திருவண்ணாமலை
தமிழகத்தின் கோயில் நகரங்களில் ஒன்றான பிரபலமான சிறு நகரம் .அன்றைய வட ஆற்காடு

மாவட்டத்தில் இடம் பெற்றிருந்த திருவண்ணாமலை நகரில் எனக்கு ஏற்பட்ட ஒரு இனிய
திரைப்பட அனுபவங்கள்
திருவண்ணாமலை நகரில் இருந்த திரை அரங்குகள் நான்கு .
1.மீனாக்ஷி
2.பாலசுப்ரமணியம்
3.அன்பு
4.கிருஷ்ணா .
புது படங்கள் முதல் வெளியீட்டில் குறிப்பாக மக்கள் திலகம் - நடிகர் திலகம் படங்கள் வெளியாகும் நாட்களில் அரங்கம் முழுவதும் ஸ்டார் - தோரணங்கள் - அவரவர் கட்சிகளின் கொடி என்று
அமர்க்களப்படும் .
மக்களின் பொருளாதாரம் பொருத்த வரை அடிப்படை விவசாயம் . கோயில் நகரம் என்பதால்
விசேஷ நாட்களில் மட்டும் மக்கள் கூடுவார்கள் . எந்த வித தொழிற்சாலைகள் கிடையாது .
பணபுழுக்கம் இல்லாத சிறிய நகரம் . வேலூர் நகரம் 90 கி.மீ - விழுப்புரம் 70கி.மீ தொலைவிலும்
அமைந்திருந்தது .
பெரும்பாலான நிலக்கிழார்கள் - வணிகர்கள் - காங்கிரஸ் இயக்கத்தை சேந்தவர்கள் .நடிகர் திலகத்தின் ரசிகர்கள் .
அடிமட்ட உழைக்கும் வர்க்கம் - மிகவும் பிற்படுத்தபட்டோர் எல்லாம் அன்றைய திமுக கட்சியின்
மீதும் மக்கள் திலகத்தின் மீதும் அபிமானம் வைத்திருந்தாகள் .
4 திரைஅரங்கு உரிமையாளர்களும் காங்கிரஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது . இந்த நகரை சுற்றி சுமார் 200 கிராமங்கள் மேல் சுற்று புறத்தில் அமைந்திருந்தது .
மக்களின் பொழுது போக்கு என்றால் திரைப்படம் பார்ப்பது ஒன்றே . கிராம மக்கள் மாட்டு வண்டி மூலமும் , சைக்கிள் வாகனம் மூலமும் வந்து செல்வார்கள் .
பக்தி படங்களுக்கு அதிக பெண்கள் கூட்டம் அலை மோதும் . எம்ஜிஆர் - சிவாஜி படங்களுக்கு
முதல் வாரத்தில் வரவேற்பு இருவருக்கும் இணையான வரவேற்பு கிடைக்கும் . பின்னர் படத்தின் வெற்றியின் படி அதிக நாட்கள் ஓடும் .
எனக்கு தெரிந்த வரை திருவண்ணாமலை நகரில் முதல் முறையாக 100 நாட்கள் மக்கள் திலகத்தின் ''நாடோடி மன்னன் '' படம் கிருஷ்ணா அரங்கில் இரண்டாம் வெளியீட்டில் 1960ல்
ஓடியது . பின்னர் மக்கள் திலகத்தின் '' மாட்டுக்கார வேலன் '' படம் பாலசுப்ரமணியம் அரங்கில்
1970ல் 100 நாட்கள் ஓடியது .
முதல் முறையாக நகரில் மூன்று அரங்கில் மீனாக்ஷி 2.பாலசுப்ரமணியம் .3.கிருஷ்ணா
''உலகம் சுற்றும் வாலிபன் '' படம் 1973ல் வந்து இணைந்த 100 நாட்கள் ஓடியது .
அடிமைபெண் - நம்நாடு - ஒளிவிளக்கு - குடியிருந்தகோயில் - காவல்காரன் -அன்பேவா
எங்கவீட்டு பிள்ளை -ரிக்ஷாக்காரன் - நல்லநேரம் - நேற்று இன்று நாளை - உரிமைக்குரல்
இதயக்கனி - பல்லாண்டு வாழ்க - மீனவ நண்பன் -திருடாதே - வேட்டைக்காரன் - போன்ற மக்கள் திலகத்தின் படங்கள் 50 நாட்கள் மேல் ஓடியது .
1967ல் தீபாவளி அன்று வந்த தேவரின் விவசாயி படம் ஒரே நாளில் 7 காட்சி நடை பெற்றது .
1969ல் நகரின் மைய பகுதியில் அண்ணாவின் சிலையை மக்கள் திலகம் திறந்து வைத்தார் .
தேடிவந்த மாப்பிள்ளை - குமரிகோட்டம் படங்களின் படபிடிப்பிற்காக மக்கள் திலகம் சாத்தனூர்
அணைக்கு வந்த நேரத்தில் திருவண்ணமலை நகரில் தங்கி சென்றார் .
திருவண்ணமலை நகரை சுற்றி சுமார் 20 கிராமங்களில் டூரிங் கொட்டகைகள் இருந்தது .
மக்கள் திலகத்தின் பழைய படங்கள் எல்லாம் திரையிடப்பட்டு வந்தன .கிராமபுரத்தில் இளம் வயது வாலிபர்கள் மக்கள் திலகத்தின் மீது தீராத பற்று வைத்திருந்தனர் . ஏழை மக்கள் எல்லோரும் அவரது படங்கள் மீதும் , தனிப்பட்ட எம்ஜிஆர் என்ற சக்திக்கு ஆளானார்கள் .
இன்றும் அவர் மறைந்து 25 ஆண்டுகள் ஆனாலும் அவரது வோட்டு வங்கியும் , புகழும் நிலைத்திருப்பது திருவண்ணாமலை நகருக்கு பெருமையாகும் .
இன்று திருவண்ணாமலை நகரம் அடியோடு மாறி , வணிக நகரமாக , மக்கள் தொகை பெருகி
பல கல்லூரிகள் - கல்வி நிறுவனங்கள் என்று அடியோடு மாறிவிட்டது . கிராமங்களும் இன்றைய சாதனங்களுடன் நகருக்கு இணையாக மாறிவிட்டது
சாதாரண நகர அரசியல்வாதிகள் இன்றுபல கோடிகளுக்கு . அதிபதிகள் .
ஒரே அரங்கம் - பாலசுப்ரமணியம் இன்று வரை நிலைத்துள்ளது .
நினைவுகள் தொடரும் .......
Bookmarks