-
29th October 2013, 12:19 PM
#3561
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
E& OE
டியர் கோபால் சார் - உங்கள் response யை எதிர்பார்த்தேன் - என்னை ஏமாற்றவில்லை நீங்கள்.
நீங்கள் சில என் சில பதிவுகளை பார்த்தால் , நான் மனமார ஒத்துகொண்டது இரண்டு விஷயங்கள் - - This thread is full of stalwarts and ardent devotees of NT -மற்ற யார் வந்தாலும் ஒரு சின்ன அணில் வேலை செய்வது போலத்தான் தெரியும் - இதை மறுக்க முடியாத உண்மை
இருந்தாலும் NT யை புதிய கோணத்தில் எழுத விரும்பினேன் - நான் justify பண்ணுவதாக எண்ண வேண்டாம் - எதில் சார் NT இல்லை ?
ஒரு சின்ன பிள்ளையார் சுழி போட்டுதானே நாம் பெரிய காரியங்களில் இறங்குகிறோம் - பலசமயம் அந்த பிள்ளையார் சுழிக்கும் நாம் பண்ணும் காரியங்களக்கும் சம்பந்தமே இருக்காது - ஆனால் அது நம் அசைக்க முடியாத நம்பிக்கை . ஒரு சின்ன healthy argument உங்களுடன் - எனக்கு தெரியும் இது என் முதல் கேஸ் - ஒரு பெரிய Vietnam வக்கீலுடன் மோதுகிறேன் - உங்கள் பழைய கவுனை உங்கள் permission இல்லாம எடுத்துக்கொண்டு argue பண்ணுகிறேன் - ஜெய்க்க வேண்டும் என்று ஆசீர்வாதம் கூறுங்கள் .
என்னுடைய அழுத்தமான வாதங்கள் :
1. சமீப பதிப்பில் , ஒரு அன்பர் எழுதினார் இங்கு - உங்களக்கு நினைவு இருக்கலாம் வணக்கம் சென்னையில் முதல் பார்ட் பாரத வில்லாஸ் யை நினைவு படுத்துகின்றது NT is well connected
2. Item நடிகைகளை அல்லது NT உடன் நடித்த கதாநாயகிகளை எவ்வளவு அழகாக கார்த்திக் சாரும் , வாசு சாரும் எழுதுகிறார்கள் - NT கொஞ்சமாகத்தான் வருகிறார் But how nicely NT is connected !!
3. பெரியாழ்வார் எதிலும் மாதவனைத்தான் பார்க்கிறார் - மலர்கள் அவருக்கு மாதவனாக தெரிகின்றன - நிறங்கள் அவருக்கு மாதவனாக தெரிகின்றன - இங்கு அவர் மாதவனை எப்படி அழகாக connect பண்ணுகிறார் ?
4. ஆண்டாள் பாடும்போது ( திருமால் பெருமையில்) - எல்லா இடத்திலும் நந்த லாலாவை தான் பார்க்கிறார் - காக்கை சிறகினிலே , தீயில் விரலை விடும் போதும் ----
இது ஒரு விதமான ஈடுபாடு - எங்கும் எதிலும் NT யை Connect பண்ணலாம் - பால குமாரனையும் connect பண்ணலாம் , கொலை வெறியும் connect பண்ணலாம் all such things will stop only with NT - விஷ்ணு புராணத்தில் - எந்த தேவர்களை வணங்கினாலும் - அது விஷ்ணுவிற்குதான் போய் சேருகின்றது - பல நதிகள் சமுத்திரத்தில் சேருவது போல் NT யும் அப்படித்தான், யாரை புகழ்தாலும் அது NT க்குத்தான் போய் சேரும்
கண்ண தாசனையும் ம் நாம் மரியாதை படுத்துகிறோம் இந்த திரியின் வாயிலாக -
மயக்கமா , கலக்கமா ஒரு positive energy யை உண்டாக்க கூடிய பாட்டு NT படத்தில் வரவேண்டியது ஆனால் ஜெமினி க்கு சென்றுவிட்டது - இந்த பாட்டு Gemini பற்றியே அல்ல - எப்படி சார் அவர் திரியில் வரும் ?
கண்ணதாசன் பாடல்கள் பல NT யின் படங்கள் மூலமா உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன என்று தானே சொன்னேன்
இப்படி NT யை எல்லா வகையிலும் connect பண்ணுவதால் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி - தவறு என்றால் மன்னிக்கவும் - all of you are doing a great work , how nicely each one of you is articulating about NT - how much devotion on NT ! - தமிழும் , NT யும் சேர்த்து வாழும் ஒரு திரி உண்டு என்றால் அது இதுதான் Thats all my honour !!
Ravi

-
29th October 2013 12:19 PM
# ADS
Circuit advertisement
-
29th October 2013, 12:39 PM
#3562
Junior Member
Newbie Hubber

Originally Posted by
g94127302
E& OE
டியர் கோபால் சார் - உங்கள் response யை எதிர்பார்த்தேன் - என்னை ஏமாற்றவில்லை நீங்கள்.
இப்படி NT யை எல்லா வகையிலும் connect பண்ணுவதால் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி - தவறு என்றால் மன்னிக்கவும் - all of you are doing a great work , how nicely each one of you is articulating about NT - how much devotion on NT ! - தமிழும் , NT யும் சேர்த்து வாழும் ஒரு திரி உண்டு என்றால் அது இதுதான் – That’s all my honour !!
Ravi


சும்மா கலாய்த்தேன் தலைவா. கோச்சுனுடாதீங்க
-
29th October 2013, 01:01 PM
#3563
Senior Member
Senior Hubber
கல் நாயக் சார்.. வாசு சார் இதற்காக இரண்டு ஆல்பம், மூன்று வீடியோ ரெடி பண்ணி- இது வராததால் என்ன செய்வதென்று தெரியாமல் மறுபடி மறுபடி போட்டுப் பார்கக் வீட்டில் ஏதோ பிரச்னை எனக் கேள்வி 
//கோபால் சாரும், சின்னக்கண்ணன் சாரும் எவ்வளவு ஆவலாக காத்திருக்கிறார்கள்? // ஏன் நீங்க இல்லையா..
முத்தாய்ப்பாக ரவிசார் பாணியில் : Nt யுடன் நடித்தவர்களும் புகழ் பெற்ற/பெறும் விதத்தை என்னென்று சொல்ல!
(கண்ணா எஸ்கேப்)

Originally Posted by
kalnayak
என்ன கார்த்திக் சார், உங்க வீட்டம்மாவிற்கு தெரிந்தால் உங்களுக்கு பிரச்சினை இல்லையா? சின்னக்கண்ணன் அவர்களை மிரட்டுகிறேர்களே? சரி சரி சீக்கிரம் ஆலம் பதிவை போடுங்களேன். கோபால் சாரும், சின்னக்கண்ணன் சாரும் எவ்வளவு ஆவலாக காத்திருக்கிறார்கள்? சத்தியப்ரியா பதிவும் மிக நன்றாக இருந்தது.
-
29th October 2013, 01:26 PM
#3564
Junior Member
Devoted Hubber
-
29th October 2013, 02:07 PM
#3565
Senior Member
Senior Hubber

Originally Posted by
chinnakkannan
கல் நாயக் சார்.. வாசு சார் இதற்காக இரண்டு ஆல்பம், மூன்று வீடியோ ரெடி பண்ணி- இது வராததால் என்ன செய்வதென்று தெரியாமல் மறுபடி மறுபடி போட்டுப் பார்கக் வீட்டில் ஏதோ பிரச்னை எனக் கேள்வி

//கோபால் சாரும், சின்னக்கண்ணன் சாரும் எவ்வளவு ஆவலாக காத்திருக்கிறார்கள்? // ஏன் நீங்க இல்லையா..
முத்தாய்ப்பாக ரவிசார் பாணியில் : Nt யுடன் நடித்தவர்களும் புகழ் பெற்ற/பெறும் விதத்தை என்னென்று சொல்ல!

(கண்ணா எஸ்கேப்)
ஏன் என்னோட ஆவல தெரிவிச்சு என்ர வீட்டுக்காரிக்கு கார்த்திக் சாரோட வீட்டம்மா தெரிவிச்சு என்ர வீட்டிலயும் பிரச்சினைய கிளப்பிரதுக்கா? என்னோட ஆவல் ... ஹி.ஹி.ஹி. by default. இதெல்லாம் தனியா சொல்லணுமா? இருந்தாலும் இதை பத்தி யாரோட வீட்டம்மாக்களும் என்ர வீட்டுக்காரிக்கு சொல்லிபோட மாட்டாங்கன்னு ஒரு தைரியத்துல... இங்க யாருக்கு முதல்ல தன்னோட ஆவல தன்னோட வீட்டுக்காரிக்கு சொல்ற தைரியம் இருக்கு?
இந்த விஷயத்துல வாசு சார் நெலமைய நெனைச்சா கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு!!!
-
29th October 2013, 05:24 PM
#3566
Senior Member
Veteran Hubber
நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் ஐட்டம் நடிகையர் ( 9 )
எழிலரசி, விழியழகி "விஜயஸ்ரீ"
அறுபதுகளின் இறுதி மற்றும் எழுபதுகளின் துவக்கத்தில் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் பளிச்சென வந்து மனத்தைக் கொள்ளை கொண்டவர். அருமையான கதாநாயகியாக வலம் வந்திருக்க வேண்டிய அழகுப்பதுமை. ஆனால் கதாநாயகியாக நடிக்க அழகாக மட்டும் இருந்தால் போதாது, வீரமாக அல்லது வெட்டித்தனமாக நீள வசனம் பேச வேண்டும். தொட்டதுக்கெல்லாம் குமுறிக்குமுறி அழ வேண்டும் என்பன போன்ற அளவுகோல்களை அன்றைய திரையுலகம் வைத்திருந்ததால் ஐட்டம் டைப் நாயகியாகவே தன்னுடைய திரைப்பட வாழ்வை முடித்துக்கொண்டவர். விஜயஸ்ரீ நடிகர்திலகத்தின் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்துப் பெருமை கொண்டார்.
"பாபு"வின் பாசமுள்ள காதலி
நடிகர்திலகத்தின் திரையுலக வாழ்க்கைப்பயணத்தில் முக்கிய மைல்கல் படங்களில் ஒன்றான "பாபு" படத்தில் நடிகர்திலகத்தின் ஜோடியாக காதலியாக நடித்து அனைவரையும் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் அழுத்திய அழகு தேவதை. கதாநாயகனான ரிக்ஷாக்காரன் மீது மாளிகையில் வாழும் பணக்கார பெண்ணுக்கு காதல் ஏற்படுவதாகக் காட்டி யதார்த்தத்தைக் கொல்லாமல், ரொம்ப சிம்பிளாக சாப்பாட்டுக் கூடைக்காரி ஒருத்திக்கு அந்த கைரிக்ஷா ஸ்டாண்டிலேயே தன்னழகுக்கு ஏற்ற ஒரு ரிக்ஷாக்காரனுடன் காதல் ஏற்படுவதாக அமைத்துவிட்டார் கதாசிரியர். அதற்கேற்றார்போல யாரும் எதிர்பாராதவிதமாக விஜயஸ்ரீயை ஜோடியாகப்போட்டு ரசிகர்களை புளகாங்கிதத்தில் தள்ளி விட்டார் இயக்குனரும் சினிபாரத் நிறுவனத்தின் முதலளியுமான ஏ.சி.திருலோகசந்தர். ஆனால் படம் வருவதற்கு முன்பு எதிர்த்தரப்பில் நடிகர்திலகத்தின் ஜோடி பற்றி ஏகத்துக்கும் கிண்டல். படம் வந்து ஜோடிப்பொறுத்தத்தைப் பார்த்ததும் கிண்டலடித்த வாய்கள் அடைத்துப்போயின. பின்னே இவர்தான் யாரை ஜோடியாகப் போட்டாலுமோ அல்லது 'அண்ணே இந்தப்படத்தில் உங்களுக்கு ஜோடியே இல்லேண்ணே' என்று சொன்னாலுமோ கவலைப் படாதவராயிற்றே. அப்புறம் என்ன?.
பாபு படத்தில் விஜயஸ்ரீயின் அறிமுகமே மிகவும் அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். அவள் பல்வேறு வீடுகளிலிருந்து கேரியர்களில் சாப்பாடு கொண்டுபோய் அலுவலகங்களில் கொடுத்து, அவர்கள் சாப்பிட்டு மீதம் வைத்ததை அருகிலிருக்கும் கைரிக்ஷா ஸ்டாண்டில் இருக்கும் ரிக்ஷாக்காரர்களுக்கு மதிய உணவாக சப்ளை செய்பவள். சாப்பாட்டு நேரத்தில் அனைத்து ரிக்ஷாக்காரர்களும் கூடியாயிற்று, இன்னும் சாப்பாட்டு கூடைக்காரியை காணோமே என்று நினைத்திருக்கும்போது, ஒரு சாமியார் காஞ்சி வரதராஜனை நினைத்து 'வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா' என்று ஆரம்பிக்க பசியோடு இருக்கும் ரிக்ஷாக்காரர்கள் 'எங்கேப்பா' என்று திரும்பிப்பார்க்க சாலையின் குறுக்கே உள்ள நடைபாலத்தின்மீது சலங்கை சத்தத்துடன் அழகு தேவதை அறிமுகம். அகன்ற பெரிய விழிகள், எடுப்பான மூக்கு, சிரிப்பை வஞ்சமில்லாமல் சிந்திக்கொண்டிருக்கும் இதழ்கள், அதனுள்ளிருந்து எட்டிப்பார்க்கும் மல்லிகைச்சரங்கள், இவையனைத்தையும் அழகுறப்பதிக்கப்பட்டிருக்கும் களையான முகம், கழுத்துக்கு கீழே அனைத்தும் இருக்க வேண்டிய விதத்தில், சுருக்கமாக சொன்னால் படைத்தவன் ஓவர்டைம் செய்து வடித்த அழகுச்சிலை.
நடிகர்திலகம் தனது ரிக்ஷா தோழர்களோடு "வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா, கஞ்சி கலையம்தனை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா" என்று ஆடிப்பாட, அதற்கேற்றார்போல நடைபாலம் மீது ஒயிலாக விஜயஸ்ரீ நடப்பதே அழகு, அதுவும் தலையிலிருக்கும் சாப்பாட்டுக்கூடையை இரண்டு கைகளாலும் பிடித்தபடி பாவாடை தாவணியில் நடைபோடுவதைப் பார்த்தபோது, கிரௌன் தியேட்டர் முழுக்க மலர்மழை பொழிவதுபோல இருந்தது .தலைவர் பாடியாடுவதும், தேவதை அதற்கேற்ப நடைபோடுவதும் கட் ஷாட்களில் மாறி மாறி காண்பிக்கப்படும். அதற்குக்காரணம் அவை படமாக்கப்பட்ட இடங்கள் வெவ்வேறு. நடிகர்திலகம் மற்ற ரிக்ஷாக்காரர்களோடு பாடியாடும் காட்சி படமாக்கப்பட்ட இடம் ஏ.வி.எம்.ஸ்டுடியோ. விஜயஸ்ரீ நடைபாலத்தில் நடந்து வரும் காட்சி படமாக்கப்பட்ட இடம் சென்னை எஸ்பிளனேட் பகுதியிலுள்ள அரசு பல்மருத்துவக் கல்லூரிக்கும், கோட்டை ரயில் நிலையத்துக்கும் இடையே உள்ள நடைபாலம். ஆனால் நடிகர்திலகம் ஆடும்போது அந்த பாலம் தங்கள் எதிரே இருப்பது போலவும், அதில் விஜயஸ்ரீ தன் கண்ணெதிரிலேயே நடந்து வந்துகொண்டு இருப்பது போலவும் மேலே பார்த்துக்கொண்டே பாடுவார். தன் கண்ணெதிரில் இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து நடிப்பதால்தான் அவர் நடிகர்திலகம்.
பாடலின் மூன்று சரணத்தையும் நடிகர்திலகம் பாடியாடி முடிக்கும்வரை நடைபாலத்திலேயே நடந்துகொண்டிருந்த விஜயஸ்ரீ (அதிலேயே அழகான சிரிப்பு, கண்சிமிட்டல், சின்ன முறைப்பு ரசிகர்களைக் கொல்லும் இடையசைவுகள் என்று அசத்துவார்) கடைசி பல்லவியின்போது பாலத்தின் படிகளில் இறங்கி வருவதை கீழே லோ-ஆங்கிளில் கேமராவை வைத்து இயக்குனர் படம் பிடித்திருக்க, ஒருகையால் தலையில் இருக்கும் கூடையைப் பிடித்துக்கொண்டு மறுகையால் பாவாடையை சற்றே தூக்கியபடி இறங்கி வர, ஒன்றிரண்டு வினாடிகள் மட்டும் அவரது இரண்டு கால்களும் கிட்டத்தட்ட மேற்கால்கள் வரை ('தொடைகள்வரை' என்ற வார்த்தையை பிரயோகிக்க திரியில் அனுமதி உண்டா?) தெரியும் அந்த நொடிகளில் நம் கண்களில் மின்னல் பாய்வது உண்மை. விரசமில்லாத, திணிக்கப்படாத, யதார்த்தமான கவர்ச்சி. இன்றைக்கும்கூட அப்படி ஒரு பெண் மேலிருந்து சேலையை அல்லது பாவாடையை சற்று உயர்த்திப்பிடித்தபடி இறங்கும்போது கீழேயிருந்து ஒருவன் மேல்நோக்கினால் யதார்த்தமாக கண்ணில் படக்கூடிய கவர்ச்சி. (இதில் விசேஷம் என்னவென்றால், இதே படத்தில் 'அந்தக்காலத்தில் கண்ணனும் கோபியரும்' என்ற பாடலின்போது முழு பாடலுக்கும் வெண்ணிறஆடை நிர்மலா நீச்சல் உடையிலேயே வந்தபோதிலும், இரண்டு வினாடிகள் விஜயஸ்ரீ தந்த கவர்ச்சித்தாக்கத்தை நிர்மலா தரவில்லை).
பாடலின் இறுதியில் ரிக்ஷா ஸ்டாண்டுக்குள் வந்ததும் ஒரு ரிக்ஷாக்காரர் கூடையை இறக்கி வைக்க விஜயஸ்ரீயும் நடிகர்திலகமும் போடும் டான்ஸ் ஸ்டெப் இருக்கே அதுதான் சூப்பர் டாப்கிலாஸ் ஒரிஜினல் ரிக்ஷாக்காரன் டான்ஸ். ரசிகர்களின் கைதட்டலில் தியேட்டரே அதிரும்.
பாட்டு முடிந்ததும் எல்லோருக்கும் கேரியர்களில் மீதமிருக்கும் உணவைக்கலந்து பரிமாற (அப்படிக் கலக்கப்பட்ட உணவில் இருக்கும் சுவை எந்த 5 ஸ்டார் ஹோட்டலிலும் கிடைக்காது ஓய்) எல்லோருக்கும் உணவை இலையில் சும்மா வழங்கிவிட்டு, நடிகர்திலகத்துக்கு கொடுக்கும்போது மட்டும் கொஞ்சம் உணவை வாயில் போட்டுப்பார்த்து, 'நல்லாயிருக்கு' என்பதுபோல முகமலர்ச்சியுடன் தலையாட்டிவிட்டு கொடுப்பது (நினைவிருக்கா? (மறக்குமா) கப்பலோட்டிய தமிழனில் மக்களுக்கு அன்னதானம் நடைபெறும்போது நடிகர்திலகம் சிறிது உணவை வாயில் போட்டு சுவைத்துப் பார்த்து திருப்தியுடன் தலையசைப்பாரே).
பாலாஜி வீட்டில் நடந்த உணர்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைந்த சம்பவத்தை ரயில்வே ட்ராக்கில் அமர்ந்து காதலி விஜயஸ்ரீயிடம் சொல்லுமிடம் ஒரு அழகான கவிதை, பாலாஜி கொடுத்த தொளதொள உடைகளை அணிந்து அவற்றை விவரிக்க அவள் வியப்புடனும் அகலவிரிந்த விழிகளுடனும் கேட்டுக்கொண்டிருக்க, ஒருகட்டத்தில் நடிகர்திலகம் உணர்ச்சி மேலிட்டு "எனக்கு மட்டும் சக்தியிருந்தா என் இதயத்தை பிடுங்கி அவர் காலடியில் போட்டிருப்பேன்" என்று நெகிழ்வார். அந்த சமயம் ட்ராக்கில் ரயில்வர இருவரும் பதறி எழுந்து விலகி கட்டியனைத்துக்கொள்வர். "ராத்திரி எட்டுமணிக்கு மறுபடியும் வாரியா?" என்று கேட்கும் காதலியிடம் "எதுக்கு?. எட்டுமணி ரயில் வரும்போது கட்டிப்புடிச்சிக்கவா?" என்று இவர் கேட்க, இருவரும் கள்ளமில்லாமல் சிரிக்க.... ("கமல் சார் இந்த காட்சி எப்படி?". "அய்யோ கவிதை.... கவிதை....").
பாபு படத்தின் பிற்பகுதியில் நடிகர்திலகம் வயதான தோற்றத்தில் வர வேண்டும். அதுமட்டுமல்ல தனக்கென்று ஒரு குடும்பம், ஒரு வாழ்க்கை என்று இல்லாமல் தனக்கு ஒருவேளை சோறு போட்டு வாஞ்சையுடன் சகோதரன் என்றழைத்த கண்ணியவானின் நொடித்த குடும்பத்துக்காக உழைக்க வேண்டும். அதற்கு அவன் காதலித்த பெண்ணை அவன் வாழ்க்கையிலிருந்து அகற்ற வேண்டும். அதற்கு கதாசிரியர் மற்றும் இயக்குனர் தேர்ந்தெடுத்த வழி 'கீசக வாதம்' தெருக்கூத்து நாடகம்.
கைரிக்ஷா தொழிலாளர்கள் மட்டுமின்றி அந்த ஏரியாவில் டீக்கடை நடத்தும் வி.கே.ஆர்., வட்டித்தொழில் நடத்தும் வாசு என அனைவரும் பங்கேற்கிறார்கள். பீமனாக நடிகர்திலகம், கீசனாக நாகேஷ், சைரந்திரியாக சாப்பாட்டுக்கூடைகாரி' விஜயஸ்ரீ. இதனிடையே இவளை அடையத்துடிக்கும் பொறுக்கி நம்பிராஜன் சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறான். கூத்தின் உச்சகட்ட காட்சியில் பீமனுக்கும் கீசகனுக்கும் மேடையில் சண்டை மும்முரமாக நடந்து கொண்டிருக்க, வாத்தியங்கள் உச்சத்தில் முழங்கிக்கொண்டிருக்க, அதே சமயம் கூத்தில் தன்னுடைய பார்ட் முடிந்துவிட்டதால், உள்ளே உடைமாற்றிக்கொள்ளும் விஜயஸ்ரீயை காமுகன் நம்பிராஜன் சீரழிக்கிறான். ஒட்டுமொத்த ஏரியாவும் தெருக்கூத்தில் மூழ்கியிருக்க வாத்தியங்களின் சத்தத்தில் அவளுடைய அலறல், அபயக்குரல் யாருக்கும் கேட்கவில்லை. பாவம் குழந்தை ஒற்றையாகப் போராடுகிறாள். பலனில்லை. அந்தப் போராட்டத்தில் காமுகனால் அவள் கற்பும், எமனால் அவள் உயிரும் அடுத்தடுத்து பறிக்கப்படுகின்றன.
கூத்து முடிந்து முதல் ஆளாக உடைமாற்றிக்கொள்ள உள்ளே வரும் பாபு (நடிகர்திலகம்) உச்சகட்ட அதிர்ச்சியுடன், அவள் கிடக்கும் கோலத்தைக்கண்டு சட்டென்று முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு, முகத்தைத் திருப்பிய நிலையிலேயே அவள்மீது ஒரு துணியை எடுத்துப் போர்த்துவதன் மூலம் அவள் கிடந்த கோலம் நமக்கு உணர்த்தப்படுகிறது.
படம் முழுக்க வருவார் என்று ஆவலோடு நாம் இருக்க, பளிச்சென்று மின்னலாகத் தோன்றி பாதியில் மறைந்து விட்டார், நடிகர்திலகத்தின் கதாநாயகிகளில் இவரும் ஒருவர் என்று ரசிகர்களின் இதய சிம்மாசனங்களில் அமர்ந்துவிட்டார் எழிலரசி. விஜயஸ்ரீ.
1971 தீபாவளியன்று இப்படம் வெளியானது. அந்த ஆண்டு நடிகர்திலகத்தின் 10 படங்கள் வெளியாயின. அந்த ஆண்டு மட்டும் அவருடன் ஜோடியாக நடித்தவர்கள் பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி, ஜெயலலிதா, வெண்ணிறஆடை நிர்மலா (அதிசயம் விஜயா இல்லை). இதோடு இன்னும் இரு கதாநாயகிகளான லட்சுமி தங்கையாகவும், வாணிஸ்ரீ தம்பி மனைவியாகவும் நடித்திருந்தனர். இது போதாதென்று ஜோடியில்லாமலும் ஒரு படம். இவற்றுக்கிடையே விஜயஸ்ரீயையும் தன்னுடன் கதாநாயகியாக நடிக்க வைத்து இப்பெரும் நடிகைகளின் பட்டியலில் இடம்பெற வைத்த எங்கள் தலைவன் நடிகர்திலகத்தின் பெருமையே பெருமை. (ஒரு பாட்டுக்கு மட்டும் தன்னுடன் ஆட வைப்பதை பலர் செய்யலாம். ஆனால் தனக்கு ஜோடியாக என்றால் பெரிய நடிகையிடமே ஓடுவார்கள்).
பல படங்களில் கவர்ச்சி நடனம் மட்டுமே ஆடிவந்த விஜயஸ்ரீ திருவனந்தபுரத்தில் மெரிலாண்ட் ஸ்டுடியோ வைத்திருந்த தயாரிப்பாளரும் இயக்குனரும் ஆன 'மெரிலாண்ட்' சுப்பிரமணியம் தயாரித்த 'யானைவளர்த்த வானம்பாடி மகன்', 'மலை நாட்டு மங்கை' போன்ற டார்ஜான் படங்களில் கதாநாயகியாக நடித்தார். அவருடைய ஆஸ்தான கதாநாயகியும் விஜயஸ்ரீதான். (கேமரா கர்ணனுக்கு ராஜ்கோகிலா போல). யாரும் எதிர்பாராத விதமாக மிகச்சிறிய வயதில் 1974 வாக்கில் திடீர் மரணம் அடைந்து அதிர்ச்சியளித்தார் விஜயஸ்ரீ. எப்படி இறந்தார்? எதனால் இறந்தார்? என்பன போன்ற மர்மங்கள் வெகு நாட்கள் நீடித்தன. ஆனால் உண்மை கண்டறியப்படவேயில்லை.
அன்றைய இளமைத் தோற்றத்துடனேயே நம் இதயங்களில் நிரந்தரமாக நிறைந்து வாழ்கிறார் எழிலரசி விஜயஸ்ரீ......
-
29th October 2013, 06:26 PM
#3567
Senior Member
Senior Hubber
//எழிலரசி விஜயஸ்ரீ......// கார்த்திக் சார்.. ஜோரான பதிவு.. பட் விஜய ஸ்ரீயைக் கதானாயகின்னுல்லாம் சொல்ல முடியாது..;படத்துல அரை மணிக்குள்ற அவங்களோட போர்ஷன் முடிஞ்சு போய்விடும் என நினைவு..தண்டைச் சத்தம் கலகலன்னு முன்னால் வருகுது வாழைத்தண்டு போலக் காலிரண்டு பின்னால் வருகுது.-இந்த வரியை ஆரம்பித்துத் தான் இங்கேயே நுழைந்தேன்..
.சாதம் போல சிரிக்கிறா..மீன் கொழம்பு போல மணக்குறா..ரகசியமா ஏதும் சொன்னா ரசத்தப் போல கொதிக்கிறா...வரிகளுக்கு ஏற்ற தோற்றம்..வண்ணப் படத்தில் நடித்திருந்தாரா தெரியாது.. ந.தியின் நடனம் வெகு நன்னாயிட்டு இருக்கும்..
//தன் கண்ணெதிரில் இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து நடிப்பதால்தான் அவர் நடிகர்திலகம். // இந்தத் தகவல்- அதாவது பாலம் ஒரு இடம், பாடுவது ஒரு இடம் என்பது எனக்குப் புதிது.. ஆனால் நடிகர் திலகத்தின் நடிப்பு +கற்பனை வளம் சொல்லியா தெரிய வேண்டும்..
எத்தனை வருடங்கள் ஆனால் என்ன..அழகு அழகு தான்..கறுப்பு வெள்ளையில் கண்டிருந்தாலும்..
Last edited by chinnakkannan; 29th October 2013 at 06:37 PM.
-
29th October 2013, 06:35 PM
#3568
Junior Member
Seasoned Hubber
" சுருக்கமாக சொன்னால் படைத்தவன் ஓவர்டைம் செய்து வடித்த அழகுச்சிலை. "
கார்த்திக் சார் - அருமை . அந்த காலத்தில் விஜயஸ்ரீக்கு அஞ்சலி செலுத்தாமல் இருந்திருக்கலாம் - ஆனால் அதையும் சேர்த்து இப்போது இந்த திரியின் வாயிலாக எங்கள் எல்லோரையும் செலுத்த வைத்துவிட்டீர்கள் . Item நடிகைகள் வாழ்க்கையே ஒரு விட்டில் பூச்சி போன்றது - கவர்ச்சியை முதலாக போடுபவர்கள் நிலையான வாழ்வை கண்டதில்லை - விஜயஸ்ரீயின் முடிவு ஒரு கேள்விக்குறியாகவே முடிந்தது
great posting Sir

-
29th October 2013, 06:49 PM
#3569
Junior Member
Seasoned Hubber
கோபால் சார் - உங்கள் கலாய்ப்பில் பெரியாழ்வார் , பாரதியார் , ஆண்டாள் எல்லோரையும் ஒரு மணி நேரத்துக்குள் என்னை கொண்டு வர வைத்துவிட்டீர்கள் . உங்களுக்கு நன்றி கூற கடமை பட்டுஇருக்கிறேன்- என் தாழ்மையான எண்ணங்களை உங்களை போல் நினைபவர்கள் இந்த திரியில் இருந்தால்அவர்களுக்கும் சமர்பிக்க வழி செய்து விட்டீர்கள் . கொஞ்ச நேரம் ஒரு பெரிய வக்கீலுடன் வாதாடிய பெருமை இன்று எனக்கு கிடைத்தது . நீங்கள் சொன்ன கலாய்ப்பிலும் NT யை Connect பண்ணலாம் - அவருக்கு இப்படி கலாய்க்க தெரியாது . 
-
29th October 2013, 06:56 PM
#3570
Junior Member
Seasoned Hubber
Other views about songs posted in this thread - contd--
)
Damodaran Pachaiappan
Damodaran Pachaiappan 2 weeks ago
Thanks for uploading this rare gem from MSV , Shivaji and TMS. But I think the name of the movie is Manitharil Manikkam .
Reply · Vote UpVote Down
goldtreat
goldtreat 2 weeks ago
Thank you Damodar, for correcting. It's "Manitharil Manikkam" as you said.
Reply · Vote UpVote Down
All Comments (5)
raveendran gomathi
it was just a duplicate knife it will fold. but sivaji will act like he was really killed
Varun Mani
SIVAJIIIIIIIIIIIII SSSSSSSSSSSSSSSSSSSUUUUUUUUUUU*UUUUUPPPPPPPPPPEEEE RRRR!!
Varun Mani
Mashalllah Mashallah!! what performance... I will sing 4 u , i will dance 4 u!! what amazing movies india has made. Nobody even care 4 these Outstanding classics. True GOLD!
Bookmarks