-
28th May 2013, 08:04 PM
#3981
Senior Member
Seasoned Hubber
வாசு சார்,
தங்கள் அன்பு மழையில் என்னைக் குளிப்பாட்டி பாராட்டு அணிகலனால் அலங்கரித்து தங்கள் அனைவரின் சிம்மாசனத்தில் அமர வைத்து விட்டீர்கள். தங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் என் சிரம் தாழ்ந்த பணிவான நன்றிகள். அதே போல் 4000 பதிவுகளுக்குத் தெரிவித்த வாழ்த்துக்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th May 2013 08:04 PM
# ADS
Circuit advertisement
-
28th May 2013, 08:11 PM
#3982
Junior Member
Devoted Hubber
அன்புள்ள ராகவேந்திரன் சார்
இன்று தங்கள் பிறந்தநாள் . வாழ்த்துக்கள் பல உண்டு ! அதிலே என்னுடையதும் ஒன்று..! இருப்பினும் ஒன்று ! இன்று சங்கடஹர சதுர்த்தி மற்றும் குருபெயர்ச்சி...தலைவர் என்னை போல் ஒருவனில் சொல்வதை போல..ஆமாம்...பேந்துடான் !
நல்ல நாள்...இனிய நாள்..தங்கள் பிறந்த நாள்..! வாழ்த்த வயதில்லை...! உங்கள் ஆசீர்வாதம் இந்நன்னாளில் பெற ஆசை..! நீங்களும் எனக்கு ஒருவிதத்தில் குருதான் !
-
28th May 2013, 08:13 PM
#3983
Junior Member
Devoted Hubber

Originally Posted by
kalnayak
ராகவேந்த்ரா சார், அருமையான யோசனை. நடிகர் திலகம் 360 டிகிரி-யில் நல்ல வித்தியாசமான சிறப்பான சிந்தனைகள் மலரட்டும். அடுத்த திரியிலும் தொடரட்டும்.
சௌரிராஜனுக்கு ஒரே விண்ணப்பம் - அவர் முன்னே எழுதியுள்ளது போல செந்தமிழில் எழுதினால் என்னைப்போன்ற சிலர் பயந்து விடக்கூடும் (நல்லவேளை தமிழை ஆங்கிலத்தில் தட்டெழுதுவதை மாற்றிக் கொண்டது.)
தம்பி...இந்த நக்கல் வுடரத நிறுத்தமாட்டே போலருக்கே..!
பின்னணியில்...தட்டட்டும் ...கை தழுவட்டும் பாட்டு உங்களுக்கு கேக்குதா ?
-
28th May 2013, 08:16 PM
#3984
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
NTthreesixty Degree
அன்புள்ள ராகவேந்திரன் சார்
இன்று தங்கள் பிறந்தநாள் . வாழ்த்துக்கள் பல உண்டு ! அதிலே என்னுடையதும் ஒன்று..! இருப்பினும் ஒன்று ! இன்று சங்கடஹர சதுர்த்தி மற்றும் குருபெயர்ச்சி...தலைவர் என்னை போல் ஒருவனில் சொல்வதை போல..ஆமாம்...பேந்துடான் !
நல்ல நாள்...இனிய நாள்..தங்கள் பிறந்த நாள்..! வாழ்த்த வயதில்லை...! உங்கள் ஆசீர்வாதம் இந்நன்னாளில் பெற ஆசை..! நீங்களும் எனக்கு ஒருவிதத்தில் குருதான் !
மிக்க நன்றி சார். என் வாழ்த்துக்கள் தங்களுக்கு எப்போதும் உண்டு.
உயிர்நாடி கதைக்களம் என்றால் உயிர்மூச்சு உரையாடல்கள் அதாவது வசனம் .
மூச்சும் நாடியும் எதில் வேலை செய்யும் என்றால்.. உடலில் ..!
அந்த உடல் தான் நடிகன் !
ஆக, நடிகன் என்ற உடலில் உயிர்நாடியும் மூச்சும் ஒன்றோடொன்று சரிவர கலந்தால்தான் துடிப்பு என்ற நடிப்பு உருவாகும் !
இதில் ஒன்று கூடி ஒன்று குறைந்தாலும் நடிப்பு என்ற கலை குறையுடன்தான் இருக்கும்..!
தமிழ் மொழியின் வலிமை அதை உரைகின்ற விதத்தில் உரைத்தால் தான் உறைக்கும் ! அதன் வலிமை, வல்லமை அப்படி...!
தங்கள் வலைப்பூவில் அட்டகாசமாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th May 2013, 08:42 PM
#3985
Junior Member
Devoted Hubber
முரசு தனியார் தொலைகாட்சியில் இப்போது ஒளிபரப்பில்...நமது நடிகர் திலகம் கலக்கும் "சத்திய சுந்தரம்"
ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய நாங்கள் எடுத்ததிந்த அவதாரம்
உங்கொப்பன் மவனே..உங்கொப்பன் மவனே ....மம்மி உனக்கு டம்மி தானப்பா...
Last edited by NTthreesixty Degree; 28th May 2013 at 08:45 PM.
-
28th May 2013, 08:47 PM
#3986
Junior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
மிக்க நன்றி சார். என் வாழ்த்துக்கள் தங்களுக்கு எப்போதும் உண்டு.
தங்கள் வலைப்பூவில் அட்டகாசமாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
Thanks for your appreciation sir..
-
28th May 2013, 08:53 PM
#3987
Junior Member
Devoted Hubber
RECAP :
நடிகர் திலகத்தால் தமிழர் சமுதாயத்திற்கு நினைவுபடுத்தப்பட்ட உலக வரலாற்றின் நாயகர்கள்
நடிகர் திலகத்தால் தமிழர் சமுதாயத்திற்கு நினைவுபடுத்தப்பட்ட உலக வரலாற்றின் நாயகர்கள் என்ற தலைப்பில் இன்றுமுதல் தினம் ஒரு தகவலை இடுகை செய்து புதிய மற்றும் இளைய தலைமுறயினர்களுக்கு, தமிழர்களுக்கு நடிகர் திலகம் ஆற்றிய தொண்டினை புரிந்துகொள்வதற்கு ஒரு அஸ்திவாரமாய் விளங்கும் என்று நினைகிறேன் :
முன்னுரை
1952, திரை உலக சித்தர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் திரை உலகில் முதன்முதலில் காலடி எடுத்து வைக்கும்போதே தமிழை, தமிழ் வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தனது முதல் படத்திலயே அனைவருக்கும் அருமையானதொரு பாடம் நடத்திய ஆசான் !
உரைநடை தமிழாகட்டும், இலக்கிய தமிழாகட்டும், சங்கத்தமிழாகட்டும், கொங்குதமிழாகட்டும் ...எந்த தமிழாக இருந்தாலும் அந்த தமிழை தமிழாக அழகாக உச்சரித்த ஓர் உன்னத கலைஞன் நம் நடிகர் திலகம் என்றால் அது மிகையாகாது....
இந்த கால தலைமுறையினர் நடிகர் திலகம் வருவதற்கு முன் பழக்கத்தில் புழுகத்தில் இருந்த நடிப்பையும் தமிழை முதலில் அறிதல் வேண்டும் ..அப்போதுதான் தமிழை பிறர் பேசிய விதம் புரியும்....நடிப்பும் வசனமும் தாமரை இல்லை மேல் தண்ணீர் போல இருந்ததை உணரமுடியும்
நடிகர் திலகம் தமிழ் திரை உலகிற்கு வருவதற்கு முன்பிருந்த தமிழ் சம்பாஷனைகள் சில துளிகள்
http://www.youtube.com/watch?feature...&v=4IdkG7hnwC0
http://www.youtube.com/watch?feature...&v=ovlbJ_FM3v4
http://www.youtube.com/watch?feature...&v=76MtBfrCFvM
-
28th May 2013, 08:55 PM
#3988
Junior Member
Devoted Hubber
ஒரு திரைபடத்தின் உயிர்நாடி என்றால் அது கதைக்களம்..
உயிர்நாடி கதைக்களம் என்றால் உயிர்மூச்சு உரையாடல்கள் அதாவது வசனம் .
மூச்சும் நாடியும் எதில் வேலை செய்யும் என்றால்.. உடலில் ..!
அந்த உடல் தான் நடிகன் !
ஆக, நடிகன் என்ற உடலில் உயிர்நாடியும் மூச்சும் ஒன்றோடொன்று சரிவர கலந்தால்தான் துடிப்பு என்ற நடிப்பு உருவாகும் !
இதில் ஒன்று கூடி ஒன்று குறைந்தாலும் நடிப்பு என்ற கலை குறையுடன்தான் இருக்கும்..!
தமிழ் மொழியின் வலிமை அதை உரைகின்ற விதத்தில் உரைத்தால் தான் உறைக்கும் ! அதன் வலிமை, வல்லமை அப்படி...!
உதாரணமாக :
ஆஹா...என்ற இந்த ஒரு வார்த்தை சந்தோஷம், அதிர்ச்சி, வேதனை, கிண்டல், கோபம், தாபம் மற்றும் பல உணர்சிகளுக்கு பயன்படுத்தி நாம் பார்திரிகிறோம்..!
ஒன்றிற்கு வேறொன்றை பேசினால் விஷயமே மாறிவிடும்...
அதுதான் தமிழின் வலிமை...!
1952 நடிகர் திலகத்தின் முதல் படம் பராசக்தி.
அப்படி என்ன நடிகர் திலகம் பேசிவிட்டார் என்று பலர் நினைக்கலாம்...
அப்படி நினைபவர்களுக்கு : முதல் திரைப்படம் ஒரு நடிகனின் வாழ்வில், தடங்கலுடன் தொடங்கிய படம் ...8 மாதம் படபிடிப்பு ரத்து செய்யப்பட்டு நடிகரை மாற்றவேண்டும் என்று ஜாம்பவான் ஏவிஎம் செட்டியார் அடம்பிடித்த நேரம். PA பெருமாள் என்ற பங்குதாரர் எழுத்து மூலம் கொடுத்த உத்தரவாதம் என்ன தெரியுமா..செட்டியாருக்கு ? இந்த படம் கணேசன் நடித்து வெளிவந்து நஷ்டம் ஏற்பட்டால் அதை முழுவதும் தான் ஏற்கிறேன் என்ற உத்தரவாதம் தான்.
என்ன ஒரு நம்பிக்கை நடிகர் திலகத்தின் மேல் !
இதில் தோல்வி அடைந்தால் ஏவிஎம் செட்டியார் அவர்கள் கூறியது சரிதான் என்ற ஏளன பேச்சு உறுதியாகிவிடும்...முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி உண்மையாகிவிடும். ஒரு நடிகனின் மனோபாவம் அந்த தருணத்தில் எப்படி இருக்கும் என்பதை நினைத்து சற்று பார்க்கவேண்டும்..! இந்த சூழலில் படம் முடிந்து தீபாவளி அன்று திரைக்கு வருகிறது...
அந்த கணேசன் என்ற சிவாஜி கணேசன் தன திறமையால் தமிழ் தாயை தமிழாக ,அழகாக பேசி தமிழ் தாயின் ஆசியோடு தன் முதல் படத்திலேயே , ஒரே இரவில் உச்ச நட்சத்திர அந்தஸ்து பெற்று பல சாதனைகளை படைக்கும் கலை தாகத்தோடு செல்கிறார்.
முதல் படத்தில் நவரச நடிப்பை இப்படி ஏதேனும் நடிகர் செய்திருப்பாரா என்று இதை பார்ப்பவர் சொல்லவேண்டும் !
முதல் படத்தில் நடிகர் திலகத்தின் ஹாஸ்ய நடிப்பு
http://www.youtube.com/watch?feature...&v=KsqfDbJv33U
கோபம் ரோஷம் ஆதங்கம் ஆக்ரோஷமாக மாறும் விந்தையுடன் கூடிய மிரட்டலான நடிப்பு
http://www.youtube.com/watch?feature...&v=B2ai_eNPkCs
-
28th May 2013, 08:56 PM
#3989
Junior Member
Devoted Hubber
அடுத்தது பாடல் வரிகேற்ப வாய் அசைத்தல் - முதல் படம்- அதில் திராவிட கருத்துக்களை சொல்லும் பாடல் - காட்சிபடி இதை பாடுவது ஒரு பயித்தியம் போல வேஷமிட்ட நாயகன்..கதைப்படி மற்றவர்களை பொருத்தவரை ஒரு பயித்தியம்...நடிகர் திலகத்தின் குரல் இயற்கையாக 9 டு 10 கட்டை கொண்ட சிம்ஹகுரல்...அனால்..பாடியிருப்பவர்...திரு.C S ஜெயராமன் அவர்கள்.
திறமை என்பது நடிப்பில் மட்டும் இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம் - திரு.ஜெயராமன் அவர்களுடைய குரல் மெல்லிய மென்மையான குரல். வழுக்கிக்கொண்டு செல்லும் குரல்...நடிகர் திலகத்தின் இயற்க்கை குரலோ சிம்ஹகுரல்.
இதை எவ்வளவு திறமை அவருள் இருந்தால் இப்படி வாயசைத்திருப்பர் என்று பாருங்கள். நடிகர் திலகம் திரு.ஜெயராமன் அவர்கள் பாடும்போது, தன்னுடைய பாவத்தை, முகவாயகட்டையை சிறிது குவித்து வைத்து...அதாவது வாயில் சிறிது வெற்றிலையோ அல்லது தண்ணீரோ வைத்துகொண்டு பேசினால் என்னகுரல் வருமோ அதுபோல வாயசைத்திருப்பர் .
பின்பு நடனம் - ஒருவித தான்தோன்றித்தனமான நடனம் இதில் பார்க்கலாம்...நடன ஆசிரியர் சொல்லிகொடுத்த ஸ்டெப்ஸ் மட்டுமே இங்கே நாம் பார்க்க முடியும். காட்சிக்கு என்ன தேவையோ அதை லாவகமாக செய்திருப்பார் நம்முடைய சித்தர் ! அந்த Movements அனைத்தும் பின்னணி இசையோடு கலந்து இருக்கும் நாம் சற்று கண்ணமூடி பாடலை கேடோமேயானால்...!
அபிநயம் இந்த பாடலில் அவரது தனி முத்திரை ! பாடல் வரிகேற்ற அபிநயம். இதை எந்த டைரக்டர் சொல்லி கொடுத்திருப்பார் அவருக்கு..! உதாரணம் : நல்லவரானாலும் (காசு/பணம்) இல்லாதவரை நாடுமதிக்காது குதம்பாய் என்ற வரி...இந்த வரி வரும்போது காசு / பணம் என்ற வார்த்தை பாடலில் இடம் பெற்றிருக்காது. ஆனால் நடிகர் திலகம் தனுடைய விரலை சுண்டி காண்பித்து காசு / பணம் என்று புரியவைப்பார். !
உங்களுடைய பார்வைக்கு அதன் ஓலி ஓளி வடிவம் !
http://www.youtube.com/watch?feature...&v=eCVQAzG8_14
-
28th May 2013, 08:57 PM
#3990
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரர் ஐயா-வுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

Bookmarks