-
21st September 2013, 07:35 PM
#2311
Junior Member
Newbie Hubber
திரும்பி புலம்பல்தான். திருடன் படத்தை வண்ணத்தில் எடுத்து பாரதி(கே.ஆர்.வீ), வெண்ணிற ஆடை நிர்மலா(விஜயலலிதா) போட்டு , ஜனவரி 26 ,1970 ரிலீஸ் பண்ணியிருந்தால்....
நினைத்த படி பாட்டு சொர்க்கம் பக்கத்தில் முன்னோடி..
-
21st September 2013 07:35 PM
# ADS
Circuit advertisement
-
21st September 2013, 07:44 PM
#2312
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
I agree Ragavendhar Sir. Just Give me Tinkle when I should take up needhi and Pattikkada pattanama? I will follow your instruction and post it accordingly. Your initiative is appreciated and all postings will get deserving attention this way. Thanks to you.
Just I thought of soliciting views for bringing out some order in our postings so that every thing will go in a methodical way. Until we all discuss and find out a way, we can have some temporary arrangement. Let this order not be on a name basis. But a tinkle as you say, can be useful. I would like the friend who initiates a discussion to give a tinkle to the next topic. This will honor him, I believe as well as he would honor others' participation here.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st September 2013, 08:01 PM
#2313
Senior Member
Seasoned Hubber
கோபால் சார் சொன்னது போல் நம்முடைய ஒவ்வொரு நண்பரின் தலைப்பும் முக்கியமானது, ஒவ்வொன்றும் ஒரே அளவிலான தரத்தில் வரவேற்பைப் பெற வேண்டியது. ஒரு தலைப்பு விவாதிக்கப் படும் போது அது முடிந்த பின்னர் அடுத்த தலைப்பினை நாம் துவக்கினோமானால் ஓரளவிற்கு அத்தலைப்பு முழுமை பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு தலைப்பிற்கும் கால வரையறை என்பதும் பொதுவாகவே நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றிய விவாதத்திற்கும் வரையறை என்பதும் சாத்தியமல்ல, காரணம் நடிகர் திலகம் என்ற கடலில் நாம் மூழ்கி எடுக்கக் கூடிய முத்துக்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கும் என்பது தான், என்றாலும், அடுத்தவர் முத்தெடுக்க வாய்ப்புத் தந்து அவருடைய முத்தின் சிறப்பை அறிவோம் என்கிற அணுகுமுறை இருந்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா.. அதனால் ஒரு தலைப்பினைத் தொடங்கியவரே ஒரு குறிப்பிட்ட பதிவுகள் அல்லது காலத்திற்குப் பின் சற்றே அதற்கு ஓய்வளித்து அவராகவே அடுத்த விவாதத்தைத் தொடங்குவதற்கான ஓர் அறிவிப்பினைத் தந்தாரானால் நம்மிடையே பரஸ்பரம் ஒரு நட்புணர்வும் புரிந்துணர்வும் வலுப்படும். பதிவுகளும் ஒரு தெளிந்த நீரோடை போல பயணிக்கும்.
நண்பர்கள் ஏற்றுக் கொண்டால் இதை நடைமுறைப் படுத்தலாம்.
Last edited by RAGHAVENDRA; 21st September 2013 at 08:17 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st September 2013, 08:08 PM
#2314
Junior Member
Regular Hubber
Nice Reply.Its very difficult to convince people who are predetermined.Thats what they have told in Tamil,thoongugiravarai eluppalaam,nadippavarai eppadi yeluppamudiyum?

Originally Posted by
NTthreesixty Degree
நடிகர் திலகம் இப்படி செய்திருக்கலாமே...அப்படி செய்திருக்கலாமே என்று கவலை படும் நண்பர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நடிகர் திலகம் 1952 இல் நடிக்க வந்த காலம் தொட்டு பல கதாபாத்திரங்களை செவ்வன கையாண்டிருக்கிறார். வாலிபன், வயோதிகன், முதியவர், தொண்டு கிழவன் என்று பல கதாபாத்திரங்களை மற்ற எந்த கதாநாயக நடிகரை காட்டிலும் அதிகம் நடித்திருக்கிறார் சற்றும் தயங்காமல் !
அதனால் தான் அவர் என்றுமே ஒரு எவர் கிரீன் அந்தஸ்துடன் வலம் வந்துகொண்டிருகிறார். இளமையில் முதுமை வேடம் என்பதற்கு முன்னோடியே நடிகர் திலகம் ஒருவர்தான் !
என்னமோ ஒரு தர்மராஜாவை பற்றி இங்கு பேசி திரியை திசை திருப்பும் முயற்சியில் இனியாவது நண்பர்கள் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுகொள்ளபடுகிறார்கள்.
எல்லா திரைப்படத்திலும் matured roles பரிந்துரைபவர்கள் முதலில் அவர் அவர் விருப்பப்பட்ட கதாநாயகர்கள் அவ்வாறு நடித்திருக்கிறார்கள நடித்துகொண்டு இருக்கிறார்களா என்று முதலில் ஆய்வு செய்து பின்னர் நடிகர் திலகத்தை பற்றி விமர்சனம் செய்வது நன்று.
அதுமட்டுமல்லாமல் ஒரு வருடத்திற்கு சராசரி 8 திரைப்படங்கள் நடிகர் திலகம் 1953 முதல் 80 களின் கடைசீவரையில் நடித்துகொண்டிருந்தார். அந்தளவிற்கு தயாரிப்பாளர்கள், மற்ற புதிய பழைய நடிகர்கள் இருந்தாலும், நடிகர் திலகத்தை மட்டுமே விரும்பி படங்கள் தயாரித்துகொண்டிருந்தார்கள்.
சில நடிகர்கள் ஒரு கட்டத்தில் வயதான பிறகும் தொடர்ந்து சிறு பெண்களுடன் மட்டுமே நாயகனாக, அதுவும் இளமை ததும்பும் இளம் நாயகனாக சகிக்கமுடியாத வண்ணம் வலம் வருவது மட்டும் அல்லாமல் அதில் முத்தகாட்சி, படுக்கயரைகாட்சி மற்றும் நம்பமுடியாத அளவுக்கு 100 பேர்களை தனி மனிதனாக துவம்சம் செய்யும் கோரமான நம்பமுடியாத கதாபாத்திரத்தை எல்லாம் ஏற்று நடித்து வருகிறார்கள் என்பதை இந்திய சினிமா முழுதும் நாம் பார்திரிக்கிரோம் பார்க்கிறோம்.
அவர்களை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் அவர்கள் செய்வதை விசில் அடிக்கும் கூட்டம் நடிகர் திலகத்தை மட்டும் விமர்சனம் செய்ய எந்த யோக்யதையும் இல்லை காரணம் ஒரு நடுநிலையாக இவர்கள் அனைத்து நடிகர்களையும் விமர்சனம் செய்வதில்லை, செய்ததும் இல்லை.
பிறகு ஒருவர் பதில் சொல்ல விருப்பம் இல்லை என்றால் "ஒத்துகொண்டதற்கு அர்த்தமா ? " அல்லது மண்ணாங்கட்டியா என்று தேவையில்லாமல் சர்ச்சையை கிளப்புவது முறைகேடான ஒரு செயல் என்பதை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்.
-
21st September 2013, 08:18 PM
#2315
Junior Member
Regular Hubber
Dear friends,when Kamal accepted NT as his Godfather,and Kamal says he is the eldest son of Annai Illam,let us not spoil the mutual respect of them.Please move on.with wishes.

Originally Posted by
Ravi Chandran
Mr Ram,
Though I am an ardent Kamal fan, I am a great admirer of Nadigar Thilagam.
But your words about Kamal's films are too harsh and not factual.
As of now, I am not ready for debate.
Or I am ready to provide you supportive facts.
-
21st September 2013, 08:21 PM
#2316
Junior Member
Regular Hubber
Happy Birthday Sir.

Originally Posted by
RAGHAVENDRA
இன்று பிறந்த நாள் காணும் நம் அன்புச் சகோதரர் பம்மலார் அவர்கள் நீடூழி வாழ்ந்து வாழ்வில் வளமும் நலனும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
-
21st September 2013, 08:27 PM
#2317
Junior Member
Regular Hubber
Recently I saw a phrase in English,shaking a pagoda tree.it means trying to become rich quickly.Pagoda is coins of Gold.To explain this to my friends,i used this song sequence of Sorgam,which was very self explanatory.

Originally Posted by
mr_karthik
நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் ஐட்டம் நடிகையர் ( 3 )
லேடி ஜேம்ஸ்பான்ட் 'சாக்லேட்' விஜயலலிதா
என்னடா சாக்லேட் அது இதுன்னு ஜொள்ளு விடுகிறானே என்று நினைக்க வேண்டாம். பட்டணத்தில் பூதம் படத்தில் பாலாஜியால் 'மை டியர் சாக்லேட்' என்று அழைக்கப்பட்டதால் சிறிது காலம் 'சாக்லேட் விஜயலலிதா' என்று அழைக்கப்பட்டார். ('என்னத்தே' கன்னையா, 'அலேக்' நிர்மலா என்பதைப்போல). நிறைய படங்களில் ஐட்டம் நடிகையாக நடித்திருந்த போதிலும், சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் (குறிப்பாக தெலுங்கு அதிரடிப் படங்களில்). எந்த வித நாகரீக கவர்ச்சி உடையும் ‘சிக்’கென்று பொருந்தக்கூடிய வாளிப்பான உடலமைப்பு, மயக்கும் பெரிய விழிகள், சற்றே அகன்ற வாய், எடுப்பான உதடுகள், 70 எம்.எம்.சிரிப்பு, அளவு மீறாத அங்க அமைப்புகள் என்று ஒரு ஐட்டம் நடிகைக்கான அனைத்து சாமுத்திரிகா லடசணங்களும் அமைந்த கவர்ச்சிப்புயல். (கர்சீப் ப்ளீஸ்). அன்றைய இளைஞர்கள் பலரின் தூக்கத்தைக் கெடுத்த அதிரடி நாயகியான இவர், நடிகர்திலகத்தின் படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்.
“எதிரொலி”
பனாமா கால்வாய் ஆன இப்படத்தில் விஜயலலிதா ஏற்றிருந்தது ஐட்டம் நம்பர் அல்ல.ரொம்பவே நல்ல பிள்ளை. (அது சரி, அதென்ன பனாமா கால்வாய் என்கிறீர்களா?. 'நடிகர்திலகம்' என்ற பசிபிக் பெருங்கடலையும், 'இயக்குனர் சிகரம்' என்ற அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைத்த ஒரே படம்). ஒரு கேஸில் தனக்காக வாதாடி விடுதலை வாங்கித்தந்த வழக்கறிஞர் சங்கரை (நடிகர்திலகத்தை) தன் சாமியாகவே நினைத்து மரியாதை செய்பவர் விஜயலலிதா (கேரக்டர் பெயர் நினைவில்லை). வக்கீலுக்கு மன உளைச்சல் ஏற்படும் சமயங்களில் மலைமீதுள்ள தன் குடிசையில் அவர் வந்து இளைப்பாறுவதை பாக்கியமாக நினைப்பவள். அப்படி அவர் ஒருமுறை வந்திருந்தபோது பாட்டும் ஆட்டமுமாக மகிழ்வித்தவள். ('உங்க நல்ல மனசுக்கொரு குறையுமில்லே' என்ற பல்லவியை ஒவ்வொரு முறையும் 'நள்ள மனசு' என்றே உச்சரிப்பார் ஈஸ்வரி. மாமாவும் புழேந்தியும் கண்டுகொள்ளாதது ஏனோ). வக்கீல் சாமியின் குறைகளைகளைத் தீர்த்து வைப்பதை எதிர்பர்த்திருப்பவள். ஆனால், வக்கீலின் மன உளைச்சலுக்குக் காரணம் தன் காதலனான டாக்சி டிரைவரே (மேஜர்) என்று தெரியும்போது, கடவுளுக்குப் பின்னர்தான் காதலன் என்ற முடிவெடுத்து, காதலனை சுட்டுத்தள்ளி கடவுளுக்கு நிரந்தர நிம்மதியைத் தந்தவள். மிக அருமையான கதாபாத்திரம். உணர்ந்து நடித்திருந்தார் விஜயலலிதா. (அந்த சமயத்தில் இரண்டு அருமையான கதாபாத்திரங்களை விஜயலலிதாவுக்கு கொடுத்து பெயரெடுக்க வைத்தார் கே.பி. ஒன்று எதிரொலி இன்னொன்று 100 / 100) .
கவர்ச்சிப்புயல் “ரீட்டா” (திருடன்)
அப்போதெல்லாம் கொள்ளைக் கூட்டம், கடத்தல் கூட்டம் சம்மந்தப்பட்ட படமாயிருந்தால் அந்தக்கூட்டத்தில் ஒரு பிரதான பெண் கதாபாத்திரம் இருப்பாள். அவள் பெயரும் கூட காமாட்சி, மீனாட்சி என்றெல்லாம் இருக்காது. பெரும்பாலும். ரேகா, ரீட்டா, ஸ்டெல்லா இப்படித்தான் இருக்கும். பாலாஜியின் தயாரிப்பான திருடன் படத்திலும், பாலாஜியின் கூட்டத்தில் ஒருத்தியாக 'ரீட்டா' என்ற பெயருடன் நடித்திருந்தார் விஜயலலிதா. கேரக்டருக்கு ஏற்றார்போல கவர்ச்சியான உடைகள், அவரே பலமுறை நடித்து பழகிப்போன கேரக்டர். ‘ஸ்டைல் கிங்' நடிகர்திலகத்துடன் சேர்ந்து அதகளம் பண்ணியிருப்பார். 'நினைத்தபடி நடந்ததடி வராதவன் வந்து விட்டான்' பாடலில் அவருடைய ஆட்டம் அருமையோ அருமை. கவர்ச்சியான டைட் உடைகளில் ரசிகர்களைக் கொல்லுவார். (அப்போதெல்லாம் கதாநாயகிகள் கவர்ச்சியாக நடிக்க மாட்டார்கள், இழுத்துப் போர்த்துக்கொண்டு நடிப்பார்கள் என்பதால் ஜொள்ளுப் பார்ட்டிகளின் புகலிடம் இதுபோன்ற ஐட்டம் நடிகைகள்தான். இப்போது 'ஈரோயினிகளே' ஐட்டம் பிகர்களை விட கவர்ச்சியாக நடிக்க துவங்கி விட்டதால் ஐட்டம் நடிகைகள் என்ற குருப்பே காணமல் போய்விட்டது).
இளவரசியின் வைர நெக்லசைக் கொள்ளையடிக்க, யுவராஜா மற்றும் யுவராணியாக நடிகர்திலகமும், விஜயலலிதாவும் செல்லும் காட்சியில் இருவருமே செம க்யூட். உடைகளும் அப்படி. படத்தின் ஹைலைட் பாடலான 'கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப்பூனை' பாடலில் செம ஸ்டைல் மற்றும் சுறுசுறுப்பு. நடிகர்திலகத்தின் ஸ்டைலுக்கு நல்ல ஈடு கொடுத்திருப்பார் விஜயலலிதா. (கலரில் எடுத்திருந்தால் இந்தப்பாடல் எங்கோ போயிருக்கும்).
"பொன்மகள்" (சொர்க்கம்)
படத்தின் பெயரைச் சொன்னதும் அனைவருக்கும், மற்றெல்லாவற்றையும் விட சட்டென நினைவுக்க வருவது இந்தப்பாடலும் அதற்கான அசத்தும் காட்சியும் தான். அந்த அளவுக்கு அதுவரை தமிழ்ப்படங்களில் இல்லாத வகையில் தங்கக் காசுகளாக காய்த்துத்தொங்கும் மரம், வைரங்களாய் காய்த்துக்குலுங்கும் மரம், கரன்சி நோட்டுக்களாக காய்த்துக்குலுங்கும் மரம் என கற்பனை செய்து அதனை செட்டுக்களாக அமைத்து அதிர வைத்திருந்தார் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ராமண்ணா.
சரி, இந்தக் காட்சிக்கு அழகுக்கு அழகு சேர்க்க ஒரு அருமையான நடன மங்கை வேண்டாமா?. அதற்குப்பொருத்தமாக தேர்வு செய்திருந்தார் விஜயலலிதாவை. கற்பனையில் வேட்டிசட்டையுடன் உருண்டு விழும் கதாநாயகன் நடிகர்திலகத்தை பொற்கைகளால் ஆசீர்வதிக்க தகதக உடையுடன் எழும் நாயகன் பொன்மகளையும், தங்கமரமும் தங்கக் காசுகளுமாய் இருக்கும் சூழ்நிலையையும் கண்டு அதிசயிக்க, மெல்லிசை மன்னரின் அதிவேகமான இசைவெள்ளத்தில் பாடல் துவங்குகிறது.
பொன்மகளுக்கு பாடல் இல்லை, என்றாலும் அதிவேக நடன அசைவுகள் மற்றும் மூன்று வித உடை மாற்றங்கள். முதலில் தங்கத்தடுகளால் இழைக்கப்பட்ட ஆடை, அடுத்து வைர மணிகள் மின்னும் ஆடை, அடுத்து கரன்சி நோட்டுக்களால் (???) தொடுக்கப்பட்ட ஆடை என அசத்துவார். உடைகளுக்கு மேட்சாக அழகான பொன்னிற ஹேர்ஸ்டைல். ஒருபக்கம் நடிகர்திலகத்தின் ஸ்டைலான அசைவுகளைக்கான கண்கோடி வேண்டுமென்றால், பொன்மகளின் அழகையும், நடனத்தையும், நளினத்தையும் காண தனியே சிலநூறு கண்கள் வேண்டும்.
விஜயலலிதாவின் அன்றைய கவர்ச்சித் தாக்குதல்களை இன்றைக்குப் பார்த்தாலும் உதடுகள் உச்சரிப்பது "சாக்லேட் சாக்லேட்தான்"....
-
21st September 2013, 08:39 PM
#2318
Junior Member
Senior Hubber

Originally Posted by
Pon Ravichandran
Dear friends,when Kamal accepted NT as his Godfather,and Kamal says he is the eldest son of Annai Illam,let us not spoil the mutual respect of them.Please move on.with wishes.
Dear Mr.Nambi / Mr.Ravi / Mr.Ravi chandran
Please Recall My wordings which was given by me and very sorry for that. This is my first and last emotion statement. As told by Mr.POn Ravichandrand Our NT is God father of Not only Kamal and entire indian cinema. So i request you all to present your views in right manner and dont spoil others mood.
Always live for others happiness
C.Ramachandran
-
21st September 2013, 08:40 PM
#2319
Senior Member
Senior Hubber
அன்புள்ள அனைவருக்கும் வணக்கம்..
நடிகர்திலகத்தின் எண்ணற்ற ரசிகர்களில் நானும் ஒருவன்.
இங்கு இடப்படும் பதிவுகளை மெளனமாய் விரும்பிப் படித்துவரும் ரசிகர்களில் நானும் ஒருவன்..சமீபத்திய வாசு சாரின் ஞான ஒளி அலசல், கோபால் சாரின் ராஜா அலசல், மிஸ்டர் கார்த்திக்கின் ஐட்டம் கேர்ள்ஸ் அலசல் எல்லாம் மிக அட்டகாசமாக இருக்கிறது.. நான் பார்க்காத நடிகர் திலகத்தின் துளி விஷம் பற்றிப் படிக்க ஆவலாக உள்ளது..ராகவேந்திரா சாரின் எழுத்துக்களும் அருமை..என்னால் இந்தளவுக்கு நடிகர் திலகத்தின் படங்களைச் சொல்ல இயலாது..
இடையில் முறைப்படி அறிமுகப் படுத்திக் கொள்ளாமல் இரு இடுகை பதிந்திருக்கிறேன்..மன்னிக்க
இன்னும் நிறையப் பதிவுகளைப் படிக்க ஆசையுடன் இருக்கும்
சின்னக் கண்ணன்..
-
21st September 2013, 08:52 PM
#2320
Junior Member
Senior Hubber

Originally Posted by
RAGHAVENDRA
பல்லாயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத பாடல் காட்சி ... சிக்கென்ற உடையில் நடிகர் திலகம் ... அட்டகாசமான நடனத்தை வழங்க விஜயலலிதா .... மெல்லிசை மன்னரின் இசையில் அருமையான பாடல் ...
நாமும் தான் பார்ப்போமே...
Of course the same describition applies to this song also ...
Dear Ragavendran Sir
Thanks for this song. Thalaivar style nadai super o super. TMS VOICE really superb.
I want to tell you one good thing about this song. I am very close to Mr.Vijay's PA Mr.Raviraja and at the time of ALAGIYA TAMIL MAGAN SHOOTING in presents of me
Mr.Vijay has seen this song almost 20 to 30 times for each and every step and then he commented eventhough i had seen the video more than 30 times but i am unable to imitate his(NT'S) style and walk. There is no end for my happiness at that time. Great memorable event.
Again thanks for your video
C.Ramachandran
Bookmarks