-
3rd October 2013, 11:35 PM
#11
வசந்த மாளிகை டிஜிட்டல் பிரிண்ட் வெளியீடு
வசந்த மாளிகை - ஏரியாக்கள் ஒரே ஆளின் கையில் இல்லாமல் பல்வேறு நபர்களின் கைகளில் பிரிந்து கிடந்த ஓர் சூழல். சென்னை நகரமும் NSC எனப்படும் வட, தென்னாற்காடு, செங்கை மாவட்டங்களின் விநியோக உரிமையை வைத்திருந்த வினியோகஸ்த நண்பர்கள் இந்தப் படத்தையும் டிஜிட்டல் சினிமாஸ்கோப் முறையில் வெளிக் கொண்டு வர விரும்பினார்கள். மற்ற ஏரியாக்களின் உரிமையை வைத்திருந்த விநியோகஸ்தர்களிடம் இவர்கள் பேச, அனைவருக்கும் விருப்பமே. ஆனால் நீ அவல் கொண்டு வா நாங்கள் உமி கொண்டு வருகிறோம் கதையாக சென்னை விநியோகஸ்தரிடம் நீங்கள் முயற்சிகளை தொடங்குங்கள் நாங்கள் பிறகு தருகிறோம் என்றும், படம் வெளியாகி ஓடும் போது வரும் வசூலில் ஒரு ஷேர் விகிதத்தை எங்கள் முதலீட்டிற்கு ஈடாக தருகிறோம் என்றும் கூறி விட்டனர். எடுத்த காலை பின் வைக்க விரும்பாமல் சென்னை விநியோகஸ்தர்கள் டிஜிட்டல் வேலையை ஆரம்பித்தனர்.
இங்கே ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும். சென்னை விநியோகஸ்தர்கள் பல காலமாக சினிமா விநியோக துறையில் இருப்பவர்கள். ஆனாலும் இன்னமும் small time distributors தான். ஆகவே அவர்களால் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே பணம் முதலீடு செய்ய முடியும் என்பதுதான் எதார்த்தம். அந்த லிமிட் படத்தை ஒரு high quality digital restoration range-ற்கு கொண்டு செல்வதற்கு போதுமானதல்ல. கிடைத்த பணத்தை வைத்து அவர்கள் படத்தை ஸ்கோப் மற்றும் டிஜிட்டல் முறைக்கு மாற்றினார்கள். ஆக compromise அங்கேயே ஆரம்பித்து விட்டது. இதில் நடந்த மற்றொரு technical பின்னடைவு பற்றியும் பார்ப்போம்.
Format change எனும் போது நாம் ஏற்கனவே சொன்னது போல் நெகடிவிலிருந்து பிரிண்ட் எடுத்து செய்ய வேண்டும். அதற்கு நெகடிவ் உரிமையாளர் lab ற்கு லெட்டர் கொடுக்க வேண்டும். அந்த லெட்டர் மூலமாக லேப்-ஐ அணுகி பிரிண்ட் எடுக்க வேண்டும்.இங்கே அது நடக்கவில்லை. அதற்கு இரண்டு வகையான காரணங்கள் சொல்லப்படுகின்றன. நெகடிவ் உரிமையாளரான ராமா நாயுடு லெட்டர் கொடுத்தார். ஆனால் நெகடிவ் நல்ல condition-ல் இல்லை எனவே எடுக்க முடியவில்லை எனபது விநியோகஸ்தர் தரப்பு. மற்றொரு சாரார் சொல்வது என்னவென்றால் ராமா நாயுடு மிகப் பெரிய தயாரிப்பாளர், small time distributors -ஆன இவர்களால் ராமா நாயுடுவை அணுக முடியவில்லை. அதன் காரணமாகவே புதிய பிரிண்ட் எடுக்க முடியவில்லை என்கிறார்கள். இதில் எது உண்மையோ, பிரிண்ட் எடுக்கவில்லை எனபது உண்மை. இதுவும் ஒரு பாதிப்பே.
ஆக ஏற்கனவே இருந்த பிரிண்டில் இருந்து மற்றொரு பிரிண்ட் எடுத்து அதை ஸ்கோப் format-ற்கு மாற்றினார்கள். சரியான முறையில் அது செய்யப்படாததால் பிரிண்ட் quality-ஐ அது மிகவும் பாதித்தது. படத்தி வெளியீட்டு தேதி முடிவு செய்யப்பட்டு விளம்பரம் வந்தது. நிகில் முருகன் அவர்கள் PRO பணியை சிறப்பாக செய்தார்.தமிழகமெங்கும் 72 அரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது வசந்த மாளிகை.
ஆவலுடன் திரையரங்குக்கு சென்ற ரசிகர்கள் படத்தின் பிரிண்ட் பார்த்து மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்கள். பல ஊர்களிலும் இது வெளிப்படையான குமுறலாக வெடித்தது. மிக பெரிய வெற்றியை தன்னிகரில்லாத வெற்றியை பெற வேண்டிய படம் விநியோகஸ்தர்களின் இந்த செயலால் ஒரு பின்னடைவை சந்தித்தது.
ஆனாலும் என்ன? வெளியான 1972 செப்டம்பர் 29 முதல் இன்று வரை கணக்கிலடங்கா அரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், இடைநிலைகாரர்கள் என்று ஒரு பெரும் கூட்டத்திற்கே கை கொடுத்த சின்ன ஜமீன் ஆனந்த் இவர்களை மட்டும் கை விட்டு விடுவாரா என்ன? படம் திரையரங்குகளில் பணத்தை கொண்டு கொட்டியது. கோவை சேலம் போன்ற ஏரியாக்களில் விநியோகஸ்தருக்கு ஜாக்பாட்டே அடித்தது. பல்வேறு ஊர்களில் படத்திற்கு வந்த வசூல் தொகையை இங்கே குறிப்பிடுவது தொழில் புரிவோருக்கு நியாயம் செய்வதாக அமையாது எனபதால் அதை இங்கே தவிர்க்கிறேன். ஒரே ஒரு உதாரணம் மட்டும். மதுரையில் நான்கு அரங்குகளில் முதல் வாரம் ஓடி இரண்டாவது வாரம் சரஸ்வதி திரையரங்கில் தொடர்ந்த வசந்த மாளிகை 10 வது நாள் ஞாயிற்றுக்கிழமை மற்றுமே பெற்ற வசூல் பல படங்கள் அதே அரங்கில் ஒரு வாரம் ஓடி பெற்ற வசூலை விட அதிகம். பதிமூன்றே நாட்களில் சரஸ்வதி அரங்கில் மட்டும் பெற்ற நிகர வசூல் [Nett Collection] ருபாய் 6 லட்சத்து எம்பதினாயிரம் ரூபாய் [Rs 6,80,000/-]. எந்த படமும் எட்டி கூட பிடிக்காத வசூல். மதுரையில் மற்றும் மூன்று அரங்குகள் [மினிபிரியா,வெற்றி மற்றும் மணி இம்பாலா] மற்றும் மதுரை முகவை மாவட்டங்களில் வந்த வசூலை நாம் கணக்கிலே சேர்க்கவில்லை.அது மட்டுமா நான்கு மாதங்களுக்கு பிறகு மதுரை அலங்காரில் மீண்டும் திரையிடப்பட்டு ஒரு வாரம் அமோக வசூலை அறுவடை செய்ததை நமது திரியிலே பதிந்திருக்கிறோம். இந்த ஒரு சாம்பிள் போதும் படம் எந்தளவிற்கு வசூலித்து எனபதற்கு.அது மட்டுமல்ல பல ஊர்களிலும் படம் வெற்றிகரமாக ஓடுவதையும் இங்கே பதிவு செய்திருக்கிறோம்.
சென்னையை எடுத்துக் கொண்டால் முதலில் வெளியாகி ஓடிய வசூலை எல்லாம் கூட விட்டு விடுவோம். ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் கிருஷ்ணவேணி அரங்கில் ஆறே நாட்களில் படம் Record collection நடத்தியது. அண்மையில் கடந்த மூன்று வருடங்களில் இது போல் எந்த படமும் வசூல் செய்யவில்லை என்று தியேட்டர் அதிபரே வியந்து போய் சொன்னார்.
சுருக்கமாக சொன்னால் முதல் 2 வாரங்களுக்குள்ளாகவே படத்திற்கு செலவான தொகை திரும்ப வந்ததும் அது மட்டுமல்லாமல் அனைத்து ஏரியா விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தை ஈட்டி தந்து விட்டது. இது வரை சுமார் 125 அரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டிருக்கும் வசந்த மாளிகை கர்ணன் போல 300-350 அரங்குகளில் வெளியிடப்பட்டு ஓட்டத்தை நிறைவு செய்யும் போது மிக பெரிய லாபம் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் கிடைத்திருக்கும்.
சுருக்கமாக சொன்னால் கர்ணன் மற்றும் வசந்த மாளிகை இரண்டு படங்களுமே வசூல் சாதனை புரிந்து முதலீடு செய்தவர்களுக்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்து விட்டது. திருவிளையாடல் படத்தைப் பொறுத்தவரை 10 அரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டது. சுமுகமான சூழல் உருவானால் திருவிளையாடலும் அபார வெற்றி அடையும் என்பதில் ஐயம் இல்லை.
(தொடரும்)
அன்புடன்
-
3rd October 2013 11:35 PM
# ADS
Circuit advertisement
Bookmarks