Page 164 of 399 FirstFirst ... 64114154162163164165166174214264 ... LastLast
Results 1,631 to 1,640 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #1631
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகம் பல தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் முதல் தர விடிவெள்ளியாக எந்தளவுக்கு இருந்திருக்கிறார் என்பதை கீழ்கண்ட தகவல்களிலிருந்து காணலாம். வருட வாரியாக நடிகர் திலகத்தை வைத்து திரைப்பட துறை வளர்ந்த வாழ்ந்த விபரங்கள்

    Every 10 year of Release No of Nadigar Thilagam Films

    1952 - 1962 ************** 83
    1963 - 1973 ************* 84
    1974 - 1984 ************* 81
    1985 - 1988 ************* 27
    Special appearances ********* 17

    சிங்கப்பூரில் உடல் நலம் பாதிக்க படாமல் இருந்திருக்குமேயானால் அடுத்த பத்து ஆண்டுகளில் நிச்சயம் அதே அளவில் திரையுலகில் வலம் வந்திருப்பார். உடல் நலம் சற்று தேருவதற்குள் கலைத்துறையில் உள்ள தாகத்தினால் மருத்துவ ஆலோசனையையும் சரிவர செவிசாய்க்காமல், 1991 - 1, 1992 - 4, இதனால் மீண்டும் உடல் நலம் பாதிக்கபட்டாலும், 1993 - 1998 வரை தலா ஒரு திரைப்படமாக குறைத்துக்கொண்டு , 1999இல் மறுபடியும் 3 திரைப்படங்கள் அவரின் நடிப்பில் வெளிவந்தன.

    இது தவிர அந்தந்த வருடத்தில் கௌரவவேடம் புனைந்து மொத்தம் 17 படங்கள்.

    40ஆண்டு காலம் எத்தனை புதிய கதாநாயகர்கள், புதிய இயக்குனர்கள், புதிய தயாரிப்பாளர்கள், வசனகர்த்த, இசையமைப்பாளர்கள், பாடகர்கள், தொன்றீருப்பார்கள். எவருமே போட்டிபோட கூட நினைக்கமுடியாவண்ணம் 1953 முதல் வருடத்திற்கு சராசரி 8.58 திரைப்படங்கள் நடிகர் திலகத்தின் நடிப்பில் வெளிவந்திருக்கிறது.
    இப்படி கலைதுறைக்காகவே தன்னை முழுவதுமாக அற்பனித்துக்கொண்ட உன்னத தமிழன் கலைக்குரிசில் சிவாஜி கணேசன்.

    அப்படியென்றால், எத்தனை இயக்குனர்கள், நடிக நடிகையர், கதாசிரியர், வசனகர்த்த, டப்பிங் கொடுப்பவர், நடன அமைப்பாளர், பாடலாசிரியர், மற்றும் எவ்வளவு திரை துறையை சேர்ந்த தொழிலாளர்கள் இதனால் பயன்பெற்றிருபார்கள். திரை துறையின் வர்த்தகம் எத்தனை கோடிகள் இருந்திருக்கும் இவர் ஒருவரால் ....

    நினைத்து பார்த்தால் புளகாங்கிதம் அடைகிறது ..!

    அப்போது மட்டுமல்ல இப்போதும் எப்போதும் நடிகர் திலகம் பாடல் வரியில் கூறுவது போல " காலம்தனை நான் மாறவைப்பேன்....கண்ணே உன்னை நான் வாழவைப்பேன்...என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு " என்பதுதான் !
    Last edited by NTthreesixty Degree; 31st August 2013 at 03:29 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1632
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    சத்யராஜ் சிவாஜியுடன் இணைந்து நடித்த 'ஜல்லிக்கட்டு'
    பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜூலை 31, 10:39 PM IST
    Maalaimalar


    சிவாஜிகணேசன் நடித்த 'ஜல்லிக்கட்டு' படத்தில் இன்னொரு ஹீரோவாக சத்யராஜ் நடித்தார். இந்தப்படமும் வெற்றி பெற்றது. சிவாஜியுடன் 'ஜல்லிக்கட்டு' படத்தில் நடித்த சத்யராஜூக்கு, படத்தில் முக்கியமான கேரக்டர். நீதிபதி ஒருவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை ஒரு அதிரடி இளைஞன் மூலம் சரி செய்து கொள்ளும் கதை.

    இதில் பாதிக்கப்பட்ட நீதிபதியாக சிவாஜியும், அவருக்கு உதவும் இளைஞராக சத்யராஜூம் நடித்தார்கள். வித்தியாசமான கதைக்கருவைக் கொண்ட இந்தப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

    இந்தப் படத்தின் வெற்றி விழாவில், அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களை வாழ்த்தினார். எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட கடைசி சினிமா விழா இதுதான்.

    சிவாஜியுடன் நடித்த 'ஜல்லிக்கட்டு' அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

    'ஜல்லிக்கட்டு படத்தை நண்பர் மணிவண்ணன்தான் இயக்கினார். சித்ரா லட்சுமணன் தயாரித்தார். கதையைக் கேட்கும்போதே இது நன்றாக ஓடும் என்று தோன்றியது. சில கதைகளை கேட்டதுமே, அது வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியும்.

    ஜல்லிக்கட்டு அப்படியொரு கதை. அப்போதெல்லாம் நானும் மணிவண்ணனும் செட்டிலே ஒருவரை ஒருவர் `தலைவா!' என்று கூப்பிட்டுக் கொள்வோம். இந்த `தலைவா' பழக்கம் செட்டில் இருந்த மற்ற டெக்னீஷியன்களையும் தொற்றிக் கொண்டது.

    இது எதில் போய் முடிந்தது தெரியுமா? செட்டில் சிவாஜி சாரிடம் போன டான்ஸ் மாஸ்டர் பாபு அவரிடம், 'தலைவா! ஷாட் ரெடி' என்று சொல்லப்போக, பதிலுக்கு சிவாஜி சார் அவரை கேலி செய்யும் அளவுக்குப் போய்விட்டது. 'ஏண்டா! உங்க `தலைவா' என் வரைக்கும் வந்தாச்சா?' என்று கேட்க, மாஸ்டர் அவசரமாய் `எஸ்கேப்' ஆகியிருக்கிறார். நானும் பிரபுவும் `தலைவரே' என்று அழைத்துக் கொள்வதும் சிவாஜிசாருக்கு தெரிந்திருக்கிறது.

    இப்போது அவரே செட்டில் 'தலைவா' என்று அழைக்கப்பட்டு விட்டதால், அன்று படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போனவர், பிரபு வரும் வரை காத்திருந்திருக்கிறார். பிரபு வீட்டுக்குப் போனதும் 'வாங்க தலைவரே!' என்று அழைத்து அவரை வெலவெலக்க வைத்திருக்கிறார்.

    மறுநாள் இதுபற்றி பிரபு என்னிடம் சொன்னபோது, எங்களுக்கெல்லாம் அடக்கமுடியாத சிரிப்பு. நேரத்துக்கு மதிப்பு கொடுப்பதில் சிவாஜி சாருக்கு நிகர் அவரேதான். காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் நான் 7 மணிக்கு செட்டில் இருப்பேன். ஆனால் அதற்கு முன்பே சிவாஜி சார் செட்டில் இருப்பார்.

    ஒருநாளாவது அவரை முந்திவிடவேண்டும் என்று இன்னும் சீக்கிரம் வரத்தொடங்கினேன். அப்போதும் சிவாஜி சார் எனக்கு முந்தி வந்திருந்தார். நடிப்பில் மட்டுமின்றி, `பங்ச்சுவாலிட்டி'யிலும் சிவாஜி சாருக்கு இணையாக யாருமில்லை என்பதை நானும் இந்த நாட்களில் கண்கூடாக உணர்ந்தேன். 'ஜல்லிக்கட்டு' படப்பிடிப்புக்காக பெங்களூரில் இருந்து மங்களூருக்கு விமானத்தில் போனோம்.

    நான், மணிவண்ணன், கேமராமேன் சபாபதி, சித்ரா லட்சுமணன் எல்லோரும் ஒரே ரூமில் தங்கினோம். சிவாஜி சார் பக்கத்து ரூமில் தங்கினார். படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள். காலை 6 மணிக்கு விமானம் ஏறவேண்டும். சிவாஜி சார் அதிகாலை 4 மணிக்கு விழித்தவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார்.

    நாங்கள் முந்தின நாள் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கியிருக்கிறோம். அதிகாலையில் எங்களை வந்து பார்த்தவர், நாங்கள் படுத்திருந்த இடத்துக்கு அருகில் சிக்கன் எலும்புகள் கிடந்ததை பார்த்திருக்கிறார். அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் போனவர், நாங்கள் புறப்பட்டு தயாராகி வந்தபோது பிடித்துக்கொண்டார்.

    'ஏண்டா! காலையிலேயே எழுப்பலாம்னு வந்தால் செத்துப்போன கோழியோட ஒண்ணா படுத்திருக்கீங்களே' என்று கிண்டல் செய்தார். அந்த கிண்டலில் ஒரு தந்தைக்கே உரிய அக்கறை இருந்தது. விமான நிலையத்துக்கு புறப்பட சிவாஜி சார் அவசரப்படுத்தின தால், ஆளாளுக்கு சீக்கிரமே கிளம்பி விட்டோம்.

    கமலா அம்மாளும் சிவாஜி சாருடன் வந்திருந்தார்கள். 'மாமா இப்படித்தான் அவசரப்படுத்துவாங்க. நாமபோறப்போ விமான நிலைய கேட்டை திறந்திருக்க மாட்டாங்க' என்றார். கமலா அம்மாள் சொன்னதுபோலவே ஆயிற்று. நாங்கள் போய்ச் சேர்ந்த பிறகுதான் விமான நிலைய பயணிகள் கேட்டையே திறந்தார்கள்! அப்போது மங்களூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் ஒரு விமானம்தான்.

    எனவே விமானத்தை தவறவிட்டால் தேவையில்லாமல் ஒருநாள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த வகையில் சிவாஜி சாரின் `அவசரம்' நியாயமானதுதான். பார்த்ததுமே 'வாங்க கவுண்டரே!' என்பார். படப்பிடிப்பின்போது கிடைக்கிற இடைவெளி நேரத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவார்.

    எங்கள் சித்தப்பா அவரது நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பம் பற்றி ஆர்வமாய் விசாரிப்பார். என் சிறுவயதிலேயே விவசாய நிலங்கள் விற்கப்பட்டதை தெரிந்து கொண்டவர், 'நீ சம்பாதிச்சு சொந்த ஊர்லயே நிறைய தென்னந்தோப்பு வாங்கணும்' என்று சொன்னார்.

    அவர் சொன்னதுபோலவே பொள்ளாச்சி பகுதியில் வாழவாடி ஊரில் 95 ஏக்கர் தென்னந்தோப்பு வாங்கியிருக்கிறேன். 'ஜல்லிக்கட்டு' படம் எதிர்பார்த்த மாதிரியே நன்றாக ஓடி, வெற்றி பெற்றது.

  4. #1633
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜியுடன் நடித்த அனுபவங்கள்: குட்டி பத்மினி வெளியிடும் தகவல்கள்
    பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஜூலை 08, 9:35 PM IST
    maalaimalar


    சிவாஜியுடன் நடித்த அனுபவங்கள் குறித்து குட்டி பத்மினி கூறியதாவது:-

    "நடிப்பில் சிவாஜி சார் இமயம் என்று தெரியும். ஆனால், அப்போது பேபி நட்சத்திரமாக இருந்த எனக்கு, இது தெரிந்திருக்க வாய்ப்பில்லையே. ஏ.பி.நாகராஜன் அங்கிள் அப்போது எடுத்த "திருவருட்செல்வர்'' படத்தில் சிவாஜி சார் நடித்தார். இந்தப் படத்தில் சிவாஜி சாருடன் விவாதம் செய்யும் ஒரு காட்சியில் நடிக்க என்னை `புக்' செய்தார்கள்.

    புராணப்படம் என்பதால் தூய தமிழில் பேச ஏ.பி.நாகராஜன் அங்கிள் வீட்டில் ஒரு வாரம் எனக்கு `சுத்தத் தமிழ்' கற்றுத் தந்தார்கள். இந்த ஒரு வாரத்தில் ஏ.பி.என். அங்கிளின் பிள்ளைகளும் எனக்கு `பிரண்ட்ஸ்' ஆகிவிட்டார்கள். சிவாஜி சாருடன் நான் நடிக்க வேண்டிய காட்சி படமாகும் நாளும் வந்தது. அப்போதெல்லாம் எனக்கு `நடிப்பு' பற்றி பயமே இருந்ததில்லை.

    படத்தில் திருமலை மன்னராக வரும் சிவாஜிசாருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவருக்கு கடவுள் நம்பிக்கை ஏற்படுத்தும் சிறுமியாக நான் வந்தேன். கடவுள் நம்பிக்கை பற்றி நான் அவரிடம் பேசப்போக, அவரோ "கடவுள் இருக்கிறார் என்றால், அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?'' என்று கேட்பார்.

    "இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமானால் என்னை திருமலை மன்னராக்கி அரியணையில் அமர வைக்கவேண்டும்'' என்பேன். உடனே திருமலை மன்னர் என்னை அரியணையில் அமர்த்தி மன்னராக மகுடம் சூட்டுவார். அடுத்த கணம் நான், "யாரங்கே! இதுவரை திருமலை மன்னராக இருந்த இவரை பிடித்து சிறையில் அடையுங்கள்'' என்பேன்.

    அப்படி உத்தரவிட்டு விட்டு, "கடவுள் இப்போது இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்'' என்பேன். இதன் பிறகு திருமலை மன்னர் கடவுள் நம்பிக்கை உடையவராக திருந்துவதுடன் அந்தக் காட்சி முடியும். இந்தக் காட்சியில் திருமலை மன்னராக நடிக்கும் சிவாஜி சார் உணர்ச்சி வேகத்தில் பேசிவிட்டு, என் காலில் விழுவதாக அந்தக் காட்சி முடியும்.

    இந்தக்காட்சி பற்றி சிவாஜி சாரிடம் விளக்கிய உதவி இயக்குனர்கள், கடைசியில் `கடவுள் ஞானம்' கொடுத்த சிறுமியின் காலில் விழுவதுடன் காட்சி முடியும் என்பதை தயங்கித் தயங்கி சொன்னார்கள். ஆனால் சிவாஜி சார் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. காட்சியில் உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டு வந்தவர், "அம்மா நீ சிறு பெண்ணல்ல; என் அறிவுக்கண் திறக்க வந்த தெய்வம்'' என்று சொல்லி என் கால் பக்கமாக விழுந்துவிட்டார்.

    டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அங்கிள் `கட்' செய்யவும் மறந்து ஒரு கணம் பிரமித்து நின்றுவிட்டார். காட்சியின் கனம் கருதி எந்த நடிப்புக்கும் தயாராக இருந்த சிவாஜி சாரை நினைத்தால் இப்போதும் அவர் மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது. இந்தப்படம் பற்றி அப்போது விமர்சனம் எழுதிய ஒரு பத்திரிகை, இந்தக் காட்சி பற்றி குறிப்பிடும்போது "திமிங்கலத்தை சின்ன மீன் விழுங்கிவிட்டது'' என்று வர்ணித்திருந்தது.

    அதுமாதிரி, "திருமால் பெருமை'' படத்திலும் ஒரு உணர்ச்சிமயமான காட்சி சிவாஜி சாருக்கும் எனக்கும் இருந்தது. படத்தில் குட்டி ஆண்டாளாக வரும் நான் திருமாலுக்கு என் தந்தை (சிவாஜி) சூடிய மாலையை என் கழுத்தில் எடுத்து போட்டுக்கொள்வேன். ஆத்திரமாகும் அப்பா என் மீது கோபப்படுவதாக காட்சி. இந்தக் காட்சியின்போது நான் கொஞ்சமும் எதிர்பாராமல் சிவாஜி சார் என் கன்னத்தில் ஓங்கி விட்டார் ஒரு அறை.

    அந்த அறையின் வேகத்தில் என் காதில் இருந்த கம்மல் தெறித்து விழுந்தது. பொறி கலங்கிப்போனேன். என்றாலும் நான் தொடர்ந்து பேசவேண்டிய வசனத்தை பேசி முடித்தேன். காட்சி முடிந்ததும் சிவாஜி சார் ஓடிவந்து என் கன்னத்தை தடவிவிட்டார். பிறகு அம்மாவிடம் அந்தக் காட்சிக்கான விளக்கம் சொன்னார். "இந்தக் காட்சியில் நான் கன்னத்தில் அறைவதை முதலிலேயே சொல்லியிருந்தால் உங்கள் பெண், நான் அடிக்கும்போது கன்னத்தை திருப்பியிருப்பாள். அப்படிச் செய்திருந்தால் அந்தக்காட்சி இயல்பாக அமையாது. அதனால்தான் அடிப்பதை முன்கூட்டியே சொல்லவில்லை. ஆனால் இப்படி சொல்லாமல் கன்னத்தில் அடித்தும், நடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து அழுதுகொண்டே வசனம் பேசி நடித்த உங்கள் பெண் என்னை ரொம்பவே கவர்ந்து விட்டாள்'' என்று சொன்னவர், "உங்க கையை நீட்டுங்க'' என்றார், அம்மாவிடம்.

    அம்மா `எதற்கு' என்று புரியாமல் பார்த்த நேரத்தில், "எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுங்க. உங்க பொண்ணு ஹீரோயினா நடிக்கிற கால கட்டத்துல என்கூட தான் முதல்ல நடிக்கணும்'' என்றார். அம்மா அப்படியே நெகிழ்ந்து போய்விட்டார்.

    பெண்ணின் நடிப்பு மீது அந்த மகா கலைஞர் வைத்த நம்பிக்கையும், சிறு குழந்தை மாதிரி அவர் கேட்ட சத்தியமும் அம்மாவை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.'' இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

  5. #1634
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    `கடினமான பாடலுக்கு பிரமாதமாக வாயசைத்தார்'- சிவாஜிகணேசனுக்கு இளையராஜா புகழாரம்

    பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, ஏப்ரல் 01, 11:30 PM IST
    maalai malar


    'கவரிமான்' படத்தில், கீர்த்தனை ஒன்றுக்கு புதிய முறையில் இசை அமைத்தார், இளையராஜா. பாடுவதற்கு கடினமான அந்தப்பாடலுக்கு மிகப் பொருத்தமாக வாயசைத்தார், சிவாஜிகணேசன். அதைக்கண்டு இளையராஜா வியந்து போனார்.

    இசைப்பயணம் பற்றி இளையராஜா கூறியதாவது:-


    எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 'கடவுள் அமைத்த மேடை'படத்தில்தான், ஒரு பரிசோதனை முயற்சி செய்யவேண்டும் என்று தோன்றியது.

    அதாவது கர்நாடக சங்கீத ராகங்களை எடுத்துக்கொண்டு, அதன் ஆழம் குறையாமல் கிராமியப் பாணியின் சந்தங்களை மெட் டாக அமைத்து, பாடும்போது அதன் இரண்டு வேறுபட்ட தனிப்பட்ட தன்மைகளை இணைத்துப் பாடவைக்கலாமே என்று தோன்றியது.


    பஞ்சு சார் அடுத்து 'கவரிமான்' என்ற படத்தில் நடிக்க சிவாஜியை ஒப்பந்தம் செய்தார். நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (மனைவி சோரம் போகிற காட்சியை பார்க்கும் கணவனின் கேரக்டர்)

    என் இசையில் முதன் முதலில் ஒரு தியாகராஜ கீர்த்தனை இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். 'ப்ரோவ பாரமா?' என்ற கீர்த்தனையை ஜேசுதாஸ் பாட, டி.வி.கிருஷ்ணன் அவர்களின் வயலினும், டி.வி.கோபாலகிருஷ்ணனின் மிருதங்கமும் இணைந்தன.

    சிவாஜி இந்தப் பாட்டுக்கு வாயசைத்ததை கண்டு வியந்து போனேன்.

    ஆரம்பத்தில் ஜேசுதாஸ் ராகம்பாடி, தாளம் ஏதும் இல்லாமல் திடீரென்று `ப்ரோவபாரமா' என்று தொடங்குமாறு பதிவு ஆகியிருந்தது.

    ராகம்பாடி, `ப்ரோவ பாரமா' தொடங்குவதற்கு இடையில் தாளத்தில் ஏதாவது வாசித்திருந்தால் நடிப்பவர்களுக்கு பாடல் தொடங்கும் இடம் சரியாகத் தெரிந்து வாயசைக்கலாம்.

    ராகம்பாட, வெறும் தம்புரா மட்டும் போய்க்கொண்டிருக்க, அது எவ்வளவு நேரம் போகிறது என்று கண்டுபிடித்து, பாடல் ஜேசுதாஸ் குரலில் வரும் அந்த நொடியை எப்படியோ கண்டுபிடித்து சரியாக வாயசைத்தார்.



    இதைப் பாராட்டி, அண்ணன் சிவாஜியிடம், 'எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

    'என்னை என்னடா நினைச்சிட்டே? சும்மா ஏனோதானோன்னு சினிமாவுக்கு வந்தவன்னு நினைச்சியா? இதெல்லாம் முடியாட்டா ஏண்டா ஒருத்தன் நடிகனா இருக்கணும்?' என்று கேட்டார் சிவாஜி.

    'நடிகர் திலகம்' என்று சும்மாவா பட்டம் கொடுத்தார்கள்?
    Last edited by NTthreesixty Degree; 31st August 2013 at 05:40 PM.

  6. #1635
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் முதல் வண்ணப்படங்கள்:

    (இவர்கள் அனைவரும் தங்கள் முதல் வண்ணப்படங்களை நடிகர்திலகத்தை கதாநாயகனாக வைத்தே தயாரித்தனர்)

    1) பத்மினி பிக்சர்ஸ் - வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) தமிழில் முதல் டெக்னிக் கலர் படம்.

    2) ஆர். ஆர். பிக்சர்ஸ் - ஸ்ரீ வள்ளி (1961)

    3) பத்மினி பிக்சர்ஸ் - கர்ணன் (1964) தமிழில் முதல் ஈஸ்ட்மன் கலர்ப்படம்.

    4) சிவாஜி பிலிம்ஸ் - புதிய பறவை (1964)

    5) ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் - திருவிளையாடல் (1965)

    6) ஏ.எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் - கந்தன் கருணை (1967)

    7) கே.சி.பிலிம்ஸ் (கோவை செழியன்) - ஊட்டிவரை உறவு (1967)

    8) ஸ்ரீவெங்கடேஸ்வரா மூவீஸ் - திருமால் பெருமை (1968)

    9) ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ் - தங்க சுரங்கம் (1969)

    10) சுஜாதா சினி ஆர்ட்ஸ் - எங்கிருந்தோ வந்தாள் (1970)

    11) ஜேயார் மூவீஸ் - எங்க மாமா (1970)

    12) சன்பீம் பிக்சர்ஸ் - பாதுகாப்பு (1970)

    13) மல்லியம் புரொடக்ஷன்ஸ் - சவாலே சமாளி (1971)

    14) பி.எஸ்.வி. - பிக்சர்ஸ் - இரு துருவம் (1971)

    15) புவனேஸ்வரி மூவிஸ் - மூன்று தெய்வங்கள் (1971)

    16) ராம்குமார் பிலிம்ஸ் - சுமதி என் சுந்தரி (1971)

    17) விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் - வசந்த மாளிகை (1972)

    18) சித்ரமாலா கம்பைன்ஸ் - ராஜபார்ட் ரங்கதுரை (1974)

    19) வியட்நாம் மூவீஸ் - கௌரவம் (1973)

    20) ஆனந்த் மூவீஸ் - ராஜராஜ சோழன் (1973)

    21) சினி பாரத - பாரத விலாஸ் (1973)

    22) ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் - எங்கள் தங்க ராஜா (1973)

    23) முக்தா பிலிம்ஸ் - அன்பைத்தேடி (1974)

    நடிகர்திலகம் நடித்த கடைசி கருப்பு வெள்ளைப்படமான 'தாய்' 1974-ல் வெளியானது. எனவே அதன்பின்னர் தயாரித்த அனைத்து நிறுவனங்களும் வண்ணத்திலேயே தயாரித்திருப்பார்கள் என்பதால் பட்டியல் 1974 உடன் நிறுத்தப்படுகிறது....
    Last edited by mr_karthik; 1st September 2013 at 01:36 PM.

  7. #1636
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    (Continuation Till 1977 of Karthik Sir )

    சன்பீம் -பாதுகாப்பு

    பீ.எஸ்.வீ. பிக்சர்ஸ்- இரு துருவம்

    மல்லியம் புரடக்ஷன்ஸ் - சவாலே சமாளி

    புவனேஸ்வரி மூவீஸ்- மூன்று தெய்வங்கள்

    ராசி enterprises -அவன்தான் மனிதன்

    அமுதம் பிக்சர்ஸ் - அன்பே ஆருயிரே

    ப்ராஸ்பரிடி பிலிம்ஸ்-கிரக பிரவேசம்

    சண்முகமணி பிச்சர்- சத்யம்

    கோமதி சங்கர் பிக்சர்- அவன் ஒரு சரித்திரம்

    யோகசித்ரா - இளைய தலைமுறை
    Last edited by Gopal.s; 31st August 2013 at 06:54 PM.

  8. #1637
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Dear Gopal sir,

    I can understand why you extended the list uptp 1977.

    But the last Black & White movie of our Nadigarthilagam "THAAI" released in 1974. After that no more b & w movies. So all other concerns should start their movies in colour only.

    But I accept that, I have omitted Irudhuruvam, Moondru Dheivangal, Padhukappu and Savale Samaali.....

  9. #1638
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    Dear Gopal sir,

    I can understand why you extended the list uptp 1977.

    But the last Black & White movie of our Nadigarthilagam "THAAI" released in 1974. After that no more b & w movies. So all other concerns should start their movies in colour only.

    But I accept that, I have omitted Irudhuruvam, Moondru Dheivangal, Padhukappu and Savale Samaali.....
    Sorry. I agree with you that it has relevance only upto 1974. You are correct and I was little over-enthusiastic .Thank God for stopping me as I was planning till 1999 ????? !!!!!!!!!!!!!
    Last edited by Gopal.s; 31st August 2013 at 07:28 PM.

  10. #1639
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Friends,
    I am starting Gnana Oli ,the special movie for many celebrities and to many of our Fans too. As there were many write-up on this movie in the past (recently by Murali and Vasu) ,I will not dwell much on story line and other peripheral matters. I am analysing the character psychology and the unique Acting approach of Nadigarthilagam. Generally this movie has very good performances by Gokul Nath(amazing and unforgettable),Saratha(some of the close-up shots with meaningful reactions ,she proved her mettle) and Sundararajan.But I will take only NT's performance in detail.
    Last edited by Gopal.s; 31st August 2013 at 07:46 PM.

  11. #1640
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Gopal sir
    please read my posting . I have mentioned the nalla neram record in the year 1972 only.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •