-
1st June 2013, 07:31 PM
#121
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார்,
எதிர்பாராத இன்ப அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. தீபாவளி சமயத்தில் மூன்று நாட்களில் வந்து விடுவேன் என்று சொல்லிச்சென்றீர்கள். பம்மல் பகுதியில் மூன்று நாட்கள் என்பது இவ்வளவு நீண்ட நாட்களா என்பது தெரியவில்லை. (சும்மா விளைட்டுக்கு..., உங்களிடம் விளையாடாமல் யாரிடம் விளையாடப்போகிறேன்). இதனிடையே வசந்தமாளிகை மறுவெளியிட்டின்போது நமது ராகவேந்தர் சார் அவர்கள் அளித்த புகைப்படத்தின் மூலமும், மக்கள் திலகம் மலர் வெளியீட்டு விழாவின்போது நண்பர் வினோத் அவர்கள் அளித்த புகைப்படத்தின்மூலமும் தங்கள் திருமுகம் காணப்பெற்று, "ஓ... இவர்தான் எங்கள் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட பம்மலாரா" என்று வியந்தேன். நான் நினைத்திருந்ததற்கு சற்று கூடுதலான ஸ்மார்ட்டுடனே இருந்தீர்கள்.
எப்போது வருவாரோ என்று பெருமூச்செறிந்த வண்ணம் இருந்த எங்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக திடீர் தோன்றல் மூலம், அதுவும் எங்கள் மனம் கவர்ந்த 'தங்க சுரங்கம்' ஆவணத்துடன் வந்திருப்பது இருமடங்கு அல்ல பலமடங்கு இன்ப அதிர்ச்சி.
தொடர்ந்து அசத்துவீர்கள் என்ற எல்லையில்லா எதிர்பார்ப்புடன்....
நாங்கள் அனைவரும்..
-
1st June 2013 07:31 PM
# ADS
Circuit advertisement
-
1st June 2013, 07:33 PM
#122
Senior Member
Veteran Hubber
அன்புள்ள முரளி சார்,
ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதோ ஒரு பாடல். ஆனால் விவரித்திருப்பதோ கால் நூற்றாண்டு சரித்திரம். வாசுதேவன் அவர்கள் மிகச்சரியாக சொன்னதுபோல, மற்ற எவரும் ஒரு பாடலை அலசும்போது அதிகபட்சம் அப்படத்தின் எல்லைகளுக்குள் நின்று மட்டுமே அலசுவார்கள். அதில் அதிகபட்சமாக நடிகர்திலகத்தின் நடிப்புத்திறமை பற்றிய அலசல் சற்று தூக்கலாக இருக்கும் அவ்வளவே.
ஆனால் இப்படியா...!!!!!
நாடகம் உருவான விதம், அதோடு தொடர்புடைய மேஜரின் நாடக பங்களிப்புகள்.
வியட்நாம் வீடு சுந்தரத்தின் ஆரம்பகால பின்னணி. அவர் திரைக்கு வந்த வரலாறு.
அப்போதிருந்த தமிழ்த்திரையுலக சூழல். 1971-லிருந்து துவங்கிய நடிகர்திலகத்தின் தொடர் வெற்றி பவனி. ஞானஒளிக்கு முன்னும் பின்னும் வந்த திரைப்படங்கள்.
ஜேயார் மூவீஸ் தென்காசி சகோதரர்களின் திரையுலகப் பிரவேசம் மற்றும் வெற்றி நடை.
ஞானஒளி படத்தின் நட்சத்திரத் தேர்வு, அப்படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்களின் மினி அலசல்கள், 'தேவனே' பாடல் உருவான சூழ் நிலை. அப்பாடல் உருவாகக்கரணமாக அமைந்த அருண் (அந்தோணி) மற்றும் லாரன்ஸ் இடையே நடக்கும் மாரத்தான், அதன் விளைவாக இருவர் வாய்களிலிருந்தும் அவ்வப்போது தெறிக்கும் கூரான 'பஞ்ச்சஸ்' .
தன நாடகத்தைப்படமாக்க ஒப்புதல் அளித்த மேஜரின் பெருந்தன்மைக்கு கொஞ்சமும் குறையாமல், படத்தில் தனக்கு நிகரான பாத்திரத்தை மேஜருக்கு அளித்த நடிகர்திலகத்தின் பெருந்தன்மை.
பாடலின் இடையே வரும் வசனங்கள், அதைப்பேச பலரையும் அணுகிய கதை. வெண்ணெயை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக டி.எம்.எஸ். எதிரிலேயே மற்றவர்களை பேசவைத்து டெஸ்ட் செய்ததை அமைதியாக, அதே சமயம் "கடைசியில் என்கிட்டேதான் வருவீங்க' என்ற நமட்டுச்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த டி.எம்.எஸ். (ஏற்கெனவே "ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில், அழகிய நைல் நதி ஓரத்தில்" பேசியிருந்தாரே, அதுகூடவா யாருக்கும் நினைவு வரவில்லை?)
இறுதியாக 'தேவனே' பாடல் பற்றிய அலசல், அது படமாக்கப்பட்ட விதம், அதில் நடிகர்திலகம் காட்டிய அற்புதங்கள். பி.என்.சுந்தரம் அவர்கள் தன இறுதிக்காலம் வரை சொல்லிச் சொல்லி மகிழ்ந்த, நடிகர்திலகத்தின் அர்ப்பணிப்பைப்பார்த்து மேகம்கூட மனமிரங்கி எங்கள் நடிகர்திலகத்துக்கு குடைபிடித்த காட்சி.
ஆகக்கடைசியாக, இப்படத்தை முதன்முதலில் திரையரங்கில் பார்த்த தங்கள் அனுபவம்.
எதைச்சொல்வது, எதை விடுவது?.
இது மட்டுமல்ல, தாங்கள் எழுத்தில் செதுக்கியிருந்த "மலர்ந்தும் மலராத", "எந்தன் பொன் வண்ணமே" உள்பட அனைத்து ஆய்வுகளுமே திரையுலக வரலாற்றை உள்ளடக்கியவையே. (அதில் மலர்ந்தும் மலராத பாடல் ஆய்வை நான் தமிழில் மொழி பெயர்க்கத் துவங்கி, பெயர்க்கிறேன், பெயர்க்கிறேன் இன்னும் முடியவில்லை. இடையில் வணங்காமுடி கட்-அவுட்டில் விட்டிருந்ததை மீண்டும் துவங்கி, மோகன் ஆர்ட்ஸ் மோகன் அவர்கள் இரண்டுநாள் பட்டினியால் துடித்தது வரை வந்துள்ளேன். சீக்கிரம் முடிந்தால் இங்கு பதித்து, உங்களுக்கு மரியாதை செலுத்தி விடுவேன்.)
"முரளி சார் அவர்களே, அடிக்கடி வாங்க, அடிக்கடி வாங்க" என்று எல்லோரும் ஏன் துடிக்கிறார்கள் எனபது இப்போது மற்றவர்களுக்கும் புரிந்திருக்கும். "மணியன்" பற்றிய தங்கள் பதிவுக்கே ஒரு முனைவர் பட்டம் அளிக்கலாம்.
சிகரப்பதிவையிட்ட தங்களுக்கும், அதைப்பதிவிடத்தூண்டிய 'ஞானஒளி வாசுதேவன்’ அவர்களுக்கும் ஏராளமான நன்றிகள்.
-
1st June 2013, 07:35 PM
#123
Senior Member
Veteran Hubber
அன்புள்ள 'ஞான ஒளி' வாசுதேவன் சார்,
'தேவனே' பாடல் ஆய்வின்போது முரளியார் அவர்கள் மேஜர் நாடகக்குழுவைப்பற்றி சொன்னதுதான் போதும், சென்னையிலுள்ள அத்தனை நாடக குழுக்களின் புகைப்படங்களையும் பதிவிட்டு அசத்தி விட்டீர்கள். எப்படி இப்படி நினைக்கும்போதெல்லாம் உங்களுக்கு அனைத்தும் கிடைக்கிறது. சட்டியில் இருக்கப்போய்த்தான் அகப்பையில் வருகிறது.உங்கள் சேமிப்புக்கிடங்கு அபாரமானது.
அவற்றைப்பகிர்ந்துகொள்ள பெரிய மனது வேண்டும். அது தங்களிடமும், பம்மலார் அவர்களிடமும், ராகவேந்தர் அவர்களிடம் நிறைந்திருக்கிறது. (மக்கள் திலகம் திரியில் பதிவிடும் திரு ஜெய்சங்கர் அவர்களுக்கும் இப்பாராட்டு பொருந்தும்)
கலக்குங்கள், வேறென்ன சொல்லப் போகிறேன்....!!.
-
1st June 2013, 07:45 PM
#124
Junior Member
Seasoned Hubber
-
1st June 2013, 07:46 PM
#125
Junior Member
Seasoned Hubber
Welcome Pammalar sir your presence will add more strength to this thread , king of statistics
-
1st June 2013, 07:46 PM
#126
Junior Member
Seasoned Hubber
Watching Ethiroli in murasu TV
-
1st June 2013, 07:57 PM
#127
Senior Member
Veteran Hubber
என்னை இடைவிடாமல் நினைவில் வைத்து அழைத்துக்கொண்டிருக்கும் அருமை நண்பர் எஸ்.கோபால் அவர்களே....
இத்திரியைத் தங்கள் பொற்கரங்க்களால் துவங்கி வைத்தமைக்குப் பாராட்டுக்கள். முதல் பதிவே முத்தான பதிவு. நடிகர்திலகம் என்ற சிறந்த கலைஞரை தாண்டி, நடிகர்திலகம் என்ற அற்புத மனிதரை அனைவருக்கும் காட்டியுள்ளீர்கள்.
தங்கள் ஆய்வுக்கட்டுரைத்தொகுப்பு மிக மிக அருமை. ரொம்ப சிரத்தை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு படமாக ஆய்வு செய்வதோடு அது எந்த நடிப்புப் பள்ளியின்கீழ் வருகிறது என்ற ஒப்பீடும், சில சமயங்களில் சில படைப்புகள் பல பள்ளியின் ஒன்று சேர்ந்த கலவைஎன நீங்கள் விளக்கும் விதமும் அபாரம்.
இவற்றை இங்கே பதிவதோடு நிற்காமல் ஏதேனும் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற முனையுங்கள். முனைபவர்களுக்கு மட்டுமே 'முனைவர்' பட்டம்.
(அட்வான்ஸாக) டாக்டர் எஸ்.கோபால் வாழ்க..!!...
-
1st June 2013, 10:22 PM
#128
Senior Member
Diamond Hubber
Sharkukh getting Chevaliye Sivaji Award at Vijay TV
At 17.29
-
1st June 2013, 10:43 PM
#129
Senior Member
Diamond Hubber

Originally Posted by
mr_karthik
என்னை இடைவிடாமல் நினைவில் வைத்து அழைத்துக்கொண்டிருக்கும் அருமை நண்பர் எஸ்.கோபால் அவர்களே....
இத்திரியைத் தங்கள் பொற்கரங்க்களால் துவங்கி வைத்தமைக்குப் பாராட்டுக்கள். முதல் பதிவே முத்தான பதிவு. நடிகர்திலகம் என்ற சிறந்த கலைஞரை தாண்டி, நடிகர்திலகம் என்ற அற்புத மனிதரை அனைவருக்கும் காட்டியுள்ளீர்கள்.
தங்கள் ஆய்வுக்கட்டுரைத்தொகுப்பு மிக மிக அருமை. ரொம்ப சிரத்தை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு படமாக ஆய்வு செய்வதோடு அது எந்த நடிப்புப் பள்ளியின்கீழ் வருகிறது என்ற ஒப்பீடும், சில சமயங்களில் சில படைப்புகள் பல பள்ளியின் ஒன்று சேர்ந்த கலவைஎன நீங்கள் விளக்கும் விதமும் அபாரம்.
இவற்றை இங்கே பதிவதோடு நிற்காமல் ஏதேனும் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற முனையுங்கள். முனைபவர்களுக்கு மட்டுமே 'முனைவர்' பட்டம்.
(அட்வான்ஸாக) டாக்டர் எஸ்.கோபால் வாழ்க..!!...
இதே எண்ணம்தான் இரு நாட்களுக்கு முன்பு பஸ் பிரயாணத்தின் போது எனக்கும் ஏற்பட்டது. நான் பதிவிடுவதற்கு முன்பு நீங்கள் முந்திவிட்டீர்கள். அதனால் வழி மொழிகிறேன். ஆராய்ச்சிக் கட்டுரையோடு நின்றுவிடாமல் நூலாக வெளிவரணும். ஆங்கிலத்திலும் தமிழிலும். சிறந்த கலை விமர்சனப் பிரிவில் தேசிய விருதுக்கும் தகுதி பெறக்கூடிய ஒன்று. உலகெங்கும் இருக்கும் பலதரப்பட்ட பலதரப்பட்ட நாடுகளில் நூலகங்களில் இடம்பெற வழிவகை செய்யணும். வரப்புயர நீர் உயரும் - நீர் உயர நெல் உயரும் என்பதற்கிணங்க சிவாஜி என்ற குடையின் எல்லோரும் பெருமை பட்டுக்கொள்ள உதவும் ஒரு சரித்திர நிகழ்வு திரு கோபால் அவர்களின் தொடர் ஆய்வுக் கட்டுரைகள்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
1st June 2013, 11:18 PM
#130
Senior Member
Diamond Hubber
சகல,
செவாலியே சிவாஜி கணேசன் விருது காணொளிக்கு நன்றி
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

Bookmarks