-
20th June 2013, 10:19 AM
#641
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gani Pandian
Hello to everybody,
I have been reading this thread and quite enjoying it. I have been one of many a crore fans of Mr.Sivaji Ganesan. Personally, I feel there is no one that could equal him in any department. when i say this, I mean, any actor of the past, present and also future to come.
I have always felt that even Mr.Kamalahassan choose the path of Mr.Sivaji and only then the recognition for him to this large extent has come. had he been doing masala films just like the ones before apoorva sahodarargal, am not sure, he would have been recognized at a larger scale by the media. This is my opinion.
Be it Dilipkumar (or) Rajkumar (or) Rajkapoor (or) Prithvirajkapoor (or) be it is ANR, NTR, or Jaggiah (or) be it is Rajkumar (or) Ambrish (or) Anant/Sankar Nag (or) Late.Vishnuvardhan (or) be it is Mr.Sathyan (or) Madhu (or) Mohanlal (or) Mammooty (or) Late Sri.Thilakan...(or) Mr.S.V.Rangarao (or) S.V.Subbiah (or) M.R.Radha (or) Mr.Nagiah (or) Mr.MGR (or) Mr.Kamalahassan (or) even that if it is Mr.Marlon Brando (or) Duston Houghman (or) Omar Sheriff (or) Gregory Peck at the International Level....If we compare, each of them have one specific strong point. Whereas it is ONLY Mr.Sivaji Ganesan, who has the capability to shoulder any type of role, be it is hero, villain, comedian, character, Negative shade etc., and excel in all the roles.
It is so unfortunate that the so called and claimed as writers / critics like Randor Guy/ Theodre Baskaran who does n't have any standard and are always biased (biased to the extent of calling the substandard actors as excellent for their performance) Tamilnadu will never prosper as it is surrounded by only biased guys in political and cine arena who does not recognize talented personalities.
Indian Government does not have any capacity (or) capability to judge the performance of Sivaji ganesan. Let them give National Award to any chotta motta guys as they have been doing it from the 50s. absolutely no issues. Mr.Sivaji Ganesan has seen International Awards at his very young age and that too in just 7 years of his coming to cine field which no other Indian Actor has achieved (or) can dream to achieve.
Dear Kani,
Kudos to your debut writeup.
I second what you had mentioned. There is none across the globe who could be compared to Nadigar Thilagam when it comes to level playing field. The point that you had mentioned about Mr.Kamalahassan is quite true too. As a matter of fact, I had mentioned the same when i was writing in the name of Barrister Rajinikanth(The id was banned though, not due to this reason) Even, now, I have had healthy debate of the evolution of Kamal is only from the past 20 years and not before that. That's a very valid and true statement though some may find it hard to digest,yet truth is always truth.
With reference to National Award - Many may boast of getting that and many would desire to get that. But, the 5 or 6 member or even 10 member team do not have the capacity to understand the nuances of Nadigar Thilagam right from day one. They are fit to give awards to substandard actors for any favour. Since hay days National Awards were available for political favours and now both for purchase and political favour ( to please internal politics mostly) absolutely, we have seen the trend since 50's.
Nadigar Thilagam was recognized by the US, Europe which forms 2/3rd of the Globe. Asia - forget it, we all know Asian countries are the most corrupted in nature. So, no value for talented.
Great Start ! More should follow !
-
20th June 2013 10:19 AM
# ADS
Circuit advertisement
-
20th June 2013, 10:47 AM
#642
Senior Member
Diamond Hubber
நிஜ வேட்டைக்கார் நடிகர் திலகம்.
''வேங்கையின் மைந்தன்' நிஜ வேட்டைக்காரரான உண்மை சம்பவம்.

சென்னை போக் ரோடிலுள்ள உள்ள நடிகர் திலகம் சிவாஜியின் 'அன்னை இல்ல'த்திற்குள் நுழைந்தால் போர்டிகோவைத் தாண்டியதும் வரவேற்பறை இருக்கும்.
அதன் நடுநாயகமாக நின்று நம்மை வரவேற்பது அல்லது பயமுறுத்துவது 'பாடம்'செய்யப்பட்டு உயிர்க் களை ததும்ப நிறுத்தப்பட்டுள்ள ஒரு பதினாறு அடி வேங்கைப்புலி ஆகும். அது நடிகர் திலகமே சுட்டு வீழ்த்தியது என்பதுதான் சிறப்பம்சம். இதுதவிர காட்டெருமைத் தலை, மான் தலை, யானைக் கொம்பு, யானைத் தந்தங்கள் என்று வகைவகையான மிருகங்களின் தலைகள் மற்றும் உடல் பகுதிகள் சுவரில் தொங்கும்.
நடிகர் திலகம் மிகச் சிறந்த வேட்டைக்காரர் என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு அந்த ஆர்வம் எப்படி ஏற்பட்டது, அவர் வேட்டையாட மூலகாரணமாய் அமைந்த நிகழ்ச்சி என்ன என்பது பலருக்குத் தெரியாது. அது ஒரு துயரமான சம்பவத்தின் தொடர் நிகழ்ச்சி ஆகும்.
நடிகர் திலகத்திற்கு தன் தங்கை பத்மாவதி மீது கொள்ளைப் பிரியமும், பாசமும் உண்டு. குடும்பம் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் இருந்த போது தங்கை பத்மாவதிக்கு திடீரென்று கக்குவான் இருமல் வியாதி ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டார். எத்தனையோ வகையான வைத்தியம் பார்த்தும் பலனில்லை.அப்போது நடிகர் திலகம் பாய்ஸ் கம்பெனியில் நடிகராக இருந்தார். விடுமுறையில் திருச்சிக்கு வந்த நடிகர் திலகம் தங்கையின் நிலைமையைக் கண்டு கவலையடைந்தார்.
யார் யாரிடமோ தங்கையைக் குணப்படுத்த என்ன வழி என்று விசாரித்தார். ஒரு முதியவர் மட்டும் வழி சொன்னார். கக்குவான் இருமலைக் குணப்படுத்த கருங்குரங்கைச் சுட்டு பஸ்பம் செய்து கொடுத்தால் நோய் குணமாகி விடும் என்பதுதான் அந்த வழி.
உடனே நடிகர் திலகம் கருங்குரங்கு எங்கே இருக்கும் என்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் கேட்டு துளைக்க ஆரம்பித்திருக்கிறார். அதற்கு சிலர் பெரம்பலூர் காடுகளில் கருங்குரங்குகள் திரியும் என்று சொல்லியிருக்கின்றனர். இதைக் கேள்விப்பட்டவுடன் சில நண்பர்களை அழைத்துக் கொண்டு கருங்குரங்கு வேட்டைக்குப் புறப்பட்டு விட்டார் நடிகர் திலகம். அதில் முக்கியமான நண்பர் திரு.கேப்ரியேல் அவர்கள்.
கேப்ரியேல் அவர்களிடம் ஒரு நாட்டுத் துப்பாக்கி இருந்தது. அதை எடுத்துக் கொண்டு அனைவரும் பெரம்பலூர் காட்டில் புகுந்து கருங்குரங்கைத் தேடி அலசினார்கள். அதிர்ஷ்டவசமாக ஒரு கருங்குரங்கு மாடிக் கொண்டது. உடனே கேப்ரியேல் குரங்கைச் சுட துப்பாக்கியை எடுத்தார். உடனே நம் தலைவர் "என் தங்கைக்காக நானே அந்த கருங்குரங்கைச் சுடுகிறேன்... கொடு துப்பாக்கியை", என்று கூறி துப்பாக்கியைப் பிடுங்கி குரங்கைக் குறிவைத்தார். முன்பின் துப்பாக்கியைப் சுட்டு பழக்கமில்லை தலைவருக்கு.
ஆனால் ஆர்வமும், தன் தங்கை குணமாகவேண்டுமே என்ற பாசமும் அவரை துப்பாக்கியை சுட வைத்தது.
குறிபார்த்துச் சுட்டார்.
கருங்குரங்கு நடிகர் திலகம் குறியிலிருந்து தப்பவில்லை. கிறீச்சிட்டு அலறியவாறே கீழே விழுந்தது. நடிகர் திலகத்தின் முதல் குறியே அவரது முதல் படம் போல மாபெரும் வெற்றி.
இந்த சம்பவமே நடிகர் திலகத்தை வேட்டையாட வித்திட்ட சம்பவமாகும். பிற்காலத்தில் அதே நண்பர் கேப்ரியேல் அவர்களுடன் தொடர்ந்து பல வேட்டைகளுக்கு சென்று வென்று வந்துள்ளார் நடிகர் திலகம்.
ஆனைமலைக் காடுகளில் அதிகம் வேட்டைக்கு சென்று வருவார். அங்கு வேட்டைக்காரன்புதூர் முத்துமாணிக்கம் என்ற நண்பருடன் வேட்டைக்கு சென்று வருவது நடிகர் திலகத்திற்கு வழக்கம். ('இதயம் பேசுகிறது' வார இதழில் 'வனத்தில் கண்ட சில வசந்தங்கள்' என்ற தலைப்பில் வேட்டைக்காரன்புதூர் திரு.முத்து மாணிக்கம் அவர்கள் நடிகர் திலகத்தின் வேட்டை அனுபவங்களை தொடராக எழுதி அந்து பெரும் வரவேற்பு பெற்றது சிலருக்கு நினைவிருக்கலாம். விரைவில் அந்த தொடரை அனைவருக்கும் அளிக்க முயற்சி செய்கிறேன். பல சுவையான தகவல்கள் அதில் உள்ளன அபூர்வ நிழற்படங்களோடு.)
ஆனைமலைக் காட்டில் முதல் பெரிய வெற்றி ஒரு காட்டு எருமையை தலைவர் சுட்டு வீழ்த்தியதுதான். அதன் தலை அன்னை இல்லத்தை அலங்கரிப்பதை இன்றும் காணலாம்.

அடுத்த மிகப் பெரிய வெற்றிதான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த பதினாறு அடி வேங்கை. அந்தப் புலியுடன் தலைவர் படு ஸ்லிம்மாக நிற்பது போன்ற அந்த அற்புத போஸ் மிக மிக ஃபேமஸ் அன்றும் இன்றும் என்றும்.
தமிழ்வாணன் அவர்கள் எழுதிய 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன்' என்ற மிக மிக அரிய நூலை நூலை வெகுநாட்களுக்குப் பிறகு தேடிக் கண்டுபித்தேன். இக்கட்டுரையின் சில குறிப்புகள் அதிலிருந்து எடுக்கப்பட்டது.
Last edited by vasudevan31355; 20th June 2013 at 11:47 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
20th June 2013, 11:12 AM
#643
Senior Member
Veteran Hubber
அன்புள்ள ராகவேந்தர் சார், பல்லாயிரம் நன்றிகள். தேவி பாரடைஸ் திரையரங்கில் 'ராஜா' திரைக்காவியத்தின் பெயர்ப்பலகையுடன் கூடிய அபூர்வ நிழற்படத்தை பதிவிட்டு எண்ணங்களை அப்படியே பின்னோக்கி ஓட வைத்ததற்கு.
மறக்க முடியுமா அந்த இனிய நாட்களை?. படத்தில் காணப்படுவது திரையரங்கின் பக்கவாட்டில் உள்ள (தேவி பாரடைஸ் அரங்கின்) டிக்கட் கவுண்டர்கள். காலையில் தவிர்த்து மற்ற நேரங்களில் வெயிலே விழாமல் குளுகுளு என்றிருக்கும் அருமையான இடம். ரசிகர்கள் கூடிப்பேச மிக ஏதுவான இடம். ராஜா படம் வெளியாகும் முன்பு தேவி பாரடைசில் ராஜா பட ஸ்லைடுகளும், அந்த ஸ்லைடுகள் போடும்போது நடிகர்திலகத்தின் குரலில் படத்தைப் பற்றிய அறிமுக வர்ணனைகளும் ஒலிக்கப்படுகிறது என்று கேள்விப்பட்டு, அதற்காகவே 'ஷர்மிலி' படத்தைப் பார்த்தோம். நடிகர்திலகத்தின் கம்பீரக்குரலில் படத்தைப்பற்றிய மூன்று நிமிட வர்ணனையில் மெய்மறந்தோம்.
படத்தின் ரிச்னஸுக்கு ஏற்ற திரையரங்கில் வெளியானதின் மிக மிக சந்தோஷம். டைட்டில் மியூசிக், ரீரிக்கார்டிங்கின்போது மெல்லிசை மன்னரின் வோகல் எபெக்ட்டுகளுக்கெல்லாம் சைட் ஸ்பீக்கர்கள் திறந்துவிடப்பட்டு, தேவிபாரடைசில் அப்படத்தைப் பார்ப்பதே ஒரு இனிய அனுபவமாக ஆகிப்போனது.
அங்கு ராஜா தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக 45-வது நாளாக ஓடிக்கொண்டிருக்கும்போதே, அதன் அருகிலுள்ள பிளாசாவில் ஞானஒளி ரிலீசானது. அப்படத்துக்காக நுழைவாயிலிருந்து தியேட்டருக்கு திரும்பும் இடம் வரையில் வலது பக்கம் (முதியவர் பழைய போட்டோக்களை விற்றுக்கொண்டிருக்கும் பக்கம்) நீளமான பேனர்கள் வைத்திருந்தனர். தேவி தியேட்டரில் படியிறங்கி வருவோர்க்கு அந்த பேனர்கள் பளிச்சென்று தெரியும். அதுபோக அதன் முகப்பிலிருக்கும் சர்ச்சில் மாலையானதும் நியான் லைட்டில் அமைக்கப்பட்ட சிலுவை சிவப்பு வண்ணத்தில் பளிச்சென எரிந்து கொண்டிருக்கும்.
ராஜா படம் ஓடும்போதுதான் அந்த தியேட்டரின் லிப்டில் எத்தனை முறை மேலே போய், சுற்றி சுற்றி இறங்கும் படியில் கீழே வந்திருப்போம். ஹும்....., அதெல்லாம் கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காத ஒரு பொற்காலம்...
-
20th June 2013, 01:08 PM
#644
Senior Member
Devoted Hubber
Dear Vasu
quite interesting! thalivarin intha photo eppothu eduthathu?
-
20th June 2013, 01:33 PM
#645
Senior Member
Diamond Hubber

Originally Posted by
sankara1970
Dear Vasu
quite interesting! thalivarin intha photo eppothu eduthathu?
dear sankara sir,
athu 'navarathiri' padaththin still. oru matchingirkaaga vendi athaip pottirukkiren. nandri!
-
20th June 2013, 02:00 PM
#646
Senior Member
Diamond Hubber
நடிகர் திலகம் கௌரவ நடிகராகக் கொடிநாட்டிய 'தர்த்தி' இந்திப் படத்தின் ரிக்கார்ட் கவர் முகப்பு. கவரின் முகப்பில் ராஜேந்திர குமார், வஹிதா ரஹ்மான், எகிப்து பிரமிட் செட் இருக்கிறது. நம்ம ஆளு இல்லாதது ஒரு குறை.
-
20th June 2013, 02:02 PM
#647
Senior Member
Diamond Hubber
'பாலும் பழமும்' காவியத்தில் தலைவரின் பாந்தமான தோற்றம்
-
20th June 2013, 02:19 PM
#648
Senior Member
Diamond Hubber
கார்த்திக் சார்,
தங்களின் 'ராஜா' தேவி பாரடைஸ் அரங்கின் அனுபவங்கள் சுவை படம் வெளியாகுமுன்னே தலைவரின் குரலில் கம்பீரமாய் ஒலிக்கும் வர்ணனையைக் கேட்க 'ஷர்மிலி' படத்தைப் பார்த்ததாக தாங்கள் குறிப்பிட்டிருப்பது தங்களுடைய ஞாபகசக்திக்கு ஒரு எடுத்துக்காட்டு. அப்படியே பிளாசாவில் 'ஞான ஒளி' வீசியதைக் குறிப்பிட்டு சற்று மறந்திருந்த என்னை மறுபடி உசுப்பி விட்டு விட்டீர்கள்

ஷர்மிலியும் எனக்கு மிக மிக பிடித்தபடம். சசிகபூரின் சுறுசுறுப்பில், ராக்கியின் அழகில், கிஷோரின் கிறுகிறுக்கும் குரல் வளத்தில் மிளிரும் நம் கண்ணையும் கருத்தையும் கவரும் "ஓ.. மேரி.... ஓ..மேரி... ஓ..மேரி ஷருமிலி" பாடலை மறக்க முடியாதே... அந்தப் பாடல் அப்படியே நம்மைக் கட்டி போட்டு விடுமே!
-
20th June 2013, 02:26 PM
#649
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
மிக மிக அபூர்வமான நிழற்படம்.
சென்னை தேவி வளாகத்தில் தேவி பேரடைஸ் திரையரங்கில் நடிகர் திலகத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் ராஜா ஓடிக் கொண்டிருந்த போது திரையரங்கில் அதன் பெயர்ப்பலகையின் தோற்றம்
Excellent raghavendran sir.
-
20th June 2013, 02:54 PM
#650
Senior Member
Seasoned Hubber
டியர் வாசுதேவன் சார்,
நிஜ வேட்டைக்காரர் நடிகர் திலகம் - தமிழ்வாணன் அவர்கள் எழுதிய 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன்' என்ற நூலிலிருந்து தாங்கள் தந்திருக்கும் அரிய தகவல்களுக்கு நன்றி.
Bookmarks