-
13th May 2013, 04:10 PM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
ஆனால் இங்கு தேசிய கட்சிகளுக்கு நாம் ஒரு hope கூட கொடுக்காததால் முல்லை பெரியார்,பாலாறு, காவேரி,ஹோகனேகல் மற்றும் நிதி ஒதுக்கீடு அனைத்திலும் நம் மாநிலம் வஞ்சிக்க படுகிறது.
சரி,சரி எதையோ ஆரம்பித்து விட்டோம். நடிகர்திலகத்தை தொடர்வோம்.
நண்பர் சவுரி சொன்னதில் எந்த தவறும் இல்லை.
தமிழ் நாட்டின் கலாசார சீரழிவிற்கு காரணம் திராவிட கட்சியே.
சரியான சமயத்தில் அந்த கட்சியை விட்டு வெளியே வந்ததால் தான்
நம் மாநிலத்தின் இரண்டு பிறவிமேதைகள் தப்பினர்.(நடிப்பரசர்,கவியரசர்)
அவர்களுக்கு அங்கு கிட்டிய அவமானம் நாடறிந்ததே.
அங்கு பல கலைஞர்களுக்கு இடமில்லை.ஒரே ஒருவருக்குத்தான் இடமுண்டு.
இப்பொழுதுள்ள காங்.என அழைக்கப்படும் கட்சி காங்கிரஸ் கட்சியே இல்லை.(காலி ஹார்லிக்ஸ் பாட்டிலில் போடப்பட்டுள்ள மைதா மாவு)மகாத்மா காந்திக்கும் சோனியா காந்திக்கும் உள்ள ஒற்றுமைதான் இந்திய தேசீய காங்கிரசிற்கும்,இந்திரா காங்கிரசிற்கும் உள்ள ஒற்றுமை.
அதே சமயம் 1972 இல் நம் சாத்தான் ஒரு குட்டியும் போட்டு விட்டதால்,இரண்டும் மாறி மாறி செங்கோலோச்சி வருகின்றன.நீங்கள் சரியாக சொன்னதுபோல,நாம்(தமிழ் மக்கள்) 45 ஆண்டுகளாக நேரடியாக குண்டர்களிடம் report செய்யாமல்,அவர்களின் இரு அடியாட்களிடம் report செய்வதால்,
கிடைக்கவேண்டிய ஊதிய உயர்வு,பதவி உயர்வு அனைத்தும் பறி போய் அம்போ என்று நிற்கிறோம்.
ஒரே உதாரணம்.1990 களின் முற்பாதியில் மாநில அரசிறகு சரியான திட்டமிடுதல் இருந்திருந்தால்,இன்று பெங்களுரு,ஹைதராபாத் நகரங்கள் பெற்றுள்ள IT நிறுவனக்களில் ஒரு 80 சதவிகிதமாவது நம்மிடம் இருந்திருக்கும்.
-
13th May 2013 04:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks