Page 340 of 399 FirstFirst ... 240290330338339340341342350390 ... LastLast
Results 3,391 to 3,400 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #3391
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    சிவாஜி அவரிகளின் நடிப்பு என்ன என்று தெரியாதவர்கள் தான் இப்படி பிதற்றுவார்கள். கமல் இதுவரை நடித்ததோ செய்ததோ எல்லாமே சிவாஜி அவர்கள் செய்ததில் 10% அளவு தான்.. அவர் ஆயுள் உள்ளவரை நடித்தாலும் சிவாஜி செய்ததில் 30-40% வேண்டுமானால் செய்ய முடியுமே தவிற சிவாஜியின் நடிப்பும் அவர் நடிப்பிற்கு வகுத்த பாதையும் யாருமே தொட முடியாத ஒன்று. நானும் தான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் அதே சமயம் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகனும் கூட ஏன் இருக்க கூடாதா.. அதற்காக இங்கே வந்து கமலுக்கு இவரைவிட புகழ் கிடைத்தது என்றெல்லாம் பிதற்ற வேண்டியதில்லை. கமல் அந்த புகழெல்லாம் கிடைக்க செய்ததெல்லாம் நடிகர் திலகம் செய்ததுமில்லை செய்ய வேண்டிய அவசியமுமில்லை
    ராஜேஷ் சார்,
    மற்றொரு பதிவருக்கு பதில் சொல்கிறேன் என்று இந்தியாவின் சிறந்த கலைஞன் கமல் ஹாசன் பற்றி நீங்கள் கூறி இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதற்கு விரிவாக, புள்ளி விவரத்துடன் என்னால் பதில் சொல்ல முடியும். ஆனால் அது நமது உன்னத கலைஞர்களைப் பற்றி நாமே சேறு இறைப்பது போலாகும். ஒவ்வொரு கால கட்டத்திலும் பெரும் கலைஞர்கள் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள்.

    கமல் நடிப்பு மட்டுமின்றி நடனம், திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம், தயாரிப்பு என்று பன்முகத் திறமையுடன் அவருடைய கிராப் இப்பொழுதும் மேல் நோக்கி தான் இருக்கிறது. அவர் பெற்ற விருதுகளை நீண்ட பட்டியலிடலாம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3392
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Brunei Darussalam
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    சிவாஜி அவரிகளின் நடிப்பு என்ன என்று தெரியாதவர்கள் தான் இப்படி பிதற்றுவார்கள். கமல் இதுவரை நடித்ததோ செய்ததோ எல்லாமே சிவாஜி அவர்கள் செய்ததில் 10% அளவு தான்.. அவர் ஆயுள் உள்ளவரை நடித்தாலும் சிவாஜி செய்ததில் 30-40% வேண்டுமானால் செய்ய முடியுமே தவிற சிவாஜியின் நடிப்பும் அவர் நடிப்பிற்கு வகுத்த பாதையும் யாருமே தொட முடியாத ஒன்று. நானும் தான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் அதே சமயம் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகனும் கூட ஏன் இருக்க கூடாதா.. அதற்காக இங்கே வந்து கமலுக்கு இவரைவிட புகழ் கிடைத்தது என்றெல்லாம் பிதற்ற வேண்டியதில்லை. கமல் அந்த புகழெல்லாம் கிடைக்க செய்ததெல்லாம் நடிகர் திலகம் செய்ததுமில்லை செய்ய வேண்டிய அவசியமுமில்லை
    Mr Rajesh
    You have every right to glorify Nadigar thilagam and mention any defending reply for that hubber.
    But your comments about Kamal Haasan are condemnable..

  4. #3393
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    என்னை மிகவும் கவர்ந்த காதல் பாட்டு.

    படம்: 'அன்பே ஆருயிரே

    பாடல்: 'ராஜ வீதி பவனி என்பது'



    அப்படியே நம்மை அள்ளிக் கொண்டு போய் சொர்க்கத்தில் போட்டு விடும் பாடல். அருமையான டியூன். பாடகர் திலகமும், இன்னிசைக் குயிலும் இனிமையாய்க் கலக்கும் பாடல். செம ஜாலி மூட் பாடல்.

    தலைவரும் அழகுப் பதுமை மஞ்சுளாவும் பங்கு பெறும் கனவுப் பாடல்.

    இளமை பூத்துக் குலுங்குவதற்கு கேக்கணுமா! பல சீனியர் நடிகைகளுடன் காதல் காட்சிகளில் நடிகர் திலகம் சோபித்தாலும் 'தானே' போல இடையில் புகுந்து, இளமை கொலு பொம்மையாக நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்து, புத்தம் புது இளமை விருந்து படைத்தார் மறைந்த மறக்க முடியாத மஞ்சுளா.

    உற்சாகத் துள்ளல் இசையுடன் ஆரம்பிக்கும் இப்பாடலின் ஆரம்பத்தில் கப்பலின் மாலுமிகள் போல ஒயிட் அண்ட் ஒயிட் உடை அணிந்து, அதற்கேற்ற கச்சிதமான தொப்பியுமணிந்து, இருவரும் சற்றே ஸ்லோ-மோஷனில் உயர எம்பிக் குதித்து, ரம்மியமான இயற்கை சூழலின் பின்னணியில் வண்ண காகித ரிப்பன்கள் சுற்றிலும் பறக்க, பாடலை ஆரம்பிக்கும் போதே நம் மனமும் அவர்களோடு சேர்ந்து பறக்க ஆரம்பித்து விடும். உற்சாக கரைபுரளல்களில் நீந்த நாம் ரெடியாகி விடலாம்.

    தலைவர் கையில் பழத்தை வைத்தபடி சுவைத்துக் கொண்டே மஞ்சுளாவுடன் கை கோர்த்தபடி தத்தி தத்தி நடந்து வரும் அழகு! பழத்தை கடித்தவுடன் குரல் மாறி கிளி போல கீச்சுக் குரல் 'ராஜ வீதி பவனி' என்று ஒலிக்க, சற்றே அதிரும் தலைவர் மஞ்சுளாவுக்கும் பழத்தை ஒரு கடி கடிக்கக் கொடுக்க, மஞ்சுளாவுக்கும் கிளி போல் குரல் மாற, பின் தொண்டையை கனைத்து சரி செய்து கணீரென்ற நம் பாடகர்களின் குரல் மீண்டும் மதுரமாய் ஒலிப்பது அழகான சுவையான கற்பனை. அழகான மலர் வளையத்துக்கு (சுற்றி நின்ற பூ மரங்கள் காவலானது) உள்ளே மஞ்சுளா தேவதை போல அவ்வளவு அழகு!



    பல்லவி முடிந்ததும் அடுத்த சரணத்திற்கு முன் வரும் அந்த இடையிசை... அடடா! எப்படி சொல்வது! டேப் இசை என்று சொல்வார்களே! அந்த இசைக்கு சிறிதும் தாளம் தப்பாமல் நடிகர் திலகமும் மஞ்சுளாவும் கைகளை முன்னால் மடக்கியும், விரித்தும் கால்களால் ஸ்டெப் வைத்தபடியே டேப் டான்ஸ் ஆடி வரும் அட்டகாசமான மூவ்மெண்ட்ஸ்.( பொங்கல் பானையில் பொங்கி வரும் நுரை போல அவ்வளவு பூரிப்பு இருவரிடத்திலும்) காதலர்களின் கரை புரண்டு ஓடும் உற்சாகம். நிஜக் காதல்களே தோற்றுப் போகக்கூடும். டான்ஸ் மாஸ்டருக்கு வேலை வைக்காமல் இவர்களே ஆடி விட்டார்களோ என்பது போல அவ்வளவு என்ஜாய் பண்ணி ஆடுவார்கள். (நடிகர் திலகம் செம உற்சாக மூடில் இருந்திருப்பார் போல)

    'கோஹினூரில் காணாத வைரம்' (அழகான ஸ்டெப்ஸ்) முடிந்ததும் வரும் 'டுடுடு டுட்டு டுடுடு டுட்டு' ஜாலி வரிக்கு நடிகர் திலகம் வாயசைப்பதை கண்டிப்பாக கவனமாகப் பாருங்கள். 'டுட்டு' முடிக்கும் போது 'ஆவ்' என்று அவ்வளவு அழகாக உதடுகள் வேலை செய்யும்.

    அடுத்தது காட்சி மாறும் அழகான கற்பனை.

    தன் தந்தை (மேஜர்) தனது (நடிகர் திலகத்திற்கு) இன்ப மண வாழ்க்கைக்குக் குறுக்கே நிற்பதாக படத்தின் கதை. அதை இந்தப் பாடலில் கற்பனை வளத்தோடு உணர்த்துவார்கள். (சபாஷ் ஏ.சி.டி) மேஜர் ஒற்றைக் கண்ணுடன் கொள்ளைக்காரன் போல வந்து வாளை(லை) நீட்ட, அழகான அரபு சலீம் போல தலைவர் மரங்களின் அடியில் அமர்ந்தபடியே சுற்றிலும் அருவிகள் ஆர்ப்பரிக்க பாடல் இசைக்க, சிருங்கார அனார்கலியாய் திராட்சை ரச ஜார் ஒன்றை கையில் ஏந்தியபடி மஞ்சுளா மெல்ல இடை அசைந்து நடந்து வந்து தலைவர் பக்கம் அமர, ('உத்தமன்' "படகு படகு" பாடலில் வரும் அனார் சலீம் ஞாபகம் வருமே!) பின் இருவரும் காவாலி ஸ்டைலில் கைகளைக் கொட்டியபடியே எந்த நேரம் இதழ்கள் நான்கும் ஒட்டிக் கொள்ளுமோ என்று அனைவரும் அஞ்சுமளவிற்கு நெருங்க, (சென்சார் போர்டு அதிகாரிகள் நிமிர்ந்து அமர்ந்து விளக்கெண்ணையையும், கத்தரியையும் கைகளில் எடுக்க) மேஜர் இப்போது சிகப்பு வண்ண ஜமீந்தார் உடையில் கைகளில் வாளெடுத்து மிரட்ட ஏக களேபரம்தான்.

    அடுத்த சரணத்திற்கான காட்சி.

    பாடலின் தன்மை முற்றிலுமாக மாறிப் போக, குதிரை குளம்புகளின் ஓசை எதிரொலிக்க, புழுதியைக் கிளப்பியவாறு கர்ணனின் கௌபாய் ஸ்டைலில் நடிகர் திலகம் குதிரையில் மலைகளின் இடுக்குகளின் வழியே ('எந்தப் பக்கம் சென்றாலும் மென் மேலும் மேன்மேலும் என் வேகம் புயல் போன்றது குட் லக் மை குட்லக் மை குட்லக்') கம்பீரமாக் அமர்ந்தபடி பாடி வர, அழகான தோலுடையில் வண்ண மான் ஒன்று ஓடும் அருவி நீரை குனிந்தபடி பருக, சிறு கற்பாறைகளின் நடுவே சின்னப் பையன் போல நடிகர் திலகம் துள்ளிக் குதித்து ஓடி வந்து இருவரும் ஒருவரையொருவர் விளையாட்டாக அடித்துக் கொள்ள, கோபாலுக்குப் பிடித்த இடங்களிலெல்லாம் நடிகர் திலகம் விளையாட, (சுசீலாம்மாவின் அழகான ஹம்மிங் பின்னணியில்) கடைசியில் அடி இறுகப் பிடியாக மாறி தண்ணீரில் விழுந்து ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்து கொள்ள நாமெல்லோரும் டோட்டல் அவுட்.

    ஆனால் மேஜர் மட்டும் பொறுக்க மாட்டாமல் ஆதிவாசி டிரெஸ்சில் புயலென ஈட்டியை நீட்டியபடி காதலர்களை பிரிக்க பற்களை நற நறவெனக் கடித்தவாறு வருவார். (யப்பா! மேஜரா அது! சூப்பர் சுந்தரராஜா! தலையில் ஆதிவாசிகளின் கிரீடம் வேறு!)

    என்ன ஒரு இளமை ததும்பும் கற்பனை வளம் மிக்க பாடல்! ஆடலுக்கேற்ற பாடல். பாடலுக்கேற்ற கூடல். கூடலுக்கேற்ற ஊடல். மிக மிக வித்தியாசமான தலைவரின் உற்சாகமான டூயட். அழகான இளமை பொங்கும் தலைவர், எம்.எஸ்.வியின் மாறுபட்ட இசை. மஞ்சுளாவின் மறக்கவொண்ணா இளமை! பாடகர்களின் பங்களிப்பு. (கௌபாயாகவும் நடிகர் திலகத்தைக் காட்டியாயிற்று)

    என்னுடைய டாப் 10-இல் இடம் பெற்ற பாடல் மற்றும் காட்சி. அதனால்தான் ஸ்பெஷல் பதிவாக இட்டுள்ளேன்.

    பார்த்து பரமானந்தம் பெறுவீராக.

    Last edited by vasudevan31355; 24th October 2013 at 11:27 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #3394
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் படங்களில் ஐட்டம் நடிகையர் ( 7 )

    பிரமாத ஐட்டம் நாயகி "பிரமீளா"

    மீண்டும் பலருக்கு ஆச்சரியம், ஒரு கதாநாயகி நடிகையை ஐட்டம் லிஸ்ட்டில் சேர்ப்பதா என்று (இங்கே நமது நண்பர் வெ.ஆ.நிர்மலாவைக்கூட ஐட்டம் பட்டியலில் போட்டு வைத்திருக்கிறார்). பிரமீளா பல படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் அதில் பெரும்பாலானவை 'ஒரு மாதிரி' கதாநாயகிதான். அதுமாதிரி ரோலுக்கு பொருத்தமாகவும் இருப்பார். இத்தனைக்கும் கவர்ச்சி உடைகளும் அணிய மாட்டார். (நல்லவேளை). சேலைதான். அதிலேயே பார்ப்போரைக் கொல்லுவார். அப்படி ஒரு ஐட்டம் நம்பர் இவர். ஒரு கட்டத்துக்குப்பின் 'அந்த மாதிரி ரோலா, அல்லது '.................விடுதி' நடத்தும் ரோலா கூப்பிடு பிரமியை' என்று அழைக்கும் அளவுக்கு கோலிவுட்டில் பிரபலமானார். காரணம் அவர் திரையில் 'அரங்கேற்றம்' ஆனதே அந்த மாதிரி ரோலில்தான். அவர் நடிகர்திலகத்துடன் சில படங்களில் நடித்திருக்கிறார்.

    “தங்கப்பதக்கம்”

    இப்படத்தில் நடிகர்திலகத்தின் மருமகள். மகன் தானாக தேடிக்கொண்ட மனைவி. இருந்தாலும் எஸ்.பி.வீட்டு மரியாதை கெடாமல் நல்ல மருமகளாக நடித்து ரசிகர்கள், தாய்மார்கள் மத்தியில் பெயரெடுத்தார். பத்மநாபனின் மருமகள் போல தூபம் போட்டு கணவனைக்கெடுக்காமல், தப்பு செய்யும் கணவனை கண்டிக்கும் மனைவியாக நல்ல ரோலில் வந்தார். மாமனார் மாமியார் மேல் மரியாதையுள்ள நல்ல மருமகள். 'சோதனை மேல் சோதனை' பாடலில் இவர் குரலும் நுழைந்து கொண்டு எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

    “மனிதரில் மாணிக்கம்”

    நடிகர்திலகம் ஜோடியில்லாமல் கலக்கிய பல படங்களில் இதுவும் ஒன்று. இதில் பிரமீளா, ஏ.வி.எம்.ராஜனின் ஜோடி. நடிகர்திலகத்துக்கு அடுத்தபடியாக நன்றாக நடித்திருப்பவர் 'பிரமி'தான். கையில் கத்தியுடன் நடிகர்திலகத்தை மிரட்டி 'ஐ வில் ஸிங்க் பார் யூ' பாடவைப்பவர்.

    “கவரிமான்”

    அப்பாடா, வந்துவிட்டார் தனது ட்ரேட்மார்க் ரோலுக்கு. வழக்கமாக இப்படம் வந்த காலகட்டத்தில் நடிகர்திலகத்தின் ஜோடியாக விஜயா, லட்சுமி, சுஜாதா, ஸ்ரீபிரியா இவர்களைத்தான் போடுவார்கள். அப்படியிருக்க இப்படத்தில் மட்டும் ஏன் பிரமி என்று நினைத்து, படத்தைப் பார்க்கும்போதல்லவா தெரிகிறது ஏன் இவரைத் தேர்ந்தெடுத்தார்கள் என்று. ரொம்ப ஆச்சாரமான கௌரவமான குடும்பத்தின் மருமகளாக, ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் (நடிகர்திலகத்தின்) மனைவியாக வாழ்ந்தாலும் நாகரீக மோகம் கொண்டு தனிக்குடித்தனம் வந்து, கூடா நட்பினால் மதுவுக்கு அடிமையாகி, கணவனுடன் வாழ்ந்து மகிழ்ந்த அந்த புனிதமான படுக்கையிலேயே இன்னொருவனுடன் சோரம் போய்.......... இப்போது சொல்லுங்கள் இந்த ரோலுக்கு பிரமீளாவை விட்டால் வேறு யார். அதான் இயக்குனர் எஸ்.பி.எம். சரியான ஆளைப் பிடித்திருக்கிறார்.

    எதை எதிர்பார்த்து தன்னிடம் இந்த ரோலை ஒப்படைத்தார்களோ அதை கச்சிதமாக நிறைவேற்றி இருந்தார் பிரமீளா. கவரிமான் வெளியான முதல்நாள் பிரமீளா மிட்லண்ட் தியேட்டருக்கு வந்ததை ஏற்கெனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதில் 'பிரமி' வந்த பகுதி மட்டும் அடைப்புக்குறிக்குள்

    (மிட்லண்ட் தியேட்டர் வாயிலில் ரோட்டை அடைத்து மக்கள் கூட்டம் நின்றதால் சற்றுதள்ளி சத்யமூர்த்தி பவன் அருகே அம்பாஸிடர் காரைவிட்டு இறங்கி, அங்கிருந்து நடந்து வந்த பிரமீளா எல்லோருக்கும் கும்பிடு போட்டவண்ணம் வந்தார். கிளிப்பச்சை நிறப்பட்டுப்புடவை அணிந்து அழகாக இருந்தார். கூட்டம் நெருக்கித்தள்ள, நமது ரசிகர்கள் அவரைச்சூழ்ந்து பாதுகாப்பாக அழைத்து வந்தனர். இயக்குனருடன் இரண்டொரு வார்த்தைகள் பேசிய அவர், கூட்டத்திலிருந்து தப்பிக்க அருகிலிருந்த டிக்கட் கவுண்ட்டர் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார்).

    “ரத்தபாசம்”

    இப்படத்தில் பிரமீளாவின் ரோல் என்ன?. நடிகர்திலகத்தினுடைய தங்கையுடைய கணவனுடைய முன்னாள் மனைவி. குழம்புகிறதா?. அதாவது ஜெய்கணேஷின் முதல் மனைவி, மற்றும் ஒரு குழந்தையின் தாய். இதிலும் நாகரீக மோகம் கொண்டு கணவனையும் குழந்தையையும் பிரிந்து, வில்லன் நம்பியாருடன் சேர்ந்து பழிவாங்க துடிக்கும் கேரக்டர். என்னதான் மோசமானவளாக இருந்தாலும், தன்னுடைய ரத்தமும் சதையுமாக தான் பெற்ற குழந்தையை சம்மந்தமே இல்லாத இன்னொருத்தி (ஜெய்கணேஷின் இரண்டாவது மனைவி ஜெயசித்ரா) கையில் வைத்து கொஞ்சிக்கொண்டிருப்பதைப் பார்த்து பெற்ற வயிறு பற்றி எரிகிறது. எப்படிப்பட்ட வாழ்க்கையை பறிகொடுத்து விட்டு நிற்கிறோம் என்று பதறுகிறாள். பட்...., டூ லேட். இறுதியில் கிளைமாக்ஸ் போராட்டத்தில் மலையிலிருந்து உருண்டு விழுந்து பலியாகிறாள்..

    இப்படத்தில் பிரமிக்கு மேக்கப், ஹேர்ஸ்டைல் எல்லாம் நன்றாக இருக்கும். அதோடு படத்தின் மற்ற நாயகியரோடு ஒப்பிடும்போது பிரமியை இன்னும் கொஞ்சம் அதிக நேரம் வரவிடுங்க என்று கேட்கத்தோன்றும். பின்னே ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, மனோரமா இவர்களையெல்லாம் எவ்வளவு நேரம் பார்க்க முடியும்?. கொஞ்சம் அதிக நேரம் பிரமியைக்காட்ட வேண்டுமென்று நான் எதிர்பார்த்த காரணம், ரத்தபாசம் ரிலீசாக சிறிது நாட்களுக்குமுன்பு நான் அவரைப் பார்த்திருந்த நிலைமை அப்படி. அதென்ன?.

    (யாரும் ஆட்சேபம் தெரிவித்தால் இந்த இறுதிப்பகுதி நீக்கப்படும்).

    சென்னை அசோகா ஹோட்டல் உள்ளே இருந்த 'குட்வில் ஸ்டோர்' உரிமையாளர் மகன் என் நண்பன். ஒருமுறை அவனை சந்தித்து கடையின் வெளியே இருவரும் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு சாம்பல் நிற அம்பாசிடர் ஹோட்டலுக்குள் நுழைந்தது. ரோடாக இருந்தால் வேகமாகப் போயிருக்கும். ஹோட்டல் உள்ளே என்பதால் ஸ்லோமோஷனில் வந்தது. காரை அடையாளம் கண்டுகொண்ட என் நண்பன் "இது சிவலிங்கம் செட்டியார் கார். உள்ளே யார் இருக்காங்கன்னு பார்" என்றான். மெதுவாக வந்த கார் எங்கள் அருகே வந்தபோது குறுக்கே நின்ற காரை எடுப்பதற்காக சற்று நின்றது. பின்சீட்டில் பார்த்தால் பிரமீளா. அதிலும் அவர் இருந்த கோலம் பார்த்ததும் அதிர்ச்சி, 'கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு'. ஜஸ்ட் கொஞ்சநேரம்தான். கார் அகன்று விட்டது. சரி, காரிலிருந்து இறங்கி எப்படிப்போகப்போகிறார் என்று பார்க்க கியூரியாஸிட்டி. வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்க ஹோட்டலின் கடைசியிலிருந்த மாடிப்படியருகே ரொம்ப ஒட்டினாற்போல கார் நின்றதும், பெட்ஷீட் போன்ற பெரிய டவலை சுற்றிய நிலையில் விருட்டென்று காரிலிருந்து இறங்கி உள்ளே சென்றுவிட்டார்.

    நண்பனிடம் "என்னப்பா இது?" என்றேன் ஆச்சரியத்துடன். அவனோ ரொம்ப கூலாக "உனக்குத்தான் இதெல்லாம் புதுசு" என்றான்.

    கடைசியாக இவர் நடித்த புதுப்படம் பார்த்தேனென்றால் அது மலையாள 'ஜட்ஜ்மெண்ட்' படத்தின் தமிழ் டப்பிங். தமிழில் அதிகமாக முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன் இவர்களோடேயே ஜோடி சேர்ந்திருக்கிறார். ஜெய், ரவியுடன் ஜோடி சேர்ந்தவை மிகக்குறைவு. படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே 'பிரமி பெல்ட்ஸ்' என்ற பெயரில் கார்களுக்கான பேன்பெல்ட் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து செய்துகொண்டவர் பிரமீளா. உச்சத்தில் இருந்தபோது பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு புரட்சி செய்தவர். சிலமுறை '............வழக்குகளில்' கைதானவர். இப்போது எங்கேயிருக்கிறார், என்ன செய்கிறார் என்ற விவரங்கள் தெரியவில்லை. பழைய நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் எந்த விழாவிலும் இவரைகாண முடியவில்லை. பழைய நட்சத்திரங்களை தேடிக்கொண்டு வந்து ஜெயா டி.வி. நடத்தும் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியிலும் இவர் வந்துபோனாரா என்பது தெரியவில்லை.

    நடிகர்திலகத்துடன் ஜோடியாக நடித்திருப்பதால், நண்பர் வாசுதேவன் அவர்கள் எழுதிவரும் 'நடிகர்திலகத்தின் திரை நாயகியர்' தொடரிலும் இவர் பற்றிய பதிவு இடம்பெறக்கூடும்.

  6. #3395
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அன்பே ஆருயிரே - எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று- நைஸ் வாசு சார்..

    கார்த்திக் சார்..ரத்தபாசம் பார்த்ததில்லை..மற்ற மூன்றும் பார்த்திருக்கிறேன்..பிரமி- ஐட்டம் நடிகையர் லிஸ்டில் அதுவும் ந.தியுடன் சேர்க்க வேண்டுமா என சற்றே யோசனை..மற்றபடி நீங்கள் சொன்ன (கடைசிப் பாரா கெட்டவை ) பற்றி முன்னமே சற்று அறிந்திருக்கிறேன் வேறு விதமாக..(ஜெனரல் நாலெட்ஜூக்காக).. சில சமயங்களில் பரிதாபமாய்த் தான் இருக்கிறது சிற்சில நடிகைகளின் வாழ்க்கைகள்..

  7. #3396
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அ.ஆவில் ஆரம்பக் காட்சிகளில் ந.தி.. மஞ்சுளாவுடனான கெமிஸ்ட்ரி,ஜாக்ரஃபி எல்லாம் நன்றாகவே ஒர்க் ஆகியிருக்கும் ஆமா ஏன் திடீர்னு அன்பே ஆருயிரே

  8. #3397
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஆமா ஏன் திடீர்னு அன்பே ஆருயிரே
    கதையை மாற்றத்தான்.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #3398
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    Sorry for the interruption to all,

    வியட்நாம் விடில் , ஒரு காட்சியில் நடிகர் திலகம் நாகேஷிடம் பணம் கொடுக்க, பணத்தை , நாகேஷ் தன் pantin பின்புறம் இருக்கும் பாக்கெட்டில் வைக்க போகும் பொது , நடிகர் திலகம் நாகேஷை பார்த்து, அது (பணம்) லக்ஷ்மி டா , அதை பின் பக்கத்தில் வைக்காதே என்று கடிந்து கொள்வார் . இந்த காட்சியும் , வசனமும், படதிற்க்கு சம்மந்தம் இல்லாமல் இருக்கலாம் . நிஜ வாழ்கையில் 90 இறுதில் ஆரம்பித்து இன்று வரை கடைபிடித்து வருகிறேன்.

    இன்று (24th) காலை ETV தெலுகு சுபமஸ்து கிரஹபலம் நிகழ்ச்சியில் வாஸ்துவில் purse , பணம் எங்கு வைத்து கொள்வது பற்றி கூறினார். வாஸ்து சாஸ்திரம் பிரகாரம் , பணத்தை, purseசை pantin பின் பக்கம் வைக்ககூடாது என்றும், பணம் goddess லக்ஷ்மிக்கு சமம். பணத்தை சட்டையின் பாக்கெட்டில் / pant இன் முன் பாக்கெட்டில் வைக்க வேண்டும் என்று கூறினார் . இந்த நிகச்சியை பார்த்த உடன் , நினைவுக்கு வந்தது, வியட்நாம் வீடு பட காட்சி.

    அவர் ஒரு திர்கதரிசி. வாழ்கையில் நடந்ததை, நடக்கின்ற, நடக்க போவதை, தன் படங்கள் முலம், தான் பேசிய வசனங்கள் முலம் தெரிவித்து இருகிறார்.

    அவரிடம் இருந்து நாம் கற்று கொள்ளவேண்டியது நிறையவே இருக்கிறது . முக்கியமான ஒன்று , "செய்யும் தொழிலே தெய்வம்" என்பதை . இன்று வரை முடியவில்லை .

  10. #3399
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    முரளி /வாசு சார் - இந்த பதிவு "விளையாட்டு பிள்ளை " யை பற்றியது :

    இந்த படத்தில் சில குறைகளை தவிர்த்து இருந்தால் இன்னும் நன்றாக படம் ஓடியிருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து :

    1. காஞ்சனாவின் ரோல் மிகவும் குழப்பமான ஒன்று - NTயை லவ் பண்ணுகிறவர் போல தோன்றும் - கடைசியில் நான் NT யை ஒரு well wisher ஆகத்தான் எண்ணுகிறேன் என்று "U " turn அடித்துவிடுவார் - Well wisher ஆக இருந்தால் ஸ்விம்மிங் குளியல் எதற்கு ?

    2. இதே மாதிரி 'அவன் ஒரு சரித்திரம்' படத்திலும் ஒரு குழப்பம் இருக்கும்

    இவள்ளவு தடை இருப்பினும் , நன்றாகவே ஓடிய படம் என்பதை அறியும் போது மகிழ்ச்சியாக உள்ளது

    Ravi


  11. #3400
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    " In 1995 I had $7 bucks in my Pocket and I knew two things :

    I'm broke as Hell
    And one day I wont'be .

    You can achieve anything ! "

    - Dwayne "The Rock" Johnson

    How true it is - "you can achieve anything " - NT proved his talents in the fighting scenes in V.Pillai brought out nicely my Murali Sir and Vasu Sir


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •