-
1st September 2013, 09:31 AM
#1661
Junior Member
Senior Hubber

Originally Posted by
RAGHAVENDRA
ஞான ஒளி ... சில நினைவுகள் ... ஏற்கெனவே முன்னர் இடம் பெற்றிருக்கக் கூடும்...
அது வரை நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் செய்திருந்த சாதனைகள் அவ்வளவாக வெளியுலகில் தெரியாமல் இருந்திருந்தாலும் அவற்றையும் நினைவூட்டும் வண்ணம் தன்னுடைய box office ஆளுமையை ஆணித்தரமாக வலுவாக நிலைநிறுத்திய ஆண்டாக 1972 அமைந்தது. 20 ஆண்டுகளில் 200 ஆண்டுகள் பேசப் படக் கூடிய சாதனையை நிகழ்த்தி விட்டு அமைதியாக ஆரவாரமின்றி ஆர்ப்பாட்டமின்றி தொடர்ந்து கொண்டிருந்த நடிகர் திலகத்தின் வாழ்க்கையில் 1972 குறிப்பிடத் தக்கதாக அமைந்தது மட்டுமின்றி சிவாஜி ரசிகர்களின் உள்ளத்தில் உவகை பொங்க வைத்து லட்சக்கணக்கான புதிய ரசிகர்களை உருவாக்கிய ஆண்டாகவும் இருந்தது எனலாம்.
ஞான ஒளி திரைப்படத்தைப் பற்றி ஏற்கெனவே கூறியிருந்ததை மீண்டும் நினைவூட்டுவதில் தவறில்லை என எண்ணுகிறேன்.
முதல் வெளியீட்டில் முதல் இரு நாட்களிலேயே தலைநகராம் சென்னையில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலைக் காட்சியாக திரையிடப் பட்ட முதல் படம் ஞான ஒளியாகும். இவை யனைத்தும் சபாக்களின் காட்சிகள் என்பது குறிப்பிடத் தக்கது.
தற்போது திரையரங்குகளில் ஆயிரக்கணக்கான காட்சிகளாக புதுப்படங்கள் திரையிடப் படுவதற்கும் இதற்கும் உள்ள வேறுபாட்டினை புரிந்து கொள்ள வேண்டும். ஞான ஒளி திரைப்படம் அந்தக் காலத்து நடைமுறையில் ரெகுலர் காட்சிகள் எனப்படும் தினசரி 3 காட்சிகள் மட்டுமின்று கூடுதலாக நடைபெற்றது.
அது மட்டுமா, ஒரே சமயத்தில் சென்னை நகர் மற்றும் சுற்று வட்டாரங்களில் நடிகர் திலகத்தின் படங்கள் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்டவை திரையிடப் பட்டு ஓடியதும் வரலாறு காணாததாகும். இது போன்ற சாதனைகளை நடிகர் திலகத்தால் மட்டுமே நிகழ்த்த முடிந்திருக்கிறது. அதற்கு முன் வெளியான ராஜா வெற்றிகரமாக அரங்கு நிறைந்த காட்சிகளோடு நடைபெற்றுக் கொண்டே இருந்த போதும் ஞான ஒளியும் பிரம்மாண்டமான வெற்றியோடு வசூலை வாரிக்குவித்து வெற்றி நடை போட்டதெல்லாம் சாதாரணமான விஷயமல்ல.
படத்தைப் பொறுத்த மட்டில் ஞான ஒளி திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் பாப்ஜி. இவர் ஓர் சகல கலா வல்லுநர். நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு பரிணாமங்களில் தமிழ்த் திரையுலகில் தன் பங்காற்றியவர். இவரையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது ஞான ஒளி திரைப்படம். இவருக்கும் ஜெய கௌசல்யாவிற்கும் இடையே மிக இனிமையான டூயட் பாடல் இருந்தது. முதல் ஓரிரு நாட்களுக்கு இருந்த இப்பாடல் என்ன காரணத்தாலோ எடுக்கப் பட்டு விட்டது. படத்தின் நீளம் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். வேகத் தடையாக இருந்திருக்கலாம்.
ஆனால் பாடல் அருமையான பாடல். பல்லவி உள்ளம் போ என்றது எனத் தொடங்கும். இப்பாடலின் மெட்டை விட்டு விடாமல் மெல்லிசை மன்னர் மீண்டும் பயன் படுத்தி காலத்தை வென்று நிற்கும் பாடலைத் தந்து விட்டார். அதுவும் எஸ்.பி.பி.குரல், இதுவும் எஸ்.பி.பி.யின் குரல்.
ஞான ஒளி நினைவுகளை மீண்டும் அசை போட வைத்த கோபால் சாருக்கு நன்றி.
Raghavender sir, your ninaivugal about ZZNAOLI abousoutely correct. apaert from specical shows arranged by all the leading sabhas, the film had a very big opening in maximum screens first time in the history of tamilfilms which was a very UNIQUE RECORD CREATED BY NT THOSEDAYS, STILL MY mind and thoughts are with the film created records. thank you for taking me way back to 1972 golden year of NT.
Last edited by Subramaniam Ramajayam; 1st September 2013 at 10:46 AM.
-
1st September 2013 09:31 AM
# ADS
Circuit advertisement
-
1st September 2013, 05:05 PM
#1662
Senior Member
Seasoned Hubber
என் விருப்பம் - வெங்கிராம் அவர்களுக்காக
மனோரமா நடிகர் திலகத்துடன் ஜோடியாக நடித்த ஒரே படம் ஞானப் பறவை. யாகவா முனிவரின் ஞான தீட்சையை அடிப்படையாக வைத்து உருவாக்கப் பட்ட கதை. நடக்க இருப்பதை முன்கூட்டியே உணரும் சக்தி கொண்ட பெரியவராக நடிகர் திலகம். தன் மகளின் முடிவை உணர்ந்தும் அதை மனைவியிடம் தெரிவிக்காத சூழ்நிலையில், அந்த மரணம் சம்பவித்த பின்னர் மனைவி கணவனிடம் கோபித்துக் கொள்ளும் சூழ்நிலையில் இப்பாட்டு வருகிறது. வாலியின் வைர வரிகளில் ஒவ்வொரு வார்த்தையும் பொருள் பொதிந்த பாட்டு. கணவரின் அறிவுரையில் ஞானத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மனைவி பெறுவதாக பாடல் காட்சி. இந்த இடத்தில் தன் கணவரை ராமகிருஷ்ணராகவும், விவேகானந்தராகவும் மகா பெரியவராகவும் உருவகம் செய்கிறாள் மனைவி.
மனோரமாவின் மிகச் சிறந்த நடிப்பிற்கோர் படம் ஞானப் பறவை. அதுவும் இந்தப் பாடல் காட்சியில் தன் விழிகளிலேயே பேசுவது பிரமிப்பூட்டுகிறது. நடிகர் திலகம் ... கேட்கவே வேண்டாம்... ஒவ்வொரு அசைவிலும் ஞானியின் தோற்றத்தை வெளிப்படுத்தும் பாங்கு...
இந்த ஜோடி முன்னமேயே இணைந்து நடித்திருக்கக் கூடாதா என்கிற ஏக்கத்தை உண்டாக்குகிறது. வெளியான போது சரியாக கவனிக்கப் படாமல் போனாலும் இப்போது பார்க்கும் போது இப்படத்தின் மகத்துவம் புரிகிறது.
1991ம் ஆண்டிலும் நானே ராஜா என்று மெல்லிசை மன்னரும் தன்னுடைய சிறந்த குரலுக்கு ஈடு இணையில்லை என நிரூபிக்கும் வண்ணம் டி.எம்.எஸ். அவர்களும் பங்களிப்பினைத் தந்திருக்கும் இப்பாடல் மறக்க முடியாத பாடலாகும்.
இப்பாடலில் நடிகர் திலகத்தின் நடிப்பில் பல நுட்பமான விஷயங்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. ஞானப் பெண்ணே என்று சொல்லும் ஒவ்வொரு முறையும் தன் உடல் மொழியில் வித்தியாசமான பாவனைகளைக் காட்டுவதாகட்டும், மனோரமாவின் நெற்றிப் பொட்டில் கை வைத்து அறிவுரை கூறுவதாகட்டும், தரையில் உட்கார்ந்த வாறு விதியின் வலிமையைப் பற்றிக் கூறுவதாகட்டும், Frame by frame தன்னுடைய Supremacyயை அழுத்தமாக Establish செய்து விடுகிறார்.
80களுக்குப் பிறகு நடிகர் திலகத்தைப் பற்றி வந்த பாரபட்சமான விமர்சனங்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்த படங்களில் மற்றும் காட்சிகளில் இதுவும் ஒன்று.
ஞானப் பறவையாகட்டும், ஞான ஒளியாகட்டும், தன் ரசிகர்களை ஞானிகளாக உயர்த்தியவர் நடிகர் திலகம் என்பதற்கு இப்படமும் ஓர் உதாரணம். தவறாமல் பார்க்க வேண்டிய படம். இப்போது பார்க்கும் போது பல காட்சிகளில் நுணுக்கமாக பல விஷயங்களைத் தந்திருக்கிறார் நடிகர் திலகம்.
ஏனோ தெரியவில்லை, இப்பாடல் என்னை மிகவும் பாதித்த பாடல்களில் ஒன்றாகி விட்டது.
Last edited by RAGHAVENDRA; 1st September 2013 at 05:29 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st September 2013, 06:37 PM
#1663
Senior Member
Diamond Hubber
நன்றி திரு ராகவேந்தர்! பார்க்க வேண்டிய படங்களுக்கான பட்டியலில் இதையும் சேர்த்துக் கொள்கிறேன்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
1st September 2013, 08:50 PM
#1664
Junior Member
Junior Hubber
Your help
Dear Mr. RAGHAVENDRA Sir,
Though I have been continuously reading this thread I have refrained my self writing because I'm heading towards my goal in education, which i will complete it by December'13. Once I'm successful will start writing about our Legend N.T. coz, this achievement i owe to our N.T.
I kindly request you to help to give me a digital photo copy of N.T. the one which is in the cloud, I WANT THIS WITHOUT THAT WOODS AND THAT DOG, I'm planning to Frame this big in my house.
Please do the needful.
JAIHIND
M. Gnanaguruswamy
-
1st September 2013, 08:51 PM
#1665
Junior Member
Junior Hubber

Originally Posted by
guruswamy
Dear Mr. RAGHAVENDRA Sir,
Though I have been continuously reading this thread I have refrained my self writing because I'm heading towards my goal in education, which i will complete it by December'13. Once I'm successful will start writing about our Legend N.T. coz, this achievement i owe to our N.T.
I kindly request you to help to give me a digital photo copy of N.T. the one which is in the cloud, I WANT THIS WITHOUT THAT WOODS AND THAT DOG, I'm planning to Frame this big in my house.
Please do the needful.
JAIHIND
M. Gnanaguruswamy
P.S. Its in page 130
-
1st September 2013, 09:20 PM
#1666
Junior Member
Newbie Hubber
Last edited by Gopal.s; 3rd September 2013 at 06:41 AM.
-
1st September 2013, 09:31 PM
#1667
திரு. ராகவேந்திர அவர்களே!!!!
எனக்கும் மிகவும் பிடித்த படம் ஞான பறவை ; நீங்கள் சொல்லியுள்ளது அத்தனையும் உண்மை.அவரது உடல் மொழி ஒரு உண்மையான ஞானியைப் போல்தான் இருக்கும்.நான் ஒருஆன்மீகக் குருவை பார்த்துள்ளேன், பழகியுள்ளேன்; அச்சாக நமது NT அப்படியே ஒரு ஆன்மிக வாதியைப் பிரதி பலித்துள்ளார்; எப்படி இவரால் மட்டும் இப்படிக் கூடு விட்டு கூடு பாயமுடிகிறதோ ?
உண்மையிலேயே, நமது Randor Guy போன்ற அறிவு ஜீவிகள் எத்தனை அறிவிலிகள் என்று நான் அவ்வப்போது எண்ணிப் பார்பதுண்டு !!!!
அவரோ கடல், நம்மால் அவரின் பரிமாணத்தை பார்க்க முடிவதோ, ஒரு கை அளவு கூட இல்லை !!!!!
ஆனந்த்
-
1st September 2013, 10:48 PM
#1668
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
venkkiram
நன்றி திரு ராகவேந்தர்! பார்க்க வேண்டிய படங்களுக்கான பட்டியலில் இதையும் சேர்த்துக் கொள்கிறேன்.
Yes, Venkiram. The film may not be a worthwhile movie as a package, but the patches of scenes of NT would steal your heart, particularly in the present context. His somewhat weak physique (I do not know how to describe, this word may be inappropriate), suits this character as a T. He has very well brought in the highly self-confident personality of a saint in his portrayal. அருமையான வெளிப்பாட்டில் அந்தப் பாத்திரம் நம் கண்முன்னே நடமாடுகிறது என்பது உண்மை. Mind you, there is practically nil exaggeration in his presentation, which explains his control over his body language, tone and gait.
There is one contrived scene where the youngsters ask him to describe the dance form as an art, for which he replies with his bhavas. It is a noteworthy and perfectly suits his skill. Throughout the film he has underplayed the character and given what is required for, thus proving once again that he is THE MASTER.
Instead of me writing further, I shall be happy to have your views after watching the film.
There are many disappointing factors in the film as a product, but Nadigar Thilagam, sees that this is a selling product.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st September 2013, 10:53 PM
#1669
Senior Member
Seasoned Hubber
Anand,
Happy to see your post here.
தங்களுடைய எண்ண ஓட்டத்திலும் ஞானப் பறவை தனியிடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தற்போது இப்படத்தைப் பார்க்கும் போது பல காட்சிகளில் நடிகர் திலகத்தின் உடல் மொழி, பாவனை, நடை உடை போன்ற அனைத்துமே பரவசப் படுத்துகின்றன. அது மட்டுமின்ற உடல் நலம் குன்றியிருந்த கால கட்டத்தில் அதையே தன்னுடைய மூலதனமாகக் கொண்டு இப்பாத்திரத்தை அவர் உருவகப் படுத்தியிருக்கிறார் என்பதை உணர்கின்ற போது பிரமிப்பு பல மடங்காகிறது.
இது வரை இப்படத்தைப் பார்க்காதவர்கள் அவசியம் பார்க்கவும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st September 2013, 10:54 PM
#1670
Senior Member
Seasoned Hubber
குருசாமி சார்
அந்த நிழற்படம் வேறோர் இணைய தளத்தில் வேறோர் நண்பர் தரவேற்றி, பகிர்வுக்காக இங்கே பதியப் பட்டது. அதனுடைய ஒரிஜினல் நிழற்படம் கிடைத்தால் அதிலிருந்து நாம் விரும்பியவாறு மாற்றிக் கொள்ளலாம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks