Page 161 of 399 FirstFirst ... 61111151159160161162163171211261 ... LastLast
Results 1,601 to 1,610 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #1601
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Thavaputhalvan Photo album












  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1602
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Thavaputhalvan Photo album continue



















  4. #1603
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Thavapudhalvan Mania

    Thanks Gopal sir, Ragavendran sir for uploading images of Pammalar sir & Vasu sir

  5. #1604
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தவப் புதல்வன்(தொடர்ச்சி)

    ஒரு மத்யதர குடும்பத்து கல்யாண விருந்துக்கு செல்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். உங்களுக்கே தெரியும் traditional மெனு .breakfast ,டின்னெர் எல்லாமே நீங்கள் எதிர்பார்த்த படியே. ஆனால் உப்பு,உறைப்பு,இனிப்பு எல்லாமே சரியான விகிதத்தில் கலந்து சுவை கூடுதலாய், பரிமாறும் விதமும் பாந்தமாய் இருந்தால் மனதுக்கு ஒரு இதம் ஏற்படுமல்லவா?அதைத்தான் தவப்புதல்வனில் ரசிகர்கள் உணர்ந்தனர்.தூயவன் திரைக்கதை படு கச்சிதம்.

    நிர்மல் இசையறிவு மிகுந்த ,இசைக்கருவிகள் பலவற்றில் இயல்பான வாசிப்பு திறமை கொண்ட ,அன்னையுடன் தனித்து வாழும் ஒரு பணக்கார இளைஞன்.டாக்டர் வசந்தி அவனை மணக்க இருக்கும் மாமன் மகள்.இருவருமே ஒருவரின் திறமை மீது மற்றவர் மரியாதை வைத்து,ஒருவரின் முன்னேற்றத்தில் மற்றவர் உண்மை அக்கறை செலுத்தும் தூய அன்பு கொண்டவர்கள்.

    நிர்மல் தன் நண்பன் james வேண்டுகோளை தட்ட முடியாமல் ,அவன் ஹோட்டல் இல் trumpet வாசிக்க ஒப்பு கொள்ள,அதன் மூலம் நடன காரி விமலா அவள் குடிகார புல்லுருவி அண்ணன் ஜம்பு இவர்களுடன் அறிமுகமாகி ,அவர்களுடன் உரிய எச்சரிக்கையுடன் நடக்கிறான். இடையில், நிர்மலுக்கு அவன் பரம்பரை நோயான மாலைக்கண் தாக்க,தன் தந்தையை தாக்கி விபத்திலும் கொன்ற அந்த நோய் தாயை சித்த சுவாதீனம் இழக்க வைத்ததையும், தாய் இந்த உண்மையை தாங்க மாட்டாள் என்பதையும் ,வசந்தியிடம் ரகசியம் தங்காது என்பதால் இரவுகளில் தான் வாசிக்கும் ஹோட்டல் அறையில் தங்கி ரகசியம் காக்கிறான்.தற்செயலாய் திருட வரும் ஜம்புவிற்கு இந்த உண்மை தெரிய விமலா இதை வைத்து ,வசந்தியை அறைக்கு வரவழைத்து நிர்மல் தன்னுடன் அந்தரங்கமாய் இருப்பது போல தோற்றம் கொடுத்து அவர்கள் கல்யாணத்தை நிறுத்துகிறாள்.

    நிர்மல் தாய் விரும்பும் பெண்ணிற்கே கல்யாணம் செய்து சொத்தும் சேரும் என்பதால் ,வசந்தியின் கார் முன் தற்கொலை செய்ய வருவது போல் நடித்து தனக்கும் நிர்மலுக்கும் தொடர்புண்டு என்று நிருபித்து, நிர்மலை மிரட்டி வீட்டிற்கே வருகிறாள்.james ,விமலாவை அங்கிருந்து விரட்ட அவள் அண்ணன் போல் விமலாவுடன் வருகிறான். விமலாவை விரட்ட சதி செய்யும் ஒவ்வொரு முறையும் சந்தர்ப்பம் விமலாவிற்கே சாதகமாகி ,கல்யாணம் வரை போக, தற்செயலாய் உண்மை வசந்திக்கு தெரிய, ஒரு வெளிநாட்டு டாக்டர் சிகிச்சையால் நிர்மல் குணமாகி ,விமலாவின் குட்டு வெளியாகி வசந்தியும் நிர்மலும் சேர james அரசியல் பஞ்ச் காமெடியுடன் சுபம்.

    எனக்கு நினைவு தெரிந்த வரை ஒவ்வொரு அசைவுக்கும் லாஜிக் பார்த்து,மிக சுவையான திருப்பங்கள்,மனதை தொடும் பன்முகம் கொண்ட காட்சியமைப்புகள் என்று ஒரு சில மசாலா குடும்ப படங்களே ,ஒரு action பட விறுவிறுப்புடன் அமைந்தன. அவற்றில் ஒன்று தவப்புதல்வன். ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வில்லாத திரைக்கதை,அளவான வசனங்கள்.உறுத்தாத executive வகை இயக்கம்.

    சுவையான காட்சிகளுக்கு பஞ்சமே வைக்காத படம்.love is fine நடனம், வசந்தியுடன் ஹோட்டல் trumpet வாசிப்பதை வீட்டில் சொல்லாமல் மாட்டும் இடம், வாசு திருட வரும் இடத்தில் கண்தெரியாமல் சிவாஜி அவருடன் மோதும் இடம்,
    அம்மாவுக்கு தவறுதலாய் விஷ மருந்து கொடுக்க முயலும் காட்சி ,தான்சேன் காட்சி,விமலா திட்டமிடும் காட்சிகள்,james (சோ),மனோரமா வசந்தியை மாட்ட வைக்க பார்த்து backfire ஆகும் சுவாரஸ்யம் (முக்தா பஞ்ச் ),சிவாஜியை சகுந்தலா ( பிரசித்தி பெற்று தொடர்ந்த ஜோடியின் முதல் படம்) tease பண்ணும் காட்சிகள்,தான் கொடுத்த கம்பு தனக்கே உதவும் காட்சி,சிவாஜி வாத்தியத்தை உடைத்து விரக்தியை வெளிப்படுத்த கே.ஆர்.விஜயா அதே பாணியில் தன் மருத்துவ கருவிகளை உடைக்கும் காட்சி,கிண்கிணி கிண்கிணி கிறிஸ்மஸ் தாத்தா காட்சி, போட்டி பாடல் காட்சி ,இரு பகுதி கொண்ட விறு விறு இறுதி காட்சி , வசந்தியின் நல்ல நோக்கம் கேள்விக்குள்ளாவது என்று பல நல்ல காட்சிகள் சிறந்த முறையில் திரைக்கதையுடன் இணைந்தே பயணிக்கும். மற்ற முக்தா படங்களை விட கூடுதல் professionalism தெரியும்.


    சிவாஜியின் சிகை அலங்காரம்(முக்தா சிவாஜிக்கு நிறைகுடத்தில் ஆரம்பித்த பிரத்யேக ஸ்டைல் அக்கால கிருதாவுடன்),
    வித விதமான டிசைன் குர்தா டைப் மேலுடை,இளமை தெறிக்கும் அழகு,அமெரிக்கையான நடிப்பு,படம் முழுதும் பிரமாதம். மாலைக்கண் நோய்க்கு முழு விளக்கம், கூடுதல் பிரச்சினை என்று மெடிக்கல் ஆகவும் நன்கு டீல் பண்ண பட்ட படத்தில் (Nyctalopia ,xerosis ,edema ) சிவாஜி dry eyes பிரச்சினையில் கண்ணை கொட்டுவதும், கண் தெரியாத போது காதை சிறிதே திசை நோக்கி சப்தம் உணர்வது என்று கலக்குவார். துள்ளல் ஸ்டைல் நானொரு காதல் சந்நியாசி,தான்சேன் இசை கேட்டால், உருக்க கிண்கிணி,முத்திரையுடன் போட்டி பாடல் காட்சி என ரசிகர்களுக்கு full மீல்ஸ் . வாத்தியங்களை உடைத்து முடித்து கடைசியாக கிடாரை எடுத்து வசந்தி போய் விட்டதை உணர்ந்து கடைசி நிமிடத்தில் உடைக்காமல் அணைத்து கொள்ளும் பரவச உருக்க ஈடுபாடு,கடைசியில் தன்னை படுத்தி எடுத்தாளே என்று விமலா கண்ணை கட்டி பரபரப்பாய் பழி வாங்கும் டீசிங் என்று இந்த படத்திலும் அவர் கொடி நாட்டி விடுவார்.

    மெல்லிசை மாமன்னர் இந்த இசையுடன் சம்பந்தமுள்ள படத்திற்கு நன்றாக பங்களித்துள்ளார்.(திருப்தியா கார்த்திக் சார்?)
    சோ,மனோரமா,வாசு ,பண்டரிபாய்,செந்தாமரை அவரவர் பங்கை உரிய முறையில் தர, விஜயா,சகுந்தலா செமையாய் ஸ்கோர் செய்வார்கள்.இந்த படத்திற்கு விஜயா ஓகே.(டூயட் கிடையாது)

    வழக்கமாய் வெற்றி பெரும் முக்தா formula ,இந்த படத்தை சரியான விகித உணர்ச்சி,entertainment ,விறுவிறுப்பு, பாத்திர படைப்பில் முழுமை ,படம் முழுதும் தெரியும் sincerity &seriousness தன்மை இவற்றுடன் ரசிகர்கள்,பொதுமக்கள் (அனைத்து வயதினர்) திருப்தி தந்ததால் பெரிய ஹிட் என்ற status எட்டியது.
    Last edited by Gopal.s; 30th August 2013 at 11:48 AM.

  6. #1605
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Thavaputhalvan photo album continue...








  7. #1606
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அடுத்து வாசு சாரின் அந்தோணி என்கிற கோடீஸ்வர அருண் உரிய முறையில் மனோதத்துவ முறையில் அலசி கூறு போட படுவார்.
    தொடர்ந்து பாலாஜியுடன் அவர் ராஜா,நீதிக்கு ஒன்றாக ராஜநீதி புரிந்து, கோடீஸ்வர(முதல் கருப்பு வெள்ளை கோடீஸ்வரன்) மூக்கையன் புகழ்பாடி 1972 நிறைவு பெரும். வெள்ளிவிழா(வசந்த மாளிகை) தொடங்கி வெள்ளிவிழா(பட்டிக்காடா பட்டணமா) முடிவு ----1972.

  8. #1607
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    அலசி கூறு போட படுவார்..
    முள்ளை வளைத்ததும் மகுடம் தரித்ததும்
    ஆணி அடித்ததும் சிலுவை அறைந்ததும்
    அன்று நடந்தது ஆவி துடிக்குது
    இன்று நடப்பது நெஞ்சு வெடிக்குது

    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  9. #1608
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  10. #1609
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    நடிகர் திலகமும் இசை ஞானியும்
    http://oosssai.blogspot.com/2013/04/blog-post_15.html
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  11. #1610
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    நடிகர் திலகமும் இசை ஞானியும்
    http://oosssai.blogspot.com/2013/04/blog-post_15.html
    இந்த கட்டுரையில் சில தவறுகள் உள்ளன.
    1)நடிகர்திலகத்துடன் ரஜினி இணைந்த படம் நான் வாழ வைப்பேன். சிவாஜிதான் ஹீரோ.
    2)சாதனை மறக்க பட்ட படமல்ல. நூற்று இருபத்தைந்து நாட்கள் ஓடிய பேச பட்ட படம்.
    3)இளைய ராஜா இசைத்துறையில் நுழைந்த அடுத்த வருடமே சிவாஜி பட வாய்ப்பு. இந்த இணைவில் 23 படங்கள் 1999 வரை. சிவாஜி 1976-1999 நடித்த 100 படங்களில் இது 23 %.
    4)எம்.எஸ்.விஸ்வநாதன் -சிவாஜி productions ஒரு வின்னிங் combination (திரிசூல வெற்றி).அந்த வருட இளைய ராஜா இசையில் வேறெந்த படமும் இதன் வெற்றியை தொடவில்லை. எனினும் அறுவடை நாள் முதல் கிட்டத்தட்ட 6 படங்களுக்கு இளைய ராஜா சிவாஜி பிலிம்சால் பயன் படுத்த பட்டார்.
    5) சிவாஜி படங்களுக்கு யார் இசையமைத்தாலும் சிவாஜிதான் ஹீரோ. யாரும் dominate செய்வதை கனவு கூட காண முடியாது.(மோகன்,ராமராஜன் படங்களில் இது சாத்தியம் இசையமைப்பாளருக்கு)

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •