- 
	
			
				
					12th December 2013, 05:14 PM
				
			
			
				
					#631
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
 
 
- 
		
			
						
						
							12th December 2013 05:14 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					12th December 2013, 05:16 PM
				
			
			
				
					#632
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
 
 
- 
	
			
				
					12th December 2013, 05:37 PM
				
			
			
				
					#633
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Junior Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							இன்றைய துக்ளக் இதழில் கேள்வி-பதில் பகுதியில் நடிகர் திலகத்தின் சிலை விவகாரம் பற்றிய சோ அவர்களின் கருத்து :-
 
 சங்கீதா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
 
 கே: சிவாஜி சிலை விவகாரத்தில் தங்கள் கருத்து என்ன?
 
 ப: இந்த ஒரு சிலைதான் போக்குவரத்துக்கு இடைஞ்சல் போல இதை அகற்ற வேண்டும் என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள எல்லா சிலைகளையும் அகற்றுகிறோம் என்று ஒரு பட்டியல் போட்டு, அதில் சிவாஜி சிலையையும் சேர்த்தால் அதில் தவறு இருக்காது. மாறாக இந்த ஒரு சிலைதான் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பது மாதிரி இதை அகற்ற முற்படுவது சரியல்ல.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					12th December 2013, 05:48 PM
				
			
			
				
					#634
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Junior Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி.
 
 உங்கள் கட்டுரையின் உண்மைத்தன்மை அதனுடன் தாங்கள் அளித்துள்ள விளக்கங்கள் ஆதாரங்கள் போற்றுதலுக்குறியது. இருந்தாலும் இந்தக் கலியுகத்தின் இயல்புப்படி வீணர்களின் வாய்ச்சொல்லும் அவர்களின் தவறான கூற்றை நம்புவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இந்த யுகத்தின் சாபக்கேடு நல்லவர்களுக்கும் அவர்கள் தம் செயல்களுக்கும் சரியான அங்கிகாரம் கிடைப்பது கிடையாது.
 
 பொய்யானவர்களும் பித்தலாட்டக்காரர்களும்தான் இந்த உலகத்தின் தற்போதைய நாணயஸ்தர்கள்.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					12th December 2013, 06:08 PM
				
			
			
				
					#635
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Devoted Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							விகடன் பொக்கிஷத்தில் வந்த தலைவரின் பேட்டிக்கு கமெண்ட்ஸ் ,
 
 
 
 COMMENT(S): 7
 
 சிவாஜி ஒரு சகாப்தம். சரித்திரம்
 ஒரு கொம்பனும் மறுக்க முடியாது
 
 kattalai
 
 என்ன இருந்தாலும் சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்... சிவாஜி படங்களை தேடிப்பிடித்து பார்த்து ரசித்த பரவசமான நாட்கள் அவை... இன்னும் தேடிப்பிடித்து பார்த்து கொண்டிருக்கிறேன்... அழியா புகழ் பெற்றவர்...
 
 அசோகன், சிங்கப்பூர்
 
 ஓம் ஸ்ரீ முருகன் துணை
 
 "நான் ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்ட பாடத்தை முழுமையாகக் காட்ட இந்த இரு பாத்திரங்களிலும் நான் செவ்வனே நடித்திருந்தால், அதுவே எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.''
 
 இந்த குரு பக்தி வேண்டும் அனைவருக்கும் வாழ்வில் முன்னேறுவதற்கு
 
 நன்றி! வாழ்க வளமுடன்
 
 Manikkavel
 
 அப்படிப்பட்ட பெரும் புகழும் உள்ள மனிதரை இன்று காக்கைகள் எச்சில் படுத்துகின்றன.
 
 சேகர்
 
 'கப்பலோட்டிய தமிழன்’
 
 அன்று வ.உ.சிதம்பரம் பிள்ளையை நடுத்தெருவில் நிறுத்திய தமிழர்களை ஒரு நிமிடம் சிந்தனையில் நிறுத்தியிருந்தால் இயக்குனர் இந்தப்படத்தை எடுத்திருக்க மாட்டார்.
 
 சிதம்பரம் பிள்ளையின் தமிழ், கனிவான பேச்சு, நிதானம் அனைத்தையும் தத்ரூபமாக சிவாஜி வெளிப்படுத்திய படம். இருந்தென்ன புண்ணியம், அவர் பிறந்தது தமிழகத்தில் அல்லவா!
 
 Crap
 
 நிறையா பெரு இவர ரொம்ப ஒவ்வார் ஆக்டிங் பண்றாருன்னு சொல்றாங்க. தேவர் மகன் படத்துல நல்ல பண்ணிருந்தாரு.
 dsad
 
 மறைந்த திரு.சிவாஜி கணேசனை பற்றி பலரும் விமரிசித்து இருக்கிறார்கள். ஆனால் அவர் எடுத்துக்கொண்ட பாத்திரங்களின் வித்தியாச அளவு மிகப்பெரியது (Range).
 
 இன்றுவரை உலக அளவில் எந்த நடிகரும் முயற்சிக்க துணியாத வீச்சு அது. சில சோதனைகளில் அவர் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். ஆனால் அவர் முயற்சி செய்யவில்லை என்று யாரும் கூற இயலாது.
 
 வயது (அப்பர்); இமேஜ் (அந்தநாள், திரும்பிப்பார்); இப்படி எந்த கட்டுப்பாடும் வைத்துக்கொள்ளாமல் அனைத்து பாத்திரங்களையும் செய்த ஒரே நடிகர் சினிமா சரித்திரத்தில் அவர் ஒருவர்தான்.
 BALA.
 
 
 
 
				
				
				
					
						Last edited by Barani; 12th December 2013 at 06:10 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					12th December 2013, 06:48 PM
				
			
			
				
					#636
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
				
					நல்லதே நடக்கும்!!
				
					
						
							நாளை ஒரு இனிய  நாளாக இருக்கட்டும் ! காக்கைகள் எச்சிபடுத்தினாலும், அவைகளும் NT யின் ரசிகர்களே - நாளை ஒரு நல்ல உழைப்புக்கும், பல நல்ல உள்ளங்களின்  ப்ராத்தனைகளுக்கும் , KC sirன் அயராத முயற்சிக்கும் ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கும் நாள் - நல்லதையே நினைப்போம் - நல்லதே நடக்கும்!!
 
    
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					12th December 2013, 07:19 PM
				
			
			
				
					#637
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							இந்ததிரியில் பல புதிய நண்பர்கள் வந்தவிதம் உள்ளனர் - மனதிற்கு மிகவும் சந்தோஷமாக  உள்ளது - கூடவே ஒரு சிறிய இனம் புரியாத பயமும் வருகின்றது - புதிய நண்பர்கள் தொடர்ந்து பங்கு கொள்ளவேண்டும் - திரியை விட்டு விலக கூடாது என்பதே. விலகிசெல்பவர்கலை தங்க வைக்க நாம் இன்னும் பாடு பட வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து. ஒருவர் மீது தனிப்பட்ட முறையில் கோபமோ , வருத்தமோ இருந்தால் , நாம் ஏன் தனிப்பட்ட முறையில் PM அனுப்பக்கூடாது ? திரியில் ஏன் நம் கோபத்தையோ , வருத்ததையோ பதிவிட வேண்டும் ?  ஒருவரின்
 பதிவு  நன்றாக இருந்தால் அதை கண்டிப்பாக உற்சாக படுத்தவேண்டும் - அதில் உள்ள குறைகளை மட்டும் எடுத்து சொன்னால் , அவர் காணாமல் போக நல்ல வாய்ப்பு உள்ளது . இந்த திரி சமீப காலத்தில் நன்றாக பதிவிடும் பல நல்ல உள்ளங்களை இழந்துள்ளது . இனியும் அப்படி நடக்க விடாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் - இப்போது நம் கவனம் முழுவதும் சிலை அகற்ற படாமல் இருக்க வேண்டும் என்பதில்தான் உள்ளது -  ஒப்புகொள்கிறேன் - அதே சமயம் சிலைக்கு உள்ள அத்தனை சக்தியும் , உயர்வும், பெருமையும் இந்த திரிக்கு உள்ளது என்று  ஆணித்தரமாக நம்புவர்களில் நானும் ஒருவன். இந்த திரியையும் சிலைபோல பாதுகாத்து இன்னும் உயரே எடுத்து செல்லவேண்டும் என்ற ஆசையினால் இதை எழுதுகிறேன் .
 
 அன்புடன் ரவி
    
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					12th December 2013, 07:49 PM
				
			
			
				
					#638
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Mr Muali Sir,
 
 Your article really a nice one. It is very common to write false information
 on NT wherever possible. But due to you and other's efforts in giving a
 correct picutre on NT will be a eye opener for those people.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					12th December 2013, 08:22 PM
				
			
			
				
					#639
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Senior Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							டியர் முரளி சார்
 
 தங்களுடய பதிவு எனக்கு படித்ததிலிருந்து ஒரு வித ப்தட்டத்துடனேயே இருக்கிறேன். இப்படி நடிகர் திலகத்தை பற்றி தவறாக பிரச்சாரம் செய்வதால் அவர்களுக்கு கிடைப்பது என்ன ? தங்களைப் போல ரசிக வல்லுனர்களை நமது நடிகர் திலகம் பெற்றிருப்பதனால் இது போன்றபொய் பித்தலாட்டங்கள் அவ்வப்போது தவிடுபொடியாவது நிஜம். தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி
 
 dear kc sir thanks for your great effort
 யாருக்கும் செய்நன்றி மறவாதவ்ரும் கடுகளவும் பிறருக்கு துரோகம் செய்யாதவரும் தன் தொழிலை நேர்மையாக செய்து கலைசேவை செய்த ஒப்பற்ற நம் ந்டிகர் திலகத்தின் சிலை அகற்றாமல் அதே இடத்தில் இடம் பெறச்செய்ய நீதி தேவதை தான் அருள் புரிய வேண்டும்.
 
 இத்தனை நாட்கள் ரசிகர்கள் துணையோடு பல போராட்டங்களை திறம்பட நடத்தி அரசுக்கு அறிவுத்திய செயல் வீரர் திரு.சந்திரசேகர் அவர்களின் அறப்போருக்கு நல்ல நீதி கிடைக்க இறைவனை வேண்டுவோம்
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					13th December 2013, 05:37 AM
				
			
			
				
					#640
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  g94127302  
 இந்ததிரியில் பல புதிய நண்பர்கள் வந்தவிதம் உள்ளனர் - மனதிற்கு மிகவும் சந்தோஷமாக  உள்ளது - கூடவே ஒரு சிறிய இனம் புரியாத பயமும் வருகின்றது - புதிய நண்பர்கள் தொடர்ந்து பங்கு கொள்ளவேண்டும் - திரியை விட்டு விலக கூடாது என்பதே. விலகிசெல்பவர்கலை தங்க வைக்க நாம் இன்னும் பாடு பட வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து. ஒருவர் மீது தனிப்பட்ட முறையில் கோபமோ , வருத்தமோ இருந்தால் , நாம் ஏன் தனிப்பட்ட முறையில் pm அனுப்பக்கூடாது ? திரியில் ஏன் நம் கோபத்தையோ , வருத்ததையோ பதிவிட வேண்டும் ?  ஒருவரின் 
 பதிவு  நன்றாக இருந்தால் அதை கண்டிப்பாக உற்சாக படுத்தவேண்டும் - அதில் உள்ள குறைகளை மட்டும் எடுத்து சொன்னால் , அவர் காணாமல் போக நல்ல வாய்ப்பு உள்ளது . இந்த திரி சமீப காலத்தில் நன்றாக பதிவிடும் பல நல்ல உள்ளங்களை இழந்துள்ளது . இனியும் அப்படி நடக்க விடாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் - இப்போது நம் கவனம் முழுவதும் சிலை அகற்ற படாமல் இருக்க வேண்டும் என்பதில்தான் உள்ளது -  ஒப்புகொள்கிறேன் - அதே சமயம் சிலைக்கு உள்ள அத்தனை சக்தியும் , உயர்வும், பெருமையும் இந்த திரிக்கு உள்ளது என்று  ஆணித்தரமாக நம்புவர்களில் நானும் ஒருவன். இந்த திரியையும் சிலைபோல பாதுகாத்து இன்னும் உயரே எடுத்து செல்லவேண்டும் என்ற ஆசையினால் இதை எழுதுகிறேன் . 
 
அன்புடன் ரவி 
   
 
 
 exactly.
 
 
 
 
 
 
 
Bookmarks