
ஒரே உதாரணம்.1990 களின் முற்பாதியில் மாநில அரசிறகு சரியான திட்டமிடுதல் இருந்திருந்தால்,இன்று பெங்களுரு,ஹைதராபாத் நகரங்கள் பெற்றுள்ள IT நிறுவனக்களில் ஒரு 80 சதவிகிதமாவது நம்மிடம் இருந்திருக்கும்.
-
13th May 2013, 04:24 PM
#3
Moderator
Platinum Hubber
பொருட்படுத்தத்தக்க கருத்தோ, உரையாடலுக்கான மொழியோ இல்லாத இடுகை என்ற போதிலும், ஒரே ஒரு பதில்

Originally Posted by
Ganpat
அம்போ என்று நிற்கிறோம்.

'நேராக' ரிபோர்ட் செய்த ஆந்திராவை விட தமிழ்நாட்டு சமுதாய முன்னேற்றம் யாவரும் அறிந்ததே. அதற்கும் தேவுடுகாரு போன்ற 'குண்டர்கள்' குட்டையைக் குழப்பினது தான் காரணம் என்று சொல்வீர்களோ என்னவோ.
இதைப் பற்றி விரிவாக வேறு எங்காவது பேசலாம். இந்தத் திரியில் போகிற போக்கில் சௌரிராஜன் திட்டிச் சென்றதால், இங்கே பதில் சொல்ல நேர்ந்தது. சிவாஜி பற்றிய உரையாடல்கள் தொடரட்டும்.
தடங்கலுக்கு வருந்துகிறோம்
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
13th May 2013, 04:34 PM
#4
Junior Member
Newbie Hubber

Originally Posted by
P_R
பொருட்படுத்தத்தக்க கருத்தோ, உரையாடலுக்கான மொழியோ இல்லாத இடுகை என்ற போதிலும், ஒரே ஒரு பதில்
'நேராக' ரிபோர்ட் செய்த ஆந்திராவை விட தமிழ்நாட்டு சமுதாய முன்னேற்றம் யாவரும் அறிந்ததே. அதற்கும் தேவுடுகாரு போன்ற 'குண்டர்கள்' குட்டையைக் குழப்பினது தான் காரணம் என்று சொல்வீர்களோ என்னவோ.
இதைப் பற்றி விரிவாக வேறு எங்காவது பேசலாம். இந்தத் திரியில் போகிற போக்கில் சௌரிராஜன் திட்டிச் சென்றதால், இங்கே பதில் சொல்ல நேர்ந்தது. சிவாஜி பற்றிய உரையாடல்கள் தொடரட்டும்.
தடங்கலுக்கு வருந்துகிறோம்

இது போங்கு ஆட்டம். தமிழ் நாடு, குஜராத் இவையெல்லாம் 1968 இலேயே மிக முன்னேறிய மாநிலம்.ஆந்திரா சில pockets நீங்கலாக மற்றவையெல்லாம் மிக பின் தங்கியவை.
தமிழ் நாட்டின் முன்னேற்றம் ,குஜராத் போல முன்னெடுத்து செல்ல படவில்லை என்பது உண்மை.
-
13th May 2013, 05:07 PM
#5
Junior Member
Devoted Hubber

Originally Posted by
P_R
பொருட்படுத்தத்தக்க கருத்தோ, உரையாடலுக்கான மொழியோ இல்லாத இடுகை என்ற போதிலும்,

இருக்கலாம் ஆனால் ஊழல்களை விவரிக்க, அநீதியை விவரிக்க இந்த மொழி அதிகம்.இதற்காக சங்க இலக்கியங்களுக்கு போக வேண்டிய அவசியமில்லை.வகுப்பில் முதன் மாணவனாக இருந்தவன்,சீரழிந்து, பாஸ் மார்க் வாங்குவதற்கும் பாஸ் மார்க் வாங்கிகொண்டிருந்தவன் fail ஆவதற்கும் வேறுபாடுகள் உள்ளன.
-
13th May 2013, 10:45 PM
#6
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
என்னையே தேர்ந்தெடுத்தாலும் SherShaw அல்லது lee kwan yu ஆட்சிதான் try பண்ணுவேன்.
ஏதேது.... உங்கள் எண்ண ஓட்டத்திற்கு அளவே இல்லை போல் இருக்கிறது.... இந்தக் கொடுமையெல்லாம் செய்ய வேறு ஆசையா? பண்ற கொடுமை பத்தாதா?
Last edited by vasudevan31355; 13th May 2013 at 11:13 PM.
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks