-
6th June 2013, 11:58 AM
#231
Junior Member
Devoted Hubber
Last edited by NTthreesixty Degree; 6th June 2013 at 01:07 PM.
-
6th June 2013 11:58 AM
# ADS
Circuit advertisement
-
6th June 2013, 12:22 PM
#232
Junior Member
Newbie Hubber
ஓகே.சௌரி சார். நீங்கள் உணர்ச்சி வச படுகிறீர்கள். யார் நல்லவர் -கெட்டவர் என்ற ஆராய நாம் இங்கில்லை. என்னை பொறுத்த வரை ரவி Handsome ,நல்ல நடனம் தெரிந்த உற்சாகமான நடிகர்.(கொஞ்சம் stiff என்பதை நானே எழுதி விட்டேனே). நான் ஒரு சாதாரண ரசிகனாக எழுதுகிறேன். நீங்கள் எழுதுவதை பார்த்தால் கொஞ்சம் personal ஆவதாக தெரிகிறது. உங்கள் மனம் புண் பட்டிருந்தால் மன்னிக்கவும்.
Last edited by Gopal.s; 6th June 2013 at 01:26 PM.
-
6th June 2013, 01:08 PM
#233
Junior Member
Devoted Hubber
திரைத்துறையில் தயாரிபாளர்களுக்கு நடிகர் திலகத்தை போல ஒரு உற்ற நண்பன் இருந்தார் என்றால் அது மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் என்பது இன்றளவும் அனைவராலும் ஒத்துகொள்ளபட்ட விஷயம் (ஒரு சில நடுநிலையற்ற தாழ்புனற்சிகொண்டவர்களை தவிர) !
ஒரு நடிகனின் வாழ்வு மற்றும் நட்சத்திர அந்தஸ்து தயாரிப்பாளர்களை துன்புறுத்துவதில் அல்ல ! அவர்களை கடனாளியாக்காமல் கடைசிவரை செல்வந்தராகவே வைத்திருப்பதில்தான் ! அப்படி ஒரு நட்சத்திர நடிகர் இருந்தால் என்றால் அவர் நடிகர் திலகத்தை போல திரு.ஜெய்ஷங்கர் ஒருவர்தான் !
மிக பிரபலமாக பேசப்பட்டு வெற்றிகரமாக வசூலில் சாதனை இன்றளவும் புரிகின்ற துணிவே துணை மொத்த செலவே ஐந்து லட்சம் தான் என்றால் யாரும் நம்புவது சற்றுகடினம் தான் ..அதிலும் தயாரிப்பாளர் பண பிரச்சனையால் அவதிப்பட்டபோது ..தனக்கு வரவேண்டிய பாக்கியை கேட்டு மேலும் தொந்தரவு செய்யாமல்..படம் வெளிவர ஆவன செய்ததோடு மட்டும் அல்லாமல் தயாரிப்பாளருக்கு பணம் வந்த பிறகு பெற்றுக்கொள்ள இசைந்து பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து அதை பெற்றுக்கொண்ட அந்த மனப்பாங்கு எந்த கலையின் நிலவுகளுக்கும் சூரியங்களுக்கும் வராது !
படம் தயாரிக்கவேண்டும் அதில் கொஞ்சம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம்கொண்டு வருபவரை படம் வெளியாகும்வரை காப்பாற்றும் தன்மை மக்கள் கலைஞர் ஒருவருக்கு தான் உண்டு...!
தூத்துக்குடி திரைஅரங்கு வளாகம் தீகிரயானபோது...அப்போதைய முதல்வர் திரு.m g r அவர்களிடம் ருபாய் பத்தாயிரதிர்கான காசோலையை அடுத்தநாளே தன் சிறிய மகளுடன் சென்று வழங்கிவிட்டு வந்தார். ! நிலவுகள் இந்த செயலை செய்ததா என்று நாம் பார்தால்...நிலவு ...மேகத்திற்கு பின்னால் மறைந்துதான் சென்றது !
அதே போல புயல் வெள்ள நிவாரணமாக...10,000 உணவு பொட்டலங்களை உடனடியாக ஸ்டாண்டர்ட் வேனில் கொடுதனுபியதும் முதலில் இதே மக்கள் கலைஞர் தான்...ஆனால்...அன்றைய முதல்வரின் தாழ்புனற்சியால் அந்த உணவுபொட்டலங்கள் அனைத்தும் விநியோகம் செய்யப்பட விடாமல் ரோடு முழுவதும் கொட்டப்பட்ட கதை இந்த நாடறியும். ! நிலவு அப்போதும் மறைந்துதான் இருந்தது..!
மக்கள் கலைஞர் இறந்த பிறகு அவருக்கு அவர் நடிக்கும் காலத்தில் பல தயாரிபாளர்களால் கொடுக்கப்பட்டு அதை வங்கியில் டெபொசிட் செய்தபோது காசிலாமல் திரும்பி வந்த காசோலைகளின் மொத்தத்தொகை எவ்வளவு தெரியுமா...? சுமார் 2.28 Cr . அதை ஒரு நோட்டுபுத்தகத்தில் அவர் இறந்த பின்னர் கணக்கு எழுதியவன் என்ற முறையில் நானே சாட்சி..!
மனிதரில் மாணிக்யம் என்று இன்றளவும் போற்றப்படும் நட்சத்திர நடிகர் மக்கள் கலைஞர் ஒருவரே !
Last edited by NTthreesixty Degree; 6th June 2013 at 01:13 PM.
-
6th June 2013, 01:19 PM
#234
Junior Member
Newbie Hubber
சௌரி சார்,
நாம் இங்கு மதர் தெரசா, காந்தி இவர்களை விவாதிக்கவில்லை. எந்த ஒரு மனிதனும் ,தான் வாழும் நாட்களில் சிலருக்கு சில நன்மைகளையாவது செய்வார். நாம் இங்கு விவாதிப்பது ,ஒரு நடிகர் என்ற விதத்தில் அவர்கள் விட்டு சென்ற impressions (looks &other Aspects )பற்றி மட்டுமே.அவர்கள் படங்கள் பற்றி மட்டுமே. நான் கொஞ்ச நேரம் முன்பே வாசு சொல்லி ,நீங்கள் அந்த குடும்பத்திற்கு வேண்டியவர் என்று தெரிந்து கொண்டேன். அதனால் என்னுடைய பதிவுகளை நீக்கி விட்டு, அவரை பற்றி இனிமேல் எழுதுவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளேன். என்னை பொறுத்த வரை எனக்கு ரவியை ஒரு entertainer ஆக பிடிக்கும். அவ்வளவே.
-
6th June 2013, 05:07 PM
#235
Senior Member
Veteran Hubber
அது சரி, எவ்வளவு நாட்களுக்குத்தான் எம்.ஜி.ஆர். சிவாஜி சண்டையே போட்டுக் கொண்டிருப்பது?. கொஞ்ச நாளைக்கு ஜெய்சங்கர் - ரவிச்சந்திரன் சண்டையும் நடக்கட்டுமே.
-
6th June 2013, 05:11 PM
#236
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
mr_karthik
அது சரி, எவ்வளவு நாட்களுக்குத்தான் எம்.ஜி.ஆர். சிவாஜி சண்டையே போட்டுக் கொண்டிருப்பது?. கொஞ்ச நாளைக்கு ஜெய்சங்கர் - ரவிச்சந்திரன் சண்டையும் நடக்கட்டுமே.
Muthuraman ?
-
6th June 2013, 05:17 PM
#237
Junior Member
Newbie Hubber

Originally Posted by
mr_karthik
அது சரி, எவ்வளவு நாட்களுக்குத்தான் எம்.ஜி.ஆர். சிவாஜி சண்டையே போட்டுக் கொண்டிருப்பது?. கொஞ்ச நாளைக்கு ஜெய்சங்கர் - ரவிச்சந்திரன் சண்டையும் நடக்கட்டுமே.
family friends ,சொந்தகாரன்லாம் வந்து மூக்காலே அழுதா ,என்னத்தையா சண்டை போடுவது? public figure விமர்சனத்துக்கு உட்படலாம் என்ற குறைந்த பட்ச ஜனநாயக உணர்ச்சி கூட இல்லையே?
Muthuraman- Not even considered.
-
6th June 2013, 05:37 PM
#238
Junior Member
Platinum Hubber
கோபால் சார்
ஜெய் - ரவி இருவரும் சம காலத்தில் வந்த நாயகர்கள் .
இருவரும் தொடர்ந்து 10 ஆண்டுகள் பல நல்ல படங்களை
கொடுத்தனர்.
இருவரின் படங்கள் அனைத்தையும் பார்த்தவன் என்ற
முறையில் என்னுடய பார்வையில் ஜெய் படமும் ரவி படமும்
சிறப்பாகவே இருந்தன
ஒரு நடிகரை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால்
இப்படியா தாக்குவது ?
பாராட்டுங்கள் ....
இகழாதீர்கள் ...
ஜெய்சங்கர் பற்றிய உங்களது வார்த்தைகளுக்கு நீங்கள்தான்
சொந்தக்காரர் என்பதை மறக்க வேண்டாம் .
-
7th June 2013, 07:08 AM
#239
Junior Member
Newbie Hubber
ரவி சந்திரன் என்ற அழகிய 1964 இன் இளமை சுனாமி.
17/10/1952 இல் நடந்த அதிசயத்துக்கு சற்றும் குறையாத மற்றொரு அதிசயம் 27/2/1964 இலும் நடந்தது. அதுதான் முதல் படத்திலேயே ஒரு நாயகன் இமாலய வெற்றி பெற்று தமிழகம் முழுதும் தன் ரசிகர்களாக திருப்பிய விந்தை. ரவி சந்திரன் என்ற இனிய புயல் சுமுகமாக கரை கடந்தது. இது ஒரு வண்ண மயமான வாண வேடிக்கை. அதுவரை senior நடிகர்களின் மோகத்தில் மூழ்கியிருந்த தமிழகம் ,தமிழ் பட உலகம் சற்றே stale ஆக போனதை உணர்ந்து, தங்களுக்கு ஹிந்தியில் அன்றிருந்த musical romance trend படி sweet nothings பேச ஒரு இளம் அழகிய நாயகன் வருகையை உணர்ந்தது. அடுத்த நான்கு வருடம் அந்த அலை ஓயவே இல்லை.அது நம் சீனியர் நாயகர்களையும் தாக்கி ஒரு அன்பே வா கொடுக்க வைத்தது. நடிகர்திலகத்தை இளைக்க வைத்து தங்கையின் கலாட்டா கல்யாணத்தை நடத்தி ராஜாவாக்கியது.
அப்போது திலகங்களை தவிர ஜெமினி,எஸ்.எஸ்.ஆர் இவர்களாலோ ,முன்னேறி கொண்டிருந்த முத்துராமன்,ஏ.வீ.எம்.ராஜனாலோ கனவிலும் நினைக்க முடியாத ஒரு status மற்றும் மாற்றம்.
இத்தனைக்கும் அபார அழகு,துரு துருப்பு இருந்ததென்றாலும், நடிப்பு திறமை சுமார்தான்.சிவாஜி ஸ்டைலை பின்பற்றி பொழுது போக்கு படங்கள்தான் கொடுத்தார். ஆனால் நடனத்தில் ஒரு style ,grace ,unique execution இவற்றினால் கலக்கினார். இவர் வரவில்லையென்றால் ஒரு நான், ஒரு அதே கண்கள் சாத்தியமில்லாமல் போயிருக்கும்.madras to pondichery படத்தில் இவர் கலக்கிய கலக்கலில் 10% கூட அன்றைய இளம் அமிதாப் பச்சன் Bombay to Goa படத்தில் கொடுக்க இயலவில்லை. நான்,அதே கண்கள் remake ஆகியிருந்தாலும் ,அன்று ரவி கொடுத்த உணர்வை கொடுக்க அகில இந்தியாவிலும் ஆளில்லை.
டான்ஸ் பண்ணுவதிலும் மிக மிக கஷ்டமான movements ,படு பிரமாத படுத்தி விட்டு ,சாதாரண அசைவை சொதப்புவார்.ஆனாலும் நமக்கு இவர் படம் பார்க்கும் போது ஒரு pleasantness இழையோடும். கலாட்டா பண்ணி கொண்டே நடக்கும் இளமை திருவிழா.காதல் காட்சிகளில் ரசனை இருக்கும். அத்து மீறிய crassness அறவே இருக்காது.
நடிப்பு பற்றி யார் கவலை பட்டது?அதை கொடுக்கத்தான் நமக்கு நடிப்பு அசுரன் நடிகர்திலகம் இருந்த போது ,அதை கொடுக்க இன்னொருவர் எதற்கு என்று ரவியை ரசித்தோம்.
ஆனால், ஒரு புதையலை குப்பை தொட்டியில் வீசுவது போல ,சராசரிகளுக்கு இடமளித்து விட்டு, ரவி தன் ஸ்தானத்திலிருந்து தன்னை தானே இறக்கி கொண்டார். தயாரிப்பாளர் மற்று சக கலைஞர்களோடு ஒத்து போகாமல் ,குடித்து தொழிலில் போதிய கவனமின்றி,படங்களை சரியாக தேர்வு செய்யாமல், சறுக்குவதை உணர்ந்து சரியான நேரத்தில் விழித்து கொள்ளாமல் தான் வெட்டிய பள்ளத்தில் தானே விழுந்தார்.
சிவாஜி முதல் ரஜினி வரை தொடரும் சில ஸ்டைல் களின் மத்திய கால சங்கிலி இவர்.
Last edited by Gopal.s; 7th June 2013 at 07:52 AM.
-
7th June 2013, 07:22 AM
#240
Junior Member
Newbie Hubber
நம்மிடையே ஒரு குறை. ஒருவர் நடிகராக வந்து விட்டால் அவர் looks , படங்களின் தரம் மற்றும் அவர்களின் performance விமர்சனத்துக்கு ஆளாகியே தீரும். அதை counter பண்ண அவர் அநாதை இல்லத்துக்கு 5000 கொடுத்தார், தன் வீட்டு நாய்க்கு சோறு போட்டார்,என்ற ரீதியில் பதில் போட்டால் சிரித்து ரசிப்பதை தவிர வேறு வழியில்லை.
நாமும் சிறிது அடக்கி வாசிக்க வேண்டியுள்ளது. internet யுகத்தில் சம்பத்த பட்ட நட்பு,சுற்றம் பார்க்க வாய்ப்புள்ளதால் சபை நாகரிகம் கருதி ,இவற்றின் உணர்வுகளையும் அனுசரித்தே போக வேண்டிய கலிகாலம்.
Last edited by Gopal.s; 7th June 2013 at 07:53 AM.
Bookmarks