-
11th July 2013, 10:57 AM
#1051
Senior Member
Senior Hubber

Originally Posted by
NTthreesixty Degree
நல்ல விஷயம் தானே திரு.Khalnayak (எ) அதிராம் (எ) வனஜ்-KV (எ) ......,
எப்புடி எடுத்துகுடுக்கரேன் உங்களுக்கு பாருங்க...! (மற்ற கதாபாத்திரம் அனைவரும் இப்போது இங்கே மறுப்பு மூலமாக மீண்டும் நுழைவது சுலபம்)
மறக்கறது நல்லதுதானே ! அந்தகாலத்திலேயே சொல்லலியா களவும் கற்று மற என்று !!!! அதன் படி கண்பட் நடக்கிறார் அவளோதான்..!
Take it Easy ! சுலபமா எடுத்துக்கோ !

கரெக்ட். அதிரம் கல்ஃப்-லருந்து இப்பதான் தமிழ் அச்சு அடிக்க நண்பர் மூலமாக கற்றுக்கொண்டு தமிழில் எழுத முயற்ச்சித்து கொண்டு வருகிறார். சகோதரி வனஜா இலங்கை-யில் இருந்து எழுதிக் கொண்டு வந்தார். என்ன காரணமோ இப்போது எழுதுவதில்லை.மத்த ஆளுங்களை மறந்துட்டீங்களே. எல்லாரும் (யாராவது புதுசா கூட வந்து) உடனடியா வந்து எதையாவது எழுதி அண்ணன் ... அவர்களுக்கு நாமெல்லாம் ஒருத்தரே என்று நிரூபிக்குமாறுக் கேட்டுக்கொள்கிறேன். எடுத்து கொடுத்த அண்ணனுக்கு எல்லாரும் நன்றியை மறக்காம சொல்லிடுங்க.
சரிங்க பாரிஸ்டர் ரஜினிகாந்த், நான் ஆலயமணி தியாகராஜன்-தான். நீர் எப்போதும் ஒரே id-யில் எழுதுபவர். நான் எல்லோரது id-யிலும் எழுதுபவன். எப்பிடிதான் எல்லோரது பாஸ்வேர்ட்-உம் எனக்கு கெடைக்கிதோ, தெரியலை. நீங்க, சொன்ன விஷயத்தை எடுத்துக்கிட்டு, திருந்தற வழியை பாருங்க. உங்க செந்தமிழ் ஆங்கிலத்தை வச்சி எல்லோரையும் பயமுறுத்தாதீங்க. மத்தபடி நல்லாதான் எழுதுறீங்க. சண்டை காட்சிகள் விவரிப்பு, வீடியோ அபாரம்.
Last edited by kalnayak; 11th July 2013 at 02:54 PM.
-
11th July 2013 10:57 AM
# ADS
Circuit advertisement
-
11th July 2013, 11:12 AM
#1052
Senior Member
Seasoned Hubber
டியர் செளரி சார்,
திரு.கோபால் சார் சொன்ன மாதிரி நெய்வேலி வாசுதேவன் அவர்கள் ஓய்விலிருக்கும் நேரம், நடிகர்திலகத்தின் சண்டைக் காட்சிகளை அருமையாகத் தொகுத்திருக்கிறீர்கள். நன்றி.
-
11th July 2013, 02:36 PM
#1053
Senior Member
Veteran Hubber
அன்புள்ள சௌரி சார்,
நடிகர்திலகத்தின் சண்டைக்காட்சிகள் தொகுப்பு மிக அருமை. ஒவ்வொரு சண்டைக்காட்சியிலும் எதிராளிக்கு எவ்வளவு சமவாய்ப்புக் கொடுத்து இயற்கையாக சண்டையிடுகிறார் என்பதை காட்சிகள் வாயிலாகவே உணர்த்திய விதம் எதிர்வாதமிட எத்தனிப்போருக்கு வாய்ப்பில்லாமலே செய்துவிட்டது. சண்டை என்பதே வெறுப்பாலும், ஆக்ரோஷத்தாலும் நடப்பது. அதில்போய் சிரித்துக்கொண்டே சண்டையிடுவது எத்தனை செயற்கையானது என்பதை "இயற்கை நடிகரின்" பக்தர்கள் உணர்ந்தால் சரி.
ராஜா படத்தில் வில்லன் கே.கண்ணனுடன் மோதும் (மணி பண்ணிரண்டு) சண்டைக்காட்சிலும்கூட துவக்கத்தில் கண்ணனின் கையே ஓங்கியிருக்கும். கையிலிருக்கும் சங்கிலியால் நடிகர்திலகத்தை புரட்டிஎடுப்பார். (ஜெயலலிதா கூட பாலாஜியிடம் ராஜாவுக்கு உதவுமாறு கேட்பார்) நெருப்புக் குண்டத்தினுள் கட்டையால் கண்ணனின் நெற்றியில் அடித்தபின்பே நடிகர்திலகத்தின் கை ஓங்கும். அதுபோல எங்கமாமா கிளைமாக்ஸ் சண்டையிலும் நடிகர்திலகத்துக்கு நிகராக பாலாஜிக்கும் சம வாய்ப்பு. அதுபோல 'நீதி' கிளைமாக்ஸ் குடோவ்ன் சண்டையிலும் மனோகருக்கு அதிக வாய்ப்பு. சண்டையிலும் இயற்கையை காட்டியவர் நடிகர்த்திலகமே என்பதை 'இயற்கை ரசிகர்கள்' புரிந்துகொள்வார்கள்.
நல்லதொரு அற்புதத் தொகுப்பு சௌரி சார். வாழ்த்துக்கள்...
-
11th July 2013, 03:46 PM
#1054
Junior Member
Newbie Hubber
15/07/2013 அன்று 40 வருடங்கள் முடிய போகும் எங்கள் தங்க ராஜாவிற்கு வாழ்த்துக்கள்.
ஒரு இமாலய வெற்றி வருடமான 1972 க்கு பிறகு 1973 இல் பாரத விலாஸ் என்ற சுமாரான வெற்றி, ராஜராஜ சோழன் என்கிற debacle ,பொன்னூஞ்சல் என்ற நல்ல ஆனால் பின் பகுதி திரைக் கதை சொதப்பல்களினால் சற்றே சறுக்கிய படம் ,இவற்றை அடுத்த அறுசுவை விருந்து எங்கள் தங்க ராஜா. அந்த நாட்களிலேயே split personality அடிப்படையை கொண்டு அமைந்த படம்.அந்த வருடத்து மெகா சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று. பத்து திரையரங்குகளுக்கு மேல் நூறு நாள் கண்டது.
சிவாஜியின் பைரவன் பாத்திர நடிப்பு அவ்வளவு ஈர்ப்பு, உயிர்த்துடிப்போடு இருக்கும். திராவிட மன்மதன் ஒரு ஆண்மை ததும்பும் அழகிய rogue look கொண்டு, துரு துருவென்று super energy level கொண்டு இந்த பாத்திரத்தை அவ்வளவு ரசிக்கும் படி present பண்ணி ,ஒரு சராசரி பொழுதுபோக்கு படத்தை தன் நடிப்பு ஒன்றினால் மட்டுமே இமயத்துக்கும் மேலே கொண்டு செல்வார்.
இந்த படம் ரஜினியின் பாணிக்கு தலைக்காவேரி போன்ற மூலஸ்தானம்.பட்டாகத்தி பைரவன் நுழைந்த பிறகு படம் ஜெட் வேகத்தில் பயணிக்கும். அற்புதமான உடை,கூலிங் கிளாஸ் உடன் பைரவன் பைக் ride ,தொடர்ந்த சண்டை காட்சி, மனோகர் அறிமுகம், மஞ்சுளாவுடன் அவர் அப்பா எதிரிலேயே செக்ஸ் கலாய்ப்பு (வேதாசலம் இதெல்லாம் ஒரு ஜாலி),போலீஸ் க்கு அல்வா கொடுக்கும் காட்சி, முத்தங்கள் நூறு என்று ஆனந்த எல்லையில் திறந்த வாய் மூடாமல் ரசிகர்கள்.
பாடல்கள் இரவுக்கும் பகலுக்கும், முத்தங்கள் நூறு (சுசிலா ஈஸ்வரி பாணியில் பின்னுவார்)மாமாவின் இசையில் ஜோர். rerecording மாமா கிழித்து விடுவார்.
என்றுமே சுவை தரும் evergreen entertainer with great devious lively energy filled stylish performance by our God of Acting .
Last edited by Gopal.s; 11th July 2013 at 03:55 PM.
-
11th July 2013, 04:35 PM
#1055
Senior Member
Veteran Hubber
அன்புள்ள கோபால் சார்,
என்னது..? 'பாரத விலாஸ்' சுமாரான வெற்றிப்படமா?. மாபெரும் வெற்றிப்படம் சார், எல்லோரும் ராஜராஜசோழனை பெரிதும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராமல் மாபெரும் வெற்றியைத்தந்த படம் பாரத விலாஸ்.
பாரத விலாஸ் 100 நாட்களைக்கடந்து ஓடிய அரங்குகள்:
சென்னை - சாந்தி
சென்னை - கிரௌன்
மதுரை - சென்ட்ரல்
திருச்சி - பிரபாத்
சேலம் - பேலஸ்
கோவை - சிவசக்தி
(சென்னை - புவனேஸ்வரி 94 நாட்கள்)
-
11th July 2013, 04:50 PM
#1056
Junior Member
Devoted Hubber
ஏற்கனவே பிரமாண்டமா ஓடின படத்த கூட சில நல்லவங்க ஓடலன்னு சொல்றாங்க...
இதுல நம்ம திரில சில ஆளுங்க,,,
சில என்ன சில....ஒரு ஆளு ...இது சுமார போச்சு...அது debacle அப்புடின்னு என்னமோ பள்ளியில் போர்ட்ல கிருக்கராமாதிரி நெனசுகிட்டு இங்க கிறுக்கறாரு.
பாரத விலாஸ் - Chennai - சாந்தி & கிரௌன் - 100 + டயஸ், மதுரை சென்ட்ரல் 100 + DAYS , திருச்சி Prabhath 100 + டயஸ், கோவை சிவசக்தி 100 + DAYS , Salem PALACE 100 + DAYS ......
இது தவிர சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி மூன்று திரை அரங்குகளிலும் 203 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் வேறு... ( CONTINOUS HOUSEFULL SHOWS) - இது சுமாரான வெற்றியா? வர வர முட்டாள்தனதிர்க்கும் ஒரு அளவிலாமல் போகிறது.
ராஜ ராஜ சோழன் - நல்ல நாட்களிலையே ஒரு நபருக்கு இந்த படம் தனிப்பட்ட முறையில் பிடிக்காது, ஒருவேளை வாணிஸ்ரீ ஜோடியாய் இருந்தால் படம் சூப்பர் என்று கூறி இருப்பாரோ மனிதர் ?
Last edited by NTthreesixty Degree; 11th July 2013 at 04:53 PM.
-
11th July 2013, 04:50 PM
#1057
Junior Member
Devoted Hubber
-
11th July 2013, 05:34 PM
#1058
Junior Member
Senior Hubber

Originally Posted by
KCSHEKAR
Sivaji mani mandabam GOOD REMINDER TO THE TN GVT AT APPRAPRIATE TIME MADURAI RASIGAGAL FIRST VOICE. MURALI SIR
CREDIT TO YOUR PLACE ALWAYS.
KC SIR YOUR UNTIRING JOB DEFINITELY WILL FETCH GOOD REWARDS.
TRUTH WILL ALWAYS SURVIVE.
-
11th July 2013, 08:13 PM
#1059
Junior Member
Senior Hubber

Originally Posted by
NTthreesixty Degree
திரை உலக சித்தர் சிவாஜி
தொடர்கிறது....
நடிகர் திலகத்தின் படங்களில் பெரும்பான்மையானவை குடும்பத்துடன் பார்க்கும்படியான திரைப்படங்கள். அன்றும் செரி...இன்றும் செரி ! தாய் தந்தையார் நல்ல திரைபடத்திர்ற்கு தனது பிள்ளைகுட்டிகளுடன் திருவிழாவிற்கு செல்வது போல குதூகலத்துடனும் உற்சாகத்துடனும் சென்றார்கள், செல்கிறார்கள் என்றால் அது நடிகர் திலகத்தின் திரைப்படத்திற்கு மட்டுமே !
அதற்க்கு காரணம், நடிகர் திலகம் என்றுமே தன்னுடைய திரைப்படத்தில் குடிக்காதே, புகைபிடிகாதே, திருடாதே என்று மேம்போக்காக அறிவுரை உரைக்கமாட்டார். காரணம் நம் எல்லோருக்கும் அடிபடயிலயே இது தெரிந்த விஷயம்தான்.
எல்லாவற்கும் தெரியும் குடிப்பது கெடுதல்,
புகைபழக்கம் தீயது,
திருடுவது நல்ல நெறி அல்ல என்று...!
காரணம் நம் பெற்றோர் நமக்கு அறிவுறுத்துவார்கள், அவர்கள் கடமையுனற்சியுடைய குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட நல்ல பெற்றோராயின் !
இது போன்ற அறிவுரைகள் எல்லாம், பஸ் ரோட்டில்தான் ஓடும், விமானம் ஆகாயத்தில் தான் பறக்கும், கப்பல் தண்ணீரில் தான் மிதந்து செல்லும் என்பதுபோன்ற ரகத்தை சேர்ந்த அறிவுரைகள்.
நடிகர் திலகத்தின் திரைப்படங்களை பார்தோமென்றால், ஒவ்வொரு மனிதனும் அவனுடைய குடும்பத்தில் நடக்கின்ற விஷயங்களை பிரதிபலிப்பது போல இருக்கும். ஒரு மனிதன் சந்திக்கும் பிரச்சனைகள், அதிலிருந்து எவ்வாறு விடுபடுகிறான்,
குடும்பம் என்றால் உண்மையில் என்ன?
எந்த அளவில் ஒரு தலைவனும் தலைவியும் விட்டுகொடுத்து வாழவேண்டும் குடுப்பம் என்ற தேரை நகர்த்த !
அண்ணன் தங்கை உறவு, பாசம் எத்தகையதாக இருக்கவேண்டும்,
கணவன் மனைவி பாசம் எத்தகையதாக இருக்கவேண்டும்,
தந்தை மகன் பாசம் எப்படி எந்த நிலையில் இருக்கவேண்டும்,
குடும்பம் பெரிதா கடமை பெரிதா?
இப்படி பலதரப்பட்ட விஷயங்கள் நம் சித்தர் திரைப்படங்களில் மக்களுக்கு அவர்கள் வாழ்விற்கு அவர்கள் குடும்பத்தை பொருப்புள்ளபடி கொண்டுசெல்வதற்கு துணை நிற்கும்படி அமைந்திருக்கும். அதனால் தான் இன்றளவும் பெரும்பான்மையான குடும்பபொறுப்பு அதிகம் உள்ள குடும்பங்கள் நடிகர் திலகம் திரைப்படங்கள் மட்டுமே விரும்புவார்கள்.
ஆகையால் குடும்பக்கதை என்று வரும்போது கூடுமானவரையில் வன்முறைகாட்சிகள் பெரும்பான்மையாக தவிர்க்கபட்டிருக்கும்.
ஒரு காலகட்டத்தில் நடிகர் திலகதிற்கு சண்டை வராது என்று ஒரு சிலர் எள்ளி நகயாடியபோது, அவர்கள் முகத்தில் கரிபூசியது போல, கன்னத்தில் பளார் என்று அறைவிழுந்ததுபோல தன்னுடைய படங்களில் சண்டைகாட்சிகள் அமையும் வண்ணம் பார்த்துகொண்டார் !
நாம் பொதுவாக ஒரு சில நாயகர்கள் படங்களை பார்த்தால், அதுவும் சண்டைகாட்சிகளை பார்க்கும்போது அந்த சண்டைகாட்சி ஒருதளைபட்சமாகவே இருக்கும்.
அதாவது...நாயகன் மூன்று அடிக்கு மேல் வாங்கவே மாட்டார். வில்லன் எவ்வளவு ஆஜானுபாகுவாக திறமையாளனாக இருந்தாலும் வேண்டுமென்றே இப்படி அந்த வில்லனுடைய பராக்கிரமம் அமுக்கபட்டிருப்பது அப்பட்டமாக தெரியும்.
சண்டைகாட்சி 3 நிமிடம் என்றால் அதில் நாயகன் முதலில் வாங்கும் மூன்று அடிகளோடு சரி...அதற்க்கு பிறகு...மொத்த அடியும் வில்லனுக்கு தான் விழும்.
வில்லனுக்கு இந்தகதி என்றால் அவன் அடியாட்களோ...அடி வாங்க மட்டுமே குறுக்கும் நெடுக்குமாக வந்து வந்து அடிவாங்கிகொள்வார்கள்...
இதை படிப்பவர் யாராக இருந்தாலும் சிறிது யோசித்து கூறுங்கள்? இது இயற்கையான அல்லது இயற்கையாக அமைக்கப்பட்ட சண்டைகாட்சியா?
நம் சித்தரோ உச்சத்தில் இருக்கும் நடிகன் - நினைத்திருந்தால் சண்டைகாட்சியில் வில்லனுக்கு சம சந்தர்ப்பம் கொடுக்காமல், தான் மட்டுமே வில்லனை அடித்துகொண்டிருக்கலாம்... ஆனால் சண்டைகாட்சிகளில் அதுபோல செயர்க்கைதன்மையை ஒருபோதும் நம் நடிகர் திலகம் புகுத்தியதில்லை.
நடிகர் திலகத்தின் மற்றும் மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் இவர்கள் இருவர் படங்களில் மட்டுமே பெரும்பான்மையான சண்டைகாட்சிகள் "மிக" "மிக" "இயற்கையாய்" அமைக்கப்படும்.
வில்லன்கள் உண்மையிலயே மிகவும் பலசாலிகளாக இருப்பார்கள்...வில்லன் மட்டும் அல்ல அந்த வில்லனின் அடியாட்கள் கூட மிகுந்த பலசாலிகளாக காட்சியளிப்பார்கள். வெறும் கும்..கும்...என்று குத்து மட்டுமே வாங்கும் சதைபிண்டங்களாக என்றுமே அவர்களை படங்களில் காட்டியதில்லை.
நம் நடிகர் திலகம் எதற்குமே விதிவிலக்கானவர் அல்லவா ! முதல் படத்திலயே புரட்சி என்ற வார்த்தையை திரை உலகிற்கு அறிமுகபடுத்தி, அதை வருடா வருடம் புழக்கத்தில் விட்டவர் ஆயிற்றே !
அவர் திரைப்படங்களில் வரும் சண்டைகாட்சிகளிலும் புதுமை புரட்சி செய்தார் ! அந்த புரட்சி என்னவென்றால் வில்லன்களுக்கு வில்லனின் அடியாட்களுக்கு சமபலம் பொருந்திய சண்டைகாட்சியை அமைக்க விடுவது ! எவ்வளவு பெரிய புரட்சி பாருங்கள்..அதுவரை திரை உலகம் சண்டைகாட்சிகளில் கண்டிராத புரட்சி !
நடிகர் திலகத்தின் இயற்கையான, வில்லனை சமபலம் வாய்ந்தவனாக பார்பவர்கள் கருதவைக்கும் சண்டைகாட்சி
சண்டைகாட்சிகளின் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கவேண்டுமென்றால் நாயகன் முகத்தை சீரியஸ் ஆகா வைத்துக்கொள்ளவேண்டும். அதுதான் இயற்க்கை. நம் நடிகர் திலகமும் சண்டைகாட்சியில் ஈடுபடும்போது அந்தகாட்சிகுண்டான முக்கியத்துவம் அந்த சண்டைகாட்சியில் தெரியும்.
சிரித்துகொண்டு...புன்வுருவலுடன் ஒரு சண்டைகாட்சியை செய்தால் அந்த சண்டைகாட்சியின் முக்கியத்துவமே போய்விடும். அதன் நம்பகத்தன்மையே கேள்விகுரியாகிவிடுகிறது !
உதாரணமாக நாம் ஒரு இரண்டு ஆட்களுடன் கைகலப்பில் ஈடுபடும்போது சிரித்துகொண்டா கைகலப்பில் ஈடுபடுவோம்..இல்லை நம்மிடம் சண்டைபிடிப்பவர் சிரித்துகொண்டு அடிக்கவருவாரா ? இரெண்டுமே இல்லை. காரணம் இதுதான் நடைமுறை.
அந்த இயற்கைத்தன்மையை நன்கு உணர்ந்ததால்தான் நடிகர் திலகம் சண்டைகாட்சி இயற்கைதன்மையுடன் தென்படுகிறது..!
தர்மம் எங்கே திரைப்படத்தில் வில்லன் மற்றும் அடியாட்களை எவ்வளவு பலசாலிகளாக காட்டியிருக்கிறார்கள் பாருங்கள். வேறு ஏதாவது நடிகராக இருந்தால்.....? இருந்தால் என்ன...! 3 அடி formula தான்..!
என்தம்பி திரைப்படத்தில் மேலைநாட்டு FENCING முறையில் அமைந்திருக்கும் வாள்பயிற்சி பாலாஜியுடன்
தங்கசுரங்கம் திரைப்படத்தில் வில்லன் அடியாட்களுடன் ...இதில் சண்டை முடிந்தபிறகு பாரதியுடன் உரையாடல் தொடங்கும்போது நடிகர் திலகம் cigarette பட்ற்றவைக்கும் ஸ்டைல் பாருங்கள். இவரன்றோ பல ஸ்டைல்களின் முன்னோடி...!
தங்கை திரைப்படத்தில் இயற்கையான சண்டைகாட்சி பயில்வானுடன்
ராஜா திரைப்படத்தில் உண்மையான மல்யுத்த வீரனுக்கு மதிப்புகொடுக்கும் வகையில் சம சந்தர்ப்பம் கொண்ட சண்டைகாட்சி
திருடன் திரைப்படத்தில் உயிருக்கு போராடும் தாய்க்காக தான் திருடி கொடுத்த குழந்தையை தன சகஆட்களிடமிருந்து கவர்ந்து அந்த தாயிடம் கொடுக்க போராடும் பதட்டமான சண்டைகாட்சி..எவ்வளவு இயற்கைதன்மை சண்டைகாட்சியில் ஆஹா..!
சொர்க்கம் திரைப்படத்தில் ரயிலில் வரும் வில்லன் அடியாட்களுடனான சண்டைகாட்சி...அடியாட்கல்தானே...கதாநாயகன் தான் அடித்துகொண்டிருப்பான் என்று எண்ணவேண்டாம்..பாருங்கள்..எவ்வளவு இயற்கைதன்மையுடன் எடுக்கபட்டிருக்கும் சண்டைகாட்சி. வில்லன் அடியாட்கள் கூட சரிக்கு சரியாக அடிகொடுபார்கள்...வெறும் dummy பீஸ் ஆக அடிமட்டும் வாங்காமல்.
அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் துளிகூட டூப் நடிகர் பயன்படுத்தாமல் உண்மையான மல்யுத்த வீரருடன் " மல்யுதம் " செய்யும் நடிகர் திலகம். நடிகர் திலகத்தின் உடற்கட்டு இதில் "V " வடிவம் போல அமைந்து இருக்கும். இதைபோல இயற்கையான மல்யுத்த காட்சி எந்த திரைப்படத்திலும் எந்த கதானாயகரும் செய்ததில்லை.
வீடியோ உதவி - வேறு யார் ? நம்முடைய நெய்வேலியார்தான் ! நன்றி...நன்றி..நன்றி...நெய்வேலியார் அவர்களே !
தொடரும்......!
souri sir.
Wonderful essay about stunt scenes by NT with realtive videos. keep it up a very lively collectons. NETTI ADI FOR THOSE TALKING ABOT NATURAL ACTING ALWAYS. Credit goes to balajjee for utilising
thetalents right from THANGAI THIRUDAN ENNTHAMBI follwed by rammanna and others. when we had a chat with with mma chinnappa devar on the release day of thangasurangam at shanthi he admired the stylish talents in fights very much.
gopal sir bharatha vilas a hundred days movie in many centres in 1973.
Last edited by Subramaniam Ramajayam; 11th July 2013 at 08:16 PM.
-
11th July 2013, 09:59 PM
#1060
Senior Member
Seasoned Hubber

சற்று முன் வந்த தகவல், ஊர்ஜிதத்திற்குட்பட்டது.
தமிழ்த் திரையுலக வரலாற்றில் சிறந்த திரைப்டங்களின் பட்டியலில் இடம் பெறும் உன்னதத் திரைக்காவியம் பாச மலர், வரும் ஆகஸ்ட் 15 வாக்கில் வெளியாகலாம் எனவும், அநேகமாக ஜூலை 20ம் தேதி காலை சென்னை சத்யம் திரையரங்கில் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறக் கூடும் என்றும் தகவல் வந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தகவல் உறுதி செய்யப் படும்.
Last edited by RAGHAVENDRA; 11th July 2013 at 10:02 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks