-
10th September 2013, 05:09 PM
#1841
Junior Member
Newbie Hubber
தவற விடாதீர்கள் நண்பர்களே. நடிகர்திலகத்தின் கிரீடத்தில் ஒரு விலை மதிக்க முடியாத கல்.
தூக்கு தூக்கி .- முரசு டி.வீ வியாழன் 12/09/2013 அன்று இரவு 07.30 மணிக்கு.
ராகுல் ராம், நீ இதை பற்றி விரிவாக எழுதுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
-
10th September 2013 05:09 PM
# ADS
Circuit advertisement
-
10th September 2013, 05:12 PM
#1842
Senior Member
Seasoned Hubber
நடிகர் திலகத்தின் சில பாத்திரங்களை மட்டும் - குறிப்பாக கோபால் சாருக்கு பிடித்த பாத்திரங்களை மட்டும் இங்கே எழுதினால் போதும் என்கிற நிலை உருவாகிறது. எத்தனை முறை கூறினாலும் இதைப் போன்ற ஆணவப் பதிவுகள் மீண்டும் மீண்டும் வருவதும் நாமும் நடிகர் திலகத்தின் சிறப்புகளை எழுதுவதற்காக விட்டுக் கொடுத்துப் போவதுமாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலை மிகவும் வேதனை அளிக்கிறது.
நடிகர் திலகத்தின் சில படங்களை மட்டும் விவாதிப்பதற்காக மட்டும் தான் இத்திரி என்ற நிலையிருப்பதானால் இதற்கு மேலும் இங்கே உழைத்து விரையம் செய்வதில் எனக்கு உடன் பாடு இல்லை. என்னைப் பொறுத்த மட்டில் நடிகர் திலகத்தின் அத்தனை படங்களுக்கும் ரசிகன் அவருடைய படம் குப்பையானாலும் கவலையில்லை, அவரை ரசிப்பதில் அவர் குறை வைக்கவில்லை என்பதால் என்னுடைய நிலைப்பாடு இதுதான்.
எந்த வித நிர்ப்பந்தமும் இல்லாமல் நடிகர் திலகத்தின் அனைத்துப் படங்களில் இருந்தும் அவருடைய நடிப்பைப் பற்றி விவாதிப்பதானால், அதுவும் இங்கு உள்ள அனைத்து நண்பர்களும் என் கருத்தை ஆதரிப்பதானால் மட்டுமே இனி இத்திரியில் என் பங்கு தொடரும். அவ்வாறு இல்லையென்றால் திரைப்படப்பட்டியலை சீக்கிரம் முடித்து விட்டு இங்கு நடிகர் திலகத்தைப் பற்றி விவாதிப்பதில் அர்த்தமில்லை என முடிவு செய்து ஒதுங்கிக் கொள்கிறேன்.
இது வெறும் கூற்றல்ல. என் மன வேதனையின் வெளிப்பாடு. மீண்டும் மீண்டும் மனம் புண்பட்டு இங்கே உழைப்பதில் எனக்கு விருப்பமில்லை.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th September 2013, 05:30 PM
#1843
Junior Member
Newbie Hubber
ராகவேந்தர் சார்,
நான் பதில் போட வேண்டாம் என்று எண்ணி தவிர்த்து வந்தேன். எனது பணிவான எண்ணங்கள்---
1)சிவாஜி ,அவர் காலத்தில் இருந்த நடிக,நடிகைகளை விட பல மடங்கு விஸ்வரூபம் எடுத்து நின்ற நடிப்பு கடவுள்.
2)சராசரிகளை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் உன்னதங்களை உரிய முறையில் தூக்கி பிடிக்க வேண்டும்.
3)அவருடைய படங்களில் தூக்கி பிடிக்க ஒரு 160- 180 வருமே? அவற்றை எழுதலாமே?எனக்கு பிடித்தது ,பிடிக்காததை விடுங்கள். நம் யாவருக்குமே பிடிக்காததை ஏன் நாமே குறிப்பிட்டு எழுத வேண்டும்.
4)நான் இந்த திரிக்கு என்று ஒரு தரம் வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அதனால் ஒரு வேண்டுகோள்தானே நிர்பந்தம் அல்ல.
5)எல்லாவற்றையும் ஆஹா ஓஹோ என்று எழுதினால் ,நம் எழுத்துக்களுக்கென்று ஒரு நம்பக தன்மை வேண்டாமா? மற்ற திரிகளை பார்த்து கிண்டலாய் முறுவலிப்போமே,அதை போல பதிவுகள் நம் திரியில் வேண்டுமா?
6)வாசு சார், எழுதிய அற்புத பதிவுகளை நீர்க்க வைப்பது போல ஒருவர் எழுதினால் போகட்டும். அதை பாராட்டி அந்த மாதிரி பதிவுகள் அதிகரிக்க வழி செய்ய வேண்டுமா?
7)நான் மீண்டும் சொல்கிறேன். மனசாட்சிக்கு தெரிந்தே வந்து போன குப்பைகளை தவிர்பதுதானே சரி.
8)உலகின் எல்லா நடிகர்களுக்கும் தரமற்ற படங்கள் உண்டு. ஆனால் வெளியுலகுக்கு சொல்ல படுவது சிறந்த படங்களே. இது உலகம் முழுதும் உள்ள ஒரு சாதாரண நடைமுறைதானே?
9)மற்ற ரசிகர்களுக்கும் நமக்கும் வேறுபாடு உண்டு.நாம் நாமாகவே இருப்போம்.யாராகவும் மாற வேண்டாம்.
கவலை படாதீர்கள். திரியை விடவே மாட்டேன்.
Last edited by Gopal.s; 10th September 2013 at 05:32 PM.
-
10th September 2013, 05:37 PM
#1844
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
நடிகர் திலகத்தின் சில பாத்திரங்களை மட்டும் - குறிப்பாக கோபால் சாருக்கு பிடித்த பாத்திரங்களை மட்டும் இங்கே எழுதினால் போதும் என்கிற நிலை உருவாகிறது. எத்தனை முறை கூறினாலும் இதைப் போன்ற ஆணவப் பதிவுகள் மீண்டும் மீண்டும் வருவதும் நாமும் நடிகர் திலகத்தின் சிறப்புகளை எழுதுவதற்காக விட்டுக் கொடுத்துப் போவதுமாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலை மிகவும் வேதனை அளிக்கிறது.
ஒரு வேளை ஆவண பதிவுகள் குறைந்து விட்டதால் ஆணவ பதிவுகள் அதிகமாகி விட்டதோ???
-
10th September 2013, 05:46 PM
#1845
Senior Member
Devoted Hubber
நன்றி வினோத் சார்
எனது ஞாபகத்தில் இருந்துதான் நண்பர்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தேன்
அதில் சிறு தவறு ஏற்பட்டு ராஜ்குமார் என குறிப்பிட்டுவிட்டேன்
நீங்கள் குறிப்பிட்டதுபோல் ஜெயகுமார்தான்
கடந்தவருடம் அவருடைய விலாசம் ஞாபகத்தில் உள்ளவரை
25 போவி வீதி பென்கழுர் 56 என்ற விலாசத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தேன் பதில் வரவில்லை
ஏன் என்பது தங்கள் பதிவை பார்த்தபின்தான் புரிந்தது
அவர் காலமாகிவிட்டார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது.
முகம் தெரியாத அந்த இனிய நண்பரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
-
10th September 2013, 06:02 PM
#1846
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
ராகவேந்தர் சார்,
நான் பதில் போட வேண்டாம் என்று எண்ணி தவிர்த்து வந்தேன். எனது பணிவான எண்ணங்கள்---
நம் யாவருக்குமே பிடிக்காததை ஏன் நாமே குறிப்பிட்டு எழுத வேண்டும்.
நானும் பதில் போட வேண்டாம் என்று தான் இருந்தேன். யாவருக்குமே பிடிக்காதது என்று நீங்கள் எப்படி தீர்மானிக்க முடியும். தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் எல்லோருக்கும் பிடிக்க வில்லை என்று அர்த்தமா... How can you decide?
4)நான் இந்த திரிக்கு என்று ஒரு தரம் வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அதனால் ஒரு வேண்டுகோள்தானே நிர்பந்தம் அல்ல.
இந்தத் திரியின் தரமும் அதன் அளவுகோலும் தங்களால் தான் நிர்ணயிக்கப் படுகிறதா. தரமில்லாமல் தான் இத்தனை பாகங்களும் வந்துள்ளதா...
5)எல்லாவற்றையும் ஆஹா ஓஹோ என்று எழுதினால் ,நம் எழுத்துக்களுக்கென்று ஒரு நம்பக தன்மை வேண்டாமா? மற்ற திரிகளை பார்த்து கிண்டலாய் முறுவலிப்போமே,அதை போல பதிவுகள் நம் திரியில் வேண்டுமா?
நம்பகத் தன்மை என்பது தாங்கள் நிர்ணயிக்கும் அளவு கோலை வைத்ததா. எங்கள் எழுத்தெல்லாம் நம்பகத் தன்மை அற்றதா...
6)வாசு சார், எழுதிய அற்புத பதிவுகளை நீர்க்க வைப்பது போல ஒருவர் எழுதினால் போகட்டும். அதை பாராட்டி அந்த மாதிரி பதிவுகள் அதிகரிக்க வழி செய்ய வேண்டுமா?
இதைப் பற்றிக் கவலைப் பட வேண்டியதும் தீர்மானிப்பதும் வாசு சார். தங்களுடைய கூற்றுக்கு அவரை ஏன் துணைக்கு அழைக்கிறீர்கள். ராகுல் ராம் போன்ற புதியவர்கள் எழுதுவதில் தங்களுக்கு மாறுபட்ட கருத்து இருந்தால் அதை சொல்லுங்கள். அதை விட்டு விட்டு எழுதவே கூடாது என்று வற்புறுத்துவது எந்த ஜனநாயகத்தில் சேர்த்தி.
இதற்காகத் தான் ஒரு வழிமுறையைத் தீர்மானிக்க ஒரு வேண்டுகோள் வைத்துள்ளேன். அதில் தீர்வு கண்டு அதனை நடைமுறைப் படுத்தும் போது இவையெல்லாம் முறைப்படுத்தப் பட்டு விடும் அல்லவா.
7)நான் மீண்டும் சொல்கிறேன். மனசாட்சிக்கு தெரிந்தே வந்து போன குப்பைகளை தவிர்பதுதானே சரி.
சினிமா என்பது பொது ஜனம் சம்பந்தப் பட்ட விஷயம். தங்களுக்கு குப்பையாகத் தெரிவது மற்றவர்களுக்கு நல்லதாக இருக்கலாம். குப்பையிலும் மாணிக்கங்களைத் தேர்வு செய்பவர்களை சிறந்த நிபுணர்கள் என்று தான் கூற வேண்டும்.
8)உலகின் எல்லா நடிகர்களுக்கும் தரமற்ற படங்கள் உண்டு. ஆனால் வெளியுலகுக்கு சொல்ல படுவது சிறந்த படங்களே. இது உலகம் முழுதும் உள்ள ஒரு சாதாரண நடைமுறைதானே?
படம் தரமாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, அதில் நடிகர் திலகத்தின் பங்கைத் தானே நாம் விவாதிக்கப் போகிறோம்.
அனைத்து ரசிக நண்பர்களின் கருத்தையும் கேட்டிருக்கிறேன். இதனைப் பொறுத்தே என்னுடைய பங்களிப்பைத் தொடர்வதைப் பற்றி முடிவு செய்யப் போகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th September 2013, 06:05 PM
#1847
Junior Member
Newbie Hubber
Asking for opinions in blackmailing tone?????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!
-
10th September 2013, 06:08 PM
#1848
Senior Member
Seasoned Hubber
என்னுடைய கருத்தை நான் கூறுகிறேன். இது நான் தொடர்ந்து பங்களிப்பதைப் பற்றிய விஷயம். எதிர்ப்பு வந்தால் தொடர வேண்டாம் என்பது என் தீர்மானம். இதில் என்ன blackmailing tone கிடக்கிறது
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th September 2013, 06:10 PM
#1849
Senior Member
Diamond Hubber
-
10th September 2013, 06:15 PM
#1850
Senior Member
Diamond Hubber
வச்சா குடுமி அடிச்சா மொட்டை என்பதற்கு இந்த திரி தான் உதாரணம்.
ஒண்ணுல மாறி மாறி புகழ் மழை பொழிந்து திரிக்கு வருபவர்கள் ஜலதோஷம் பிடிச்சு வெளியே போற மாதிரி போட்டுத் தாக்குறீங்க
இல்லைண்ணா சின்ன புள்ளைங்க மாதிரி சின்ன விஷயங்களை ஜவ்வு போல இழுத்து பெரிய பிரச்சனை மாதிரி பேசுறீங்க .
சிவாஜி ரசிகர்கள் அல்லாதவர்கள் இங்கே வந்து பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்பதை கொஞ்சமாவது கருத்தில் கொள்ளுங்கள்
Bookmarks