Results 1 to 10 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தாமஸ் ஆல்வா எடிசன் நடுநிலைப் பள்ளி..

    காலாண்டு வினாத்தாள்

    வகுப்பு: மூன்றாம் வகுப்பு

    காலம்: என்.டி. த்ரெட்டிற்குப் போதாத காலம்!

    பாராக்ராஃப் கேள்வி மதிப்பெண்:20

    நீங்கள் பார்த்த”………..” படத்தைப் பற்றி இரு பக்கங்களுக்கு மிகாமல் எழுதவும்

    மாணவர் சி.க எழுதிய விடை..:
    **
    முன்னுரை
    *
    கவிதை என்பது என்ன..

    மனதில் முகிழ்க்கும் உணர்வுகள் பிரசவிக்கும் போது ஒரு வரிசைப் படி பிறக்கும் போது கவிதை எனப்படுகிறது..

    இந்தக்காலத்தில் சில பல கவிதை வடிவங்கள் உள்ளன..

    நடிகர் திலகம்
    குறிஞ்சிப் பூக்களின்
    முன்னோடி

    என்றால் அது புதுக்கவிதை..

    நடிகர் திலகம்
    பூவாய்ப் பிறந்து
    பூவாய் மணத்து
    பூப்போல் மரித்து
    பூவாய் மணப்பவர்

    என்றால் இதுவும் புதுக்கவிதை தான்..

    ஹீம்
    சிலருக்கு வாழ்க்கையில் நடிப்பு
    நடிகர் திலத்துக்கு
    வாழ்க்கையே நடிப்பு
    எனச் சொல்லும் வேதாந்தக் கவிதையும் புதுக்கவிதை தான்
    ..
    நவீன கவிதை என்று உண்டு..சற்றே புரியாத பாணியில் எழுதப்பட்டு படிப்பவருக்கேற்பப் புரிந்து கொள்ளும் தன்மை மிக்கது.
    . நடிகர் திலகத்தின் நடிப்பு சுற்றிச் சுழன்றோடும் அருவியின் தன்மையொத்தது..அருவி ஆக்ரோஷ்மாகச் சில இடங்களில் பாய்ந்து வீழும்.
    .அப்படி வீழ்ந்த அது நதியில்கலக்குமிடங்களில் அமைதி கொள்ளும்.. நதியில் கலக்கும் நறுமலர்கள் மணத்தில் மனமயங்கி
    அவற்றின் மேல் காதல் கொண்டு அதனுடன் சேர்ந்தே ஓடிக் கொண்டிருக்கும்..
    சமயத்தில் மலர்கள் கரைபக்கம் ஒதுங்கி வாடி விட, மேலும் அழுகையை வார்த்து சுற்றிச் சுழன்றோடிடும்.. நடிப்புச் சிம்மத்தின் நடிப்பும் அப்படித்தான் கோபம்,ஆக்ரோஷம், அழுகை காதல், குடும்பப் பொறுப்பு, மிருக குணம் என அருவியைப் போலவே பொங்கித் தந்தவர்..

    ஷ்ஷ்..என்ன சொல்ல வந்து என்ன எழுதுகிறேன்..கவிதை..
    ம்ம் அந்தக்காலத்தில் கவிதைக்கென சில மரபுகள் இருந்தன…வெண்பா, விருத்தம் கட்டளைக் கலித்துறை கலிப்பா இன்னும் பலவண்ணம்…
    இதில் புலமை பெற்று விளங்கிய பல புலவர்கள் அரசர்களின் அரசவையில் இருந்திருக்கிறார்கள்.
    .அப்படி இரண்டு புலவர்களுக்கிடையில் சண்டை வருகிறது இந்தத் திரைப்படத்தில்..அது என்ன சண்டை

    கதையும் விமர்சனமும்:

    இந்தத் திரைப்படம் தமிழில் வந்த ஒன்று..ஆனால் கதா நாயகன் வட நாட்டுக் கவி..சமஸ்கிருதத்தில் வன்மை பெற்றவன்..ஆனால் எடுத்தது தமிழ்ப் படம் என்பதால் அவரையும் தமிழ்க் கவி ஆக்கி எடுத்திருக்கிறார்கள்..

    நடுவில் ஒரு காட்சி: கதானாயகக் கவிக்கும் அரசவைக் கவிஞர் கெத்தான தண்டிக் கவிராயர்
    ( நடித்தவர் தாடி மீசை சகஸ்ர நாமம்) என்பவருக்கும் சண்டை..

    தீட்டுதற்கு ஓலைகள் தக்கனவாய் சிக்கிவிட
    பாட்டுக்கள் பலபடைக்கும் பாவலனே – ஏட்டில்
    நற்கவி எனவுவந்து நாங்கள் சொலக்கூடும்
    பொற்கவி நீரில்லை பார்..
    என காளிதாஸரை மகாகவி என ஒப்புக் கொள்ளாமல் சவால் விட,
    பாடல் பக்குவமும் பார்க்கும் கற்பனையும்
    ஆடற் கலையும் அறிகிலேன் – ஊடலைக்
    கொண்டதமிழ் நாக்குழறிக் கூறுவண்ணம் சொல்லாற்றல்
    கொண்ட மகாக்கவிதான் காண்
    எனச் சொல்கிறார்.. (இது படத்தில் கிடையாது..என் சொல்லாடல்)

    பின் இருவரும் சென்று காளியையே கேட்கிறார்கள்..
    அன்னையே எம்மில் அரும்புலவர் யாரெனில்
    இன்னமுத வாயால் இயம்பு என (குமா. பாலசுப்ரமணியனின்) வெண்பா பாடி..

    காளி என்ன சொல்கிறாள்- கேபிஎஸ் குரலில் “தண்டியே கவி தண்டியே கவி” எனச் சொல்ல தண்டி சகஸ்ர நாமத்தின் கண்களில் வெற்றிப்பெருமிதம்..பார்த்தீரா..காளிதாஸ்.. நீரில்லை மகாகவி எனச் சொல்ல காளிதாசராய் நடித்தவரின் கண்களில் கங்கைபெருகுகிறது..மனமோ ஆரம்பப் படத்தை நினைத்துப் பார்க்கிறது..
    சின்னையன் ஆடு மேய்ப்பவன்..அறிவிலி முட்டாள்..எல்லாம் காளி என்று நம்புபவன்.. பெற்றோர் (விகேஆர், சிகேஎஸ்) பக்தி, காளி பக்தி லட்டின் ஆசை மேய்க்கும் ஆடுகள் என இருப்பவன்..

    இன்னொரு நாட்டின் இளவரசி எளிதில் கால்ஷீட் கிடைத்தவரோ என்னவோ..ஆனால் மகா கர்வி..புலவர்களிடம் முக்கியக் கொஸ்டீன்கள் மன்னிக்க கேள்விகள் கேட்டு மார்க் போடாமல் பிரம்பால் அடிப்பது தான் அவரது குணம்..அவரது தந்தையின் குண்மும் கூட (செளகார் ஜானகி). அப்படி அவரிடம் அவமானப்படும் நல்ல புலவர் அம்பரீஷ் (வில்லன் நடிகர் மனோகர்) காளியிடம் புலம்புகிறார்..அந்த ப்ரின்ஸ்ஸ்க்கு நல்ல லெஸன் கற்பிக்க வேண்டுமென..
    பின் என்ன..அவர் கண்ணில் நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளை வெட்டும் சின்னையா நடிகர் கண்ணில் பட, இளவரசியிடம்கூட்டிச் சென்று போட்டியில் பங்கு கொள வைத்து வெற்றி பெறவும் வைக்கிறார்கள்.
    .
    பின் என்ன.. ராத்திரி அறையில் பால் பழம் சாப்பிடுவதற்காக சின்னையா இருக்கையில் இளவரசி வந்துபேசும் சிலவார்த்தைகளிலேயே சின்னையா மூடன் எனத் தெரிந்து காளியிடம் கோவெனக் கதறி அழுது சூலத்தில் கழுத்தைக் கொடுக்கப் பார்க்க- காளி கருணை மிக்கவர்.. இளவரசியின் ஓவர் ஆக்டிங்கான அழுகையையும்பொறுத்துக் கொண்டு சின்னையனை உலகம் போற்றும்கவிஞனாக மகாகவி காளிதாஸாக மாற்ற இப்பொழுது நம் கண்முன்னே கம்பீரக் காளிதாஸ்..க எ ஒ ஆ இ – கலைமகள் எனக்கு ஒரு ஆணை இட்டாள் எனப் பாடுகிறார்.
    .
    உலகம் என்பது இப்படித்தான்.. மூடனாய் இருக்கையில் கண்ணீர் சிந்திய இளவரசி காளிதாஸர் காளியால் எஜீகெட் செய்யப்பட்டு விட்டார் என அறிந்ததும் சிரித்து வர, காளிதாஸ நடிகர் கம்பீரமாய்ச் சிரித்து அவரது அன்பை ரிஜெக்ட் செய்து நடக்க, மறுபடியும் தற்கொலை செய்யப் பார்க்கிறாள் இளவரசியான செளகார்..இந்த் முறை காளி அவளைத் தடுக்கவில்லை ( போரடிச்சுதோ என்னவோ) மாறாக அவளை விலாசவதி எனப் பெயர் மாற்றம் கொண்ட பெண்ணாக வடிவமைத்து போஜ சபைக்குப் போ, காளிதாஸ் வருவார் எனச் சொல்லிவிடுகிறாள்..

    இங்கே காளிதாஸர் கம்பீரமாக மலரும் வான் நிலவும் எனப் பாடிக் கொண்டு, தனது கிராமத்திற்குச் சென்றுதனது அன்னை (சிகேஎஸ்) உடல் நிலை குன்றியிருப்பது கண்டு காளியிடம் கண்,காது வாய்மூக்கு எல்லாம் துடிக்க வெண்பாவாய் ஈற்றடி “நடக்கப் பெறுவாய் நலம்” எனப் பாடி முடிக்க, தாயார் உடல் நலம்பெறுகிறார்..தனது நண்பன், சின்னையாவாக இருந்த போது சில காட்சிகளில் வந்து ஜொள்ளுவிட்ட உப நாயகி ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கிவிட்டு தாயிடமும் தந்தையிடமும் ”ஐயாம் கோயிங்க் டு போஜ மன்னன்” எனச் சொல்லிச் செல்கிறார்..

    வழக்கம் போல் போஜ நாட்டை அடைந்து கோவிலில் பாடகி விலாசவதியையும் ஆடலழகி மோகனாங்கியையும் (எல்.விஜயலஷ்மி..ம்ம் என்னா அழகுப்பா..) பார்த்து, இயக்குனர் சொற்படி விலாசவதி செளகாரைப் பார்த்து
    “தங்கமே தாமரை மொட்டுக்களாகி.. என ஆரம்பித்து குங்குமம்பூத்த நிலாவண்ணம் புறப்பட்டதே என க்
    கட்டளைக் கலித்துறையில் ஈவ் டீசிங்க் போல் செய்து பார்க்க,
    அங்கு வந்த போஜ மன்னன்(எப்போதும் ஒருவித டென்ஷனில் இருக்கும் முத்துராமன்) போயட் எனக்கொரு டவுட்டு என்று கேட்க,அதற்குபதிலிறுக்க பின் அமாவாசை, பெளர்ணமி நிலவு என அபிராமி பட்டர் கதையை இயக்குனர் சாமர்த்தியமாய் நுழைத்திருப்பார்..

    பின் தான் போஜமன்னன் காளிதாஸருக்குச் சொர்ணாபிஷேகம் பண்ணி மகாகவி எனப் பட்டத்தை வழங்க
    அந்தக்காலத்திலும் அப்ஜெக்ஷன் என்பது இருந்தது என்பதற்குஅடையாளமாக தண்டி மறுத்து காளியும் தண்டியே கவி என ஜட்ஜ்மெண்ட் சொல்லி விட என்னாகிறது..
    “தாயே வாட் இஸ் மை பொஷிசன்..மன்னிக்க என் நிலை என்ன “எனக்கேட்க காளி சொல்கிறாள்..
    நீயே நான், நானே நீ.._ பின் என்ன காளிதாஸனின் புகழ் மேலும் கூடுகிறது..

    ஒரு சந்தர்ப்பம்..அரண்மனை, போஜமன்னன் அரசி, மோகனாங்கி காளிதாஸன்..இயற்றிய பாடல் சொல்லச்சொல்ல கூறுகிறான் காளிதாஸன்..உடை நெகிழ்ந்த பூமகளின் அழகு என்ற பாடல்..பொறாமையுறும் அழகியான எல்.விஜயலஷ்மியான மோகனாங்கி மேலும்சதி செய்து அரசிக்கும் காளிதாஸனுக்கும் அவதூறு செய்யப் பார்த்தும் போஜமன்னனின் நம்பிக்கையில் முடியவில்லை..பின் சதிதெய்து ஒரு சந்தர்ப்பத்தில் காளியுடன் மனமுருகப் “விதிமுடிவுத் தேவதையே விரைந்து நீ வா” என வேண்டுகையில் அவன் தலையைத்துண்டிக்கிறாள்..

    ம்ம் எல்.விஜய லஷ்மி, கேபிஎஸ், விகே ராமசாமி,செளகார், முத்துராமன், அவரது மனைவியான அரசி, நாகேஷ் என அனைவரும் நன்றாக நடித்தும் இந்த ப் படம் ஓடவில்லையாம்..கொஞ்சம் திருவிளையாடலின் சாயல் ப்ள்ஸ் கொஞ்சம் அதே நடிகர்கள் என இருந்ததாலாம்.. இரண்டு பக்கங்கள் மேலாகி விட்ட படியால் இத்துடன் முடிக்கிறேன்

    முடிவுரை..

    எல்லாரைப்பற்றியும் பாராட்டிவிட்டு காளிதாசரை நடித்தவரைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை – மகனே வெளியே வா பாத்துக்கிறேன் – எனச் சிலபேர் சொல்லக் கூடும் என்பதால்: இந்தப் படத்தில் நடிக்க நடிகர் திலகத்தை அழைத்தார்க்ளாம். அப்போது அவருக்குச் சற்றே உடல் நலம் குன்றியிருந்ததால், அவருக்குப் பதிலாக மேலுலகம் சென்று காளிதாஸரையே அழைத்து வந்து இந்த டமில் வெர்ஷனில் நடிக்க வைத்து விட்டார்களாம்!.. எனக்குப் பிடித்த படங்களில் இதுவும் மொன்று..

    **
    டியர் சுந்தரவல்லி மிஸ்
    தேர்வில் வருமென்று முக்கிய கொஸ்டினாக இதைக் கொடுத்ததற்கு ரொம்ப தாங்க்ஸ்.. இந்தப் படத்தைப்பற்றி என் தாத்தாவிடம் கூற அவர் விமர்சனம் எழுதிக் கொடுத்தார்..அதை அப்படியே மக் அப் செய்து எழுதிவிட்டேன்(பாட்டுக்கு மட்டும் கொஞ்சூண்டு பிட் அடிச்சுட்டேன்) சாயந்திரம் வரும்போது டியூஷன்ஃபீஸ் கொண்டு வருகிறேன்.. இந்த செளகார் auntyயும் எல்வி auntyயும் பேசிக் கொள்ளும் எதுவும் புரியவில்லை… முடிந்தால் புரிய வையுங்கள்!

    யுவர்ஸ் ஸின்சியர்லி
    சின்னக் கண்ணன்
    **

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •