-
13th November 2013, 04:55 PM
#3911
Junior Member
Newbie Hubber
கலாய்க்காமல் ,துணை பதிவு போட்டு விடுகிறேன்.(இருக்கும் ஒரே நண்பரையும் பகைத்தால்.....)
...இரண்டு வாரம் கழித்து ரிலீஸ் ஆக போகும் நடிகர்திலகம் படத்துக்கு, குடும்பத்தோடு பிளான் போட்டு திருவிழா போல் தியேட்டர் செல்லும் மஜா.
-
13th November 2013 04:55 PM
# ADS
Circuit advertisement
-
13th November 2013, 05:43 PM
#3912
Senior Member
Senior Hubber
ஆதிராம் சார்..ஹி ஹி..
ஆனா மண் ஒட்டலை
-
13th November 2013, 05:44 PM
#3913
Junior Member
Seasoned Hubber
Some movies of NT -------
ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்....
சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."
புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்...!".
பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா..? "
சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".
இப்படித்தான் NT யின் சில படங்கள் - தனிப்பட்ட முறையில் நல்ல படங்களாக இருப்பினும் சிலர் கண்ணோட்டத்தில் அவைகள் தாழ்ந்து விடுகின்றன -
பார்வைகள் பல விதம் ஆனால் பக்தி ஒன்றுதான் என்று தெரிய படுத்தவது அவசியமாக போய் விடுகின்றது. Even the intention is good , others look at the actions only . Actions also need to be equally good . Let this thread gain the glory that got hidden in some postings

.
-
13th November 2013, 06:13 PM
#3914
Senior Member
Senior Hubber
ஹோ வென்று பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது வெள்ளம் அந்த ஆற்றில்.. கரையில் இருந்தவர்கள் மூவர்..குரு, அவரது சீடன், பின் பார்க்கப் பார்க்க மீண்டும் பார்க்கத் தூண்டுகின்ற அழகுடன் -கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒந்தொடி கண்ணே உள - என திருவள்ளுவர் இந்தப் பெணணைத் தான் பார்த்து எழுதியிருப்பாரோ என்பது போன்ற - ஜகஜ்ஜோதியான மிகப் பேரழ்கான இளம்பருவம் பூத்துக் குலுங்கும் இளம் பெண்..ம்ம்
*
அந்த இளம்பெண் குருவினை வணங்கி : ஐயன் மீர்.. இந்த ஆற்றை நான் கடக்க உதவுவீர்களா..” எனக் கேட்க கருணை கொண்ட அந்த குரு அதற்கென்ன பெண்ணே என் முதுகில் ஏறிக் கொள்.. நான் நீச்சலடித்து அக்கரையில் உன்னை விடுகிறேன் என்றார்..
*
குரு ஆற்றில் பாய பெண் அவர் முதுகில் அமர அவர் நீச்சலடித்தார்..பின்னால் சீடனும் கஷ்டப் பட்டவண்ணம் நீந்தி அக்கரையை அடைய, அந்த ப் பெண் குருவிடம் நன்றி சொல்லிச் சென்று விட்டாள்..
*
குருவும் சீடனும் தங்கள் ஆஸ்ரமத்திற்குச் சென்றனர்..வழி முழுவதும் சீடன் பேசவில்லை.. இருவரும் மாற்றுடை அணிந்து வகுப்பறைக்கு வந்த பின்பும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான் சீடன்..
*
குரு கேட்டார்..”வாட் ஹேப்பண்ட் மை சைல்ட்” சிஷ்யன்,”ஓ..லார்ட்.. நீங்கள் வயதில் பெரியவர்கள், அறிவிலும்..அதுவும் துறவு வேறு கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஆனால்..” ஏவி.எம். ராஜனுக்கு அடைப்பது போல் சீடனுக்கும் நெஞ்சை அடைத்த்து..”எப்படி அந்த பியூட்டிஃபுல் யங்க் லேடியை உங்கள் முதுகில் ஏற்றிக் கொண்டு வந்தீர்கள்..தவறல்லவா.. இது முறையோ இது தகுமோ இது தரும்ம் தானோ..” எனக் கேட்டான்..
*
குரு மென் சிரித்து.”ஓஹ்..மை பாய்.. இதானா உன் டவுட்..ஆக்சுவல்லி ஸ்பீக்கிங்..அந்தப் பெண்ணை ஆற்றின் அக்கரையிலேயே நான் இறக்கி வைத்து விட்டேன்.. நீ தான் இன்னும் சுமந்து கொண்டிருக்கிறாய்” என்றாராம்..
**
அதுபோலவே ரவி சார் – என்.டியைப் பற்றியும் இந்த இழையைப் பற்றியும் குட்டிக் கதைகள் வாயிலாக நீங்கள் எழுதும் விளக்கங்களை குருவைப் போல எங்களால் இறக்கி வைக்க முடியவில்லை..மனதில் சுமந்து கொண்டே இருக்கிறோம்.. !
-
13th November 2013, 07:14 PM
#3915
Junior Member
Senior Hubber
மதிப்பிற்கும் மரியாதைக்குரிய பெரியவர் திரு.சுப்ரமணியம் ராமஜெயம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
C. Ramachandran.
-
13th November 2013, 09:07 PM
#3916
Dear Subramaniam Ramajayam Sir,
Wishing you tons of happiness and joy on your special day. Happy Birthday !!!!!!
Anand
-
13th November 2013, 09:19 PM
#3917
Junior Member
Seasoned Hubber
Dear Subramaniam Ramajayam Sir,
Many more happy returns and may god bless you with good health and peace .
Ravi

-
13th November 2013, 09:40 PM
#3918
Junior Member
Seasoned Hubber
Dear Chinna Kannan Sir
பலத்த மழை பெய்து ஓய்ந்தால் போல உள்ளது நமது திரி - கோபால் சாரின் அலசல் நடை எங்கே? ராகவேந்திர சாரின் அற்புத படைப்புகள் எங்கே? 5000 பதிவுகள் 5 கோடியாக வேண்டும் என்று எல்லோரும் வாழ்த்திணோமே - அந்த மை இன்னும் உணரவில்லையே - கார்த்திக் சாரின் Item Girls களின் Personal life போல திரியும் வெரிசிண்டு உள்ளதே - முரளி சாரின் தமிழ் நடையும் , வாசு சாரின் உழைப்பும் இந்த, KC சாரின் பாராட்டுக்களும் திரியில் மீண்டும் கிடைக்க வேண்டும் - இந்த உள் அர்த்தத்தில்தான் " அந்த நாட்கள் மீண்டும் வந்திடாதோ " என்று என் ஆதங்கத்தை பதித்தேன் - உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி - இந்த திரியில் மீண்டும் பல கைகள் தட்டும் சத்தம் கேட்கவேண்டும் - மீண்டும் கூடுவோம் , கூட்டு பிராத்தனையில் நிச்சயம் பலன் கிடைக்கும் .
Ravi

-
13th November 2013, 09:52 PM
#3919
Junior Member
Junior Hubber
சங்கிலி
சங்கிலி எனக்கு ரொம்பபுடிச்ச ஆக்சன் படம்.சிவாஜிக்கு ரெண்டு வேஷம்.போலிஸ் சங்கிலி மொரட்டு சங்கிலி அப்படின்னு அறுமையாநடிப்பாரு.வில்லன் நம்பியாறு போலீஸ் சரவணன கொன்னுடுவாரு.போலிஸ் சரவணன் மாதிரி இருக்கற கைதி சங்கிலிய சரவணன் மாதிரி மாத்தி சுந்தரராசன் வில்லன் கூட்டத்த ஒழிப்பாரு.போலிஸ் சரவணன் கம்பீரம் காட்டுவாரு,அவரு வில்லன் நம்பியாரை கண்டு புடிச்சதும் லாரி ஏத்தி முதல்லே அவுர கொன்டுவாங்க.பாவமா இருக்கும்.அப்புறம் ஜெயில்ல இருக்கிற மொரடன் சங்கிலி சரவணனா மாருவாறு.ரொம்ப ஜோரா மொரடனா நடிப்பாரு.ஜெயில்ல சங்கிலி கட்டி அவரு இழுத்துவரும் போது ஜோரான உறுமுற நடிப்பு அப்புறம் போலிஸ்ஸ்டேஷன்ல சரவணன் மாறி மாத்தி நடிக்கறது ஜம்முன்னு இருக்கு.சின்னப் பையன் மாறி ஜோரா சண்டை போடுவாறு சரவணன் குழந்தகிட்ட சங்கிலி பாசம் காட்றது ரொம்ப நல்லாஇருக்கும்.சிரிபிரியா கூட கூல்கிளாஸ் போட்டுகிட்டு சிவாஜி அழகா இருப்பாரு.ஒரு டூயட்பாட்டு ஸ்டையிலா இருக்கும்.பிரபு முதல் படம் அப்பாவும்புள்ளையும் செமத்தியா ஒரு சண்ட போடுவாங்க.இங்கிலீஷ் படம் மாறி செட்டுல்லாம் பெருசா போட்டு இருப்பாங்க.போலிஸ்,முரடன்,அந்த முரடனே மறுபிடி போலிஸ்னு நிறய சிவாஜிக்கு நடிக்க சான்சு.அவரு நடிப்புக்கு கேக்கவா வேணும்.போலிஸ் டிரஸ்ல நல்லா இருப்பாரு இந்தி வில்லன் கூட பேருதெரியல மண்டபத்துல போடுற பைட்டு ஆத்தாடி அருமை படம் சுருசுருன்னு வேகமா ஓடும்.இந்தபடம் நல்லாதானே ஓடுச்சு.மொததரம் எழுதி இருக்கேன்.பக்கவீட்டு பொண்ணு ஹெல்ப் பண்ணுச்சி.தப்பு இருந்தா பொருத்துக்குங்க.கொஞ்சகொஞ்சம்மா திருத்திக்குறேன்.ரொம்ப புடிச்சபடம்.இன்னொன்னு எல்லாம் நெறையகதையா எழுதிரீங்க.சிவாஜியப் பத்தி ஒன்னையும் காணமே நெறையா வெட்டியாயில்ல இருக்கு.சிறுவர் மலர் படிக்கிரமாறி இருக்கு.சொந்தப்பெருமையும் சைன்சப் பதிவுமாத்தான் இருக்கு ஒரே போர்ர் அடிக்குதுப்பா.யாராச்சும்நல்லதா ஒருபதிவு போடுன்க.எனக்கும் வரல்ல
-
14th November 2013, 07:30 AM
#3920
Junior Member
Newbie Hubber
கிருபா சார்,
உங்கள் பதிவு அசத்தல். நடையை மிகவும் ரசித்தேன்.தொடருங்கள்.வாழ்த்துக்கள்.
Bookmarks