Page 290 of 399 FirstFirst ... 190240280288289290291292300340390 ... LastLast
Results 2,891 to 2,900 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #2891
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் சின்னக்கண்ணன் சார்,
    நடையழகுப் பாடல் தங்கள் நடையழகில் அருமை. அதன் விளைவு?. இதோ நாமும் எழுதுவோமே என்ற எண்ணம்.

    காதல் வயப்பட்டு விட்டான் கட்டிளம் மங்கையிடம். அவளோ கண்களாலேயே காதல் மொழிபேசும் கலையில் தேர்ந்தவள். அவள் எப்படியிருப்பாள் என்று தன நண்பனிடம் (ஆம், நண்பனிடம்தான், ஏனெனில் அதுவரை தெரியாது அவன் தன் தம்பியென்று) விளக்கும் முகமாக பாடும் பாடலில்தான் அவனுக்கே சொந்தமான அந்த அழகு நடை..

    கடற்கரையில் கட்டுமரத்தின் மீது அமர்ந்திருக்கும் நண்பனிடம் தன் காதலியின் அழகை வர்ணிக்கும்போதுதான் அவன் முகத்தில் என்ன மலர்ச்சி, மாறாத புன்னகை. அந்த உற்சாகத் துள்ளலோடு அவன் நடக்கும் நடையில்தான் எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது, எப்படி மனதை தட்டிப்பறிக்குது. கடற்கரையில் நடக்கும் அந்த ஸ்டைல் நடை அவனுக்கே உரிய தனிச்சொத்து. பலர் காப்பியடிக்க முயன்று தோற்றனர் செத்து.


    காதலி 'அஹஹஹா' என்று ஹம்மிங் மட்டும் பிடிக்க, அவளை மனதில் நினைத்துக்கொண்டே அந்த ஸ்டைல் நடையுடன் பாடும் அழகில்தான் எத்தனை கம்பீரம்.......

    'எண்ணிரண்டு பதினாறு வயது
    அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது'

    (நடையழகை எழுதுவது என்று ஆகிவிட்டது, அது 'அண்ணியின்' பாடலாக இருக்கட்டுமே)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2892
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கார்த்திக்கின் பதிவைப் பார்த்து, படித்து பின் உடனே மனதில் ஏனோ இந்தப் பாட்டு நினைவுக்கு வந்து விட்டது...



    பாட்டு ஆரம்பமே நடையோடு... அதுவும் ....சரணத்தில் அந்த மணற் பரப்பில் தேவிகா பாடி ஆட, படகுகளின் ஓரமாய் தலைவரின் நடை..... ஆஹா....
    Last edited by RAGHAVENDRA; 4th October 2013 at 05:12 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #2893
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் கார்த்திக் சார்..வெரி நைஸ்.. என்னா அழகுப் பாட்டு அது..ம்ம் அதுவும் ஜோடிப் பொருத்தம் வாவ்..

    ராகவேந்திரா சார்.. அது என்ன பாட்டு பந்த பாசம் தானே படம்..என்னுடைய ஸ்பீக்கரில் ஆடியோ அவுட்..பாட்டுக் கேட்கவில்லை..ம்ம்

    சரி சரி..பலவருடங்களுக்கு முன் தேவிகா பற்றி ஒரு இணையக் குழுவில் எழுதிய கட்டுரை..அடுத்த போஸ்ட்டில் ( I hope that post wont deviate this threads intention)

    (விதி யாரை விட்டது )

  5. #2894
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ******************
    தேவிகா....
    **************

    அது ப்ளஸ்டூ முடித்த சமயமா, கல்லூரி ஆரம்பித்த பொழுதா என எனக்குச் சரியாக நினைவிலில்லை. ஒன்று மட்டும் நினைவிருக்கிறது. பழைய- பார்க்காமல் விட்டுப் போன சிவாஜி படங்களைத் தேடிப் பார்த்த பருவமது.
    • *

    எங்களூர் (மதுரை) சாந்தி தியேட்டரில் வெள்ளி வெள்ளியன்று படம் மாற்றுவார்கள். சிவாஜி படமென்றால்
    சனிக்கிழமை மாலைக்காட்சி நான் ஆஜர்.
    • *

    அப்படி சாந்தி தியேட்டரில் வராத ஒரு படம் செல்லூர் போத்திராஜாவில் ஓடுவதைக் கண்டேன். அதைப் பார்க்க
    வேண்டுமென்று வழி கேட்டால் இப்படியே 25 ம் நம்பர் பஸ் -சென்ட் ரல் - குலமங்கலமோ ஏதோ போட்டுச் செல்லும்
    அதில் போய்ச் செல்லூரில்(வைகையாற்றின் அக்கரையில்) இறங்கு என்றான் வக்கீலாத்து ராதா. சரி என்று ஒரு சனி
    மாலை ஏறிச் சென்றால் அது ஒரு சின்னத் தியேட்டர்.. கைலி,வேட்டி, சேலை என்று கிராம பாஷையுடன் மனிதர்கள்
    வர பேண்ட் போட்ட எனக்கு ராஜ மரியாதை. 80 பைசாவுக்கு மாடியில் டிக்கட். குஷியுடன் படம் பார்க்க ஆரம்பிக்க
    அந்தக் கதானாயகி அறிமுகமாகும் காட்சியிலும் பின்னர் கண்டிப்புக்கார புரபஸர் சிவாஜி மழையில் அவளை
    அணைக்க..குறும்புடன் அவள் இடி மழை புரபஸர் எனச் சொல்ல- ஆமாம் இடியும் மழையும் வானத்தின் குழந்தைகள் என்று
    டால்ஸ்டாய் சொல்லியிருக்கிறார் என சிவாஜி வழிய- அந்த நாயகி என் மனதில் குட்டிச் சுவரில் சினிமாப்
    படப் போஸ்டர் மாதிரி பச்சக் என்று ஒட்டிக் கொண்டாள்..
    • *

    அது தேவிகா.. படம்.. ஆண்டவன் கட்டளை..


    இந்த பிரம்மா இருக்கிறாரில்லையா.. சரஸ்வதி கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டிருந்த தருணத்தில் அவளைப்
    (தேவிகாவை) படைத்திருப்பார் போல.. முகம் முழுக்க குறும்பு. ஆப்பிளை நன்றாக அரைத்து அதனுடன் இட்லி
    மாவையும் கலந்து இட்லித் தட்டில் எடுத்துவைத்த பொசு பொசு இட்லி மாதிரி கன்னங்கள். தள்ளுவண்டியில் வரும்
    காய்கறிக் காரனிடம் பேரம் பேசி இரண்டு ரூபாய்க்கு வாங்கும் வாழைத் தண்டு மாதிரி முற்றலாக இல்லாமல்
    நிஜமாகவே இளம் வாழைத்தண்டாட்டம் கைகள்.. மற்றும் என்று ஆரம்பித்தால் ராயர் கிளப்பில் மெம்பர்ஷிப் கான்ஸல்
    செய்து விடுவார்கள்.
    • *

    1966 ல் பொம்மை -யின் முதல் இஷ்யூவில் அட்டைப் படமாக வந்தவராம் அவர். (அப்போது கைக்குழந்தையான எனக்கு
    அம்மா நிலாச் சோறு ஊட்டியிருப்பார் என நினைக்கிறேன்)
    • *

    சிவாஜியுடன் நடித்த படங்களில் மட்டும் கொஞ்சம் நெருக்க்கம்.. மற்ற படங்களில் அப்படிக் கிடையாது..
    எம்ஜிஆருடன் ஒரே ஒரு படம்..ஆனந்த ஜோதி..நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா..மறக்க
    முடியாத பாடல்..
    • *

    ஆண்டவன் கட்டளை பார்த்த பிறகு தேவிகா படங்களாகத் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.
    *
    மேற்கண்ட படத்தில் 'ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன், நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய், என்ன
    தேடுகிறாய் எங்கே ஓடுகிறாய், உன் தேவைகளை ஏன் மூடுகிறாய்' என்று பாடிய போது அவர் முகத்தில்
    பிரதிபலித்த குறும்பு, நீல வானத்தில் 'மலரில்லாத தோட்டமா கனியில்லாத வாழையா மனதில் மட்டும்
    அன்னையா மகனே நீ இல்லையா..' என்ற சோக நடிப்பு,அதே படத்தில் 'வருடந்தோறும் வசந்தம் தேடி வருவோம்
    இங்கே, வாடைக் காற்றில் மூடும் பனியை ரசிப்போம் இங்கே' என்ற உற்சாகம், கொழுக் மொழுக்கென்ற உடம்பு
    முழுவதும் முழுத் திரையில் தெரிய 'குறை கொண்ட உடலோடு நானிங்கு மெலிந்தேன்' என்று கர்ணனில் பாடுவதைப்
    பார்த்த போது சிரிப்பு, திருவிளையாடலில் box officeற்காக பாண்டிய ராணியாக 'பொதிகைமலை
    உச்சியிலே புறப்படும் தென்றல்' எனப் பாடிய வண்ணம் நீராடிய போது கண்களில் காட்டிய நாணம் +ஆசை,
    சாந்தியில் 'நூலிடை மீதொரு மேகலை ஆட மாலைக் கலைகள் ஆசையில் வாடும், ஏலப் பூங்குழல் இன்னிசை பாட
    எண்ணம் யாவும் எங்கோ ஓட - காலையில் உறங்கி மாலையில் எழுந்தால் கண்கள் இரண்டில் நிம்மதி ஏது.. நிம்மதி
    ஏது ' என்று காதல் வயப்பட்டுப் பாடுவதைப் பார்த்த போது போன நிம்மதி..ம்ம் சொல்லிக் கொண்டே
    போகலாம்.
    **
    வாழ்க்கைப் படகில் 'மன்னவனே ஆனாலும் வாள்பிளந்து அறுத்தாலும் பெண்மனதை நீ அடைய முடியாது' என்று விழிகளில்
    காண்பித்த சீற்றம்,ஜெமினியுடன் 'உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே' எனும் போது
    கொள்ளும் வெட்கம், 'என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வீழ்ந்தது.. என் அழகு செய்த பாவம் உன்னைக்
    கண்டது..என் கண்கள் செய்த பாவம்..' என்ற போது காண்பித்த சோகம் எனச் சேர்த்துக் கொள்ளலாம்..
    • *

    கண்ணதாசன் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் ' வாழ்க்கையில் ஜாக்கிரதையாக இருக்கத் தெரியாதவர்
    தேவிகா (என்ன என எனக்குத் தெரியாது). நான் திரைப்படங்கள் எடுத்த போது நன்கு ஒத்துழைப்புக் கொடுத்த
    நடிகை அவர்.. என்னை எப்போது பார்த்தாலும் அவர் பாடும் பாட்டு'பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர்
    பெருமானே.. உனைப் புரிந்து கொண்டாள்.. ஒன்று தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே'' என்று
    எழுதியிருந்தார் (குமுதத்தில் வெளியான கட்டுரை என நினவு).
    • *

    உண்மையான ரசிகனுக்கு நடிக நடிகையரின் பெர்ஸனல் வாழ்க்கையைப் பற்றி அவ்வளவு விருப்பம் கிடையாது எனச்
    சொல்லலாம். அவனுக்குத் தேவை நடிப்பு + அழகு. பிற்காலத்தில் அவர் அண்ணி, அம்மா என நடித்திருந்த படங்களைப்
    பார்த்த போது கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது.
    • *

    எனக்குக் கல்யாணமான புதிதில் வேறு படம் கிடைக்காமல் வீடியோவில் கரகாட்டக் காரன் பார்த்துக் கொண்டிருந்த
    போது - இந்த நடிகையின் தாய் தான் எனது க.க' என இலக்கியத் தனமாக உளறி விட என் அகம் கொடுத்த
    எக்ஸ்பிரஷன் இருக்கிறதே.. மறக்கவே முடியாது.(கூடவே இலவச இணைப்பாக ஒரு கிள்ளும் கிடைத்தது வேறு
    விஷயம்.)
    • *

    இப்போதும் கூட தேவிகாவின் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் - என் வீட்டில் 'யோவ்.. நாக்கை உள்ளே
    இழுத்துக்கய்யா.. ஜொள்ளுவிடுவது தாங்கலை' எனப் பொறாமைக் குரல் வரும்.

    • *
    Last edited by chinnakkannan; 4th October 2013 at 05:42 PM.

  6. #2895
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே...
    வாடைக் காற்றில் மூடும் பனியில் மகிழ்வோம் இங்கே..

    இந்த வரிகள் இரண்டாம் முறை ஒலிக்கும் போது

    தலைவரின் முகத்தைப் பாருங்கள்....

    எவ்வளவு அர்த்தங்கள் ... வருஷம் தோறும் என அவள் அடுத்த முறையையும் எதிர்பார்த்து பாடுவதாக ஒரு பொருள் கொண்டு வருந்துகிறார், அவள் அடுத்த வருடம் இருக்க மாட்டாளே என்று..

    அவளோ அடுத்த வருடமும் வருவோம் என்கிற நம்பிக்கையில் பாடுகிறாள்.

    வார்த்தைச் சித்தர் கண்ணதாசன் இரு பொருள் பொதியும் படி எழுத்தில் ஜாலம் காட்டி அந்த சூழலை அப்படியே வார்த்தையில் வடிக்க, மெல்லிசை மன்னரின் இசையில் அந்த வரிகளுக்கு சுசீலா இரு பொருளும் புலப்படும் படி உச்சரித்துப் பாட ...

    தேவிகாவின் முகத்தில் நம்பிக்கையும், தலைவரின் முகத்தில் ஏமாற்றத்தை சந்திக்கப் போகிறோமே என்கிற வருத்தம், அவளுடைய உடல் நலத்தைப் பற்றிய சோகம் அனைத்தும் சேர்ந்து தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல் காட்சியாக அளித்து விட்டார்கள்.

    தேவிகா என்ற உடனே நினைவுக்கு வரும் இப்பாடலைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியவில்லை, பார்க்காமலும் இருக்க முடியாது

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #2896
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் சின்னக்கண்ணன் சார்,

    உங்களுக்கு கனவுக் 'கன்னி' அதனால் ஜொள்ளோ ஜொள்ளு என்று வழிகிறீர்கள். ஆனால் எனக்கோ (நானே என் மனதில் வரித்துக்கொண்ட) என் 'அண்ணி'. அதனால் லிமிட் தாண்ட முடியாது, தாண்ட மனம் விரும்பாது. அண்ணி தேவிகாவின் பாடல்களை அழகாய் பட்டியலிட்டீர்கள். இன்றைக்கும் கூட 'கங்கைக்கரை தோட்டம்' பாடலைப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது சுனாமி வந்தால், பாட்டைப் பார்த்து முடித்துவிட்டு ஓடுவோம் என்றிருப்பவன்.

    'நானும் ஒரு தொழிலாளி' கமலும் அம்பிகாவும் ஜோடி என்றார்கள். மெல்லப்பர்த்துக்கொள்வோம் என்று நினைத்தேன். ஸ்ரீதர் இயக்கம் என்றார்கள். சுணங்கிப் பார்ப்போம் என்றிருந்தேன். தேவிகாவும் இருக்கிறார் என்றார்கள். செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன் தியேட்டருக்கு. அண்ணியின் கடைசிப்படம் என்று அப்போது தெரியாது எனக்கு. இருந்தாலும் மனதுக்குள் ஒரு உறுத்தலாய் அண்ணி வரும் காட்சியில் எல்லாம் சோகமே உருவாக பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் கமலுடன் தாய்ப்பாசத்தை பொழிந்து கொண்டிருந்தார். ஆனால் நான் மனதுக்குள் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன்.

    கனகாவுடன் படப்பிடிப்புக்கு துணைக்கு வந்துகொண்டிருந்தவர், உடல்நிலை காரணமாக வருவதில்லை என்று செய்தி போட்டார்கள். அப்போதே எனக்குப் பொறி கலங்கியது. அண்ணன் மறைந்த அடுத்த வருடமே (2002) அண்ணனைத் தேடிப்போய்விட்டார் என்ற செய்தி இடியாய்த் தாக்கியது.

    ஆயிரம் நடிகையர் இங்குண்டு... ஆனால் அண்ணி உன்போல் யாருண்டு.....

  8. #2897
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ******************
    தேவிகா....
    **************

    • *
    சின்ன கண்ணன் சார் in full form..
    பலே பாண்டியா என பாராட்டலாமென ஆரம்பித்தால்..
    என்ன சார் அதை விட்டுடீங்க?
    வாழநினைத்தால் வாழலாம்..
    இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்..

    (நீங்க நிலாச்சோறு சாப்பிட்ட போது,நாங்கள் தட்டில் போட்டு பிசைந்து சாப்பிட்டவங்களாக்கும்!)

  9. #2898
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே...
    வாடைக் காற்றில் மூடும் பனியில் மகிழ்வோம் இங்கே..

    இந்த வரிகள் இரண்டாம் முறை ஒலிக்கும் போது

    தலைவரின் முகத்தைப் பாருங்கள்....

    எவ்வளவு அர்த்தங்கள் ... வருஷம் தோறும் என அவள் அடுத்த முறையையும் எதிர்பார்த்து பாடுவதாக ஒரு பொருள் கொண்டு வருந்துகிறார், அவள் அடுத்த வருடம் இருக்க மாட்டாளே என்று..

    அவளோ அடுத்த வருடமும் வருவோம் என்கிற நம்பிக்கையில் பாடுகிறாள்.

    வார்த்தைச் சித்தர் கண்ணதாசன் இரு பொருள் பொதியும் படி எழுத்தில் ஜாலம் காட்டி அந்த சூழலை அப்படியே வார்த்தையில் வடிக்க, மெல்லிசை மன்னரின் இசையில் அந்த வரிகளுக்கு சுசீலா இரு பொருளும் புலப்படும் படி உச்சரித்துப் பாட ...

    தேவிகாவின் முகத்தில் நம்பிக்கையும், தலைவரின் முகத்தில் ஏமாற்றத்தை சந்திக்கப் போகிறோமே என்கிற வருத்தம், அவளுடைய உடல் நலத்தைப் பற்றிய சோகம் அனைத்தும் சேர்ந்து தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல் காட்சியாக அளித்து விட்டார்கள்.

    தேவிகா என்ற உடனே நினைவுக்கு வரும் இப்பாடலைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியவில்லை, பார்க்காமலும் இருக்க முடியாது

    Chinnakannan you have reminded me about the goldendays we have enjoyed sivaji- devika pair right from pandapasam days followed by cute A. KATTALAI NEELAVANAM ETC. LOVELY PAIR OF SIXTIES.
    TODAYmy sleep has gone. one of my very close friend has ot taken food for several days when she paired with the other side star,

  10. #2899
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் சுப்ரமணியம் ராமஜெயம் சார்,

    ஐந்து பக்கங்களுக்கு ஒருமுறை நான் ஒரு வேண்டுகோள் பதிவை இடுவது வழக்கம் என்று சென்ற வாரம் கூட குறிப்பிட்டிருந்தேன். திரும்ப திரும்ப அந்த வேண்டுகோளை வைக்கும்போது மற்றவர்கள் மனம் வருத்தப்படுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை......

  11. #2900
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Kartik sir.
    As our anni devika's neelavanam song has to be enjoyed with my reply I have done like that, keeping in mind your early reminders very much. sorry it will not happen again.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •