-
14th November 2013, 09:15 AM
#3921
Junior Member
Seasoned Hubber
பார்த்ததில் பிடித்தது
நாம் நடிகர் திலகத்தின் அனேக படங்களை பல தடவை பார்த்து இருப்போம் , இங்கே உள்ள நிறைய நண்பர்கள் திரைஅரங்கலிதும், என்னை போல் இளையதலைமுறை அன்பர்கள் , dvd , டிவி வாயிலாக பார்த்து இருப்பார்கள் . ஒரு படத்தை ஒரு முறை பார்த்தல் , குறை , நடிப்பின் உச்சம் , மத்த அம்சங்கள் எதுவுமே தெரியாது .
நடிகர் திலகத்தின் பல படங்களை பல முறை பார்த்து உள்ளேன் ,
ஒவ்வொரு முறையும் அவர் படங்களை பார்க்கும் பொது பல விஷயங்கள் பிடி படுகிறது
இதை எல்லாம் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே என்னோட பதிவுகளின் நோக்கம்
அது தான்
பார்த்ததில் பிடித்தது
இந்த பதிவில் என் தமிழ் யை திருதிய நெய்வேலி வாசு சார்க்கு நன்றி
அதில் முதல் படம்
கவரிமான்
Last edited by ragulram11; 14th November 2013 at 09:22 AM.
-
14th November 2013 09:15 AM
# ADS
Circuit advertisement
-
14th November 2013, 09:20 AM
#3922
Junior Member
Seasoned Hubber
கவரிமான்
இந்த திரியில் அதிகம் விவாதிக்க படாத படங்களில் இதுவும் ஒன்று.
திரிசூலம் என்று ஒரு மிக பெரிய ஹிட் படம். அதுவும் முழு நீள commercial படம் கொடுத்த உடன் இந்த மாதிரி ஒரு கிளாஸ் படம் கொடுக்க நம்ம நடிகர் திலகத்துக்கு மட்டுமே சாத்தியம். variety க்கு மறு பெயர் அல்லவா அவர்.
அதுவும் புது generation டீம் என்று பெயர் எடுத்த SPM அவர்களின் direction ல் வந்த புது வகை படம் இது.
கேமராவுக்கு பாபு , கதை , வசனம் , பாடல்கள் : பஞ்சு அருணாசலம் , இசை : இளையராஜா
கதை :
தியாகு (NT ) ஒரு பெரிய குடும்பத்தின் ஒரு அங்கம். அவர் மத்திய அரசில் finance dept .ல் வேலை பார்க்கிறார். அவரின் மனைவி கல்பனா (பிரமிளா) ஒரு எழுத்தாளர், நவ நாகரிக பைத்தியம் பிடித்த முற்போக்கான சிந்தனை கொண்ட எதையும் செய்யத் துணியும் டேஞ்சரான பேர்வழி. இவர்களுக்கு ஒரு மகள் உமா (பிற்காலத்தில் ஸ்ரீ தேவி ).
சிவாஜியின் தந்தை கல்கத்தா விஸ்வநாதன் ex மினிஸ்டர், கவர்னர். அம்மா (வரலக்ஷ்மி )ஒரு கர்நாடக சங்கீத மேதை , சிவாஜியின் அண்ணன் மேஜர் ஒரு lawyer , அவர் மனைவி மணிமாலா ஒரு டாக்டர்.
சிவாஜயின் மனைவி ரவிச்சந்திரன் உடன் பழக்கம் வைத்து இருப்பதை பார்க்கும் சிவாஜி ஆத்திரப்பட்டு அவரை கொன்று விடுகிறார். அதை மகள் உமா நேரிடையாகப் பார்த்து விட்டு அதிர்ச்சியாகிறாள்.
இன்ன காரணத்திற்காக சிவாஜி கொலை செய்தார் என்று யாருக்கும் தெரியாது. குடும்ப மானத்தைக் காக்க சிவாஜி ஒன்றும் சொல்லாமல் ஜெயிலுக்குப் போகிறார். குடும்பமே அவரை வெறுக்கிறது.இதனால் சிவாஜி சந்திக்கும் அவமானகள் ஏராளம்.
மகள் வளர்ந்து பெரியவளாகிறாள்.
ஜெயிலில் இருந்து திரும்பி வரும் சிவாஜி குடும்பத்தாரால் வெறுத்து ஒதுக்கப்படுகிறார் தாயைத் தவிர. ஒரு ஹோட்டலில் இசைப் பாடகராக வேலை செய்கிறார் சிவாஜி. ஸ்ரீதேவிக்கு தன் தாயைக் கொன்றதால் சிவாஜி மேல் வெறுப்பு. தந்தை என்றே அவரை ஏற்க மறுக்கிறார்.
ஸ்ரீதேவி ஒரு வாலிபரை காதலிக்கிறார் , அவன் ஒரு பெண் பித்தன். ஒரு கட்டத்தில் அந்த வாலிபன் ஸ்ரீதேவியின் கற்பை சூறையாட முயற்சிக்கையில் ஸ்ரீதேவி அவனை எதிர்பாராவிதமாக கொலை செய்து விட அங்கு தன் மகளின் நிலைமையை பார்த்த சிவாஜி மகள் செய்த கொலைக்கு தான் பொறுப்பு ஏற்கிறார். தந்தை மேல் ஏற்பட்ட வெறுப்பு மகளுக்கு போக மீண்டும் மகளுக்காக ஜெயிலுக்குப் போகிறார் சிவாஜி. சிவாஜியின் தந்தை மட்டும் தன் மகன் நியாயத்துக்காகத்தான் கொலை செய்தான் என்று டைரியில் எழுதி வைத்து மகனைப் புரிந்து மருமகளின் நடத்தையையும் கணித்து வைத்து,மகனின் நடத்தையில் நேர்மையைக் காண்கிறார். மகள் தன்னை புரிந்து கொண்ட நேரத்தில் அவளுடன் இருக்கக் கொடுத்து வைக்காமல் சிவாஜி ஜெயிலுக்கு செல்ல படம் கனத்த இதயத்துடன் முடிகிறது .
முதல் 30 நிமிடம் எல்லா கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்த இயக்குனர் எடுத்து கொள்ளும் நேரம், பார்வையாளர்களுக்கு இந்த பாத்திரங்களை அறிந்து கொள்ள ஒரு சந்தர்பம். ஏனென்றால் இந்த கதை நன்றாக tight செய்யப்பட்ட திரைக்கதை அமைந்த ஒரு படம்.
இந்த படத்தில் நாம் அனைவரும் travel செய்யலாம். இந்த கதை நாம் தினசரி படிக்கும் செய்தியில் ஒன்று , this may happen to anyone but it must not happen to anyone .
இந்த படத்தில் சிவாஜியின் பாத்திரத்தில் வேறு எவரையும் நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
முதல் காட்சியில் அவர் காரை விட்டு இறங்கி , கம்பீரமாக படி ஏறும் அழகே அழகு. அடுத்த காட்சியில் தேங்காய் ஸ்ரீனிவாசன் வந்து ஒரு காரியம் செய்து தர சொல்ல, அதுக்கு சிவாஜி கொடுக்கும் ஒரு பார்வை expression அவரின் நேர்மையை விளக்கும் வண்ணம் உள்ளது
விஜயகுமார் ஒரு முஸ்லிம் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு வந்த உடன் , சிவாஜி குடும்ப மானம் நினைத்து கோபப்படுவது, அவர் தன் குடும்பத்தின் மேல் வைத்த பாசத்தைக் காட்டுகிறது. இந்த காட்சியும் படத்தில் வரும் முக்கியமான காட்சியான அந்த படுக்கை அறை காட்சியில் அவர் படும் ஆத்திரத்துக்கு ஒரு justification .
கல்கத்தா விஸ்வநாதன் சொல்வது போலே சுத்தமா ரத்தம் உள்ளவன், துளி கூட தப்பு எது என்று அறியாதவன் என்பதுக்கு அடித்தளம். மதம் மாறி கல்யாணம் செய்து கொள்ளும் தம்பியை திட்டும் காட்சி ஒரு கல்யாணத்தை ஒத்து கொள்வதே கடினமாக இருக்கும் தியாகுவுக்கு தன் மனைவி இப்படி வேறு ஒரு நபர் உடன் இருப்பது எப்படி எடுத்து கொள்ள முடியும் என்பதற்கு ஒரு உதாரணம். குடும்பம் ஒன்றாக அமர்ந்து இருக்கும் போது அவர் பாடும் கர்நாடக பாடல், கல்பனா தன் மகளுக்கு western music கற்று தர வேண்டும் என்று விரும்புவதும், தியாகு கர்நாடக சங்கீதம் என்று சொல்வதும், இவர்களுக்கு இடையில் உள்ள taste & preferences, differences யை அழகாக காட்டுகிறது .
தன் மனைவியின் சிரிப்பு சத்தம் கேட்ட உடன், அது வரையில் அமைதி தென்றலை போன்ற அவர் முகம் கடுகடுப்பதும், அதை காட்டும் விதமாக பாபுவின் கேமரா தியாகு உடன் மேலே பயணிப்பதும் சூப்பர். கூடவே இளையராஜாவின் பின்னணி இசையும் (மிரட்டல் இசை ), அந்த கதவை உடைத்து கொண்டு அவர் காணும் அலங்கோலம். அந்த காட்சியில் அவர் கண் சிவப்பதும், கால் இரண்டையும் உதைத்துக் கொண்டு ஆத்திரத்தை அடக்க முயல்வதும் , நடிகர் திலகத்தின் சின்ன கண் சிவந்து பெரிதாவதையும் நாம் உணர முடியும் ,
ஆத்திரம் அடங்காமல் அவர் அடிக்கும் ஒரு அடிக்கு கண்டிப்பாக ஒரு உயிரை பலி வாங்கும் சக்தி உண்டு.
ஒரு மனிதன் அதிகமாக உணர்ச்சிவசப்படும் போது, அவன் மூக்கில் இருந்து சளி வரும். அதையும் பிரதிபலிக்கிறார் நம்மவர் (எல்லாம் அறிந்தவர் நடிப்பில். எப்படி முடிகிறது இவரால்)
ஜெயிலில் அவர் மனசில் ஒரு ஊசலாட்டம் தன் மனசாட்சி உடன். உண்மையை சொல்வதனால் ஏற்படும் விளைவை எண்ணி ஒரு திகைப்பு.. அதை symbolic ஆக விளக்கும் காட்சியில் நிழல் போலே ஆடும் லாக் up கம்பிகள் என்று கேமரா பாபுவின் டச்.
தண்டனை முடிந்து தளர்ந்து வீட்டுக்கு வரும் வரும் தியாகு தன் குடும்பத்தினர் உடன்உட்கார்ந்து உணவு அருந்த முடியவில்லையே என்று அவர் கண் கலங்கும் காட்சி. அப்பப்பா என்ன ஒரு நடிப்பு , தன் தாய் குடுக்கும் சாப்பாட்டை வேண்டா வெறுப்பாக தட்டில் போட்டு அழும் காட்சி உணர்ச்சி பிழம்பு. அதை அதிகபடுத்தும் விதத்தில் இளையராஜாவின் பின்னணி இசை.
தன் மகளை பல வருடங்கள் கழித்து பார்த்த உடன் உருகுவதும், உமா தன்னை அவமானபடுத்துவதும், கண்டிப்பாக பார்வையாளர்களை கொந்தளிக்க வைக்கும் .
சிவாஜி தன் குடும்பத்தினர் தன்னால் கஷ்டபடுவதை விரும்பாமல் தனியாக ஒரு வீடு எடுத்து தங்குகிறார். அந்த வீட்டில் சேகர் அடிக்கும் லூட்டிகள் தாங்க முடியாமல் தவிக்கும் தியாகு , தன் மகள் அவரை காதலிப்பதை எப்படி ஒத்துகொள்ள முடியும் , தன் சொல்லை அலட்சியம் செய்யும் உமாவை ஒன்றும் செய்யாமல் , இயலாமை உடன் பார்ப்பதை தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை. தியாகுவினால் (அந்த காட்சியில் ஸ்ரீதேவி திட்டுவதையும், சிவாஜி அதை வாங்கி கொள்வதையும் ஒரே frame ல். அதுவும் சிவாஜி சாருக்கு வெறும் முகம் மட்டும் தெரியும் படி close up shot. நடிகர் திலகத்திற்கு மட்டுமே இது சாத்தியம்) கடைசியில் தன் மகள் உடன் அவர் பேசும் கிளைமாக்ஸ் காட்சி , அவர் மகளுக்கு சொல்லும் உபதேசம் நாம் அனைவரும் பின் பற்ற வேண்டிய ஒன்று .
செய்யாத தப்புக்கு கஷ்டப்பட வேண்டிய ஒரு பாத்திரம்
சிவாஜிக்கு அப்புறம் எனக்கு பிடித்த பாத்திரம் கல்கத்தா விஸ்வநாதன் :
இவர் தான் இந்த பெரிய குடும்பத்தின் ஆலமரம். கொஞ்சம் பழமை கலந்த மனிதர் ரொம்ப நேர்மை. தன் மகன் கலப்பு மனம் புரிந்து கொண்ட உடன் அதை அங்கீகரிக்கிறார் , ஆசிர்வதிக்கவில்லை.
தன் மகனின் குற்ற பின்னணி பற்றி அழகாக நடுநிலைமை உடன் யூகிக்கிறார்.கடைசியில் அவர் பேசும் வசனம் முத்து.
பிரமிளா :
தான் glamour நடிகை என்பதை தாண்டி நடிக்கவும் தெரியும் என்பதை நிருபித்து உள்ளார் . கல்பனா ஒரு நவநாகரிக பெண் , மாடர்ன் thoughts உள்ள பெண் , புது புது அனுபவங்களுக்கு ஏங்குபவள் , எந்த ஒரு அனுபவமும் அவளை திருப்தி படுத்த முடியாது , குடி போதையில் அவர் செய்யும் ஒரு காரியம் , அவரையும் அழித்து , ஒரு நல்ல
மனிதர் வாழ்க்கையையும் காவு வாங்குகிறது .
ஸ்ரீதேவி :
ஸ்ரீதேவிக்கு இது ஒரு லைப் டைம் ரோல் , சிவாஜி மாதிரி ஒரு உச்ச நடிகர் உடன் , தன் திரையுலக வாழ்க்கையில் சீக்கிரமாக நடிகர் திலகத்துடன் நடிக்க வாய்ப்பு. அதுவும் சரிக்கு சமமாக நன்றாக செய்து இருக்கிறார் .
பாடல்கள் :
பூ போலே பாடல் பாடல் இரண்டு முறை வருகிறது , என் favourite பாடல் இரண்டாவதாக வரும் பாடல் இன்னும் மனதுக்கு பிடித்த பாடல்
சொல்ல வல்லையோ கிளியே : வரலக்ஷ்மி யின் குரலில் ஒரு அமிர்தம்
புரோமா என்ற கர்நாடக படாலில் நடிகர் திலகத்தின் வாய் அசைவு கச்சிதம் . இந்த பாடல் பற்றி SPM கூறியது :
அந்த பாடலில் நிறைய ஆலாபனைகள் இடம் பெற்று இருந்தது. ஷூட்டிங் முன்பாக அந்த பாட்டை ஒரு முறை சிவாஜி கேட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவர் வீட்டுக்குஅந்த படத்தின் பாடல் கேசட்டை எடுத்து கொண்டு சென்றேன்
நடிகர் திலகம் என்னடா நான் சரியாக லிப் movements குடுக்க மாட்டேன் என்று நினைக்கிறாயா... நான் தப்பு பண்ண மாட்டேன் , அப்படியே செஞ்சாலும் கட் செஞ்சு எடுத்தக்கலாம் என்றார்.
ஷூட்டிங்கில் ஏதோ யேசுதாஸ் நேரில் வந்து பாடியது போல் அவர் வாய் அசைத்தது எங்களை வியப்பு அடைய வைத்தது .
அதே மாதிரி சிவாஜி, பிரமிளா இருவரும் சேந்து படும் பாடல் பிரமிளா சிவாஜி உடன் நடிக்க வில்லை , அவர் அன்று வேறு ஒரு படபிடிப்பில் இருந்தார் , பிறகு இருவரும் சேர்ந்து இருப்பது போலே எடிட் செய்ய பட்ட பாடல் பூ போலே பாடல்.
நடிகர் ரவிச்சந்திரன்
ரவி ஏற்றிருந்தது கொஞ்சம் வில்லங்கமான பாத்திரம். சுமார் 20 நிமிடம் வரும் ஆனந்த் என்ற ஒரு நவ நாகரிக ஆண், அவர் தான் பிரச்சனைக்கு சூத்திரதாரி.
இந்த படத்தை பார்த்து சிவாஜி சொன்னது :
படம் கவிதையாக இருக்கு. இதை என் ரசிகர்கள் பாத்திரமாக பார்த்தால் படம் தப்பிக்கும். என்னை சிவாஜி என்ற கோணத்தில் பார்த்தால் படம் கொஞ்சம் கஷ்டம் தான் .
ஒரு காட்சியில் ஸ்ரீதேவி சிவாஜி கொடுக்கும் புடவையை தூக்கி குப்பை தொட்டியில் வீசுவார், தியேட்டரில் அந்த காட்சியில் ரசிகர்கள் ஸ்ரீ தேவி யை வசை பாடினார்கள். கத்தினார்கள்
இந்த படம் அனைவரும் பார்க்கலாம். 80 க்கு அப்புறம் வந்த நடிகர் திலகத்தின் முத்துக்களில் இதுவும் ஒன்று.
-
14th November 2013, 09:25 AM
#3923
Junior Member
Seasoned Hubber
இந்த படம் பற்றி ஒரு ஆரோக்கியமான விவாதத்தை எதிர்பார்க்கிறேன், இதில் அவரின் நடிப்பு பற்றி தனி ஆவர்த்தனம் அடுத்த பதிவில்
-
14th November 2013, 09:26 AM
#3924
Junior Member
Seasoned Hubber
கிருபா சார்,
Sangili is one of my favourite movie , Good writing keep it up sir
-
14th November 2013, 10:42 AM
#3925
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
g94127302
அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?:
டியர் ரவி சார்,
தங்களுடைய ஞானி - சீடர் கதையின்மூலம் சொல்லவந்தது நிச்சயம் நடக்கும். அந்த நாளும் மீண்டும் வரும். ஆனந்தமழையில் நாமும் நனையும் காலம்
விரைவில் வரும்.
-
14th November 2013, 10:52 AM
#3926
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
என்.டியைப் பற்றியும் இந்த இழையைப் பற்றியும் குட்டிக் கதைகள் வாயிலாக நீங்கள் எழுதும் விளக்கங்களை குருவைப் போல எங்களால் இறக்கி வைக்க முடியவில்லை..மனதில் சுமந்து கொண்டே இருக்கிறோம்.. !

டியர் சின்னக்கண்ணன் சார்,
ரவி சாருக்குப் பதிலாக தாங்களும் ஒரு குரு - சீடர் கதையைச் சொல்லி அசத்தியுள்ளீர்கள். தங்களின் கருத்து உண்மையிலேயே ஆழமானது.
-
14th November 2013, 10:55 AM
#3927
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
kiruba
சங்கிலி - எனக்கு ரொம்பபுடிச்ச ஆக்சன் படம்.
டியர் கிருபா சார்,
தங்களின் பதிவு அருமை. தொடருங்கள்.

Originally Posted by
kiruba
யாராச்சும்நல்லதா ஒருபதிவு போடுன்க.எனக்கும் வரல்ல
புரிந்துகொண்டோம்.
-
14th November 2013, 11:10 AM
#3928
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
ragulram11
பார்த்ததில் பிடித்தது - கவரிமான்
டியர் ராகுல் சார்,
தங்களின் கவரிமான் பதிவு அருமை. தாங்கள் குறிப்பிட்டமாதிரி திரிசூலம் மாதிரியான ஒரு சூப்பர் ஹிட் படத்திற்கு அடுத்தது இந்த மாதிரி ரிஸ்க் எடுக்க எந்த நடிகரும் தயாராக இருக்கமாட்டார்கள்.

Originally Posted by
ragulram11
இந்த படத்தில் நாம் அனைவரும் travel செய்யலாம். இந்த கதை நாம் தினசரி படிக்கும் செய்தியில் ஒன்று , this may happen to anyone but it must not happen to anyone
முதன்முதலில் "A" Certificate பெற்ற நடிகர்திலகத்தின் படமாக இது அமைந்திருந்தாலும், இப்போது "U" Certificate பெற்று வரும் படங்களை விட இது பல மடங்கு மேல் என்றுதான் கூறவேண்டும்.
எனக்குப் பிடித்த ஒரு அருமையான பாடல் - இளையராஜாவின் இசையில்
Last edited by KCSHEKAR; 14th November 2013 at 01:15 PM.
-
14th November 2013, 11:31 AM
#3929
Senior Member
Senior Hubber
சந்திர சேகர் சார்.. நன்றி.. ந.தியைப் பற்றி நிறைய எழுதவேண்டும் என்ற ஆவல் மனதில் இருக்கிறது..ம்ம் ஏனோ ஏதோ ஒரு காரணம் தடுக்கிறது..மிகப் பெரிய காரணம் எல்லாம் இல்லை..வெகுசின்னது..ஆமாங்க என்னோட சோம்பல் 
ராகுல் சார்.. கவரிமான் பதிவு நன்று.. சின்ன வயதில் மதுரை தேவி தியேட்டரில் பார்த்த நினைவு..அதன் பிறகு பார்க்கவில்லை..ம்ம் மறுபடி பார்க்க வேண்டும்.. இன்னும் எழுதுங்கள்..
-
14th November 2013, 11:42 AM
#3930
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
ragulram11
இந்த படம் பற்றி ஒரு ஆரோக்கியமான விவாதத்தை எதிர்பார்க்கிறேன், இதில் அவரின் நடிப்பு பற்றி தனி ஆவர்த்தனம் அடுத்த பதிவில்
Havent seen this film, only had seen the song "Poo pole" (2nd version)..... song opening la when Sivaji sees Sridevi in the table, Sivaji's face konja neram maarum with ekkam, agony etc., in that one shot he displays the painful phase that he had gone through his life on the face and sets the tone for the remaining song... wonderful........ IR might have tuned this melody, but it is thanks to Sivaji that i find this song a heart melting one
Bookmarks