[QUOTE=KCSHEKAR;1094290]நடிகர்திலகம் சிலை - ஆர்ப்பாட்டம்.
நடிகர்திலகம் சிலையை அகற்றக்கூடாது என்று வலியுறுத்தி சென்னை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகணலப் பேரவை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. காவல்துறை அனுமதி 3-ஆம் தேதி இரவுதான் கிடைத்தது. அனுமதி கிடைக்காவிட்டாலும் போராடத் தயாராக இருந்தாலும், காவல்துறை அனுமதி கிடைத்ததன் மூலம் கலந்துகோல்பவர்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று முடிந்தது.
திரு.சந்திரசேகரன் அவர்களே
தங்களுடைய தலைமையில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் சிறப்பாக அமைந்தது குறித்து பேப்பரிலும் T.V யிலும் கண்டேன்.
தங்கள் முயற்சி வெற்றி பெற்று நல்ல நீதி கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Glad to note Sivaji peravai Demonstration at chennai went off very well and good number of turn outs inspite of short notices. vidieo coverages very good. kindly update more coverages from all centres when done,
all the praises for sivaji peravai and participants.
VASUDEVANS photo coverages and raghavendran;s expert comments follwed by murali-gopal teams expected very much
Last edited by Subramaniam Ramajayam; 5th December 2013 at 10:36 PM.
நடிகர்திலகத்தின் சிலை சம்பந்தமாக திரு.Y .Gee .மகேந்திரா அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி.
இப்போது நம் முன் இருக்கும் கேள்வியே இந்த சிலையை ஏன் அகற்ற வேண்டும் என்பதுதானே தவிர, அகற்றி எங்கு வைக்கலாம் என்பதல்ல.
----------------------------------------------------------------------------------------------------------------------
சிவாஜி சிலை ஒரு யோசனை!
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், சென்னையிலிருந்து, எழுதுகிறார்
சென்னையில் வாழும், ஒரு சிவாஜி பித்தனின் பணிவான மடல். நடிகர் திலகம் சிவாஜி சிலையை, இடமாற்றம் செய்ய சொல்லும் காரணங்கள், ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து, வலப்புறம், கடற்கரை சாலையில் திரும்புவோருக்கு, சிலை ஒரு தடங்கல் இல்லை. கடற்கரை சாலையிலிருந்து, ராதாகிருஷ்ணன் சாலையில், வலப்புறம் திரும்புவோருக்கும், சிலை ஒரு தடங்கல் இல்லை. சிலையை தாண்டி தான், 'டிராபிக் ஐலேண்ட்' உள்ளது. சாந்தோம் சாலையில் இருந்து, இடப்புறம், ராதாகிருஷ்ணன் சாலையில் திரும்புவோருக்கும், சிலை ஒரு தடங்கல் இல்லை. அங்கு, எல்லா திசைகளுக்கும், சிக்னல் உள்ளது. சிக்னலை மீறுவோருக்கும், குடித்து விட்டு ஓட்டுபவர்க்கும் (இவர்கள் சட்டத்தை மதியாதவர்கள்) இடையூறாக இருக்கலாம். சட்டத்தை மதிக்காதவர்களுக்காக, சிலையை இடமாற்றம் செய்ய கூறுவது, விரும்பத்தக்க நிகழ்வு அல்ல. மேலும், சிவாஜி சிலையின் இடமாற்ற செய்திகள், ஏதோ, சட்டத்திற்கு புறம்பான கட்டடத்தை அகற்றுவது போல் வெளிவருவது, மனதை உறுத்துகிறது. சிவாஜி வாழ்ந்த சமயம், முன்னாள் ஐ.ஜி., பரமகுருவின் தயாரிப்பில், போலீசின் பெருமைகளை எடுத்துக் காட்டும் வண்ணம், 'உங்கள் நண்பன்' என்ற ஒரு குறும்படத்தில், நடித்துக் கொடுத்தார். 'போலீஸ் என்பவர், சட்டத்திற்கு புறம்பாக நடக்கும், தன் சொந்த மகனையே தண்டிக்கும் நேர்மை உடையவர்கள்' என்று, போலீசாரின் மதிப்பை, இமயத்துக்கு உயர்த்தும் வண்ணம், தங்கப்பதக்கம் படத்தில் சித்தரித்துக் காட்டியவர். எல்லாவற்றையும் மீறி, சிலையை அகற்றி தான் தீர வேண்டும் என்ற நிலை ஏற்படின், இதோ என் பணிவான வேண்டுகோள்... சிவாஜியின் பெயர், எக்காலத்திற்கும் நிலைக்கும் வண்ணம், அவர் வீடு உள்ள வீதிக்கு, அவர் பெயரை சூட்டினார், முதல்வர் ஜெ., அங்கே இருக்கும் ம.பொ.சி., திருவுருவச் சிலையை, அவர் வாழ்த்திய தமிழறிஞர்களின் சிலைகள் அமைந்த, மெரீனா கடற்கரையில் நிறுவி, அந்த இடத்தில், சிவாஜியின் சிலையை நிறுவலாமே. கம்பனும், பாரதியும், வீரமாமுனிவரும் கம்பீரமாக நிற்கும், அந்த கடற்கரை ஓரம் நிற்பது தான், சிலம்புச் செல்வர் மா.பொசி.,க்கு பெருமை. தன் வாழ்நாளை கம்பீரமாக கழித்த, அந்த சிவாஜி, சாலையின் நுழைவில் நிற்பது தான், நடிகர் திலகத்திற்கு பெருமை. இந்த சிவாஜி பித்தனின் எண்ண ஓட்டங்கள், போக்குவரத்துத் துறை ஆணையரின் ஒப்புதலைப் பெறும் என்று நம்புகிறேன்.
தற்போது சிலை இருக்குமிடத்திலிருந்து மாற்றக்கூடாது. முதலில் உண்மையிலேயே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மற்ற சிலைகளையெல்லாம் அகற்றிவிட்டு அப்புறம் நடிகர்திலகம் சிலையை அகற்றுவது குறித்து பேசினால் நன்றாக இருக்கும்.
தற்போது ம.பொ.சி. சிலை இருக்குமிடம் ஏற்கனவே போக்குவரத்து நெருக்கடி உள்ள இடம் என்பது குறிப்படத்தக்கது.
Last edited by KCSHEKAR; 7th December 2013 at 10:45 AM.
Bookmarks