Page 386 of 399 FirstFirst ... 286336376384385386387388396 ... LastLast
Results 3,851 to 3,860 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #3851
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார் ஒரு ஆலோசனை கூறியுள்ளார். அதற்கு இன்னும் அனைவரிடமிருந்தும் பதில் வரவில்லை. அதற்குள் மீண்டும் மற்றவர்களைப் பற்றியும் தன்னைப் பற்றியும் கூறிக் கருத்துக்களைத் திணிப்பது எந்த விதத்தில் ஜனநாயகம். வாசு சார் அனைவரின் கருத்துக்களையும் அறிந்து ஒரு தீர்வு செய்யும் வரையில் பொறுக்க வேண்டியது தானே நியாயம். அதற்குள் என்னைப் பற்றி தேவையற்ற பதிவு ப்ரொவொகேஷன் என்று எழுதினால் நான் அமைதியாக இருக்க வேண்டுமா..

    வாசு சார் நீங்களே சொல்லுங்கள்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3852
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Nadigar Thilagam Films in TV Channels – 11.11..2013 – 17.11.2013


    Lakshmi Vanthachu – 11.11.2013 – Zee Tamizh – 2.30 pm

    Paalaadai – J Movies – 13.11.2013 – 1 pm
    Padikkadha Medhai – J Movies – 16.11.2013 – 1 pm
    Enga Mama – Mega 24 – 13.11.2013 – 8.30 am
    Vazhkkai – Mega 24 – 17.11.2013 – 8.30 am
    Gnana Oli – Mega 24 – 16.11.2013 – 2.30 pm
    Punniya Bhoomi – Mega 24 – 12.11.2013 – 6 pm
    Nermai – 13.11.2013 – Mega 24 – 6 pm
    Bhaktha Thukaram – 16.11.2013 – Mega TV – 9.30 am
    Santhippu – 16.11.2013 – Mega TV – 12.00 noon
    Vaa Kannaa Vaa – 13.11.2013 – Mega Tv – 1.30 pm
    Bandham – 12.11.2013 – Murasu TV – 7.30 pm
    Uthama Puthiran – 16.11.2013 – Murasu TV – 7.30 pm
    Bandham – 15.11.2013 – Polimer TV – 2.00 pm
    Bandha Pasam – 12.11.2013 – Raj Digital – 10.00 am
    Vaazhkkai – 17.11.2013 – Zee Tamizh – 2.30 pm
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #3853
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நண்பர்களே,
    குறிப்பாக வாசு சார்
    தங்களுடைய தீர்ப்பு அல்லது தீர்வு வருவதற்கு முன்னரே கோபால் சாரின் பதிவுகள் மீண்டும் மீண்டும் மற்றவர்களைப் புண்படுத்தும் வகையில் வந்து கொண்டிருக்கின்றன.

    நடிப்புப் பள்ளித் திரியில் நடிகர் திலகத்தின் நடிப்பிலக்கணம் மக்களுக்கு எப்படி பயன் படுகிறது, குறிப்பாக ஒரு குறிப்பிட்ட வகை காட்சியமைப்பு இரண்டு படங்களில் வரும் போது அதை எவ்வாறு அவர் வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார் என்பது ஒரு இலக்கணமாக, பாடமாக அமைந்துள்ளது. அதற்கு உதாரணம் பணி ஓய்வுக் காட்சி. ஒரே பணி ஓய்வுக் காட்சி, இரண்டு வெவ்வேறு தொழிலில் இருப்பவர்கள் அதனை எப்படி அணுகுகிறார்கள் என்பது தான் இதனுடைய context. வியட்நாம் வீடு மற்றும் சிரஞ்சீவி இரு படங்களிலும் பதவி ஓய்வு பெறும் போது அந்தந்த பாத்திரம் எப்படி அணுகும் என்பதைத் தான் ஒப்பீடாக அங்கு பதிந்திருக்கிறேன். அந்த இரு பதிவுகளையும் தங்கள் பார்வைக்குக் கீழே தருகிறேன்.


    நடிகர் திலகமும் நடிப்பிலக்கணமும்

    சிரஞ்சீவி பணி ஒய்வுக் காட்சி

    நடிகர் திலகத்தின் படங்களில் ஒரே மாதிரியான சூழலில் வெவ்வேறு படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களின் உணர்ச்சிகள், பாத்திரப் படைப்பு இவற்றைப் பொறுத்து அவருடைய நடிப்பில் வேறுபாடுகள் காணப் படும்., அப்படியான ஒரு சூழல் தான் பணி ஓய்வு. நடிகர் திலகம் திரைப்படங்களில், வியட்நாம் வீடு திரைப்பட பணி ஓய்வு காட்சி உலகப் பிரசித்தம். அதைப் பற்றி பலவாறு விவாதிக்கப் பட்டுள்ளது. அதே பணி ஓய்வுக் காட்சியில் உலகப் பெரு நடிகரின் நடிப்பில் மற்றோர் பரிமாணத்தை இப்போது காண உள்ளோம்.

    டேவிட் சிரஞ்சீவி .. TOPAZ எனப்படும் கப்பல் துப்புரவுத் தொழிலாளி. தன் தொழிலை உயிருக்கும் மேலாக மதிப்பவன். தான் உயிருடன் இருக்கும் வரையில் அத்தொழிலைச் செய்ய வேண்டும் என விரும்புபவன். ஆங்கிலோ இந்தியன். தன்னுடைய பணியில் மூழ்கி விட்டால் காலம் நேரம், நாள் தேதி எதையும் பார்க்காமல் பணியாற்றுவான். தன்னுடைய வயதையே மறந்து விடுவான். உடல் முதுமையடைந்தாலும் மனம் முதுமையடையாது.

    அப்படி ஒரு நாள் பணியாற்றும் போது கப்பல் கேப்டனிடமிருந்து அழைப்பு. அவருடைய உழைப்பில் தங்கள் மனதைப் பறி கொடுத்தாலும் கடமை நிமித்தம் அவரை அழைத்து அவருடைய ஓய்வு அறிவிப்பை சொல்ல வேண்டும். காரணம் முதல் நாள் அவர் ஓய்வு பெற்று விட்டதை அறியாமல் அவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

    அப்படி அழைக்கப் பட்ட பின் அந்த கேப்டன் அவரிடம் ஓய்வைப் பற்றி சொல்வதாக்க் காட்சி யமைப்பு.. கேப்டனுடன் சக மாலுமிகளும் கப்பல் டாக்டரும் இருக்கிறார்கள்.

    டாக்டர் மெல்ல மெல்ல உரையாடலைத் துவக்கி அவருடைய சேவையைப் பாராட்டி பின்னர் ஒரு வழியாக அவருடைய ஓய்வு அறிவிப்பினைக் கூறுகிறார். அதைக் கேட்டதும் சிரஞ்சீவி எப்படி பாதிக்கப் படுகிறான் அதற்கு அவனுடைய Reaction என்ன இது தான் இந்த காட்சியின் Concept.

    இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பு வித்தியாசமாக இருக்கும். தன் உணர்ச்சிகளை அதிகம் வெளிக் காட்டமாட்டார். அப்படி வெளிப்படுத்தினாலும் அதில் ஒரு பக்குவம் இருக்கும். ஒவ்வொரு பிரேமிலும் மெய் சிலிர்க்க வைக்கும் நடிப்பினைத் தந்துள்ளார். இதை காட்சி வாரியாக இங்கே காணலாம்.

    டாக்டராக வி.கோபால கிருஷ்ணனும், கேப்டனாக ஜெய்கணேஷும் மிகச் சிறப்பாக நடித்துள்ளது பாராட்டத் தக்கதாகும். அதுவும் ஓய்வைப் பற்றிய விஷயத்தை ஜெய் கணேஷ் தயங்கித் தயங்கி சொல்வது அவருடைய கேரக்டரின் மேல் இருக்கும் மதிப்பினை பல படி உயர்த்துகிறது.

    இப்போது காட்சியைப் பார்ப்போம்.



    எடுத்த வுடனேயே அறைக்குள் சிரஞ்சீவி நுழையும் போது அவருடைய நடையைக் கவனியுங்கள். எப்போதும் போல் பணியில் இருக்கும் போது சகஜமாக பழகும் தோரணையில் உரிமையோடு காலை வணக்கம் சொல்வதைப் பாருங்கள்.

    Good Morning all of you என்று சொல்லும் போதே அந்த உரிமையைத் தன் குரலில் வெளிப்படுத்தி விடுவார்.

    கேப்டனும் மற்றவர்களும் பதில் வணக்கம் சொல்கிறார்கள்.

    சிரஞ்சீவி.. “கூப்பிடனுப்பினீர்களாமே.”

    கேப்டன்.. “நாங்கள் கூப்பிட்டது டோபாஸ் சிரஞ்சீவியை அல்ல, அங்கிள் சிரஞ்சீவியை”

    சிரஞ்சீவி... புரியாமல் விழிக்கும் பார்வை...

    கேப்டன்.. “இன்னுமா புரியலே.. ஐ வாண்ட் டு சீ அங்கிள் டேவிட் சிரஞ்சீவி”
    ... இந்த இடத்தில் கேப்டன் மறைமுகமாக தன் கருத்தை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்.

    சிரஞ்சீவி.. கேப்டனின் உள் மனதில் இருப்பது தெரியாமல், அவர் உடை மாற்றிக் கொண்டு வரச் சொல்கிறார் என்பதாகப் புரிந்து கொண்டு Now I got it எனச் சொல்லி புன் முறுவல் பூக்கிறார் Just a minute please என்று கூறி விட்டு வெளியேறுகிறார். இந்த இடத்தில் நடிகர் திலகத்தின் முகத்தில் கவனியுங்கள். கேப்டன் உள் மனதில் என்ன உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் யதார்த்தமான அர்த்தம் புரிந்து கொண்டு சிரிப்பதை.
    கவனியுங்கள், உடை மாற்றிக் கொண்டு சாதாரண உடையில் அறைக்குள் வரும் போதே அவருடைய நடை உடை பாவனையில் ஒரு முதியவரின் ஆளுமை வெளிப்படுவதை..

    இந்த இடத்தில் சிரஞ்சீவியை ஒரு பயணியைப் போல், வயதில் மூத்த ஒருவருக்கு தரும் மரியாதையைத் தரும் வகையில் எழுந்து நிற்கிறார்கள். Good Morning Uncle என காலை வணக்கம் செய்கிறார்கள். சிரஞ்சீவி அமருங்கள் எனச் சொல்லும் போது, நீங்கள் உட்கார்ந்தால் தான் நாங்கள் உட்காருவோம் எனச் சொல்கிறார்கள்.

    இப்போது நடிகர் திலகம் அமரும் தோரணையைப் பாருங்கள். அதில் தன்னுடைய டோபாஸ் உத்தியோகத்தை மறக்காமல் அவர்களைத் தன் உயரதிகாரிகளாகவே தொடர்ந்து பாவித்து கை கட்டிக் கொண்டு அமர்வதை.

    கேப்டன்... “நீங்கள் இந்த கப்பலுக்கு செஞ்ச சேவைகளெல்லாம் எண்ணிப் பார்க்கிறோம். அது, ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு செய்கிற பாசம் மிகுந்த காரியங்கள் மாதிரி எங்க கண்ணு முன்னாடியே தெரியுது.”

    சிரஞ்சீவி... அடக்கமான புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறார்..
    இந்த புன்னகையைப் பாருங்கள்...

    கேப்டன்.. “ஒரு முறை புயலில் இந்த கப்பல் சிக்கிக் கிட்டப்போ உங்க புத்தி கூர்மையாலே அதைக் காப்பாத்தினீங்களே. அந்த இன்சிடெண்ட் இன்னும் ரிகார்ட்ஸ்லே எவர்கிரீனா இருக்கு...”
    இந்த இடத்தில் கேப்டனின் முக பாவத்தில் தான் சொல்ல வந்த்தை சொல்லப் போகிறோம் என்கிற முஸ்தீபு ஆரம்பிக்கிறது.
    ஜெய்கணேஷின் சிறப்பான நடிப்பு இக்காட்சிக்கு சிறப்பு.

    சிரஞ்சீவி.. ஏதும் பேசாமல், ஏதோ என்னால் ஆனதை செய்ய முடிந்த்தே என்கிற சந்தோஷம் என்பதைத் தன் முகத்தின் புன்னகையால் உணர்த்துகிறார்.

    இந்த இடத்தில் நடிகர் திலகத்தின் முகத்தைப் பாருங்கள்..

    கேப்டன்.. “அங்கிள்,, இந்த கப்பல்லே எந்த இடத்திலே என்ன கோளாறு வந்தாலும் உடனே நீங்கள் வந்து சரி பண்ணிடுவீங்க. டோடலி, யூ ஆர் ஏன் ஆல்ரவுண்டர். “

    சிரஞ்சீவி.. இதற்கும் அடக்கமான புன்னகை. பதில் ஏதுமில்லை.

    இங்கும் நடிகர் திலகத்தின் புன்னகையில் சற்றே வித்தியாசத்தைப் பாருங்கள்.

    கேப்டன்.. சற்றே உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு ஒரு கேப்டன் என்கிற தொனியைத் துவக்குகிறார். “அங்கிள் இந்த கப்பலுக்கு நீங்க செய்திருக்கிற காரியங்களெல்லாம் வெறும் காரியங்களல்ல.. காவியங்கள்... இருந்தாலும் யூ ஆர் வெரி வெரி சிம்பிள் அண்ட் ஹம்பிள்..”

    சிரஞ்சீவி... கேப்டன் வெட்கமும் கூச்சமும் மேலிட ஏதோ சொல்ல வருகிறார்.

    டாக்டர் மறித்து... “இன்னும் உங்களைப் பத்தி சொல்ல வேண்டியது நெறைய இருக்கு...”

    சிரஞ்சீவி... சிரிக்கிறார்..

    கேப்டன்..... “அங்கிள்... நீங்க விரும்பியிருந்தா இதை விட பெரிய நிலைக்கே போயிருக்கலாம்.. ஆனா துப்புரவுத் தொழிலையே தொடர்ந்து செய்து அதற்கு ஒரு தெய்வீகத் தன்மையே கொடுத்துட்டீங்க..”

    சிரஞ்சீவி.. ஏதோ விஷயம் இருப்பதை இப்போது தான் உணர்கிறார். தன் மனதில் ஏற்படும் சந்தேகத்தைக் கேட்க விழைகிறார். “கேப்டன்... நீங்க பேசிட்டீங்க.. கொஞ்சம் நான் பேசலாமா...”

    இதைச் சொல்லும் போது நடிகர் திலகத்தின் முகத்தைப் பாருங்கள். இந்த வார்த்தைகளை அப்படியே உணர்வாய் பிரதிபலிப்பதை..

    கேப்டன் ... “Of course...”

    சிரஞ்சீவி ... சிரிக்கிறார்... “நீங்க என்னைப் பத்தி நெறைய சொல்லிட்டீங்க.. நெறையைத் தான் சொன்னீங்களே தவிர குறையை சொல்ல்லே. அதையும் சொல்லியிருந்தீங்கன்னா என்னை நான் திருத்திக்கிறதுக்கு கொஞ்சம் வசதியா இருந்திருக்கும். அவ்வளவு தான்... வெல்.. இப்போ எதுக்காக இதெல்லாம் என்கிட்டே சொல்றீங்க..”

    ஓய்வு அறிவிப்பினைக் கேட்ட வுடன் தன்னுடைய மனத் துடிப்பினையும் ரீ.யேக்ஷனையும் அங்கே வெளிக் காட்ட விருப்பமில்லாமல் வெளியில் வந்து விடுகிறார். பார்ப்பவர்கள் எல்லோரும் ஏதோ விழுந்து புரண்டு காட்சியை டிராமா ஆக்கி விடுவார் என்று நினைக்கும் போது அதைப் பொய்யாக்கி அமைதியாக ஆனால் உடல் மற்றும் மன வலியை மட்டும் வெளிக்காட்டுகிறார். மன சாட்சி அவருக்குள் புகுந்து அவருடைய சேவை மனப்பான்மையை எடுத்துச் சொல்லி சகஜ நிலைமைக்கு மாற்றுகிறது. இப்போது அறைக்குத் திரும்ப எத்தனிக்கும் போது அவருடைய தோரணையைப் பாருங்கள்.

    அவருடைய மனசாட்சி சொல்லும் ஒரு வரி... நினைத்தாலே புல்லரிக்க வைக்கிறது..

    “கண்ணீரால் கரைந்து போகும் சாதாரண சிரஞ்சீவியில்லை நீ.. காலத்தை வென்று நிற்கும் மாபெரும் சிரஞ்சீவி... கேரி ஆன் மேன். கேரி ஆன் பெல்லோ.. கேரி ஆன்...”

    சிரஞ்சீவி.. யூ ஆர் கரெக்ட்.. என்று ஒரு விரலை உயர்த்தி சொல்லி சமாதான மடைந்து சிரிக்கிறார்.. ஓ வாட் ஏ foold ஐ எம்...

    யாருக்காவும் காத்திருக்காமல் அலைகள் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்வது போல் சிரஞ்சீவியும் தொடர்ந்து தன் சேவையாற்ற செல்வதை சிம்பாலிக்காக காட்டுவது பாராட்டுக்குரியது. இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் இங்கே பாராட்டைப் பெறுகிறார்கள்.

    அறைக்குள் நுழைகிறார் சிரஞ்சீவி. தன்னுடைய லட்சியம் தான் வளர்ந்த இந்த கப்பலிலேயே கடைநிலை ஊழியனாகவே சாக வேண்டும் என்பதாக கூறி சென்னை சென்றடையும் வரை இக்கப்பலில் துப்புரவுத் தொழிலாளியாகவே பணி புரிய அனுமதி கோருகிறார். கேப்டன் அனுமதித்து அவருக்கு கப்பலில் வி.ஐ.பி. அந்தஸ்துடன் மரியாதை தரச் சொல்லி மேலிட உத்தரவையும் கூறுவதுடன் காட்சி முடிகிறது.

    ……..

    இந்தக் காட்சியில் என்ன இருக்கிறது என்று சிலர் நினைக்கலாம். உன்னிப்பாக்க் கவனித்தால் புரியும். குறிப்பாக புதியதாக நடிக்க வருபவர்களுக்கு இந்த காட்சியும் விளக்கமும் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். முதன் முதலில் காமிரா முன் நடிக்க வருபவர்களுக்கு இப்படி ஒரு காட்சியை விவரிக்கும் போது எந்த விதமான ரியாக்ஷன் தர வேண்டும் என புரியாமல் விழிப்பார்கள். அல்லது ஹாலிவுட் சினிமாக்களைப் போல் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஸ்டட்டில் நடிப்பு என்ற சாக்கில் முகத்தை கான்க்ரீட் சுவரைப் போல் வைத்திருப்பார்கள்.

    அப்படி நடிக்க வரும் புதியவர்களுக்கு நடிகர் திலகத்தின் படங்கள் ஒரு இலக்கணப் புத்தகமாக விளங்குவது சிறப்பு. இது வெறும் பேச்சு வழக்கில் கூறப் படுவதல்ல. உண்மையான கூற்றாகும். ஒவ்வொரு காட்சிக்கும் அவருடைய நடிப்பு எப்படி இலக்கணமாக விளங்குகிறது என்பதை நாம் இங்கே கோபால் சாரின் பதிவுகளின் மூலம் தெளிவாக ஏற்கெனவே அறிந்து வருகிறோம். அதனுடைய தொடர்ச்சியாக துணைப் பதிவுகளாக என்னுடைய பதிவுகளைத் தர விரும்புகிறேன். அதில் ஒன்றே இந்த சிரஞ்சீவித்துவமான காட்சி.
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு நடிப்பிலக்கணம், நடிப்பு அகராதி என்பதை இந்தத் திரியின் மூலம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளலாம்.


    சிரஞ்சீவி


    தயாரிப்பு குருராம் மூவீஸ்
    இசை – எம்.எஸ்.விஸ்வநாதன்
    ஒளிப்பதிவு – எம்.சி.சேகர்
    கதை வசனம் – எஸ்.ஜெகதீசன்
    படத்தொகுப்பு, இயக்கம் – கே.ஷங்கர்
    வெளியான நாள் 17.02.1984
    இதன் தொடர் பதிவு


    வியட்நாம் வீடு-சிரஞ்சீவி ... பணி ஓய்வுக் காட்சி ... ஒப்பீடு

    வியட்நாம் வீடு திரைப்படத்தின் நாயகன் பத்மநாபன் ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவன். தொழிலை தெய்வமாக நினைப்பவன்.
    டேவிட் சிரஞ்சீவி ஒரு ஆங்கிலோ இந்தியன். இவனும் தொழிலை தெய்வமாக நினைப்பவன்.

    பத்மநாபன் இந்திய கலாச்சாரத்தில் வளர்ந்தவன். சற்று உணர்ச்சி வசப் படுபவன். சிரஞ்சீவியும் இந்தியக் கலாச்சாரத்தில் வளர்ந்தாலும் எதையும் ஆழ்ந்து உணர்ச்சி வசப் படாமல் அணுகக் கூடிய திறமை பெற்றவன்.

    இருவருமே பணியாற்றும் தொழிலில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து வாழ்பவர்கள்.

    இருவருக்குமே தங்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் கட்டத்தை முற்றிலும் மறந்து பணியாற்றி, மேலதிகாரிகள் சொன்ன பிறகே அதனை உணருகிறார்கள்.

    ஆனால் அந்த பணி ஓய்வினை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள், அதற்கு அவர்களுடைய Reaction என்பது தான் இங்கு வேறு பாட்டைக் காண்பிக்கிறது.

    ஒரு நடிகன் தன் பாத்திரம் வாழ்நாள் முழுதும் பேசப் பட வேண்டும் என்றால் அதனை நன்கு உணர்ந்து அதனுடைய contextஐ நன்றாகப் புரிந்து கொண்டு தன்னுடைய சொந்தத் திறமை, சிந்தனை அனைத்தையும் பிரயோகித்து அதனுள் புகுந்து, அப்பாத்திரத்தை நிலை நிறுத்த வேண்டும். இதனை வலியுறுத்துவது நடிகர் திலகத்தின் படங்களே.

    இப்படி ஒரு காட்சி வரும் போது ஒரு புது நடிகனுக்கு சிந்தனை சட்டென்று தோன்றாது. இயக்குநர் விளக்கினாலும் கூட எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் அவரே எடுத்துக் கூற வேண்டும் என்கிற நிலைமை தான் பொதுவாக நிலவி வருகிறது. இந்த மாதிரி சூழ்நிலையில் ஒரு நடிகனுக்குக் கை கொடுப்பவை நடிகர் திலகத்தின் படங்களே.

    இந்த பணி ஓய்வுக் காட்சியில் பத்மநாபன், மிகவும் உணர்ச்சி வசப் பட்டுத் தன்னுடைய நிலையை எண்ணிப் பெரிதும் வருந்துகிறார். காரணம் அவருக்கு அதை நம்பித் தான் வாழ்க்கை, அது மட்டுமல்ல அவர் ஆற்றக் கூடிய கடமைகள் காத்திருக்கின்றன. நிர்ப்பந்தங்கள் அவருடைய ஓய்வின் வலியை அதிகப் படுத்துகின்றன. இதனால் அவருடைய Reaction உணர்ச்சி வசப்ப்ட்ட தாய் இருக்கும்.

    சிரஞ்சீவி அதற்கு நேர் மாறான பாத்திரம். ஒரு விநாடி ஓய்வுச் செய்தி வருத்தம் அளித்தாலும் அதனை சுதாரித்துக் கொள்ளக் கூடிய வலிமை அவனுக்கு உண்டு. இதே போல் அந்தக் காட்சியில் மேலதிகாரிகளிடம் தன்னுடைய Reactionஐக் காட்டாமல் வெளியில் வந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு அதற்கேற்பத் தன்னை நிதானப் படுத்திக் கொள்கிறான்.

    திரைப்படங்களில் ஒவ்வொரு சூழ்நிலையும் வெவ்வேறு படங்களில் மீண்டும் இடம் பெறும். அதுவும் நடிகர் திலகத்தின் படங்களில் இது பல முறை நிகழ்ந்துள்ளது. அவற்றை அவர் எப்படிக் கையாண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டால் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு அது மிகச் சிறந்த இலக்கணப் புத்தகமாகவும் Reference bookஆகவும் திகழும்.


    இந்த இரு பதிவுகளையும் நான் தயார் செய்வதற்கு எனக்குப் பிடித்த நேரம் கிட்டத் தட்ட ஐந்து மணி நேரங்கள். இரவு முழுதும் உறங்காமல் கண் விழித்து ஒவ்வொரு காட்சியின் வசனத்தையும் தனித்தனியே டைப் செய்து காணொளி தயார் செய்து அளித்திருக்கிறேன். சாதாரணமாக இந்த மாதிரி பதிவுகளுக்கு குறைந்தது 10 மணி நேரங்களாவது பிடிக்கும்.

    இந்த உழைப்பையும் இந்த நேரத்தையும் வீணடிக்கச் சொல்கிறார் கோபால்.

    இந்தப் பதிவில் யாரைப் புண்படுத்தும் படியான கருத்துக்கள் உள்ளன. தனிப்பட்ட முறையில் யாரையாவது மனம் புண்படும் படி எழுதியிருந்தால் பதிவினை எடுத்து விடலாம்.

    ஆனால் இவர் இந்த பதிவை எடுக்கச் சொல்வது ஏன். அதுவும் நடிகர் திலகத்தின் நடிப்பைில் உள்ள இலக்கணத்தையும் நடிப்பில் இரு வேறு நிலைகளைப் பற்றிய ஓர் ஒப்பீட்டினையும் எடுக்கச் சொல்வது நியாயமா ... இதை நீங்கள் அனைவரும் மனசாட்சிக்கு உட்பட்டுச்சொல்லுங்கள்..

    நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றிய பதிவை எடுக்க வேண்டுமா
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #3854
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்,

    மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.தாங்கள் சிரஞ்சீவியை பதித்ததில் விஷம நோக்கம் இல்லையென்று?

    எங்கே ஒரு நடிகன் முன்னிலை படுகிறானோ, அங்கு சினிமா கலை செத்து விடுகிறது. நல்ல திரைகதை,பாங்கான வசனங்கள், சினிமா மொழியறிந்த இயக்குனர்,கேமரா மேன்,எடிட்டர் உள்ள போதுதான் ,ஒரு நடிகன் தன்னை பாத்திரத்தின் வாயிலாக வெளிபடுத்தி கொள்ள முடியும்.அந்த பாத்திரத்துடன் மக்கள் ஐக்கியமாகவேண்டும்.

    இது பள்ளி கூட தனி நடிப்பு போட்டியல்ல. ஒரு சீனில் பிரமாத படுத்தி விட்டார் என்று சொல்ல. முழு படத்தில்,ஒரு சீனில் கூட , நன்றாக நடிக்கவில்லைஎன்றால் அவரை கொண்டாடவா செய்வோம்?அதல்ல பிரச்சினை. இங்கு நமக்குள் பேசி,பிரத்யேக ரசனையை பதிவு செய்யவில்லை. வருங்காலத்திற்கு ஆவணகளை விட்டு செல்கிறோம்.பொறுப்புணர்ச்சியுடன் செயல் படுவது அவசியம்.
    Last edited by Gopal.s; 11th November 2013 at 08:30 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #3855
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விஷமத்தனமான பதிவுகளைப் போடுவதற்கு ஓரிரு வரிகள் போதும். இதற்காக யாரும் நாள் கணக்கில் மணிக் கணக்கில் உழைப்பையும் நேரத்தையும் செலவிட மாட்டார்கள். தங்களுடைய எண்ணம் தாங்கள் ஒருவர் மட்டுமே இங்கு புத்திசாலி, மற்றவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்கிற அணுகுமுறையில் அமைதந்துள்ளதால் தங்களுக்கு அப்படித் தோன்றுகிறது.

    தங்கள் பதிவுகளுக்கு என்னால் விளக்கம் அளிக்க முடியும். தங்களுடைய ஒவ்வொரு கருத்தினையும் ஆணித்தரமாக என்னால் மறுக்க முடியும். இதற்கு மேல் வளர்க்க வேண்டாம் என விரும்புகிறேன்.

    வாசு சாரின் 4000வது பதிவை வரவேற்க ஆவலாய் இருக்கிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #3856
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பத்மநாபன் ஓய்வு பெறும் போது துடித்தோம். அவருடன் நாமும் கவலை பட்டோம்.
    இந்த சிரஞ்சீவி ஓய்வு பெறும் போது அப்படி நடந்ததா?
    Last edited by Gopal.s; 13th November 2013 at 01:41 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #3857
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் "இனியவை நாற்பது" (என அடியேன் கருதுவது)
    Parasakthi,Manohara,Andha Naal,Edhir Paradhathu,Rangoon Radha,Uthama Puthiran
    Veerapandiya Kattabomman,Bhaaga Pirivinai,Dheivapiravi,Padikkadha Medhai,Pava Mannippu
    Pasamalar,Palum Pazhamum,Kappal Ottiya Thamizhan,Padithaal Mattum Podhuma,Bale Pandiya
    Aalayamani,Paar Magale Paar,Aandavan Kattalai,Pudhiya Paravai,Thiruvilaiyadal,Thillana Mohanambal
    Uyarndha Manidhan,Deiva Magan,Vietnam Veedu,Sumathi En Sundhari,Gnana Oli,Gauravam,Thangapathakkam
    Mudhal Mariyathai,Thevar Magan,Thiruvarutselvar,Thirumal Perumai,Thirumbi Paar,Sivandha Mann,Raja,Aval Yaar
    Neelavanam,Enga Mama,Ethiroli
    அப்படியே "இன்னா நாற்பது" எடுக்கப்போனால் எண்பது கூட தேறுகிறது..
    ஆனால் அந்த பட்டியல் பிறகு...

  9. #3858
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    பத்மநாபன் ஓய்வு பெறும் போது துடித்தோம். அவருடன் நாமும் கவலை பட்டோம்.
    இந்த சிரஞ்சீவி ஓய்வு பெறும் போது அப்படி நடந்ததா?நடிகர்திலகத்தின் சராசரிக்கும் கீழான cliche expression . அந்த பாத்திரத்தோடு நாம் ஒன்றாததால் ,எதோ போதிய பயிற்சியற்ற புது நாடக நடிகர் பயிற்சி கொடுக்க பட்டு ,மற்றவர் பேசும் போது வரிக்கு வரி reaction கொடுக்க சொல்லி ,கொனஷ்டை செய்வது போல படு கேவலமாக உள்ளது. இதற்கு போய்,5 மணி நேர உழைப்பென்றால், இந்த மூளையை exhibition இல் தான் வைக்க வேண்டும்.
    sorry gopal sir
    the above post is not upto the standards of the thtread my humble opinion something like insulting our GOD..
    Last edited by Subramaniam Ramajayam; 11th November 2013 at 10:50 AM.

  10. #3859
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Subramaniam Ramajayam View Post
    sorry gopal sir
    the above post is not upto the standards of the thtread my humble opinion something like insulting our GOD..
    I own up my words. Hindu Mythology allows even Gods to Err and Slip. My God also slipped. This will not demean our God. But some persons with stupid notions try to highlight and Glorify the slips as the achievement ,make a mockery of the God and himself. Let him correct himself first.When I requested something,how dare he denied to do it on our request ?(Whenever he was hurt,we obliged him)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #3860
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    போயி மத்த திரிகள பாருங்கோய்யா எப்பிடி அவுங்களுக்குப் புடிச்ச ஆக்ட்டருங்கள தூக்கி வச்சி கொண்டாட்ராங்கன்னு பத்து பைசாக்கு தேராத படத்தத் கூட எப்பிடி ஒசத்தி எழுதறாங்க அதனால் அவுங்க ஆளுங்க மவுசு தேஞ்சிடுதா போயி கதுக்கங்கயா காதல்வாஹனம் தெர்திருவிழா படத்தக் கூட எம்ஜியார் திரிய்லே பெர்மையா எழுதுறாங்க இத்த எழுதலான்னு எழுதக்கொடாதுன்னு சொல்றதக்கு நீங்கயாரு ஓய் இவுங்கதேன் சிவாஜி பேர கெடாமா பாதுக்கப் போராங்களாம் இங்க இஷ்டப்பட்த எழுத அல்லாருக்கும் ரைட்ஸ் இருக்கு என்னாமோ வந்துட்டாங்க பெரிய தொரைங்க எழதறது ஒரு எழவும் புரியல மண்ணும் புரியல இங்க அல்லாரும் சிவாஜி நடிச்ச அத்தன படங்களப் பத்தி படிக்கனும்னு ஆசப்பட்ரமாதிரி தெரியது சும்மா ரெண்டு மூணு ஜென்மங்க வந்து குட்டய கொழப்பதீங்க அல்லத்திலேயும் சிவாஜி சூப்பரத்தேன் ஆக்ட்டு குடுதுக்கிராறு சொம்மா பழய படத்த போட்டு அருக்காம புதுசப் பத்தி தைறியமா எழுதுங்கப்பா என்னாமோ இந்தப் பூச்சண்டிகெல்லாம் பயந்த்கினு கோவாலு சாரு உன் திரிய்லேயே உன்ன கவனிக்க்னுமு நெனச்சேன் நான் ராகவேந்திரனுக்கு எழுத சொன்னா நீ அங்க மரியாதயே இல்லாம என்னப்பத்தி எழுத்திற்க நீ என்னா பெரிய கொம்பா மரியாத குடுத்து மரியாத வாங்கு புதுசா வரவனுக்கு எப்பிடிமரியாத தரதுன்னு முதல்ல கத்துகினுவா கோவாலு கம்னு கெட தவக்கள மாறிகத்தாத அப்புறம் உன்னைய மாறி சொல்றேன் வேறமாறி ஆயிடும் மூடிகினு போ திரிய கெடுக்காத

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •