-
16th May 2013, 07:38 PM
#3661
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் வாசுதேவன் சார்
உங்களின் கிராமத்து நினைவலைகள் தொகுப்பு கடந்த காலத்துக்கே அழைத்து சென்றுவிட்டது .
மிகவும் ரசித்தேன் . பசுமையான கிராமத்து சூழ்நிலை - மரியாதை மிக்க மக்கள் - பாசத்துக்கு கரம் நீட்டும் மக்கள் .
அனுபவித்து நீங்கள் பதிவிட்ட கிராமத்து அனுபவம்
அசத்துங்கள் ...
-
16th May 2013 07:38 PM
# ADS
Circuit advertisement
-
16th May 2013, 08:36 PM
#3662
Junior Member
Regular Hubber

Originally Posted by
vasudevan31355
Cinema Express 16-30 April 2013

அட கடவுளே !
இதை எழுதும் அந்த மாமேதைக்கு இதிலுமா ஓர வஞ்சனை. ?
மற்ற சில படங்களின் விமர்சனத்துடன், திரை அரங்குகளில் ஓடிய விதம் ஆகியவற்றை சில குறிப்புகள் தப்பும் தவறுமாக இருந்தாலும் அதை எழுதுகிறான் இந்த சினிமா எக்ஸ்பிரஸ் அதி மேதாவி !
வசந்த மாளிகையை பற்றி எழுதும்போது மட்டும் ஏன் இந்த ஒர வஞ்சனை? 1972 என்கின்ற வருடம் நடிகர் திலகத்தின் இரண்டு வெள்ளிவிழா படங்கள், 4 நூறு நாள் படங்கள் ஒரு சுமார் ரக படம் வந்த வருடம். வசந்தமாளிகயோ அந்த வருடம் தமிழ் படங்களில் வசூலில் புதிய மாபெரும் சாதனையை ஏற்படுத்திய படம்.
ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து சென்டர்களிலும் 50 நாட்களை நடிகர் திலகத்தின் வசந்த்தமாளிகை ரிலீஸ் ஆவதற்கு முன்னர் ரிலீஸ் செய்யப்பட்ட படம் ஓடிகொண்டிருந்த போதிலும், சர்வ சாதாரணமாக கடந்து ஓடிய படம்.
10 சென்டர்களில் 100 days அதற்க்கு மேலும், 2 சென்டர்களில் 175 days அதற்க்கு மேலும்( பாரத விலாசிர்க்காக வழிவிட்டு) , தமிழகத்தில் 100% கடுமையான மின் வெட்டு இருந்தால் Generator வைத்து திரைஅரங்குகள் படம் ஒட்டவேண்டிய சூழ்நிலையிலும் மாபெரும் வெற்றிபெட்ட்று, Madurayil 200 days ஓடி முடிந்து ஷிப்டிங் முறையில் மேலும் 50 நாள் ஓடி மொத்தம் 250 நாளும் ,
வெளிநாடுகளில் குறிப்பாக இலங்கையில் நான்கு திரை அரங்குகளில் ஒன்றில் (லிடோ) 100 நாட்களும், மீதம் மூன்று திரை அரங்குகளில் (வெல்லிங்டன், Plaza , காபிடல் ) முறையே 250, 176, 287 நாட்களும் ஓடி இன்று வரை ஒரு இமாலய சாதனைய உள்ளது !
ஒரு பத்திரிகை என்றபொழுது தங்களுடைய சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பால், எந்த ஓர வஞ்சனையும் இல்லாமல் நடுநிலையாக எழுதாத பட்சத்தில் இவர்கள் எழுதுவது மற்ற செய்திகளை பொருத்தவரை அப்படியே உண்மை என்று எப்படி எடுத்துகொள்வது ?
நான் சென்னைக்கு வந்த பிற்கு இப்படி எழுதும் அந்த சினிமா எக்ஸ்பிரஸ் மேதாவியை சந்திக்கிறேன்.!
விட்டேனா பார் அந்த ஓரவஞ்சனைகாரனை ! ஒன்று இதுபோல அவன் எல்லா திரைபடதிர்க்கும் எழுதவேண்டும் இல்லையேல் ஓடிய விதம், தியேட்டர் பற்றி குறிப்பிடவே கூடாது !
Last edited by Sowrirajann Sri; 16th May 2013 at 08:47 PM.
-
16th May 2013, 08:39 PM
#3663
Junior Member
Regular Hubber

Originally Posted by
abkhlabhi
Oh...Sorry about that !
All the three did Chanakya Chandragupta and similar Function was conducted. I mistook that for this..!
thanks for the information and my sincere regrets on quoting it wrong by mistake.
-
16th May 2013, 08:45 PM
#3664
Junior Member
Regular Hubber

Originally Posted by
esvee
இனிய நண்பர் வாசுதேவன் சார்
உங்களின் கிராமத்து நினைவலைகள் தொகுப்பு கடந்த காலத்துக்கே அழைத்து சென்றுவிட்டது .
மிகவும் ரசித்தேன் . பசுமையான கிராமத்து சூழ்நிலை - மரியாதை மிக்க மக்கள் - பாசத்துக்கு கரம் நீட்டும் மக்கள் .
அனுபவித்து நீங்கள் பதிவிட்ட கிராமத்து அனுபவம்
அசத்துங்கள் ...
எஸ்வி சார்,
அப்படியே....பசுமை நிறைந்த நினைவுகளே...பாடி திரிந்த பறவைகளே ...பழகி களித்த தோழர்களே என்ற பாடலை பாடவேண்டியதுதானே சார் !
நல்ல விஷயங்களை மனதார பாராட்டும் உங்களுடைய இந்த ஒருகுணம் ஒன்று போதும் சார், எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடு இணை இல்லாதது !
Actually, So nice of you !
Thanking on behalf of "Ghee Fence" Vasudevan Sir !
-
16th May 2013, 09:12 PM
#3665
Junior Member
Seasoned Hubber
பாபு
என்னடா இவன் எபோதும் NT தின் late 80's படங்கள் பத்தியே எழுதுகிறான் என்று தோணலாம் ஏன் எனக்கே அப்படி தான் ஒரு எண்ணம் தோன்றியது . அதனால் இந்த கருப்பு வெள்ளை படம் பாபு
1971 ல் தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் வெற்றி பெற்ற ஒரே படம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நட் கணக்கில் எங்க பட்ட வெற்றி படங்கள் .
இந்த படம் மலையாளம் படத்தின் தழுவல் தான் ஆனால் அந்த nativity problem என்று சொல்வார்களே அட அதாங்க cultural differences அந்த மாதிரி எதுவும் ஏற்படவில்லை . காரணம் இந்த படத்தின் இயக்குனர் திரு AC திருலோகச்சந்தர் அவர்களின் சாமர்த்தியமான இயக்கம் .
இந்த படத்தில் NT தின் கேரக்டர் பல பரிணாம வளர்சிகளை இயக்குனர் அழகாக செதுக்கி இருப்பர் .
இந்த படம் லைட் ஹார்ட் படம் இல்லை கதை கொஞ்சம் கணம். NT நடிப்பு சும்மா பிச்சு உதறுவார் மனிதர் . இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை வாழ்ந்தார்.
கதை என்று பார்த்தல் ஒரு கை ரிக்க்ஷாகரன் தான் ஒரு வேலை சாப்பிட சாப்பாடுகாக, எப்பிடிஒரு குடும்பத்தை காப்பாற்ற முயல்கிறார் என்பதே கதை .
பாபு ஒரு மில்லில் வேலை பார்க்கிறார் அங்கே முதலாளியிடம் ஒரு தொழிலளிகாக சண்டை போட்டு தன் வேலையை இழைகிறார்.
தற்செயலாக கை ரிக்க்ஷா இழுக்கும் வேலை கிடைக்க அதன் மூலம் அவர் வாழ்கை எப்படி மாறுகிறது என்பதே இந்த படம் .
சில பேர் ரொம்ப புத்திசாலிகள் மாதிரி பேசுவதாக நினைத்து நான் உதவி செய்தால் எனக்கு என்ன லாபம் என்று பேசுவார்கள் அப்படி பட்டவர்கள் இந்த படத்தில் பாலாஜி பாத்திரம் பாபு க்கு செய்யும் ஒரு சிறிய உதவி எப்படி தங்கள் குடும்பத்தை காப்பாற்றியது என்பதே சாட்சியாகும்.
NT தன் சட்டை கிழிந்ததை , தன் வறுமையை நகைச்சுவையாக ,வெகு அலட்சியமாக தன் சட்டை கிழிந்ததை குறிபிடுவது அவர் வாழ்கையை எப்படி ஜாலியாக எடுத்து கொள்கிறார் என்பதுக்கு சாட்சி
NT யிடம் அவர் குடும்பம் காட்டும் பரிவும் அதற்கு NT தின் நெகிழ்ச்சியும் காண கண் கோடி வேண்டும் . ஒரு ரிக்க்ஷாகரன் உடல் மொழி எப்படி இருக்குமோ அப்படியே . இது வரைக்கும் யாரும் தன்னை எப்படி நடத்தியது இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிடிகிறது NT தின் விழிகள் .
சாப்பிட சொல்லும் பொழுது ஒரு குச்சம் வேலைக்காரன் வெளியே போய் சாப்பிட சொல்லும் பொழுது முதலில் அங்கே போவது இங்கேயே சாப்பிட சொல்லும் பொழுது முதலில் மறுப்பதும் பிறகு அன்புக்கு கட்டுபடவும் அதுவும் அந்த சின்ன குழந்தை தன் தட்டில் எடுத்து சாப்பிட்ட உடன் பதற்வதும் அதற்கு பாலாஜி சொல்லும் பதிலும் கவிதை .
அதே NT ஸ்ரீதேவி ஐ இரண்டு வருடம் கழித்து சந்திக்கும் பொழுது அவர் விழிகள் எழுப்பும் கேள்விகள் , துடிப்புக்கு 1000 சபாஷ் . அதே NT பாலாஜியின் மனைவி சௌகார்யிடம் தான் ஒரு நாய் என்றும் கடமை பட்டவன் என்றும் கதர்வதும் , சத்தியமா ஹில்ட்டர் கூட கண் கலங்குவான்
அதே சிவாஜி வளர்ந்த ஸ்ரீதேவி தன்னை ரிக்க்ஷகரன் என்று அவமானம் செய்ததும் ஒரு நிமிடம் திகைத்து சௌகார் தன் பெண்ணை அடித்ததும் அதை தடுத்து கொஞ்ச நேரம் வெளியே செல்வதும் எதார்த்தத்தின் உச்சம் . ஏனென்றால் நம்ம வீடுகளில் செல்லமாக வளர்த்த குழந்தை ஐ அடித்ததும் அப்பா வெளியே செல்வது மிகவும் வாடிக்கை. எங்கள் வீட்டில் இப்படி நடந்து உள்ளது .
அதே அம்மு வளர்ந்து குமரி அனா உடன் சிவகுமாரை காதல் செய்தும் அதை கண்டு பொங்கும் இடம் , பிறகு அம்மு (இப்போ நிர்மலா) தன் தவறை உன்னர்து செயல்பட்டதும் சமாதனம் ஆகும் இடம் ஒரு தந்தை போல காட்சி அளிக்கிறார்
இதற்கு இடையே தன் உடல் நலிவுற்று நோய் வந்ததை கூட கருத்தில் கொள்ளாமல் நிர்மலாவின் வளர்ச்சிக்க பாடு படும் பொழுது கடமை வீரனாக காட்சி அளிக்கிறார்.
தன் பெண்ணை ஒரு பணக்காரன் பெண் கேட்டு வந்ததும் NT காட்டும் கெடுபடி அந்த பணக்காரன் NT ன் தவறை சுட்டிகடியதும் திருத்தி கொள்வதும் மற்றும் தன் நிலை உணர்த்து கல்யாணத்துக்கு செல்லாமல் தவிர்ப்பதும் மனசு கேளாமல் அங்கே செல்வதும் போன பின் மாட்டி கொண்டதும் NT தான் நிர்மலாவின் மாமா இல்லை என்று மறுப்பதும் , ஆசிர்வாதம் பண்ணும் பொழுதே உயிர் பிரிவதும், உயிர் பிரியும் நொடியை அற்புதமாக கண் முலம் பார்வையாளர்களுக்கு உணர்த்துவது NT மட்டும் சாத்தியம் . அந்த நொடி அவர் கண்ணில் தெரிந்த ஒரு ஒலி அது உணர்த்தும் அர்த்தங்கள் 1000. தான் எடுத்து கொண்ட லட்சியம் நிறைவேறியதின் பூரிப்பு.
இந்த படத்தின் மிக பெரிய பலம் பாத்திர படைப்பு . எல்லாமே positive characters .
பாலாஜி - ஒரு சமத்துவவாதி. அவர் பத்திரம் ஒரு author backed ரோல். சிவாஜி இடம் அவர் காட்டும் இறக்கம் நம் அனைவர்க்கும் ஒரு படம் எப்படி மற்றவர்களை நம் எப்படி அவர்களின் வறுமைய் சுட்டிகட்டமல் அணுக வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு .
சௌகார் - வழக்கம் போலே அழும் பத்திரம் தான் அனாலும் அவ்வளவு உதவிகள் செய்யும் சிவாஜிய் தன் மகள் ரிக்க்ஷா கரன் என்று ஏசும் பொழுது அறைவதும் அதே பெண் சிவாஜிக்கு நோய் வந்த உடன் அலத்சிய படுத்தும் பொழுது கடித்து கொளும் இடத்தில ஸ்கோர் செய்து விடுகிறார்
VKR : சிவாஜின் well wisher அக வந்து வாழ்து இருக்கிறார் . தன் நண்பர்காக கை ரிக்சா வாங்கி அவர் இடம் கொடுப்பதும் . சிவாஜியிடம் உள்ள தான் என்ற குறைய் சுட்டி காட்டும் இடம் நல்ல நண்பர்களுக்கு ஒரு எடுத்துகாட்டு .
மேஜர்: ஒரு பணக்காரன் எப்பிடி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் . முதலில் பெண் கேட்ட யோசிப்பதும் பிறகு சிவாஜியிடம் பேசுவதும், தன் தகுதிக்கு குறைவான இடம் என்று தெரிந்தும் நாகேஷ் இடம்அவர்களுடன் சரிசமாக உரையாடுவதும் , சிவாஜிக்காக காத்திருந்து சௌகார்யிடம் அனுமதி கேட்கும் பாங்கு ஒரு நல்ல மனிதற்கு எடுத்துகாட்டு .
நாகேஷ் காமெடி , வாசு காமெடி ஊறுகாய் போல .
படத்தில் heroine இல்லை அனா அந்த குறை தெரியவில்லை . இப்படி ஒரு கதைல் நடிபதற்கு ஒரு தில் வேணும் அது சிவாஜிக்கு மட்டும் சத்தியம்.
பாடல்கள் இதோ எந்தன் தெய்வம் மற்றும் வருதப்பா வருதப்பா பாடல் இன்று அளவும் பிரபலம் .
இதன் தாக்கம் அரசாங்கம் வரைக்கும் சென்றது . இந்த படம் வந்த பிறகு தான் கலைஞர் கை ரிக்க்ஷா வை ஒழிக உத்தரவிட்டார் .
இதுவே இந்த படத்தின் வெற்றிக்கு சாட்சி .
-
16th May 2013, 09:13 PM
#3666
Junior Member
Seasoned Hubber
Vasu sir,
Thanks for your feedback and for uploading rare photos
-
16th May 2013, 09:28 PM
#3667
Senior Member
Seasoned Hubber
டியர் ராகுல் ராம்
பாபு படத்தைப் பற்றிய அருமையான ஆய்வேடு பதித்து விட்டீர்கள். பாராட்டுக்கள். தாங்கள் கூறியது போல் எல்லா பாத்திரப் படைப்புகளுமே பாஸிடிவ் என்பது படத்துக்கு ப்ளஸ் பாயிண்ட். பாராட்டுக்கள்.
1971 தீபாவளியில் பாபுவுடன் வெளியான ஆதி பராசக்தி மிகப் பெரிய வெற்றிப் படம். பல ஊர்களில் நல்ல வசூலைத் தந்த படம். இது குறிப்பிடத் தக்கது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
16th May 2013, 09:54 PM
#3668
Senior Member
Seasoned Hubber
நமது ntfans அமைப்பின் அடுத்த நிகழ்ச்சி, வரும் 19.05.2013 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு சென்னை ருஷ்யன் கலாச்சார மய்ய அரங்கில் நடைபெற உள்ளது. ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த உன்னதத் திரைக்காவியம் ராமன் எத்தனை ராமனடி திரையிடப் பட உள்ளது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
16th May 2013, 10:51 PM
#3669
Senior Member
Devoted Hubber
வாசு சார்,
தங்களின் என் கிராமம்... என் மக்கள் பதிவை கண்டவுடன் தங்களுடனே இருந்து அந்த கொண்டட்டாடங்களில் பங்கு பெற்றதை போல் உணர்ந்தேன். அது எப்படி சார் உங்கள் எழுத்து நடையின் மூலம் எங்களை சென்னையில் இருந்து ராமாபுரம் கிராமத்துக்கு பைசா செலவில்லாமல் அழைத்து சென்று விட்டீர்கள்?
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
17th May 2013, 06:39 AM
#3670
Senior Member
Diamond Hubber
நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வாரம்.
இன்றைய புகைப்படம்(2)
Last edited by vasudevan31355; 18th May 2013 at 08:40 AM.
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks