-
11th December 2013, 07:04 PM
#1391
Senior Member
Senior Hubber
ச்சும்மா ஜோக்குக்காகத் தான் சொன்னேன் ராகதேவரே..ஆனா வானவில்லால்லாம் சொல்லலையே..படத்துல இருக்கா..ரொம்ப நாள் முன்னால பார்த்தது மறந்து போச்சு.. (நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் பொறு தாவணி விசிறிகள் வீசுகிறேன் - வரிகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்)
அந்தப் படத்திலேயே இன்னொரு பாட்டு அழகே அழகே தேவதை.. அதுவும் வைரமுத்தா.. அதுவும் பிடிக்கும் 
தாங்க்ஸ் ஃபார் த பூங்காற்று 

Originally Posted by
mgb
ck.. this is where the greatness of vairamuthu's imagination is.. the hero had vision in his childhood and later on he becomes blind.. he can't see her face but he can imagine her face.. what does he imagine her as? he imagines her as the RAINBOW.. a rainbow raising from the east
Wikipedia says:
.
Last edited by chinnakkannan; 11th December 2013 at 07:10 PM.
-
11th December 2013 07:04 PM
# ADS
Circuit advertisement
-
11th December 2013, 07:59 PM
#1392
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
ச்சும்மா ஜோக்குக்காகத் தான் சொன்னேன் ராகதேவரே..ஆனா வானவில்லால்லாம் சொல்லலையே..படத்துல இருக்கா..ரொம்ப நாள் முன்னால பார்த்தது மறந்து போச்சு.. (நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் பொறு தாவணி விசிறிகள் வீசுகிறேன் - வரிகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்)
அந்தப் படத்திலேயே இன்னொரு பாட்டு அழகே அழகே தேவதை.. அதுவும் வைரமுத்தா.. அதுவும் பிடிக்கும்
தாங்க்ஸ் ஃபார் த பூங்காற்று

CK: Most of your response was addressed to the wrong person!
It was mgb who talked about வானவில், etc. You're welcome for the தாங்க்ஸ் ஃபார் த பூங்காற்று part!
By the way, அழகே அழகு தேவதை was penned by கவிஞர் கண்ணதாசன்.
-
11th December 2013, 09:34 PM
#1393
Senior Member
Senior Hubber
அச்சச்சோ.. ஒரு மீட்டிங்க்ல இருந்து இன்னொரு மீட்டிங்க்குக்குப் புறப்பட்டுப் போய்க்கிட்டிருந்தேனா.. ஸோ எம்ஜிபி என்ற கணேஷச் சரிவரப் பார்க்கலை..
ஹாய் கணேஷ்.. நலமா இருக்கீங்களா
ஸாரி ராகதேவன் அவர்களே..(வேறென்ன தப்பா ரெஸ்பாண்ட் பண்ணினேன்..?

Originally Posted by
mgb
ck.. this is where the greatness of vairamuthu's imagination is.. the hero had vision in his childhood and later on he becomes blind.. he can't see her face but he can imagine her face.. what does he imagine her as? he imagines her as the RAINBOW.. a rainbow raising from the east
Wikipedia says:
A rainbow is an optical and meteorological phenomenon that is caused by both reflection and refraction of light in water droplets in the Earth's atmosphere, resulting in a spectrum of light appearing in the sky. It takes the form of a multicoloured arc. Rainbows caused by sunlight always appear in the section of sky directly opposite the sun.
-
11th December 2013, 10:18 PM
#1394
Senior Member
Senior Hubber
கணேஷ்..வாங்க வாங்க..சுகமா இருக்கீங்களா.. கணேஷ் வந்துட்டாஹ..இனி எல்லா தோழர்களும் வருவாஹ
-
11th December 2013, 10:25 PM
#1395
Senior Member
Senior Hubber
பாட்டுப் பேச வா - 2
*-****************************
தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவு தர மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே
../….களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவு பலகாட்டல்; கண்ணீர்த்
துளிவளர உள் உருக்குதல் இங்கிவையெல்லாம் நீயருளும்…தொழில்களன்றோ
..ஒளிவளரும் தமிழ்வாணி! அடியேனற்கு இவையனைத்தும் உதவுவாயே..!
*
மகாகவி பாரதி பிறந்தஃ நாளில் இன்று அவரை வணங்கி, அவருடைய பாடலை வைத்து ஆரம்பித்துவிட்டு..இப்போது.. திரையில் வந்த சில பாடல்கள்..
.***
ம்ம் முன்வரிசைகட்டி வருவது..கப்பலோட்டிய தமிழன் பாடல் + அந்தப் படத்தின் பாரதி..
வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் அடி
மேலைக் கடலென்றும் கப்பல் விடுவோம்..
பள்ளித்தலமனைத்தும் கோவில் செய்குவோம் நம்
பாரத தேசமென்று தோள் தட்டுவோம்..
ம்ம் தீர்க்கமான கண்கள் தெளிவான பேச்சுடன் நடித்த எஸ்.வி.சுப்பையா..ப்ளஸ் படத்தில் இருக்கும் பாரதியார் பாடல்கள் மற்க்க முடியுமா.
.
**
ரொமான்ஸ் என்றால் – வீணையடி நீயெனக்கு மேவும் விரல் நானுனக்கு – ஏழாவது மனிதன், காற்று வெளியிடைக் கண்ணம்மா உன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் – செக்கச் செவேல் ஜெமினியும் கொஞ்சம் நிறம் குறைந்த சாவித்திரியும் ப்ளாக் அண்ட் ஒய்ட்டாகப் பாடிய பாடல் என வரிசை கட்டுகையில்..இன்னொருபாடல் வந்து முன்னால் நிற்கிறது..
நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணமெய்தினேன்
பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா..
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று இது..
**
இன்னும் சில..
மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்..
*
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்..
(கொஞ்சம் சிரிக்கலாமா.. http://thiraipaadal.com/Lyrics.asp?l...gid=SNGOLD1044
இந்த லிங்க்ல தோனிகள் ஓட்டி விளையாடி வருவோம்னு எழுதியிருக்காங்க.. (கிரிக்கெட்ல இண்ட்ரஸ்ட் இருக்க வேண்டியது தான் அதுக்காக இப்படியா)கை நீட்டச் சொல்லி ஸ்கேலால நாலு போடுபோடணும்)
*
கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம்
கண்டு வரவேணுமடி தங்கமே தங்கம்
(ஜானகியின் குரல் மெய்மறக்க வைக்கும்)
*
நல்லதோர் வீணை செய்தே அதை
நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ – உருக்கமான இந்தப் பாடல் பூர்ணம் வாயசைக்கும் போது இன்னும் உருக வைக்கும் – அந்த சூழ்நிலைக்கு த் தக்கபடி வந்த பாடல்.
*
ஏழாவது மனிதனில்.. அச்சமில்லை அச்சமில்லை…பாடல்..எல்.வைத்தியநாதன் இசை என நினைக்கிறேன்.. உச்சி மீது வானிடிந்து..வீழுகின்ற போதிலும் – என்பது ஹைபிட்சாக வரும் என்று நினைவு..(எஸ்.பி.பி)
*
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வாரடி – சகியே வாய்ச்சொல்லில் வீரரடி (உருக வைக்கும் பாடல்)
இன்னும் இன்னும் நிறைய மனதை முட்டுகின்றன.. நீங்கள் சொல்ல மாட்டீர்களா என்ன ? 
*
**
Last edited by chinnakkannan; 11th December 2013 at 10:46 PM.
-
12th December 2013, 01:20 AM
#1396
Senior Member
Veteran Hubber
More Bharathiyar songs in movies:
-theeraadha viLaiyaattu piLLai
-thooNdil puzhuvinaipol veLiye sudar viLakkinaippol
-kaaNi nilam veNdum
-vetri ettu thikkum etta kottu murase
-aaduvome paLLu paaduvome
-senthamizh naadenumpodhinile
-chinnanchiru kiLiye kaNNammaa
-engirundho vandhaan
-nenju porukkudhillaiye
-sOlai malar oLiyo(suttum vizhi chudardhaan)
-Odi viLaiyaadu paappaa
-manadhil urudhi veNdum
ChinnakkaNNan: I think I gave you more than enough to write about. Some of these are from old movies - vEdhaaLa ulagam,Naam iruvar, Parasakthi,......
Last edited by rajraj; 12th December 2013 at 06:00 AM.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
12th December 2013, 10:04 AM
#1397
Senior Member
Senior Hubber
நன்றி ராஜ்ராஜ் சார்.. பாரதியார் பாடல்கள் லிஸ்ட் தந்தமைக்கு...நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவேயும் எனக்கு ரொம்ப ப் பிடிக்கும்..வேதாள உலகத்தில் என்னபாடல்..
-
12th December 2013, 04:25 PM
#1398
Senior Member
Diamond Hubber
சிக்கா... வேதாள உலகத்தில் கடேசில.. ராஜா ராணி ( டி.ஆர்.மஹாலிங்கம், யோகமங்களம் ) ரிசப்ஷனில் குமாரி கமலா டான்ஸ்
தீராத விளையாட்டு பிள்ளை
-
12th December 2013, 06:01 PM
#1399
Senior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
.வேதாள உலகத்தில் என்னபாடல்..
In addition to "theeraadha viLaiyaattup piLLai", 'thoondil puzhuvinaippOl' and 'Odi viLaiyadu paappaa' are also from VedhaaLa ulagam.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
12th December 2013, 08:50 PM
#1400
Senior Member
Senior Hubber
வேதாள உலகம் எனக்கு மிகப் பிடித்த படம் வெகு சின்ன வயதில் பார்த்தது..பின் கல்லூரி நாட்களில் ஒரு தடவை பார்த்த நினைவு..அவ்வளவாக பாடல்கள் நினைவிலில்லை..பாரதியார் பாட்டு உண்டு என்பது மட்டும் நினைவு.. தாங்க்ஸ் மதுண்ணா.. கிருஷ்ணன் கமலாவை விட கோபிகை கமலா மனம் கவர்கிறார்..
ராஜ் ராஜ் சார்..நீங்க சொன்ன பாடல்களையும் பார்க்க வேண்டும்..ஒட்டுக்க முழுப் படமுமே பார்க்கலாம்னும் பார்க்கிறேன் யூ ட்யூபில் இருந்தால்
Bookmarks