-
11th December 2013, 10:25 PM
#11
Senior Member
Senior Hubber
பாட்டுப் பேச வா - 2
*-****************************
தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவு தர மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே
../….களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவு பலகாட்டல்; கண்ணீர்த்
துளிவளர உள் உருக்குதல் இங்கிவையெல்லாம் நீயருளும்…தொழில்களன்றோ
..ஒளிவளரும் தமிழ்வாணி! அடியேனற்கு இவையனைத்தும் உதவுவாயே..!
*
மகாகவி பாரதி பிறந்தஃ நாளில் இன்று அவரை வணங்கி, அவருடைய பாடலை வைத்து ஆரம்பித்துவிட்டு..இப்போது.. திரையில் வந்த சில பாடல்கள்..
.***
ம்ம் முன்வரிசைகட்டி வருவது..கப்பலோட்டிய தமிழன் பாடல் + அந்தப் படத்தின் பாரதி..
வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் அடி
மேலைக் கடலென்றும் கப்பல் விடுவோம்..
பள்ளித்தலமனைத்தும் கோவில் செய்குவோம் நம்
பாரத தேசமென்று தோள் தட்டுவோம்..
ம்ம் தீர்க்கமான கண்கள் தெளிவான பேச்சுடன் நடித்த எஸ்.வி.சுப்பையா..ப்ளஸ் படத்தில் இருக்கும் பாரதியார் பாடல்கள் மற்க்க முடியுமா.
.
**
ரொமான்ஸ் என்றால் – வீணையடி நீயெனக்கு மேவும் விரல் நானுனக்கு – ஏழாவது மனிதன், காற்று வெளியிடைக் கண்ணம்மா உன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் – செக்கச் செவேல் ஜெமினியும் கொஞ்சம் நிறம் குறைந்த சாவித்திரியும் ப்ளாக் அண்ட் ஒய்ட்டாகப் பாடிய பாடல் என வரிசை கட்டுகையில்..இன்னொருபாடல் வந்து முன்னால் நிற்கிறது..
நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணமெய்தினேன்
பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா..
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று இது..
**
இன்னும் சில..
மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்..
*
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்..
(கொஞ்சம் சிரிக்கலாமா.. http://thiraipaadal.com/Lyrics.asp?l...gid=SNGOLD1044
இந்த லிங்க்ல தோனிகள் ஓட்டி விளையாடி வருவோம்னு எழுதியிருக்காங்க.. (கிரிக்கெட்ல இண்ட்ரஸ்ட் இருக்க வேண்டியது தான் அதுக்காக இப்படியா)கை நீட்டச் சொல்லி ஸ்கேலால நாலு போடுபோடணும்)
*
கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம்
கண்டு வரவேணுமடி தங்கமே தங்கம்
(ஜானகியின் குரல் மெய்மறக்க வைக்கும்)
*
நல்லதோர் வீணை செய்தே அதை
நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ – உருக்கமான இந்தப் பாடல் பூர்ணம் வாயசைக்கும் போது இன்னும் உருக வைக்கும் – அந்த சூழ்நிலைக்கு த் தக்கபடி வந்த பாடல்.
*
ஏழாவது மனிதனில்.. அச்சமில்லை அச்சமில்லை…பாடல்..எல்.வைத்தியநாதன் இசை என நினைக்கிறேன்.. உச்சி மீது வானிடிந்து..வீழுகின்ற போதிலும் – என்பது ஹைபிட்சாக வரும் என்று நினைவு..(எஸ்.பி.பி)
*
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வாரடி – சகியே வாய்ச்சொல்லில் வீரரடி (உருக வைக்கும் பாடல்)
இன்னும் இன்னும் நிறைய மனதை முட்டுகின்றன.. நீங்கள் சொல்ல மாட்டீர்களா என்ன ? 
*
**
Last edited by chinnakkannan; 11th December 2013 at 10:46 PM.
-
11th December 2013 10:25 PM
# ADS
Circuit advertisement
Bookmarks