Page 146 of 397 FirstFirst ... 4696136144145146147148156196246 ... LastLast
Results 1,451 to 1,460 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #1451
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    தன் படங்களில் இடம் பெறும் பாடல்கள் விஷயத்தில், அதிக அக்கறையும், சிரத்தையும் எடுத்துக் கொள்வார் எம்.ஜி.ஆர்., தான் எதிர்பார்க் கும் விதத்தில், மெட்டு வரும் வரையில் இசையமைப்பாளர்களை ஓய விட மாட்டார். தான் நடிக்கும் படப் பாடல்களின் மெட்டுக்கள் மட்டுமின்றி, பாடல் வரிகளும் மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில், எம்.ஜி.ஆர்., அதிக சிரத்தை எடுத்துக் கொள்வார்.
    எவ்வளவு பெரிய கவிஞராக இருந்தாலும், எம்.ஜி.ஆர்., போதும் என்று சொல்லும் வரை, அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, பாடல் வரிகளை அடித்துத் திருத்தி, எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., படங்களுக்கு மெட்டுப் போடுவதில் இருந்து, பாடல் எழுதுவது வரை, இசையமைப் பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு மிகுந்த பொறுமையும், சகிப்புத்தன்மையும் அவசியமாக இருந்தது. அந்த அளவுக்கு, எம்.ஜி.ஆர்., கசக்கிப் பிழிந்து விடுவார்.
    அளவுக்கு அதிகமான எம்.ஜி.ஆரின் தலையீடும், சிரத்தையும் தான், மற்ற நடிகர்களின் பழைய பாடல்களை விட, எம்.ஜி.ஆரின் பழைய பாடல்கள், இன்றைய இளைஞன் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் விரும்பிக் கேட்பதற்கு அடிப்படை காரணங்களாக அமைந்தன என்றால், அது மிகையல்ல. எம்.ஜி.ஆர்., இரட்டை வேடத்தில் நடித்த படம், நினைத்ததை முடிப்பவன்.
    இந்தப்படத்தில், எம்.ஜி.ஆர்., கொள்ளைக் கூட்டத்தின் மத்தியில், அவர்களை வேவு பார்க்க வந்து, மாறு வேடத்தில் நின்று கொண்டிருக்கும் போலீஸ்காரர்கள் மத்தியில், பாடுவதாக ஒரு பாடல் காட்சி.
    அருமையான ஒரு மெட்டமைத்து, எம்.ஜி.ஆரிடம் பாடிக் காட்டினார் எம்.எஸ்.வி., அந்த மெட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.
    ஒரு பிரபலமான கவிஞரை, அந்த மெட்டுக்கு பாடல் எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர்., காட்சிச் சூழலை நன்கு கேட்டு, தெரிந்த கொண்ட அந்த கவிஞர், பாடல் எழுதி முடித்ததும், எம்.ஜி.ஆரிடம் படித்துக் காண்பித்தார். பாடல் வரிகள் நன்றாக இருந்தும், எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அந்த வரிகள் அமையாததால், மீண்டும் புதிதாக சில பல்லவிகளையும், சரணங்களையும் எழுதச் சொன்னார்.
    ஆனாலும், எம்.ஜி.ஆர்., முகத்தில் திருப்தி இல்லை. வேறு ஒரு பிரபல கவிஞரை அழைத்து, இதே மெட்டுக்கு எழுத வைத்தனர்.
    அந்தப் பாடலும் திருப்தி இல்லை. இதே போல், அந்த நாளில் பிரபலமாக இருந்த ஆறு கவிஞர்கள், அந்த மெட்டுக்கு பாடல் எழுதப் பணிக்கப்பட்டனர். எந்த வரிகளுமே, எம்.ஜி.ஆரை வசீகரிக்கவில்லை.
    கடைசியில், ஒரு மூத்த கவிஞரை கூப்பிட்டு எழுதச் செய்தனர். பாடல் வரிகளை கேட்ட எம்.ஜி.ஆர்., முகத்தில், பூரண சந்திரனாக புன்னகை பொங்கி வழிந்தது... "இது தான். இதே தான். நான் எதிர்பார்த்தது...' என்றார் எம்.ஜி.ஆர்., உடனே பாடல் ஒலிப்பதிவுக்கு, ஏற்பாடு செய்யுங்கள் என்றார் எம்.ஜி.ஆர்., உற்சாகம் பொங்க. அந்தப் பாடல் இது தான்...
    கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
    உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
    உண்மை இல்லாதது...
    அறிவை நீ நம்பு! உள்ளம் தெளிவாகும் அடையாளம்
    காட்டும் பொய்யே சொல்லாதது...
    எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்பை, பாடலில் கொண்டு வந்த அந்தப் பாடலாசிரியர் கவிஞர் மருதகாசி.
    ***

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1452
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மாண்புமிகு மனிதநேய மணிமகுடம் மக்கள் திலகம் எம் ஜி ஆர்
    அலைகள் அடங்குவதில்லை அடித்துக்கொண்டே இருக்கும் எம்ஜிஆர் புகழலை அடித்துக்கொண்டே இருக்கின்றது.

    ஓராயிரம் ஆண்டுகள் போனாலும் எம் ஜி ஆர் புகழ் மங்காது..!
    உள்ளமதில் ஈழவரைச் சுமந்தவரை அள்ளித்தந்த நல்லவரை விண்ணுலகம் அழைத்ததனால்
    மண்ணுலகில் ஈழவர்கள் வேதனையில் விழுந்தனரே..!
    ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என முழங்கட்டுமே..! என்று தீர்க்க தரிசனமாக சொன்னவர் கருணைவாரிதி புன்னகை மன்னன் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர்.
    வள்ளுவன் இளங்கோ கம்பனைப்போல் விரியும் புகழுக்கு ஆளாகி, விரிந்து செல்லும் புகழுக்கு மனிதராகி, மக்களால் மறக்க முடியா அன்புக்கு சொந்தமாய் திகழ்பவர் அமரர் எம் ஜி ஆர்.
    ஆறுகள் அடங்குவதில்லை ஓடிக்கொண்டே இருக்கும் அதுபோலவே எம் ஜி ஆரின் புகழாறும் ஓடிக்கொண்டே
    இருக்கின்றது.
    அலைகள் அடங்குவதில்லை அடித்துக்கொண்டே இருக்கும் அதுபோல் அவரின் புகழலை அடித்துக்கொண்டே இருக்கின்றது.
    சத்திய தாயின் உத்தம மகனாய் பிறந்து தமிழர்கள் வீடுகளில் தெய்வமகனாகி விட்டார் அமரர் எம் ஜி ஆர் என்றால் மிகையில்லை.
    சிறு வயதில் தான் பட்ட துன்பங்களை வசதிகள் வந்த பின்பு மறந்து விடாது தன்னைப்போல் சிறு பராயத்தில் கஷ்டங்களை சிறு பிள்ளைகள் படக்கூடாது என்றெண்ணி அவர்களுக்கு உணவு வழங்கி காத்து வந்தார்.

    அவரின் மனித நேயமே அவரை எல்லோரும் மதிக்கும்படி செய்தது, அஞ்சா நெஞ்சமும் சோம்பல் இல்லா சுறுசுறுப்பும் அவரை மேலே மேலே உந்தித்தள்ளியது வெற்றிமேல் வெற்றிகள் மலர்களாய் விரிந்து அவருக்கு மணம் பரப்பியது.
    தப்பு என்றால் அவர் எவராயினும் தட்டிக்கேட்க்க தயங்கியதில்லை மனதில் பக்குவம் நல்லவர்கள் கூட்டு செய்கையில் நேர்மை ஆற்றல் உள்ளவர்களை மதிக்கும் பண்பு கண்ணீர் சிந்தியோரை சிரிக்க செய்தார்.
    சிரித்தவர்களை சிந்திக்க செய்தார் அரசு பார்க்கட்டும் அது நம்ம வேலையில்லை என்று ஒதுங்கி வாழவில்லை.
    ஆபத்து காலங்களில் மக்கள் துயர் துடைக்க அலையாய் எழுந்து அல்லலுற்றோரை அணைத்தார் ஆறுதல் சொன்னார் அன்னமிட்டார், வாத்தியார் வந்துவிட்டார் என்று அறிந்தவுடன் பசியால் மெலிந்தவர்கள் முகங்களில் புன்னகை பூத்தது பொன்மனம் அவர்கள் பசியை ஆற்றியது.
    “ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்னே” என்ற அய்யன் திருவள்ளுவன் குறளுக்கு தக்கபடி வாழ்ந்து காட்டினார்.
    பசியை பொறுத்து தவமிருக்கும் வலிமை மிகுந்த முனிவர்களை காட்டிலும் பசித்தவர்கள் பசியை போக்குபவரே மிகவும் சிறந்தவர் என்பது அக்குறளின் பொருளாகும்.
    பணத்துக்கும் பதவிக்கும் யாரையும் பின்பற்றியதில்லை அவரின் செயல்த்திறன் கண்டு பட்டங்களும் பதவிகளும் தேடி வந்தன.
    நாடி வந்தோருக்கு நல்விருந்தளித்து நல்மனதுடன் கோடி நன்மைகள் செய்தார் கொண்டோர் கொண்டாடினர் கோலமகன் கொடையுள்ளம் கண்டு.
    தனது நாடகக்குழுவில் நடித்த நலிவுற்ற கலைஞர்களுக்கு சுமார் 35 ஆண்டுகள் ஒவ்வொரு மாதமும் சம்பளம் அனுப்பிக்கொண்டிருந்தார்.
    தன் கலைக்குழுவினர் நிலையுணர்ந்து, அதிசய மனிதராக அற்புத மனிதராக உலகத்துக்கு தன் செயலால் உணர்த்தினார் .
    இன்னல்பட்ட ஈழமக்களுக்கும் உதவிகள் செய்தார் அவர்கள் விடிவுக்கு பல வழிகளிலும் கைகொடுத்தார்.
    தமிழர்கள் எல்லோரும் இன்று அவர் புகழை அறிவார்கள் அவரை கேலி செய்தோர் கிண்டல் செய்தோர் எல்லோரும் இன்று அவரை சொந்தங்கொண்டாடுகின்றார்கள் என்றால் தர்மத்தின் வலிமை எத்தகையது என்பதனை அறியலாம்.

    அவரைப்போல் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான நடிகன் முன்புமில்லை இன்றளவுமில்லை ஆனால் புகழில் அவருக்கு இணையாக எவரும் நெருங்க முடியவில்லை இன்றளவும் இனியும் வரப்போவது இல்லை.
    தொழில்களை நேசித்தார் தொழிலாளிகளை போற்றினார் அவர்கள் பெருமைகளை நாட்டு மக்களுக்கு தனது நடிப்பாலும் பாட்டாலும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
    வானத்து நிலவாய் சிலர் இருப்பார் அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி..
    என்ற அவரின் பாட்டை கேட்டு உற்சாகம் கொண்ட தொழிலாளிகள் ஓடியோடி உழைத்தனர்..
    உழைப்பால் பிழைப்போர் தாழ்ந்திருந்தாலும் உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே என்றொரு பாட்டினால் பொருளாதாரத்தால் நொந்த ஏழைத்தொழிலாளிகள் இதயத்துக்கு ஒத்தடம் கொடுத்தார்.
    பாடுபட்ட கை இது பாட்டாளிக்கை என்று தொழிலாளி பெருமையினை எழுச்சியுடன் பறைசாற்றினார்.

    தனது நடிப்பால் அவர் கைவீசி புன்னகைத்து எழுச்சி கூட்டி நடிக்கும் அழகு பொலிவு அவருக்கு மட்டுமே வரும் கலை.
    என்றும் அவர் இரசிகர்கள் அவர் நினைவாகவே வாழ்கின்றார்கள் அவர் சொன்ன நல்ல பாதையில் அனைவரும் நடத்தலே உண்மையில் அவரின் ஆன்மாவுக்கு மேலும் மேலும் மகிழ்வைத்தரும்
    எம் ஜி ஆர் நாமம் வாழ்க.

    courtesy; PANBALAI.COM

  4. #1453
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    தக்க சமயத்தில் t.m.s. அவர்களை நினைவு கூர்ந்து அவர் பங்கு பெற்ற "அடிமைப்பெண் " பட வெளியீட்டு விழா செய்தியினை பதிவிட்ட திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !



    வழக்கமாக ஆங்கில மொழியில் தான் இப்படிப்பட்ட பிரம்மாண்டமான படங்களை எடுக்க முடியும். ஆனால் நமது தமிழ் மொழியில் அந்த பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தியவர் மக்கள் திலகம் தான் என்று y.g. மகேந்திரன் அன்று பேட்டி அளித்து நமது புரட்சித்தலைவருக்கு புகழாரம் சூட்டியது மறக்க முடியாத ஒன்று.
    அனபன் : சௌ. செல்வகுமார்



    என்றும் எம் ஜி ஆர்.

    எங்கள் இறைவன்

  5. #1454
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1455
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    தன் படங்களில் இடம் பெறும் பாடல்கள் விஷயத்தில், அதிக அக்கறையும், சிரத்தையும் எடுத்துக் கொள்வார் எம்.ஜி.ஆர்., தான் எதிர்பார்க் கும் விதத்தில், மெட்டு வரும் வரையில் இசையமைப்பாளர்களை ஓய விட மாட்டார். தான் நடிக்கும் படப் பாடல்களின் மெட்டுக்கள் மட்டுமின்றி, பாடல் வரிகளும் மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில், எம்.ஜி.ஆர்., அதிக சிரத்தை எடுத்துக் கொள்வார்.
    எவ்வளவு பெரிய கவிஞராக இருந்தாலும், எம்.ஜி.ஆர்., போதும் என்று சொல்லும் வரை, அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, பாடல் வரிகளை அடித்துத் திருத்தி, எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., படங்களுக்கு மெட்டுப் போடுவதில் இருந்து, பாடல் எழுதுவது வரை, இசையமைப் பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு மிகுந்த பொறுமையும், சகிப்புத்தன்மையும் அவசியமாக இருந்தது. அந்த அளவுக்கு, எம்.ஜி.ஆர்., கசக்கிப் பிழிந்து விடுவார்.
    அளவுக்கு அதிகமான எம்.ஜி.ஆரின் தலையீடும், சிரத்தையும் தான், மற்ற நடிகர்களின் பழைய பாடல்களை விட, எம்.ஜி.ஆரின் பழைய பாடல்கள், இன்றைய இளைஞன் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் விரும்பிக் கேட்பதற்கு அடிப்படை காரணங்களாக அமைந்தன என்றால், அது மிகையல்ல. எம்.ஜி.ஆர்., இரட்டை வேடத்தில் நடித்த படம், நினைத்ததை முடிப்பவன்.
    இந்தப்படத்தில், எம்.ஜி.ஆர்., கொள்ளைக் கூட்டத்தின் மத்தியில், அவர்களை வேவு பார்க்க வந்து, மாறு வேடத்தில் நின்று கொண்டிருக்கும் போலீஸ்காரர்கள் மத்தியில், பாடுவதாக ஒரு பாடல் காட்சி.
    அருமையான ஒரு மெட்டமைத்து, எம்.ஜி.ஆரிடம் பாடிக் காட்டினார் எம்.எஸ்.வி., அந்த மெட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.
    ஒரு பிரபலமான கவிஞரை, அந்த மெட்டுக்கு பாடல் எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர்., காட்சிச் சூழலை நன்கு கேட்டு, தெரிந்த கொண்ட அந்த கவிஞர், பாடல் எழுதி முடித்ததும், எம்.ஜி.ஆரிடம் படித்துக் காண்பித்தார். பாடல் வரிகள் நன்றாக இருந்தும், எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அந்த வரிகள் அமையாததால், மீண்டும் புதிதாக சில பல்லவிகளையும், சரணங்களையும் எழுதச் சொன்னார்.
    ஆனாலும், எம்.ஜி.ஆர்., முகத்தில் திருப்தி இல்லை. வேறு ஒரு பிரபல கவிஞரை அழைத்து, இதே மெட்டுக்கு எழுத வைத்தனர்.
    அந்தப் பாடலும் திருப்தி இல்லை. இதே போல், அந்த நாளில் பிரபலமாக இருந்த ஆறு கவிஞர்கள், அந்த மெட்டுக்கு பாடல் எழுதப் பணிக்கப்பட்டனர். எந்த வரிகளுமே, எம்.ஜி.ஆரை வசீகரிக்கவில்லை.
    கடைசியில், ஒரு மூத்த கவிஞரை கூப்பிட்டு எழுதச் செய்தனர். பாடல் வரிகளை கேட்ட எம்.ஜி.ஆர்., முகத்தில், பூரண சந்திரனாக புன்னகை பொங்கி வழிந்தது... "இது தான். இதே தான். நான் எதிர்பார்த்தது...' என்றார் எம்.ஜி.ஆர்., உடனே பாடல் ஒலிப்பதிவுக்கு, ஏற்பாடு செய்யுங்கள் என்றார் எம்.ஜி.ஆர்., உற்சாகம் பொங்க. அந்தப் பாடல் இது தான்...
    கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
    உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
    உண்மை இல்லாதது...
    அறிவை நீ நம்பு! உள்ளம் தெளிவாகும் அடையாளம்
    காட்டும் பொய்யே சொல்லாதது...
    எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்பை, பாடலில் கொண்டு வந்த அந்தப் பாடலாசிரியர் கவிஞர் மருதகாசி.
    ***
    வினோத் சார்,
    கண்ணை நம்பாதே பாடலின் வரலாற்றை பதிவு செய்ததற்கு நன்றி. மேலும் ஒரு தகவல். கவிஞர் மருதகாசி அவர்கள் இந்தப் பாடலில் முதலில் எழுதிய வரிகள்
    பொன்பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு தன்வழியே போகிறவர் போகட்டுமே
    மக்கள் திலகம் இவ்வரிகளைக் கேட்டவுடன் தன்வழி என்பது நல்ல வழியாக இருக்கலாமே. அந்த வார்த்தையை மாற்றினால் நன்றாக இருக்கும் எனக் கூறியவுடன் தன்வழியே போகிறவர் என்ற வார்த்தைகளை மாற்றி கண்மூடிப் போகிறவர் போகட்டுமே என கிராம வழக்கில் உள்ள வாக்கினை அமைத்து பாடலை திருத்தியமைத்தார் மருதகாசி அவர்கள். இது பற்றி அவரே குறிப்பிட்டுள்ளார். மக்கள் திலகத்தின் புலமைக்கும் திறமைக்கும் இது ஒரு சான்று.

  7. #1456
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ragulram11 View Post
    A book written by MGR- How he derived an idea of Making Nadodi Mannan is recently released
    Ragulram sir,
    Will you please provide more informations about book. I wish to purchase it. Where can I get it?

  8. #1457
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
    கண் மூடி போகிறவர் போகட்டுமே
    என் மனதை நான் அறிவேன்
    என் உறவை நான் மறவேன்
    எது ஆன போதிலும் ஆகட்டுமே
    நன்றி மறவாத நல்ல மனம் போதும்
    என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்

    மக்கள் திலகத்தின் அரசியல் மற்றும் திரை உலக வாழ்க்கையில் மேற்கண்ட பாடல் வரிகள் எத்தனை பொருத்தமாக அமைந்துள்ளது என்பதை நினைத்தால் மக்கள் திலகத்தின் தீர்க்கதரிசனம் புரிகிறது .

    மக்கள் திலகம் வாழ்ந்த காலத்தில் அவரால் பயன் அடைந்தவர்கள் சோதனை காலத்தில் அவரை விட்டு பிரிந்து சென்று பின்னர் வருத்தப்பட்டவர்கள் பலர் .

    மக்கள் திலகத்தின் உண்மையான ரசிகர்கள் மட்டும் அன்றும் இன்றும் என்றும் அவர் புகழ் பாடிக் கொண்டே
    இருந்தார்கள் - இருக்கிறார்கள் - இருப்பார்கள் .

    மக்கள் திலகத்தை விரும்பாதவர்கள் கூட அவரை பற்றி சிந்திக்கவும் -பாராட்டவும் துவங்கி இருப்பது
    மக்கள் திலகத்தின் புகழுக்கும் அவரது தூய்மையான ரசிகர்களுக்கு கிடைத்த .வெற்றியாகும்

  9. #1458
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like






    Last edited by esvee; 5th June 2013 at 05:20 AM.

  10. #1459
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    VERY NICE DISCUSSION ABOUT MAKKAL THILAGAM CHARISMA.


  11. #1460
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •