Page 110 of 399 FirstFirst ... 1060100108109110111112120160210 ... LastLast
Results 1,091 to 1,100 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #1091
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Nadigar Thilagam's Films in Tamil TV Channels this week (14.07.2013 - 20.07.2013)

    Channel Date Time Movie
    J MOVIES 18.07.2013 9 AM MANNAVARU CHINNAVARU
    J MOVIES 16.07.2013 1 PM BHAGA PIRIVINAI
    J MOVIES 20.07.2013 1 PM PATTIKKADA PATTANAMA

    JAYA TV 17.07.2013 10 AM BHAKKIYAVATHI
    JAYA TV 15.07.2013 1PM JALLIKKATTU

    RAJ DIGITAL 16.07.2013 8 PM KRISHNAN VANDHAN
    RAG DIGITAL 19.07.2013 8 PM URUVANGAL MARALAM

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1092
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முரளி சார் சிறந்த நடிகர் விருது நடிகர் திலகத்திற்குக் கிடைக்காததன் பின்னணி மற்றும் காரணங்களை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார். 1967 வரை இவ்விருது அறிமுகப் படுத்தப் படாததன் காரணம் ஒன்று. அதன் பின் அவருக்குக் கிடைக்காததன் காரணம் மிகத்தெளிவாக கூறியுள்ளார். ஒரு வகையில் அவருடைய படத் தயாரிப்பாளர்களும் ஒரு காரணம். அவருக்கு விருதுகளுக்காக யாரையும் தேடிச் சென்று அணுகும் முறையில் பிடித்தம் இல்லாதது ஒரு நியாயமான காரணம். நேரடித் தமிழ்ப் படங்களிலேயே அவருடைய நடிப்பிற்கு விருது தேடித் தரும் தகுதி படைத்தவே ஏராளமாக இருந்த போதிலும் அதனை தேர்வுக்கு அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டதாகத் தெரியவில்லை. இவையும் ஒரு காரணமாக இருக்கலாம். இதையும் மீறி தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் என்றாலே கேரளத்தைத் தாண்டாத தேர்வுக்குழுவினரின் குறுகிய கண்ணோட்டமும் ஒரு காரணம். அவ்வப்போது சில கன்னடப் படங்களுக்கு விருது கிடைத்த போதிலும் ... காரணம் கிரீஷ் கர்நாட், அனந்த மூர்த்தி போன்றவர்களின் பங்களிப்பும் இருந்திருக்கலாம்... தமிழுக்கு சரியான முறையில் presentation செய்யப் படாததும் காரணமாக இருக்கலாம்.

    இதே வகையில் தெலுங்குத் திரைப்பட உலகமும் உரிய அங்கீகாரம் விருதுகளைப் பெற்றதாகத் தெரியவில்லை. பின்னாளில் கே.விஸ்வநாத் மூலம் சில விருதுகள் கிடைத்திருந்தாலும், ஒரிஜினல் தெலுங்குப் படங்களின் மூலம் நாகேஸ்வர ராவ் அவர்களின் நடிப்பிற்கும் சில விருதுகளாவது கிடைத்திருக்க வேண்டும். அதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை.

    இவற்றையெல்லாம் விட்டுத் தள்ளுவோம். இந்த விருதுகள் நடிகர் திலகத்திடம் சென்றிருந்தால் அவை சிறப்புப் பெற்றிருக்குமே யன்றி, இவற்றால் நடிகர் திலகத்திற்கு சிறப்பில்லை என்பதே உண்மை.
    Last edited by RAGHAVENDRA; 14th July 2013 at 09:07 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1093
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    நாளை... ஜூலை 15 ...

    தமிழகத்தின் ஒரே பொற்கால ஆட்சியைத் தந்த பெருந்தலைவரின் பிறந்த நாள் ...

    நீ ஆண்ட 9 ஆண்டுகள் ... இந்த தமிழகத்தின் சிறப்பு...

    ஏழைகளுக்கு உதவினீர்கள்.. அதில் உண்மை இருந்தது ...

    கல்வியைப் பெற முடியாத நிலையில் இருந்த முதியோர்களுக்கு மாலை நேரப் பள்ளிகள் மூலம் முதியோர் கல்விக்கு ஏற்பாடு செய்தீர்கள்..

    அதில் உண்மையான சமூக அக்கறை இருந்தது ...

    மாணவர்களின் கவனம் கல்வியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் பொன்னான நேரத்தையும் உழைப்பையும் அரசியலுக்கு பயன்படுத்துவதை தடுத்தீர்கள் ...

    எளிமையின் சின்னமாய் விளங்கினீர்கள்...

    தங்களுடைய பெருமைகள் ஏராளமாய் உள்ளன ... சொல்லி மாளாது ...

    தங்களுடைய சாதனைகள் ஏராளமாய் உள்ளன ... அவற்றில் பொது நலம் மட்டுமே இருந்தது.

    இன்னும் எவ்வளவோ தங்களுடைய பெருமைகளை சொல்லலாம்.

    ஆனால் தங்களுடைய சாதனைகளுக்கெல்லாம் தலையாய ஒன்றாய் நாங்கள் கருதுவது ஒன்றே ஒன்று தான் ...

    குருவை மிஞ்சிய சிஷ்யனாய், நேர்மையாளனாய், உண்மையையும் எளிமையையும் மட்டுமே கடைப்பிடிப்பவனாய்...

    இப்படி எண்ணற்ற நற்பெருமைகளுக்கு சொந்தக் காரனாய்

    எங்களுக்கெல்லாம் நீ விட்டுச் சென்ற மாபெரும் சொத்து ...

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற சிறந்த தேச பக்தன்..

    காமராஜ் பிறந்த நாள் என்றால் அவருடைய சாதனை தான் நினைவுக்கு வரும்... பேசுவோம்...

    அப்படி அவருடைய சாதனைகளில் சிறந்தது ....

    நடிகர் திலகத்தை நமக்கு அளித்துச் சென்றது..

    வாழ்க பெருந்தலைவர் புகழ். வளர்க அவர் தம் உண்மைத் தொண்டர் நடிகர் திலகத்தின் புகழ்...

    ...

    நிழற்படம் உபயம் ... ஆவணத் திலகம் பம்மலார்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1094
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    முரளி சார் சிறந்த நடிகர் விருது நடிகர் திலகத்திற்குக் கிடைக்காததன் பின்னணி மற்றும் காரணங்களை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார்.

    இவற்றையெல்லாம் விட்டுத் தள்ளுவோம். இந்த விருதுகள் நடிகர் திலகத்திடம் சென்றிருந்தால் அவை சிறப்புப் பெற்றிருக்குமே யன்றி, இவற்றால் நடிகர் திலகத்திற்கு சிறப்பில்லை என்பதே உண்மை.
    என்ன?

    தலைவருக்கு விருது கிடைக்கவில்லையா?

    "என் படத்தை ஏன் சுவரொட்டியில் அடித்து ஒட்டியுள்ளனர்?" என காஞ்சிபெரியவர் சொன்னது?

    "அவர் நடையின் ஒயிலைப்பார்க்க விரும்பினேன்!" என சாய்பாபா சொன்னது?

    "என் தந்தையை பார்த்து போல இருந்தது!" என அய்யா.வ.உ.சி மகன் சொன்னது?

    "என் தந்தையின் காலில் விழக்கூட இடம் காலம் பார்ப்பேன். ஆனால் அவரை எங்கு கண்டாலும் காலில் விழுந்து வணங்குவேன்!" என தன் தந்தையின் மேல் அன்பும் மரியாதையும் வைத்துள்ள என் நண்பன் சொன்னது?

    அவர் இறுதி ஊர்வலத்தில் "பத்மநாபா! போய் விட்டாயா?" என ஒரு ஒரு முதியவர் உருகியது?

    இந்த மய்யத்தில் நண்பர்கள் பம்மலார்,ராகவேந்தர்,முரளி,வாசு,பார்த்தசாரதி,சாரதா, ஏனையோர் எழுதிய/எழுதும் பதிவுகள்?

    "உலக மகா அதிசயம்" என்று தலைப்பிட்டு தலைவரின் நடிப்பு மேதமையை உலக ரசிகர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம், ஆணித்தரமாக, இங்கு நண்பர் கோபால் எழுதியுள்ள சுமார் ஐம்பது பதிவுகள் ?

    அவரின் (பல படங்களில்) படம் முடிந்து வெளியே வரும் லட்சோப லட்சம் ரசிகர்கள் கைகளில் இருந்த ஈர கைக்குட்டைகள்?

    இவையெல்லாம்???

    ஓ! நீங்கள் நம் அரசு கொடுக்காத விருது பற்றி சொன்னீர்களா?

    அது யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது என்று பார்த்தாலே நம் தலைவர் மானம் காக்கப்பட்டது தெரியுமே!

    அதுவும் எப்பேர்பட்ட அரசு.!!

    by the fools,for the fools and of the fools!

    Albert Einstein பௌதிக பேராசிரியர் வேலைக்கு ஒரு அரசு கல்லூரிக்கு விண்ணப்பித்தால் கூட இரண்டு testimonial வேண்டும் எனக்கேட்கக்கூடிய அரசு!

    தமிழர்களுக்கு இறைவன் கொடுத்த மிகப்பெரிய விருது தலைவர்.

    அவருக்கு எதற்கு தனி விருது? அவர்தானே விருது!!

  6. #1095
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    பிற்காலத்தில் தேசிய விருதுகள் கலைமாமணி தரத்துக்கு வந்த பிறகு ,நடிகர் திலகத்துக்கு தேசிய விருது என்னும் காமெடி சமாச்சாரம் கிடைக்காதிருந்ததே பெரிய நிம்மதி என்று தான் நினைக்கிறேன்,

    ஆனாலும் சொல்லி வைத்தாற் போல தவிர்க்கப்பட்டதில் மிக முக்கிய காரணம் தமிழ்நாட்டு அரசியலுக்கே உரிய கூட இருந்தே குழி பறிக்கும் தன்மை என்று நம்புகிறேன்,

    இன்னொன்று கேரளம் போன்ற மாநிலங்களில் அறிவுஜீவிகள் எப்போதும் தங்கள் கலைஞர்களை விட்டுக்கொடுத்ததோ சிறுமைப்படுத்தியதோ இல்லை .ஆனால் தமிழ்நாட்டில் அறிவுஜீவிகள் என சொல்லப்படும் அல்லது தாங்களாகவே சொல்லிக்கொள்பவர்களிடம் ஒரு பொது நோய் ஒன்று உள்ளது . அதாவது , எப்படிப்பட்ட மேதமையாக இருந்தாலும் அது வெகுஜன மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் , அதை அறிவுஜீவிகள் ஏற்றுக்கொள்ளக் கூடாது .ஏனென்றால் சாதாரண வெகுஜனம் ஒப்ப்புக்கொண்டதை நானும் ஒப்புக்கொண்டால் நான் எப்படி அறிவுஜீவியாகியாக காட்டிக்கொள்வது . பின்னர் பாரமரனும் தன்னைப்போல என்னையும் நினைத்துவிட்டால் என் அறிவுஜீவித்தன்மை என்னாவது ?அதனால் டுமீல்டியா நாட்டின் டகால்டியா என்ற திரைப்படத்தில் ஒரு காட்சியில் குதிரையை பிடித்துக்கொண்டு முகத்தைக்கூட காட்டாமல் பின் பக்கத்தை மட்டும் காட்டி செல்லும் அந்த நடிகரின் உடல் மொழிக்கு ஈடாக உலகத்திரைப்படத்தில் நான் பார்த்ததில்லை ..இப்படி ஏதாவது அள்ளிவிட்டால் அறிவுஜீவிகளை அப்பாடக்கர்கள் என நினைப்போர் சங்க உறுப்பினர்கள் ஆ என வாயை பிளத்து கொள்வார்கள் ..இதுல போய் சிவாஜி கணேசனையும் எனக்கு பிடிக்கும் என சொன்னோமோ .. ஐயயோ உள்ளூர் நடிகனை போய் இவன் பெரிய ஆள் என்கிறானே ..என அறிவுஜீவி வட்டாரத்தில் கலாய்த்து விடுவார்கள்
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  7. #1096
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    "சிவலிங்கத்தை" தனியே சென்று பலமுறை தரிசனம் செய்து பரவசம் அடைந்துள்ளேன்.

    ஆனால் இன்று ஒரு விசேஷ அனுபவம் கிடைத்தது..

    அறுபது மூன்று நாயன்மார்கள் புடை சூழ "சிவலிங்கத்தின்" அற்புத தரிசனம்.

    புளங்காகிதம் அடைய வைத்த அருமையான அனுபவம்..

    சிவனின் ஒவ்வொரு அங்க அசைவையும் பார்த்து, ரசித்து, கை தட்டி,சீட்டி அடித்து,மகிழ நாயன்மார்கள்.

    பம்மலார்,ராகவேந்தர்,சுப்பு ஆகியோரின் கன்னி தரிசனம்.

    நெடுநாட்களுக்குப்பிறகு கோபாலின் அன்பு தரிசனம்.

    முரளி,பார்த்தசாரதி ஆகியோரின் கரிசனம் மிக்க தரிசனம்.

    பிரசாதம் சிவனின் திமிர்..பின்னி பெடலெடுத்துள்ளார்..

    படம் முடிந்தபோது அது உண்மையில் "Bar மகளே Bar"ஓ எனத்தோன்றிய ஒரு போதை.

    ..அவர் படத்தில் தன பெண்கள் மீது காட்டும் பாசமும் அன்பும் நம்மையும் பிடித்துக்கொண்டுவிட,as usual அந்த famous தலைவர் effect
    வீட்டிற்கு விழுந்தடித்து வந்து, என் பெண்ணை பார்த்து பேசியதும்தான் விலகியது.

    இனிமே எவராச்சும் விருது எருதுன்னு மூச்சு விடுங்க! ..பார்த்துக்கிறேன்!!
    Last edited by Ganpat; 14th July 2013 at 11:32 PM.

  8. #1097
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    தமிழகத்தில் பொற்கால ஆட்சி வழங்கிய ஒரே முதல்வன்

    தமிழகத்தில் ஏழைகளுக்கு வாழ்வாதாரம் அமைத்த ஒரே ஏழை பங்காளன்.

    கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காமல் கடமையை நிறைவேற்றிய ஒரே கர்ம வீரன்

    தமிழகத்தில் தொழிற்புரட்சியை ஏற்படுத்திய ஒரே மனிதன். அந்த மனிதனின் ஆட்சியில்தான்

    1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்

    2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை

    3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்

    4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை

    5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை

    6.கல்பாக்கம் அணுமின் நிலையம்

    7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை

    8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை

    9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை

    10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை

    11.துப்பாக்கித் தொழிற்சாலை

    12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்

    13.சேலம் இரும்பு உருக்காலை

    14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை

    15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை

    16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்

    17.சென்னை அனல்மின் நிலையம்

    18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை

    போன்றவை துவக்கப்பட்டன.

    இவை மட்டுமா?

    மணிமுத்தாறு

    ஆரணியாறு

    சாத்தனூர்

    அமராவதி

    கிருஷ்ணகிரி

    வீடூர்

    வைகை

    காவிரி டெல்டா

    நெய்யாறு

    மேட்டூர்

    பரம்பிக்குளம்

    புள்ளம்பாடி

    கீழ்பவானி

    என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் அனைத்துமே பெருந்தலைவர் காமராஜ் உருவாக்கியவை!

    அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14.

    இன்னும் சொல்லவா?

    159 நூல் நூற்பு ஆலைகள்

    4 சைக்கிள் தொழிற்சாலைகள்

    6 உரத் தொழிற்சாலைகள்

    21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்

    2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்

    ரப்பர் தொழிற்சாலை

    காகிதத் தொழிற்சாலை

    அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை

    இவை அமைக்கப்பட்டதும் அவரின் 9 ஆண்டு கால ஆட்சியில்தான்.

    அது மட்டுமல்ல இன்றைக்கு Industrial clusters என்று அழைக்கப்படும்

    கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர்,ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம்,ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.

    தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கிய ஒப்பற்ற நிர்வாகி.

    இத்தனை சாதனைகள் புரிந்தும் அதை விழாமபரபப்டுதிக் கொள்ள தெரியாத எளிய மனிதன்.

    எப்படி நடிகர் திலகத்தின் ரசிகன் என்பதை வாழ்நாள் பெருமையாக சொல்லிக் கொள்வோமோ அது போன்றே பெருந்தலைவரின் தொண்டன் என்பதையும் வாழ்நாள் பெருமையாக நெஞ்சில் சூடிக் கொண்டு நடக்கும் லட்சக்கணக்கான மனிதர்களில் ஒருவனாக அந்த மாமனிதனின் பிறந்த நாளன்று அவர் வாழ்ந்த திசை நோக்கி வணங்குகிறேன்.

    மீண்டும் இது போன்ற தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த ஒரு தலைவன் எப்போது தோன்றுவான்?

    அன்புடன்

  9. #1098
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    தமிழகத்தில் பொற்கால ஆட்சி வழங்கிய ஒரே முதல்வன்

    ...............

    எப்படி நடிகர் திலகத்தின் ரசிகன் என்பதை வாழ்நாள் பெருமையாக சொல்லிக் கொள்வோமோ அது போன்றே பெருந்தலைவரின் தொண்டன் என்பதையும் வாழ்நாள் பெருமையாக நெஞ்சில் சூடிக் கொண்டு நடக்கும் லட்சக்கணக்கான மனிதர்களில் ஒருவனாக அந்த மாமனிதனின் பிறந்த நாளன்று அவர் வாழ்ந்த திசை நோக்கி வணங்குகிறேன்.

    மீண்டும் இது போன்ற தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த ஒரு தலைவன் எப்போது தோன்றுவான்?

    அன்புடன்
    Good Morning Murali saar!

    நேற்று முடிவில் கலையுலக தலைவனின் புகழ்பாடி நிறைந்த மனதோடு நாளை முடித்த என்னை,
    இன்று,
    அரசியல் உலக தலைவன் புகழ்பாடி நாளைத் தொடங்கி வைத்த உங்களுக்கு என் இதயங்கனிந்த நன்றி.

    இப்பேர்பட்ட தலைவன் மீண்டும் தோன்றினாலும் நாம் என்ன அவரை ஏற்றுக்கொள்ளவா போகிறோம்?

    நாம் தான் இப்பொழுது ....
    ரூபாய்க்கு ஒரு இட்லி,மூன்று ரூபாய்க்கு ஒரு தட்டு சாம்பார் சாதம்
    ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் ஒரு டாஸ்மாக்
    கேபிள் இணைப்புடன் ஒரு TV.அதில் 24 மணிநேரமும் சினிமா
    வாயைத்திறந்தாலே பொய் பேசும் தலைவர்கள்.
    எங்கும் எதிலும் லஞ்சம் ஊழல்..
    மேற்கண்ட எது நடந்தால் என்ன ..இவர்கள் ஆட்சிக்காலம்தான் தமிழ் நாட்டின் பொற்காலம் என
    கொக்கரிக்கும் அறிவு ஜீவிகள்,ஊடகங்கள்.
    இவர்களை எதிர்த்தால் கவனிக்க குண்டர் படை....,

    சகிதம் மிக மகிழ்ச்சியுடன் வாழ்கிறோமே..அவர் வந்து என்ன செய்யப்போகிறார்?

    அவரையாவது சொர்க்கத்தில் நிம்மதியாக இருக்க வேண்டுவோம்.

    வாழ்க பெருந்தலைவர் புகழ்.

  10. #1099
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    தமிழகத்தில் பொற்கால ஆட்சி வழங்கிய ஒரே முதல்வன்

    மீண்டும் இது போன்ற தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த ஒரு தலைவன் எப்போது தோன்றுவான்?

    அன்புடன்
    டியர் முரளி சார்,

    பெருந்தலைவரின் புகழை, சாதனைகளை சிறப்பாக பதிவிட்டுள்ள தங்களுக்கு நன்றிகள்
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #1100
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    காமராஜர் ஆட்சி உண்மையிலேயே பொற்கால ஆட்சியா ? Yes


    முதலமைச்சர் காமராஜர் மதுரையில் ஒரு நிகழ்ச்சியை முடிதுக்கு கொண்டு மதிய வேளையில் ஒரு கிராமத்தின் வழியாக காரில் போய்க் கொண்டிருந்தார். வயலில் ஆண்களும், பெண்களும் வேலை செய்து கொண்டிருக்க அவர்களுக்கு உதவியாக சில சிறுவர்களும் சில சிறுமிகளும் வயலில் இருந்தனர்.

    அந்தக் குழந்தைகளை கூப்பிட்டார்:
    "உங்களுக்கு இங்கே என்ன வேலை ? ஏன் பள்ளிக் கூடத்துக்குப் போகலை ?"

    "காலையில் பள்ளிக் கூடத்துக்கு போனோம். மத்தியானம் வீட்டுக்கு சாப்பிட வந்தோம். அப்பா அம்மா வேலை செய்யச் சொன்னங்க அதுதான் செய்யறோம்"

    "மத்தியானம் பள்ளிக்கூடத்திலேயே சாப்பாடு போட்டா வீட்டுக்கு வரமாட்டீங்கள்ள?"

    "வர மாட்டோம் எங்களுக்கு படிக்கத்தான் ஆசை !"

    உடனே காமராஜர் தனக்குப் பக்கத்தில் இருந்த தலைமைச் செயலாளரை கூப்பிட்டார். படிக்கிற எல்லாப் பிள்ளைகளுக்கும் மத்தியான சாப்பாடு நம்ம அரசாங்கம் போடணும். போட்டா என்ன செலவு ஆகும்?

    அதற்க்கு அந்த தலைமைச் செயலாளர் தயக்கத்தோடு
    "கஜானா காலியாகும்" என்றார்.

    ஆனாலும் காமராஜர் அந்த வார்த்தையை பொருட்படுத்தாமல் சென்னை திரும்பியதும் எல்லா மாவட்ட கலெக்டர்களையும் கோட்டைக்கு வரவழைத்தார். படிக்கிற எல்லாக் குழந்தைகளுக்கும் மத்தியானம் சாப்பாடு போடணும் என்ன செலவாகும்?"
    என்று கேட்டார் கலெக்டர்கள் கணக்கு போட்டு பார்த்து விட்டு

    "ஒரு மாணவனுக்கு ஒரு ரூபாய்" (அந்த கால விலைவாசிப் படி) என்று சொல்லியிருக்கிறார்கள் .

    உடனே காமராஜர் ஒரு ரூபாயில்:
    50 பைசா அரசாங்கம் கொடுக்கட்டும்
    25 பைசா உள்ளூர் பஞ்சாயத்துக்கள் கொடுக்கட்டும்
    15 பைசா தொண்டு நிறுவனங்கள் கொடுக்கட்டும்
    10 பைசா அந்த பிள்ளையை பெற்ற அப்பன் வரியை செலுத்தட்டும்
    என்று சொல்லி உடனே முடிவு எடுத்து மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார். அறிய பெரிய திட்டங்களையெல்லாம் அரை நிமிடத்துக்குள் முடிவு எடுத்து அமல் படுத்தியவர் காமராஜர்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •