Page 137 of 399 FirstFirst ... 3787127135136137138139147187237 ... LastLast
Results 1,361 to 1,370 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #1361
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அபூர்வ நிழற்படம்



    குங்குமம் திரைப்படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் தயாரிப்பாளர் மோகன் ஆர்ட்ஸ் திரு கே.மோகன் அவர்களுடன் நடிகர் திலகம்.
    நன்றி, திரு எம்.எல்.கான், முகநூல் இணைய தளம் மூலமாக.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1362
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கல்தூண் திரைப்படத்தின் 105வது நாள் விழாவில் சஞ்சீவ் குமார்,கருப்பையா மூப்பனாருடன் நடிகர் திலகம்



    நன்றி, திரு எம்.எல்.கான் முகநூல் மூலமாக
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1363
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    karnan

    I am one of the regular readers of the Mahabharatam in net. a good one . But in that thread also they discussed about karnan and sivaji
    just made cust and paste for information

    Regards

    Gk

    வெள்ளி, ஆகஸ்ட் 09, 2013
    கர்ணன் பதிவுகளுக்கு சிவாஜி படத்தைப் பயன்படுத்தலாமா?
    I am reading your Mahabharatam daily. Its interesting and just flowing like river.


    In the mahabharatam the hand made paintings you selected is good and also in the Karnan Part you had put actor Sivaji pictures which is not appropriate (am feeling). In all places hand made paintings makes the presence a nice one. Sorry if I mentioned anything wrong.


    Really good work you are doing. Keep going on. If you need any support please mail us, whatever support possible I lend you


    Regards
    Panneer Selvam
    ************************************************** *********
    நண்பர் திரு.பன்னீர் செல்வம் அவர்களே,

    முழு மஹாபாரதம் வலைப்பூவை நீங்கள் தொடர்ந்து வாசிப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

    உதவிக்கரம் நீட்ட முற்பட்ட உங்கள் உள்ளத்திற்கு நன்றி.

    கோட்டோவியங்கள் குறித்து சொல்லியிருந்தீர்கள். பல கோட்டோவியங்களை Backtogodhead என்ற வலைத்தளத்திலிருந்தே எடுக்கிறேன். அங்கிருந்து எடுக்கப்படும் படங்கள் கருப்பு வெள்ளையாக இருக்கும். நான் வரைகலைஞனனானதால் (Graphic Designer), அப்படங்களை வண்ணமயமாக மாற்றி எனது மொழிபெயர்ப்பில் பயன்படுத்திக் கொள்கிறேன்.

    சிவாஜியின் படம் குறித்து சொல்லியிருந்தீர்கள். என்னைப் பொருத்தவரை கர்ணன் என்றாலே சிவாஜிதான் நினைவுக்கு வருகிறார். நான் என்ன செய்ய? (மற்றுமொரு காரணம் கூகுளில் படம் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைக்காத சமயத்தில்தால்சிவாஜியின் படத்தைப் பயன்படுத்துகிறேன்.)

    படங்களைக் குறித்து எனக்கு ஒரு எண்ணம் உண்டு, வரையத் தெரிந்த நமது வாசக நண்பர்களில் யாராவது தகுந்த படங்களைக் கோட்டோவியமாக வரைந்து அனுப்பினால், அப்படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, எனது பதிவுகளில் பிரசுரிக்கலாம் என்று நினைக்கிறேன். படங்கள் பென்சில் ஓவியங்களாக இருப்பினும், நான் அவற்றுக்கு வண்ணம் தீட்டி அமைத்துக் கொள்வேன்.


    பார்ப்போம். இப்பதிவைப் பார்த்து யாராவது படம் வரைந்து ஸ்கேன் செய்து அனுப்பினால், நிச்சயம் பிரசுரிப்பேன்.


    நண்பரே, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
    gkrishna

  5. #1364
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    gkrishna

  6. #1365
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Dear Ragavendran Sir,

    Thanks for Nadigarthilagam's rare photos.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #1366
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like


    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  8. #1367
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பழைய பதிவு(It has Connection with today. Wishing you the best for Youth Festival NTF Members.)

    சுமதி என் சுந்தரி-1971

    எழுபதுகளில் என் மீசை அரும்பும் பருவத்தில் ,என் சக வயது தோழர்களுடன் திரும்ப திரும்ப பார்த்து ,அதை பற்றி உரையாடி(எதை பற்றி என்று பிறகு)மகிழ்ந்து ,லயித்த நகைச்சுவை தெளித்த காதல் காவியம்(ஆங்கிலத்தில் ரொமாண்டிக்-காமெடி).ரோமன் ஹாலிடே என்ற படத்தை தழுவிய வங்காள மூலத்தில்(பிரசாந்த்)இருந்து கோபு-சி.வீ.ராஜேந்திரன் இணைப்பில் உருவான ரசிக்கத்தக்க படம்.(அசல் பெயர் விட்டில் பூச்சி??)

    நடிகர் திலகம் ,நடிப்பில் முன் மாதிரியாய் இருந்தது போல் உடையில்,சிகை அலங்காரத்தில் ,ஸ்டைலில், அனைத்து வயதினருக்கும் (முக்கியமாய் கல்லூரி இளைஞர்கள்) முன் ரோல் மாடல் அண்ட் டிரென்ட் செட்டர்.ஏன் இந்தியாவுக்கே எனலாம்(ஐம்பதுகளில் வட இந்திய பத்திரிகைகள் அவரை நன்கு உடையணிந்த இந்திய ஆண் நடிகராய் தேர்வு செய்து மகிழ்ந்தன. இந்த படத்தில் மிக மிக அழகாய் (படத்தில் ஜோசிய காரன் சொல்வது போல்) அழகான சிகை அலங்காரம்,உடைகள் என அதகளம் புரிவார்.ஜெயலலிதா மிக அழகாய் தோன்றி பொருத்தமான ஜோடியாய் காதல் காட்சிகளில் பொருந்துவார்.. நடிகர் திலகம் சற்றே தூக்கி சடாரென்று நெற்றிக்கு இறங்கும் நிறை குடம் பாணி hair ஸ்டைல்.வெளுறிய காவி நிற சட்டை ,சிவப்பு தொப்பி,பிரவுன் சட்டை ,கட்டம் போட்ட ஹாட்,ஜெர்கின்,லெதர் ஜாக்கெட்,கிரே சட்டை,கட்டம் போட்ட பிரவுன்,மஸ்டர்ட் சட்டை,லவேண்டேர் டி ஷர்ட்,காகி ஷார்ட்ஸ்,அருமையான கூலிங் கிளாஸ், வைட் அண்ட் வைட் (சிவப்பு காலர்),அருமையான இரவு உடைகள்,கிரே பான்ட்,seersucker Madras Check patterns என்று பொருத்தமான ஸ்டைல் ஆன உடைகளில் தோன்றி இள மனசுகளை அள்ளோ அள் என்று அள்ளுவார்.கலைச்செல்வியும் பாந்தமான மித வர்ண புடவைகளில் ஜொலிப்பார்.

    ஒரு ஸ்டாம்ப் சைஸ் கதை.மிதமான ,இதமான வசனங்கள்.ஆரம்பமே களை கட்டும்.டைட்டில் ஓடும் போதே ஹாலிவுட் நடிகை புகைப்படங்களை பட கதையமைப்புக்கு பொருத்தமாய் ஓட விடுவார்.ஒரு காதல் பாடல் சம்பந்தமே இல்லாத நபருடன் எடுத்த எடுப்பிலேயே நாயகி பாடி ரசிகர்களை அதிர வைப்பார்.சாரி சொல்லி கதா நாயகி பாடல் இடையில் திரும்பும் போது ரசிகர்கள் மூச்சு விடுவார்கள்.அதிலிருந்து கதை பயணிக்கும் பாணி தமிழ் ரசிகர்களுக்கு புதிது.சி.வீ.ஆர் உடை நிறத்திலேயே கலர் சைகாலஜி உபயோகித்து காட்சியின் தரத்தையே மாற்றுவார்.(உடை-ராமகிருஷ்ணன்)

    பாஸ்கர் ராவ்-தம்பு காம்போ இதமாய் ஒளிப்பதிவை குளுமையாய் தரும்.

    நடிகர் திலகம் நடிக்காமல் ரெஸ்ட் எடுப்பார்.அதுதான் இந்த படத்தையே தூக்கி நிறுத்தும்.சினிமா பற்றியே தெரியாமல் டீ எஸ்டேட் டையே உலகமாய் கொண்டிருக்கும் மது என்ற இளைஞனாய் ....ஆரம்ப காட்சியில் இருந்து ஜாலியாய் நடிப்பார். தங்க வேலு தவறாய் அர்த்தம் செய்து வீட்டில் குளிக்க சொல்லி மிரட்டும் இடத்தில்(மூன்று முறை டவல் உடன் திரும்பும் காட்சி),முதலிரவு காட்சியில் மிரளும் போது,பொட்டு வைத்த முகமோ (எஸ்.பீ.பாலு முதல் NT பாடல்) மிதமான இளமை கொஞ்சும் ஸ்டைல்(தரையோடு வானம்-புகழ் பெற்ற ஸ்டில்),ஏய் புள்ளே பாடலில் ஆட தெரியாதவன் போல் ஆடுவது,தொடர்ந்த இளைஞர்களை பைத்தியமாக்கிய பலூன் காட்சி, பூவின் ஒரு இதழை சுவைத்து காமத்தை அழகாய் வெளிப்படுத்தும் காட்சி,(வசந்த மாளிகை ப்ளம் ஞாபகம் வருமே!!),சட்டென்று ஜெயலலிதா அழும் போது எல்லா திசைகளிலும் அப்பாவியாய் பார்ப்பது,கிளி-ஜோசிய காட்சி, என்னுடைய பேவரிட் ஒருதரம் (காலை ஸ்டைல் ஆக தூக்கி நிற்பது,பௌலிங் ஆக்க்ஷன்) என்று இந்த பாணி படத்திலும் தான் தான் கிங் என்று நிரூபிப்பார்.ஒருதரம் பாடல் கலாட்டா கல்யாணம் படத்திற்காக உருவானது.ஆனால் மழை வந்து படமாக்க முடியாமல் இந்த படத்தில் உபயோகித்தனர்.

    விஸ்வநாதன் இசையில் இளமையை கொட்டுவார்.ல ல லா ஹம்மிங் ,ஹும் ஹம்மிங் என்று கலக்குவார்.

    எனக்கு மிக மிக பிடித்த நடிகர் திலகத்தின் லைட் movie .(மற்றவை ராஜா,என்னை போல் ஒருவன்,எங்கள் தங்க ராஜா)

    இந்த படம் இளைஞர்களை குறி வைத்து எடுக்க பட்டதால்,நடுத்தர வயதினர்,முதியவர் என மற்றோருக்கு அதிக நாட்டம் வரவில்லை.இளைஞர்கள் இக்காலம் போல் பணப்புழக்கம் கொள்ளாத காலம்.அதனால் மிதமான வெற்றியை அடைந்த இளமை திருவிழா இப்படம்.
    Last edited by Gopal.s; 11th August 2013 at 07:37 AM.

  9. #1368
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அருமையான அறி்முகம், கோபால் சார், சு...சுந்தரி படத்திற்கு... மிக்க நன்றி.



    கோபால் சார் சொன்னது போல், நமது NTFANS அமைப்பின் இன்றைய நிகழ்ச்சி, மாலை 6 மணிக்கு சுமதி என் சுந்தரி திரைப்படம் திரையிடப் படுகிறது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1369
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Nadigar Thilagam's films in TV Channels this week - 12.08.2013 - 17.08.2013


    DEEPAM VASANTH TV 12.08.2013 2 PM
    SIVANDHA MANN POLIMER TV 12.08.2013 2 PM
    ALAYAMANI RAJ DIGITAL PLUS 13.08.2013 1 PM
    GARUDA SOWKKIYAMA RAJ DIGITAL PLUS 13.08.2013 10 AM
    PALADAI JAYA TV 13.08.2013 10 AM
    IRU MALARGAL ZEE TAMIZH 13.08.2013 2.30 PM
    ENGA MAMA RAJ DIGITAL PLUS 14.08.2013 1 PM
    PENNIN PERUMAI J MOVIES 14.08.2013 1 PM
    RATHA THILAGAM J MOVIES 14.08.2013 6 AM
    KARNAN RAJ TV 15.08.2013 1.30 PM
    UTHAMA PUTHIRAN MEGA TV 15.08.2013 12 NOON
    THUNAI J MOVIES 16.08.2013 1 PM
    PASAMALAR JAYA TV 16.08.2013 10 AM
    LAKSHMI KALYANAM MEGA 24 16.08.2013 11 AM
    MARUMAGAL MEGA TV 17.08.2013 12 NOON
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1370
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அனைவருக்கும் இளைஞர் தின நல்வாழ்த்துக்கள்.

    இன்று நடைபெற இருக்கும் 'சுமதி என் சுந்தரி' திரைவிழா சிறக்க வாழ்த்துக்கள். அருமை நண்பர் எஸ்.கோபால் அவர்களின் 'சுமதி என் சுந்தரி' பதிவுக்கு முதலில் பாராட்டுக்கள். இதைப்படித்ததும், சில ஆண்டுகளுக்கு முன் இந்த திரியில் ஆக்டிவ் ஆக இருந்த சாரதா அவர்கள் பதித்திருந்த சுமதி என் சுந்தரி ஆய்வுப்பதிவை மீள்பதிவு செய்தால் என்ன என்று தோன்றியதால் பழைய பாகங்களில் தேடிக்கொணர்ந்து பதித்துள்ளேன். உங்களனைவரோடும் நானும் படித்து இன்புறுகின்றேன். மேலும் போரடிக்காமல் விலகிக்கொண்டு...... ஓவர் டூ சாரதா.....

    "சுமதி என் சுந்தரி"
    (a movie... Frame by frame for fans)

    இப்படி ஒரு படம் எப்போது வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, எந்த வித ஆர்ப்பாட்டம் இன்றி, எந்த விதமான சத்தமும் இன்றி வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்தபடம்.

    1970ல் வந்த 'பாதுகாப்பு' படம் ஓடிக்கொண்டிருந்தபோதே, 1971ல் நான்கு மாதங்களுக்குள், ஆறு படங்கள் (இருதுருவம், தங்கைக்காக,அருணோதயம், குலமா குணமா, சுமதி என் சுந்தரி, பிராப்தம் என) வரிசைகட்டி வந்ததில், தனித்து நின்ற படம். மிகவும் ரம்மியமான படம் என்று ரசிகர்களாலும் மக்களாலும் போற்றப்பட்ட படம்.

    சிறுவர்கள் முதல், முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த படம். குறிப்பாக ஏராளமான பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களை நடிகர்திலகத்தின் ரசிகர்களாக மாற்றியபடம். அந்த ஆண்டு வெளியான தமிழ்ப்படங்களிலேயே கல்லூரி மாணவ, மாணவியரின் 'முதல் சாய்ஸாக' தெரிவு செய்யப்பட்ட படம். காதலை மையமாகக்கொண்ட படமானாலும், அனைவரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும் அளவுக்கு, விரசமின்றி எடுக்கப்பட்ட படம்.

    'நடிகர்திலகத்தின் படங்களைக் காணச்செல்வதென்றால் கைக்குட்டையை தவறாமல் எடுத்துச்செல்ல வேண்டும்' என்று கேலி பேசிய தறுக்கர்களின் முகத்தில் கரியைப்பூசிய படம்.

    கதாநாயகி கிராமத்துப் பெண்ணோ அல்லது குடும்பத்துப் பெண்ணோவாக இருந்தாலும் கூட, ஒரு காட்சியிலாவது அவளைக் கவர்ச்சியாக காட்டிவிடத் துடிக்கும் திரையுலகில், கதாநாயகியை ஒரு திரைப்பட நடிகையாக காண்பித்த போதிலும் கூட, ஆரம்பம் முதல் இறுதி வரை அவளை சேலையிலேயே காண்பித்த படம். ஒளிப்பதிவு, வண்ணம், வெளிப்புறக் காட்சிகளில் நம் கண்களையும், தேனான இசை மற்றும் பாடல்களில் நம் காதுகளையும் கொள்ளையடித்த படம்.

    இளைஞர்களைக்கவரும் வண்ணம் புதுமையான முறையில் டைட்டில் அமைந்திருக்க, டைட்டில் ஓடி முடிந்ததும் 'ஆலயமாகும் மங்கை மனது' பாடலோடு கதாநாயகி சுமதி (ஜெயலலிதா) அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே நமக்கு அதிர்ச்சி. 'என்னது ஜெயலலிதாவுக்கு சுதர்சனுடன் கல்யாணம் முடிந்து கணவன், குழந்தை என்று குடும்பம் நடத்துகிறாரா?. அப்படீன்னா இந்தப்படத்தில் நடிகர்திலகத்துக்கு அவர் ஜோடியில்லையா?' என்று மனம் சோர்ந்துபோகும் நேரத்தில்தான், பாடிக்கொண்டே நடந்து வரும் ஜெயலலிதா, வாசற்படியில் கால் தடுக்கி கேமராவைப் பார்த்து 'ஸாரி' என்று சொல்லி விட்டு, மீண்டும் 'கட்டில் தந்த பாட்டு பாராட்டு தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு' என்று தொடரும்போது, 'அடடே இது ஏதோ வேறே' என்று நாம் நிமிர்ந்து உட்கார, பாடல் முடிவில் அரிக்கேன் விளக்கின் திரியை சுருக்கும்போது நம்முடைய கேமரா பின்னோக்கி நகர, அங்கு படப்பிடிப்பில் இருக்கும் கேமரா மற்றும் மொத்த யூனிட்டையும் நம் கேமரா படம் பிடிக்க, (படத்தில்) இயக்குனரான வி.கோபாலகிருஷ்ணன் "கட்" என்று சொல்லி விட்டு, நடிகை சுமதியைப்பாராட்ட, 'அடடே ஷூடிங்தான் நடந்ததா' என்று நாம் ஆசுவாசப்பட.... ("யப்பா ராஜேந்திரா (சி.வி.ஆர்) எங்க வயித்துல பாலை வார்த்தேப்பா”). கதாநாயகி அறிமுகம் முடிந்தது. அடுத்து காட்சி மாற்றம்...

    தேயிலை எஸ்டேட்டில், , கொழு கொழுவென்றிருக்கும் குதிரையில் சவாரி செய்தபடி வெள்ளை பேண்ட், 'பிங்க்'கலர் ஃபுல் ஸ்லீவ், தலையில் ஸ்டைல் தொப்பி, கண்களில் குளிர்க்கண்ணாடியுடன், (யார் யாரெல்லாமோ இப்படி ஸ்டைலாக அறிமுகமாகிறார்களே, இவர் ஒரு படத்தில் கூட இப்படி ஒரு இண்ட்ரொடக்ஷன் கொடுக்க மாட்டேன்கிறாரே என்று ஏங்கி நின்ற ரசிகர்கள் கை வலிக்குமளவுக்கு, கை சிவக்குமளவுக்கு, தியேட்டர் சுவர்கள் விரிசல் விடும் அளவுக்கு, ரோட்டில் போகிறவர்களுக்குக் கூட கேட்குமளவுக்கு கைதட்டலால் குலுங்க வைக்க) அழகான, இளமையான, ஸ்லிம்மான 'நடிகர் திலகம்' அறிமுகம்.

    (ராஜேந்திரா, நீதான்யா ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்த ஒரு இயக்குனர். நடிகர்திலகத்தை படத்துக்கு புக் பண்ணிய கையோடு, 'எத்தனை பாட்டில் கிளிசரின் வாங்கலாம்' என்று கணக்குப்போடும் இயக்குனர்களுக்கு மத்தியில் நீ ரொம்ப வித்தியாசமானவன். நடிகர்திலகத்தை எப்படி ஜாலியாக, ஜோவியலாக, இளமையாக காண்பிக்கலாம் என்றே உன் மனம் சிந்திக்கும். 'கலாட்டா கல்யாணத்'தில் துவங்கினாய், 'சுமதி என் சுந்தரி'யில் அதை முழுமையாக்கினாய். 'ராஜா'விலும் அதைத் தொடர்ந்ததன் மூலம் நடிகர்திலகத்தின் ரசிகர்களின் அன்புக்கு பாத்திரமானாய்).

    காதல் கல்யாணம் இவற்றை கட்டோடு வெறுக்கும் கட்டை பிரம்மச்சாரி மது (நடிகர்திலகம்). தன் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளச்சொல்லி நச்சரிக்கும், எஸ்டேட் ஓனரின் தொல்லை தாங்க முடியாமல், தனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி விட்டதாகவும் மனைவி கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டுக்குப் போய் விட்டதாகவும் பொய்யை சொல்லி சமாளிக்கிறார்.

    ஒட்டு மொத்த நகைச்சுவைப் பட்டாளமும் (சோ தவிர) படத்தில் இறக்குமதியாகி இருந்தது. அங்கே எஸ்டேட்டில் நாகேஷ், தங்கவேலு, சச்சு... இங்கே சென்னையில் படப்பிடிப்பு யூனிட்டில் வி.கோபாலகிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன், மாலி, டைப்பிஸ்ட் கோபு, வெண்ணிற ஆடை மூர்த்தி என படம் களை கட்டியிருந்தது.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •