-
17th October 2013, 03:44 PM
#3231
Senior Member
Diamond Hubber
Last edited by vasudevan31355; 17th October 2013 at 03:47 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
17th October 2013 03:44 PM
# ADS
Circuit advertisement
-
17th October 2013, 03:46 PM
#3232
Senior Member
Diamond Hubber
-
17th October 2013, 04:10 PM
#3233
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
அன்னை பராசக்தியையும், அவள் பெற்றெடுத்த அற்புத பிறவியாம் விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேச மூர்த்தியையும் போற்றுகிறோம்.
தமிழர்களின்,
இந்தியர்களின்,
உலக சினிமா ரசிகர்களின்
பொற்காலம்
தொடங்கிய நாளாம்
இப்புனித நாளை
போற்றி வணங்குவோம்.
-
17th October 2013, 04:28 PM
#3234
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
டியர் வாசுதேவன் சார்,
நாயகிகள் தொடரில் கார்த்திக் சார் குறிப்பிட்டமாதிரி அதிகம் அறியப்படாத மைனாவதி பற்றி அழகாக விவரித்து அதற்கேற்ற புகைப்படங்களையும் அளித்திருக்கிறீர்கள். நன்றி.
தமிழ்த் திரையுலகம் தன்னிகரில்லா தவப் புதல்வனை ஈன்றெடுத்த இந்த பொன்னான நாளை, பராசக்தி பொக்கிஷப் புகைப்படங்களைப் பதிவு செய்து எல்லோரையும் கொண்டாடவைத்த தங்களுக்கு பாராட்டுக்கள், நன்றி.
-
17th October 2013, 05:12 PM
#3235
Senior Member
Seasoned Hubber
இன்று கவியரசர் கண்ணதாசன் நினைவு நாள். அவருடைய நினைவைப் போற்றும் எனக்குப் பிடித்த ஒரு முத்தான தத்துவப் பாடல்
-
17th October 2013, 08:58 PM
#3236
Junior Member
Seasoned Hubber
Vasu Sir கலக்கறீங்க
Great postings

-
17th October 2013, 09:11 PM
#3237
Junior Member
Seasoned Hubber
NT shown the way !!


கொடுங்கள்.. பெறுவீர்கள்!....
வாழ்கையில் NT நடந்துகொண்ட முறை :
நடிப்பை மட்டும் கொடுக்கவில்லை , அன்பையும் , சந்தோஷத்தையும் அதுவே பல திரிகள் கடந்து வெற்றியுடன் சென்று கொண்டிருக்கின்றது - அவரிடம் இருந்து கற்று கொள்ளவேண்டியவை இன்னும் எவ்ளவோ !!!--------------------------------------------
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்தப் பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.
அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."
அந்தப் பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்தத் தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி
எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர்
குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும்
மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச்
சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.
அடுத்தப் படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதைக் கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம்.மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும்
கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.
எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள்.செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகித் திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்
-
17th October 2013, 09:29 PM
#3238
Junior Member
Seasoned Hubber
-
18th October 2013, 06:43 AM
#3239
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
ஹப்ப்ப்ப்பப்பா.........பராசக்தி வெளியீட்டு 62வது ஆண்டை இதை விட சிறப்பாக கொண்டாட முடியாது என்கிற அளவிற்கு அற்புதமாக பிரமிப்பூட்டும் வகையில் கொண்டாடி விட்டீர்கள். 40க்கும் மேற்பட்ட Snapshots .... WOW ..... ஒவ்வொரு ஸ்டில்லுக்கும் மிகவும் சிரமப்பட்டு கடினமாக உழைத்து இந்த ரிசல்டைக் கொண்டு வர வேண்டும். எந்த ஒரு கலைஞனும் விட்டு விடாமல் அனைவரையும் தங்களுடைய பதிவுகளில் கவர் செய்து விட்டீர்கள். பதிவுத் திலகம் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்.
பாராட்டுக்கள்.. சார்... தொடருங்கள்...
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th October 2013, 06:44 AM
#3240
Senior Member
Seasoned Hubber
ரவி ...
தங்கள் அட்டகாசமான பதிவிற்குப் பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks