-
27th September 2013, 02:07 PM
#2581
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
KCSHEKAR
ஜோ சார்,
சிலர் இதுமாதிரி வலைத் தளங்களில் Comments (Positive or Negative) அதிகம் வரவேண்டுமென்பதற்காகவே உளருகிறார்கள். அத்தகைய நபர்கள் நமது Friends List ல் இருந்தால் எடுத்துவிடுவதும், கண்டுகொள்ளாமல் விடுவதே நல்லது என்பது எனது கருத்து.
+1, As mentioned in NOV's signature, it is better not to argue with fools sometimes as they can easily beat you in their game........ at the same time, if some one genuinely feels / have wrong conceptions, it is duty of a fan to clear that without compromising on the dignity of their leaders (in the standard of the discussion)
-
27th September 2013 02:07 PM
# ADS
Circuit advertisement
-
27th September 2013, 02:17 PM
#2582
Senior Member
Seasoned Hubber
Last edited by KCSHEKAR; 27th September 2013 at 04:38 PM.
-
27th September 2013, 02:52 PM
#2583
Senior Member
Diamond Hubber

Originally Posted by
KCSHEKAR
ஜோ சார்,
சிலர் இதுமாதிரி வலைத் தளங்களில் Comments (Positive or Negative) அதிகம் வரவேண்டுமென்பதற்காகவே உளருகிறார்கள். அத்தகைய நபர்கள் நமது Friends List ல் இருந்தால் எடுத்துவிடுவதும், கண்டுகொள்ளாமல் விடுவதே நல்லது என்பது எனது கருத்து.
சந்திரசேகர் சார்,
நான் இதுல இருந்து கொஞ்சம் மாறுபடுகிறேன் . முட்டாள்களிடம் பேசி பயனில்லை தான் .ஆனால் முட்டாள்கள் பொதுவெளியில் நின்று பிதற்றுவதை பலரும் உண்மை என்று ஏற்றுக்கொள்ளும் நிலையும் இருந்து வருகிறது . உங்களுக்குத் தெரியும் . மையம் தவிர வலைப்பதிவுகளில் 2003-லிருந்து ஒரு 5 வருடங்கள் நானும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தேன் .அப்போதெல்லாம் வலைப்பதிவுகளிலும் நம் நடிகர் திலகத்தை கிண்டலும் கேலியும் செய்து பலர் பிதற்றும் போது அதை கேள்வி கேட்க யாருமில்லை என்ற மிதப்பு தான் பலரை அவ்வாறு பேச வைத்தது என எனக்குப் பட்டது .பின்னர் முடிந்த அளவு சிவாஜி பற்றி பதியப்படும் வலைப்பதிவுகளுக்கு சென்று நாலு வார்த்தையாவது பதில் சொல்லும் வழக்கம் எனக்கு இருந்தது . இங்கிருப்பவர்களைப் போல அணு அணுவாக ரசித்து விளக்கி என்னால் நிறுவ முடியாதென்றால்லும் , கேட்கிறதுக்கு ஒருத்தனாவது இருக்கிறான் என்ற எண்ணம் வரட்டும் என நினைத்தேன் .அப்போது சொற்ப பேரே இருந்த தமிழ் வலைப்பதிவு பரப்பில் என்னை எல்லோரும் சிவாஜியை வைத்தே அடையாளப்படுத்தும் அளவுக்கு தனித்தே நான் செயல்பட்டேன் .இன்றும் வலைப்பதிவு வட்டத்தில் என்னை சந்திப்பவர்களும் அறிமுகப்படுத்துபவர்களும் சிவாஜியை குறிப்பிடாமல் இருக்க மாட்டார்கள் . இந்த அருணின் செய்தியில் என் முதல் கருத்துக்கு அடுத்து சிவகுமார் என்பவர் "நீங்க தொலஞ்சீங்க" என அருணிடம் சொன்னது அதனால் தான் .அவர் தொடக கால சக வலைப்பதிவர் என்பதால் அவருக்கு தெரியும்.
இன்றைக்கு இணையத்தின் பல பரப்புகளிலும் சிவாஜி பற்றி இது போல விஷம கருத்துகள் பரப்பப்படுகிறது ..கேட்க ஆளில்லை என நினைத்து இன்னும் சிலர் வந்து கும்மி அடிக்கிறார்கள் .இவர்களுக்கு முடிந்த அளவுக்கு பதிலடி கொடுக்க வேண்டியதும் நம் கடமை என நினைக்கிறேன் . இங்கே நமக்கென்று ஒரு திரி வைத்துக்கொண்டு நாமே நமக்குள் விவாதித்து சிலாகித்து , நாமே ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டு இருப்பதால் கிடைக்கும் பலனை விட இதற்கு வெளியே பல தளங்களில் நம் ஈடுபாடும் , எங்கெல்லாம் சிவாஜி பற்றி விவாதிக்கபப்டுகிறதோ நமக்கு தெரிந்தவரை அங்கெல்லாம் சென்று சிவாஜி பற்றி எது வேணா பேசிட்டு போய்விட முடியாது என்ற எண்ணத்தை பரவலாக்க வேண்டும் என்பது என் விருப்பம் .
என்னைப் பொறுத்தவரை சிவாஜியின் அருமை பெருமையை இன்னும் அதிகமாக ஒருவரிடம் கொண்டு சேர்ப்பதுவும் , சிவாஜி பற்றி மேம்போக்கான கருத்துள்ள ஒருவரை அவர் மகத்துவத்தை உணரச் செய்வதுமே அதிக மகிழ்ச்சி அளிக்கக் கூடியது .அதை நான் என்னளவில் என்னை சுற்றியிருப்போரிடம் தொடர்ந்து செய்வேன் .
-
27th September 2013, 04:25 PM
#2584
Senior Member
Veteran Hubber

Originally Posted by
KCSHEKAR
சிலர் இதுமாதிரி வலைத் தளங்களில் Comments (Positive or Negative) அதிகம் வரவேண்டுமென்பதற்காகவே உளருகிறார்கள்.
எனக்கு ஒரு விஷயம் மட்டும் சில காலமாகவே விளங்கவில்லை. வலைப்பூ எழுதும் பிரகஸ்பதிகளில் பெரும்பாலானோர் நடிகர்த்திலகத்தையே குறிவைத்து தாக்குவதும், தரக்குறைவாக எழுதுவதற்குமான காரணம் என்ன?. அந்த அளவுக்கா மற்றவர்கள் பிரமாதமாக நடித்திருக்க, இவர் மட்டும் அவ்வளவு படு மோசமாக நடித்து விட்டார்??. சரி, அப்படியே (ஒரு வாதத்துக்கு) வைத்துக் கொண்டாலும், அவர் நடிப்பு பிடிக்காதவர்கள் அவர் படத்தை விட்டு விட்டு தங்களுக்கு பிடித்த வேறு படங்களைப் பார்க்க வேண்டியதுதானே. எவன் தடுத்தான்?. அதை விட்டு, 'அவர் அப்படி நடித்திருக்க வேண்டும், இப்படி நடித்திருக்க வேண்டும்' என்றெல்லாம் வரையறை செய்யும் தகுதி எவனுக்கு வந்து விட்டது?.
-
27th September 2013, 04:51 PM
#2585
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
joe
இன்றைக்கு இணையத்தின் பல பரப்புகளிலும் சிவாஜி பற்றி இது போல விஷம கருத்துகள் பரப்பப்படுகிறது ..கேட்க ஆளில்லை என நினைத்து இன்னும் சிலர் வந்து கும்மி அடிக்கிறார்கள் .இவர்களுக்கு முடிந்த அளவுக்கு பதிலடி கொடுக்க வேண்டியதும் நம் கடமை என நினைக்கிறேன் . இங்கே நமக்கென்று ஒரு திரி வைத்துக்கொண்டு நாமே நமக்குள் விவாதித்து சிலாகித்து , நாமே ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டு இருப்பதால் கிடைக்கும் பலனை விட இதற்கு வெளியே பல தளங்களில் நம் ஈடுபாடும் , எங்கெல்லாம் சிவாஜி பற்றி விவாதிக்கபப்டுகிறதோ நமக்கு தெரிந்தவரை அங்கெல்லாம் சென்று சிவாஜி பற்றி எது வேணா பேசிட்டு போய்விட முடியாது என்ற எண்ணத்தை பரவலாக்க வேண்டும் என்பது என் விருப்பம் .
.
ஜோ சார்,
தங்களுடைய பணிக்கு பாராட்டுக்கள்
தங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். நம் நேரத்தை வீணடித்து, திசை திருப்புகிறார்களே என்ற வேதனையில் இதனை நான் தெரிவித்திருந்தேன். தங்களைப் போன்றே (வாய்ப்பிருக்கும்) ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் பதிலடி கொடுத்தால், நடிகர்திலகத்தை வம்பிழுக்கும் கூட்டம் காணாமல் போய்விடும் என்பது உண்மை.
தங்களுடைய கருத்தும், ஆதங்கமும்தான் எனக்கும் உள்ளது. தாங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மைதான். வலைப்பதிவில் என்று மட்டுமில்லை அதற்கு வெளியிலும் நடிகர்திலகத்தை தாக்குவதற்கென்றே ஒரு கும்பல் உள்ளது. நடிகர்திலகத்தின் சிலை திறக்கப்பட்டபோது, ஒரு தலித் அமைப்பின் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தபோது, அதற்கு எதிராக தலித்துகளுக்காக நடிகர்திலகம் என்னென்ன செய்தார் என்று பட்டியலிட்டு ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டேன். எந்தப் பத்திரிகையாயினும் சிவாஜியைப் பற்றி தவறாக எழுதினால் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறேன்.
இன்னும் சொல்லப்போனால் தனிப்பட்ட முறையில் தெரிவிப்பதைவிட ஒரு அமைப்பாக செயல்பட்டால், நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியைச் செய்வதோடு, நடிகர்திலகத்தின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் யாராயினும் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காகவுமே நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை அமைப்பே தொடங்கப்பட்டது.
திருவிளையாடல் பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டபோது எதிர்ப்பு தெரிவித்து அதனை மாற்றவைத்ததும், தற்போது சரஸ்வதி சபதம் பெயரை மாற்ற வைத்ததும் கூட இந்த வகையில்தான்.
ஒரு சாம்பிள்

என்னுடைய நிலையை விளக்க ஒரு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.
Last edited by KCSHEKAR; 27th September 2013 at 05:01 PM.
-
27th September 2013, 05:05 PM
#2586
Junior Member
Newbie Hubber
http://tamil.oneindia.in/movies/goss...on-184272.html
எம்.எஸ்.வீ சார்,
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.இதில் சந்தோஷ படும் உங்கள் நண்பன் நான். எங்கள் கர்ணனுக்கும்,பாசமலருக்கும் வெளியீட்டு விழாவிற்கு வராமல் நினைத்தாலே இனிக்கும் என்று போனவர்தானே? பார்க்கவே சதுக்க பூதம் போல தோற்றமளிக்கும் ஆளிடம் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் போது உங்களுக்கு வெட்டியாக 125 படங்கள் கொடுத்து ஆதரித்த நடிகர்திலகத்தை நன்றியோடு நினைவு கூர்ந்தீர்களா? எங்கள் 150 வது படத்துக்கே dubbing படம் போல இசையமைத்த மேதையே? இந்த அவமானம் உங்களுக்கு போதாது.
-
27th September 2013, 05:22 PM
#2587
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
http://tamil.oneindia.in/movies/goss...on-184272.html
எம்.எஸ்.வீ சார்,
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.இதில் சந்தோஷ படும் உங்கள் நண்பன் நான். எங்கள் கர்ணனுக்கும்,பாசமலருக்கும் வெளியீட்டு விழாவிற்கு வராமல் நினைத்தாலே இனிக்கும் என்று போனவர்தானே? பார்க்கவே சதுக்க பூதம் போல தோற்றமளிக்கும் ஆளிடம் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் போது உங்களுக்கு வெட்டியாக 125 படங்கள் கொடுத்து ஆதரித்த நடிகர்திலகத்தை நன்றியோடு நினைவு கூர்ந்தீர்களா? எங்கள் 150 வது படத்துக்கே dubbing படம் போல இசையமைத்த மேதையே? இந்த அவமானம் உங்களுக்கு போதாது.
நடிகர் திலகத்தின் 150வது படம் சவாலே சமாளி தானே?
பாடல்கள் ஓகே தானே?
-
27th September 2013, 05:57 PM
#2588
Senior Member
Diamond Hubber
ஜோ சார்,
பதிலடி கொடுக்கச் சொல்லுங்கள். அதை மதிக்கிறோம். தாங்கள் சிவாஜி அவர்களுக்கு வலைதளங்களில் நேரும் அவமானங்களை நக்கீரராய் தனி ஒருவராய் தட்டிக் கேட்கும் தைரியத்தைக் கண்டு மெய் சிலிர்த்துப் போகிறோம்.
ஆனால் சில கேள்விகள்.
கண்ட கண்ட நாற்றங்களுக்கு எல்லாம் பதில் சொல்லணுமா? வேண்டுமென்றே இழித்துரைபோருக்கு பதில் சொல்லி ஒரு பிரயோஜனமுமில்லை.
இரண்டாவது அதை நீங்கள் திரியில் போட்டு பகிரங்கப்படுத்தியிருக்க வேண்டாம். இது பலரின் கருத்து. இப்போது பலர் அறிய விவிதபாரதி விளம்பரம் போல் கொடுத்து உலகறியச் செய்து விட்டீர்கள். அப்படியே விட்டிருந்தாலாவது ஒரு நான்கைந்து பேரோடவாவது போய் இருக்கும். (அப்படி என்ன சிவாஜி மேல் உங்களூக்கு கோபம் என்று தெரியவில்லை)
இன்னொன்று. நடிகர் திலகம் திரியில் நடிகர் திலகத்தைப் பற்றி சிலாகித்து எழுதாமல் ஜெயமாலினியைப் பற்றியா எழுதுவார்கள்? அவரவர்கள் திரியில்தான் அவரவர்களுக்குப் பிடித்தவர்களை பற்றிதான் எழுதுவார்கள். சிலாகித்துக் கொள்வார்கள். நக்கீரரான உங்களுக்கு இது கூட தெரியாமல் போனது எப்படி? அது கூட நீங்கள் தானே திரியை தொடங்கி வைத்தது?
பிறந்தநாள் வாழ்த்தைக் கூட ஏற்றுக் கொள்ளக் கூடாத உங்கள் பணிவுக்கு என் பெருந்தன்மையான வணக்கம்.
உங்களுக்கு அணுஅணுவாக ரசித்து நிறுவ முடியா விட்டாலும் உங்கள் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்
உங்கள் தனி பாணியிலேயே உங்களின் தாக்குதல்களைத் தொடருங்கள்.
பலருக்கு நீங்கள் இதை வெளிச்சம் போட்டுக் காட்டியதே பிடிக்கவில்லை. அதைதான் சந்திரசேகரன் சாரும் தெரிவித்திருந்தார். அதே போல பல இடங்களில், பல நேரங்களில், பல திரிகளில் சிவாஜி அவமானப்படுத்தப்பட்டபோது உங்களைக் காணோமே! ஏன் இந்த பாரபட்சம்? ஓ....நக்கீரர் அப்போது தவம் செய்யப் போய் விட்டாரோ! இப்போது மட்டும் ஏன் இந்த வேகம்? கோபம்?
ஓஹோ...இப்போது புரிகிறது. அது திரியல்லவே! வலைத்ததளம் தானே!
Last edited by vasudevan31355; 27th September 2013 at 05:59 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
27th September 2013, 06:06 PM
#2589
Senior Member
Diamond Hubber
I endorse Joe's views here. Nowadays many half backed people bring so many people's attention in the name of criticism. Such posts need fitting answer. Its an indirect way to educate other 1000's of ignorant people over the internet who just reading those discussions with their opinions. I see Jeeva from Kovai also contributing in that topic.
Last edited by venkkiram; 27th September 2013 at 07:12 PM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
27th September 2013, 06:43 PM
#2590
Senior Member
Diamond Hubber
வாசுதேவன்,
புரிய வைத்தமைக்கு நன்றி .
Bookmarks