-
13th May 2013, 03:54 PM
#11
Junior Member
Seasoned Hubber
GRAHAPRAVESAM
வெகு நாட்களாக எனக்கு தமிழில் எழுத ஆசை மேலும் சில நண்பர்களும் தமிழில் எழுதுமாறு கேட்டுகொண்டனர் . அந்தன்படி ஒரு சின்ன முயற்சி . தவறு இருந்தால் மன்னிக்கவும்.
கிரஹப்பிரவேசம் இந்த படம் வெகு சிலருக்கு மட்டும் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறன் .
ஆனால் 1976 ல் முதல் வெளியிட்டில் இந்த படம் 100 நாட்கள் வெற்றி நடை போட்டது .
ஏற்கனவே பொன்னூஞ்சல் பற்றிய பதிவின் பொது சொன்னதை போல இந்த படம் அதே தயாரிப்பாளர்கள்காக செய்யப்பட்ட படம் . இந்த படத்தின் டைரக்டர் திரு யோகானந்த் .
இந்த படம் பார்க்காதவர்களுக்கு இந்த படத்தின் கதை இதோ :
NT ஒரு லாரி டிரைவர் . அவர் தம்பி சிவகுமார் இன்ஜினியரிங் படித்துகொண்டு இருக்கிறார் அதற்காக NT வாயை கட்டி வயதை கட்டி சம்பாதிக்கிறார். அவரின் மனைவி வேற யார் நம்ம KR விஜயா.அவர்களுக்கு ஒரு சின்ன பையன். இந்த நேரத்தில் சிவகுமார் தன் படிப்பை முடித்து ஒரு நல்ல வேலையில் சேருகிறார் . அவரின் முதலாளி மேஜர். அவரின் மகள் ஜெயா . ஜெயா வுக்கும் சிவகுமார்க்கும் கல்யாணம் நடக்குறது . முதல் இரவில் அவள் ஒரு hysteria patient என்று NTக்கு தெரியவருகிறது . ஜெயா நல்ல குணம் உள்ள பெண் . அனைவரிடமும் அன்புடன் பழகிறார். சிவகுமார் பண உதவி செய்ய NT இப்போ ஒரு mechanic ஷாப் வைத்து
இங்கே ஜெயா கிர விஜயாவின் குழந்தையை தன் குழந்தையை வளர்கிறார். இதற்குள் 6 வருடம் ஓடிவிடிகிறது . இந்த நேரத்தில் இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு வீடு கட்ட எண்ணுகிறார்கள், இதன் அணைத்து செலவையும் ஜெயா ஏற்று கொள்கிறார் .
இந்த நேரத்தில் நடத்துகிறார் இந்த நேரத்தில் சிவகுமார் அமெரிக்க செல்கிறார் . அவர் சென்று சில நாட்களில் NT ஒரு விபத்தில் அவர் கை செயல் இழந்து விடுகிறது .
கிரஹப்பிரவேசம் நடக்க சில நாட்கள் முன்பு குடும்பம் பிரிகிறது .
NT குடும்பத்தை காப்பாற்ற நாடகத்தில் பாட்டு பாடுகிறார். சிவகுமார் தாய் நாட்டுக்கு வந்த உடன் நடந்த அனைத்தும் அவருக்கு தெரியவருகிறது
பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்றாக இணைந்து கிரஹப்பிரவேசம் நடந்ததா ?
இந்த மாதிரி கேரக்டர் NTக்கு அல்வா சாப்பிடுவது போல . சும்மா பூந்து விளையாடுவர் மனுஷன் இந்த படம் முதல் பரமே முதல் கடைசி வரை அவரின் ராஜ்யம் தான் . தம்பிடம் உருகுவது ஆகட்டும் அதே தம்பி ஒரு பணகர பெண்ய் கல்யாணம் செய்ய சம்மந்தம் பேச சொன்ன உடன் கோவம் படுவதும் , தம்பி மேல தப்பு இல்ல என்று தெரிந்து மேஜர் ய் சந்திக்கும் பொழுது , வெள்ளந்தியை தான் ஒரு ஏழை என்று உண்மைய் சொல்லும் இடம் . பெண்ய் செக் செய்யும் பாங்கு, அதே பெண் ஒரு மன நோயாளி என்று தெரிந்ததும் மேஜர்யிடம் உங்க பொண்ணு இங்க வந்து உடல்நலம் குறித்து அறிந்துகொல்ல்வதும் மேஜர் யிடம் மீண்டும் தன் வீட்டுக்கு வந்ததால் இந்த நோய் வரவில்லை என்று தெரிந்துடன் நிம்மதி அடையும் இடம் டாப் கிளாஸ் .
ஜெயாவிடம் அதித அன்பு கலந்த பயம் காடும் NT தன் இஷ்டபடி தான் அனைத்தும் நடக்கும் என்று ஒரு மாயை உருவாகிறார் . கை உணமுற்றுடன் kr விஜயா விடம் கம்பை உன்றி கொண்டு உனக்கு ஒரு சகலத்தி வந்து இருக்கா பாரு என்று கண் கலங்கி சொலும் பொழுது பார்வையாளர்கள் கண் கலங்க செய்யகிறார்.
சண்டை வந்த உடன் மேஜர் யிடம் தன் மனைவிகாக ஆதரவாக பேசுவதும் அதே சமயம் அவளை கடித்துகொல்வதும் NT மட்டுமே சாத்தியம்.
NT அப்புறம் இந்த படத்தில் அதிக நடிக்க வாய்ப்பு உள்ள பாத்திரம் ஜெயாவுக்கு. அவரும் நன்றாக நடித்திருக்கிறார் . சிவகுமார் வழக்கம் போல பாந்தம் . kr விஜயாவுக்கு கடைசி 30 நிமிடங்கள் மட்டுமே நடிக்க வாய்ப்பு.
இந்த படத்தில் NT இமேஜ் பூஸ்டிங் காட்சிகளும் உண்டு . அவர் நாடகம் நடிக்கும் பொழுது ஒரு நடிகர் முதலாளி யிடம் தகறாரு செய்வர் . அப்போ அந்த முதலாளி சொல்வர் அவர் மாதிரி நடிக்க ஆசைபடாதே அது முடியாது
கை ஊனமுற்ற நிலையில் படும் பொழுது மக்கள் அவரை கிருஷ்ணர் வேஷம் போட சொல்வார்கள் அப்போ அவர் மீது கல் வீசப்படும் . அப்போ NT என் வளர்சிக்கு என் விரோதிகள் போடும் அஸ்திவாரம் இவை என்று எடுத்துகொள்கிறேன் என்று சொல்லும் யிடம் நம்ம கலா மாஸ்டர் ஸ்டைல் சொல்லவேண்டும் என்றால் கிழி கிழி .
இந்த படத்தின் மிக பெரிய பலம் திரைக்கதை . எப்போ இவர் பிரிவார்கள் என்று எதிர்பாத்து இருக்கும் பொழுது அவர்கள் சேர்த்தே வாழ்வதும் . நாம் எதிர்பாராத பொழுது பிரிவதும் தான் highlight .
குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்
-
13th May 2013 03:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks