Page 289 of 399 FirstFirst ... 189239279287288289290291299339389 ... LastLast
Results 2,881 to 2,890 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #2881
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கண்பத் சார்.. நான் நகைச்சுவையை எண்ணித்தான் சிரித்தேன்..பிழை பார்க்கவே இல்லை..இப்போது அந்தப் பிழையும் பொருத்தமாய்த் தெரிகிறது அனில் அம்பானியா..பெருமாள் தான் நீங்கள்..(பெருமாள் - பெரிய ஆள்)

    Quote Originally Posted by Ganpat View Post
    நன்றி கண்ணன் சார்..ணி க்கும் னி க்கும் ஒரே சுழி தான் வித்தியாசம்,,அதுவே தலை சுழி.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2882
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்,

    ஏற்கெனவே 1985-லேயே மோகன், ராதிகா, ஊர்வசி நடித்த 'தெய்வப்பிறவி' என்ற படம் வந்தது (இந்திப்படம் 'தோபா' ரீமேக்). அதுபோக சில ஆண்டுகளுக்கு முன் சரத்குமார் நடித்த (வீரபாண்டிய இல்லாத) வெறும் 'கட்டபொம்மன்' மற்றும் 'நாடோடி மன்னன்' படங்கள் வந்தன. இப்போதோ பழைய படங்களின் பெயர் வைப்பது ஒரு பேஷனாகவே ஆகிவிட்டது.

    கதைகளில் ரீமேக், தலைப்புகளில் ரீநேம், பாடல்களில் ரீமிக்ஸ் என்பதெல்லாம் சமீபத்திய படைப்பாளிகளின் (????) கற்பனை வறட்சியைக் காட்டுவதே தவிர வேறில்லை. எவனோ சிரமப்பட்டு சமைத்து வைத்ததை நோகாமல் எடுத்துப் பரிமாறுவது. உத்தமபுத்திரன் கதையையே திருப்பி எடுத்தாலும் அதற்கு 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' என்று தலைப்பிடவில்லையா?. அதுபோல புதிய தலைப்புகளை வைக்க வேண்டியதுதானே.

    வேறு மொழிகளில் வந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம். தமிழில் வந்ததையே மீண்டும் தமிழில் ஏன்?...

  4. #2883
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    தமிழ்த் திரைக் களஞ்சியம்




    Pl.All the interested hubbers &readers are requested to book your copy in advance by contacting Mr.pammalar.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #2884
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் நடை (என்னைக் கவர்ந்தவை)
    *
    1. முதல் நடை என்னை அழைத்ததே..
    *
    நடை என்றால் என்ன நினைவுக்கு வருகிறது.? ,முதன் முதல் குழந்தை சற்றே எழப் பார்க்கிறது. படக் படக் என நீந்திச் சுவரருகே செல்கின்றது. பின் சுவற்றைப் பிடித்துப் பற்றியவண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் நடக்கிறது ( நான் இந்தக் கட்டுரை எழுதுவதன் மூலம் செய்வதைப் போல). பின் விழுகிறது பின் பிடிப்பில்லாமல் தளர் நடை..முதலில் ஒரு கால்..பின் தொடரும் சிறுகால் அட நாம் கொஞ்சம் தூரம் நடந்து விட்டோமே என ப் பெருமை..யாராவது பார்த்து யே எனக் கைதட்டினால் பூரிப்பு பிறகு கிடுகிடுவென வந்து கால்களைக் கட்டிக் கொள்ளும்.. அது ஒரு நடை..
    *
    வளர்ந்து மங்கைப்பருவத்தை அடைந்த பெண் கண்களில் கனவு மின்ன தெருவில் அழகிய சுடிதாரணிந்து நடக்கையில் கொள்ளும் மென்மை நடை.. ராணுவத்தில் சேரும் வீரன் ஏகப் பட்ட பயிற்சிகளால் கொள்ளும் கம்பீர நடை..ஓ. நிறைய நடைகள் இருக்கின்றன..
    *
    இப்போது நடிகர் திலகம் ஒரு படத்தில் நடந்த நடை பார்க்கலாமா..
    **
    அவள் அழகி.. வண்ணக் கனவுகள் மின்னிடும் பருவம்..காலத்தின் கோலத்தில் அவள் எழில் கருப்பு வெள்ளையாய்த் தான் தெரிகிறது. நமக்கு .ம்ம் சொல்ல மறந்து விட்டேனே..அவள் இளம்பருவத்தில் இருப்பவள்..கண்களால் கொல் கொல்லெனச் சிரிப்பவள்.. இப்போது அந்தக் கண்களில் மயக்கம்..ஏனாம்..
    *
    ஏனெனில் அவளுக்குக் காதல் வந்து விட்டது..
    சோதனையாய் உள்நுழைந்து சுட்டுவிடும் வேதனைகள்
    காதலில் வந்திடும் காண்
    என்று சில பெரியவர்கள் (?!) சொல்லியிருப்பது போல்.. துன்பங்கலந்த இன்பம்.. அவன் மனம் அவளிடம் இருக்கிறதா..இல்லையா தெரியவில்லை..வரச் சொல்லுகிறாள்..
    *
    அவன் என்றால் யார்..அவன் அவள் மனம் கவர்ந்தவன்..ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவன்..வாழ்க்கையெனும் போர்க்கள்ம் என்பார்கள்..அவன் வாழ்க்கையில் போர்க்களம் பல கண்டவன்..பல அடிகள் கொண்டவன்.. போர்க்களத்திலும் காலில் அடிபட்டு சற்றே ஊனமாகி விந்தி விந்தி நடப்பவன்..எல்லாவற்றிற்கும் மேலாய் அவளுடைய சகோத்ரியின் கணவர் அலுவலகத்தில் வேலை பார்ப்பவன்..கொஞ்சம் பூரித்த உடல்வாகு..சிரித்த முகம்..யெளவனப் பருவம்..திடகாத்திர உடல். மென்மைப் பேச்சு, கூரிய அறிவு...போதாதா பாவையின் உள்ளம் கொள்ளை போவதற்கு..
    *
    தனியாக அழைத்து விட்டாளெயொழிய அவனிடம் எப்படிச் சொல்வது..துடிக்குமிதழின் ஆசையை…ஓசையின்றி ஆர்ப்பரிக்கும் உள்மன ஓசையை… கேட்கிறாள் கேள்விகளாய்…
    கொடியசைந்ததும் காற்று வந்ததா
    காற்றுவந்ததும்கொடியசைந்ததா..
    அவனும் பதில் பாடி வேகமாகவும் அவளது துள்ளல் நடைக்குப் போட்டியாக தனது விந்தும் நடையையும் வைத்து விரைவாக நடக்கிறான்..
    *
    ஓடி வந்ததும் தேடி வந்ததும் பாடி வந்ததும் பார்க்க வந்ததும் எனக் குறும்புக் கண்களும், கொஞ்சும் கண்ணுடனும் சற்றே கொழுக்மொழுக் கன்னமுமாக அந்த நாயகி கேட்க நாயகனும் குறும்புச் சிரிப்புடன்
    “காதலென்பதா பாசமென்பதா கருணையென்பதா உரிமை என்பதா எனக் கேட்கிறான்..
    *
    ம்ம் அந்த வித்தியாச வேக நடை காதல் வயப்பட்ட மனது.. காட்டும் தன்மையில் இன்னும் நடிகர் திலகம் கண் முன் நிற்கிறார்
    *
    வாசக தோஷ ஷந்தவ்யஹ
    *
    (தொடரும்)
    (ஸாரி கோபால் சார்..நடை என்றதும் இது தான் முதலில் என் நினைவுக்கு வந்தது..உங்கள் காதல் கட்டுரையில் குழப்புகிறேன் என ஊடல் கொள்ள வேண்டாம்!)

  6. #2885
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like

    Congrats Mr.Murali

    Murali Sir - there is no word in dictionary of any language to find a word worth to your write ups - "excellent " , superb are all outdated one - marvelous is some what close but still it was used by many Hubbers already - so I'm using a little inferior word - "thank you so much " - what a flow !!! How much realistic with facts and figures !!! how much hard work that has gone into your write ups - This thread is reaching an iconic status and all because of you , Vasu , gopal , Ragavendran sir , , KC sir , karthik ,Ganpat , NT 360 , chinna kannan , LS ( a new joinee in our hub) .

    Taking names a highly risky one - there are enough chances to leave out other greats in this hub - though unintentional my apology for having left out any one's name ) - it might take generation to reach your level of writing but as small squirrels in Ramayana - we scrabble some thing here and there to keep the thread going . It pains , irrespective of what personality NT is , his talents are not praised in an unbiased manner - people still lacks that level of maturity to recognize talents and pride of a person who added so much laurels to tamil , Telungu , malayalam , kannada cine fields in his life time. Cheetah is a Cheetah , all cats who paint themselves with stripes cannot become cheetahs - you have once again proved his movies are immortal and money spinners if preparatory work is done with adequate care .

    Ravi

  7. #2886
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    நடிகர் திலகத்தின் நடை (என்னைக் கவர்ந்தவை)

    (ஸாரி கோபால் சார்..நடை என்றதும் இது தான் முதலில் என் நினைவுக்கு வந்தது..உங்கள் காதல் கட்டுரையில் குழப்புகிறேன் என ஊடல் கொள்ள வேண்டாம்!)
    ஊஹூம், நீயெல்லாம் சுத்த சைவம். என் காதல் track வேறே.கவலையே படாதே...(என் சிவகாமியின் செல்வன் எத்தனை அழகு பதிவு படித்ததில்லை போல....)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #2887
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #2888
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    நடிகர் திலகத்தின் நடை (என்னைக் கவர்ந்தவை)
    *
    1. முதல் நடை என்னை அழைத்ததே..
    *
    டியர் சின்னக்கண்ணன் சார்,

    தங்களின் "நடிகர்திலகத்தின் நடை" (நடையழகு என்றழைத்தால் நன்றாக இருக்கும்) தொடர் ஆரம்பமே அழகாக இருக்கிறது. தங்களின் நடையும் பிரமாதமாக இருக்கிறது. நான் எழுத்து நடையைச் சொன்னேன்.

    எங்களுக்கு கோபால் சாரின் அசைவமும் வேண்டும், சின்னக்கண்ணன் சாரின் சைவமும் வேண்டும்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  10. #2889
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கோபால் சார், ராகவேந்திரா சார், சேகர் சார் நன்றி..

    //ஊஹூம், நீயெல்லாம் சுத்த சைவம். என் காதல் track வேறே.கவலையே படாதே...(என் சிவகாமியின் செல்வன் எத்தனை அழகு பதிவு படித்ததில்லை போல....) //
    ம்ம் அது சரி காதல் பாட்டுன்னு குத்தகை எடுத்துக்கிட்டு இப்படி சொன்னா என்னவாம்.. (அது சரி..பொண்ணுக்கென்ன அழகு தானே..சொல்லுங்க சொல்லுங்க!!)

  11. #2890
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ம்ம் அது சரி காதல் பாட்டுன்னு குத்தகை எடுத்துக்கிட்டு இப்படி சொன்னா என்னவாம்.. (அது சரி..பொண்ணுக்கென்ன அழகு தானே..சொல்லுங்க சொல்லுங்க!!)
    என்ன குத்தகையா? விளையாடுறீங்களா தம்பி? எல்லோரும் யோக்யமாய் காட்டி கொள்ள,இந்த வேலையில் நம்மளை மாட்டி விட்டுட்டாங்க. நானும் கடமையை குறையற நிறைவேற்றி பணியை செவ்வனே செய்து கொண்டுள்ளேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •