-
14th December 2013, 06:12 PM
#651
Junior Member
Seasoned Hubber
NTயின் சிலையும் இந்த திரியும்
சிலை
1 எவ்வளவோ புகழாரம் பெற்றபின் நிறுவப்பட்ட சிலை - தமிழகம் ஒரு மாபெரும் நடிகனுக்கு, தமிழை புரியவைத்த ஒரு தெய்வமகனுக்கு சிலையை நிறுவி , தன் கறைகளை கழுவிகொண்டது
இந்த திரி
இந்த திரியும் சாதாரணமாக உருவானது அல்ல - பல நல்ல உள்ளங்கள் , திரிக்கு உள்ளேயும் , வெளியேயும் உடம்பை வருத்திக்கொண்டு பாடுபட்டு 12வது இலக்கை அடைய வைத்துள்ளர்கள் - கறைகள் ஏற்படுத்தின பலரை , சாரதா, பம்மலார் , ராகவேந்திரா , கோபால் , முரளி ,வாசு ( 2) , KC சேகர் . கார்த்திக் , NT 360 இன்னும் பல பூஜிக்கப்பட்ட அஸ்திரங்களினால் புறமுதுகை காட்டி ஓட வாய்த்த பெருமை இந்த திரிக்கு என்றுமே உண்டு
சிலை
2 கோடான கோடி மக்களுக்கு , தேச பக்தியை , நக்கீரன் வளர்த்த தமிழை , அண்ணன் - தங்கை எப்படி இருக்கவேண்டும் என்று இது வரையில் யாருமே புரிந்துகொள்ளாத நபர்களை , கண்ணீருடன் புரிய வைத்தவனை என்றுமே மனதில் இருந்து நீங்காதவனை பாராட்டும் வண்ணம் மக்கள் மகிழ்ச்சியுடன் சந்திக்கும் மெரீனா பீச்சின் அருகில் சிலையின் உருவிலே உயிர் கொடுத்தனர்
இந்த திரி
புரிந்துகொள்ள முடியாதவனை , ஒரு ஒப்ற்ற மாமனிதனை , ஒரு கர்ணனாக வாழ்ந்தும் காட்டியவனை இந்த திரி உலகெங்கும் பல நல்ல பதிவுகளால் பறை சாற்றியது , பறை சாற்றும்
சிலை
3 சிலை பல பொறாமையர்களை சந்தித்தது - அரசியலாக அந்த சிலையை எடைபோட்டது - விலை மதிக்க முடியாதவனை , வெறும் சிலையாக பாவித்து இந்த அரசு.
இந்த திரி
இந்த திரியும் ஒரு விலக்கல்ல - பொறாமை கொண்டனர் பலர் , உண்மையை உண்மையாக உரைத்ததனால் - வேகத்தை தடுக்க பார்த்தனர் பலர் - தொய்வு கண்டாலும் , துவண்டு விடவில்லை- மீண்டும் மீண்டும் தக்க ஆதாரத்துடன் திரி தன்முதல் இடத்தை தங்க வைத்துக்கொள்கின்றது
சிலை
4 ஒரு சிலை மக்கள் அன்பினால் , கோடான கோடி ரசிகர்கள் பாசத்தால் உயிர்பெற்றது அங்கே !!
இந்த திரி
ஒரு உயிர் ஓவியமான இந்த திரி இப்பொழுது ஒரு வெறும் சிலையாக மாறிக்கொண்டு வருகின்றதே!!! - பல நல்ல பதிவுகளுக்கு உரியவர்கள் சிலையாக மாறியது / மாறுவது ஏன்???
சிலை
5 சிலைக்கு கண்டிப்பாக வெற்றி கிடக்கும் - அதை அகற்ற ஒரு சக்தி பிறக்கவில்லை இன்னும் - அப்படி ஒரு சக்தி இருந்தாலும் , சமூகநலபேரவை என்ற பராசக்திக்கு முன் அதன் வீர்யம் எடுபடாது
இந்த திரி
பொறாமை , வீண் பிடிவாதம், கடினமான வார்த்தைகள் , மற்ற நல்ல பதிவுகளை உடனே பாராட்டும் தன்மை இல்லாமை - இப்படிப்பட்ட விரோதிகளை அண்ட விடாமல் ஒரு சமூகநலபேரவை இங்கும் உருவாகினால் , இந்த திரியை இனி யார் வெல்ல கூடும் ?
அன்புடன் ரவி

-
14th December 2013 06:12 PM
# ADS
Circuit advertisement
-
14th December 2013, 06:42 PM
#652
Junior Member
Newbie Hubber
well said ravi sir what you pointed in 100% true
-
14th December 2013, 06:44 PM
#653
Junior Member
Newbie Hubber
Respected Chandrasekaran your efforts will success by the grace of our gad Nadigarthilagam grace.Goahead we will be with you
-
15th December 2013, 08:40 AM
#654
Junior Member
Newbie Hubber
பல உள்ளங்கள் இணைய போகும்,இருவர் உள்ளத்தை வரவேற்கும் ஆவலில் ,மனம் பீ.எஸ்.பள்ளியில்.இன்று மாலை சிந்திப்போம்.
-
15th December 2013, 02:32 PM
#655
Senior Member
Devoted Hubber

Originally Posted by
KCSHEKAR
A RARE PHOTO

மிக அறிய புகைப்படம். 1980 கு முன்பாக irukkum
-
15th December 2013, 05:24 PM
#656
Junior Member
Seasoned Hubber
கவிதாஞ்சலி -1
உன்னை வெறும் சிலை என்கின்றனர் சிலர் - நீ சிலையா ? -
இந்த தமிழகத்தை 50 வருடங்களாக நடிப்பு சக்ரவர்த்தியாக அரசாண்டாய் -
உனக்கு முன்னாலும் இப்படி ஒரு தெய்வ பிறவியை இந்த தமிழகம் சந்தித்தது இல்லை
இனியும் சந்திக்க போவதுமில்லை -
நாங்கள் அல்லவோ நடமாடும் சிலைகள -
மணிமண்டபம் கட்ட தெரியாமல் சிலையாக உள்ளோம் - பாரத ரத்னா உனக்கு இன்னும் கிடைக்க விடாமல் தடுக்கின்றோம் -
உன் சிலைமீது பறவைகள் எச்சமிடுகின்றனவாம் - ஒன்னும் செய்யாமல் சிலையாக இருக்கும் இந்த தமிழகத்தின் மீது இந்த உலகமே எச்சமிடுகின்றனவே -
அதுவல்லவோ கேவலம் --
நீ போக்குவரத்திற்கு தடையாக நிற்கின்றாயாம் - கண்ணீரில் பல நாட்கள் வாசம் செய்த சிரிப்பு ஒன்று வெளி வருகின்றது -
உன் படங்களின் Re- releaseகளால் , போக்குவரத்துக்கு தடைபட்டது என்பது உண்மைதான் - ஆனால் மெரினா பீச்சிற்கே நீ வந்த பிறகுதான் ஒரு கலை வந்தது , ஒரு அழகு வந்தது -
மக்கள் ஒழுங்காக செல்ல ஆரம்பித்தனர் - இந்த உண்மையை யாரால் மறுக்க முடியும் ? -
சிலையை அகற்றவேண்டுமானால் , முதலில் எங்களை அகற்ற வேண்டும் - நாங்கள் தானே உண்மையான சிலைகள் - ஒன்று பட்டுருக்கின்றோம்- எங்களை அகற்றுவது
கடினம் - தெரிந்தே ஏன் தோல்வியை தழுவுகிறீர்கள் ????
ரவி

-
15th December 2013, 05:50 PM
#657
Junior Member
Seasoned Hubber
கவிதாஞ்சலி -2
ஒன்றானவன் - உருவில் பலரானவன்
உருவான செந்தமிழில் உயிரானவன்
நன்காய் இருந்த தமிழகத்தில் நாடாண்டவன்
நாற்பதுகோடி மக்களின் மூச்சானவன்
அஞ்சாதவன் எதற்கும் அஞ்சாதவன்
அருமையான நெஞ்சங்களில் என்றும் நிலையானவன்
இன்று சிலையானவன் , பலரை சிலையாக்கினவன் - சிலையான பின்னும் மலையானவன் -
முன்னுக்கும் பின்னுக்கும் உதாரணம் காட்ட முடியாதவன் --
நேற்றாகி , இன்றாகி , என்றைக்கும் நிலையாகி ஊற்றாகி உயிரானவன் - காலத்தால் அழிக்க முடியாதவன் --------
(தொடரும்)
ரவி

-
15th December 2013, 06:34 PM
#658
Junior Member
Seasoned Hubber
கவிதாஞ்சலி - 3
எங்கிருந்தோ வந்தாய் - பாரசக்தியின் அருளினால்
என்ன தவம் செய்தோம் உன்னை அடைய - அந்த யசோதா கூட எங்களை பொறுத்த வரையில் , கொஞ்சமாகதான் தவம் செய்திருக்க வேண்டும் !
கர்ணனாக வாழ்ந்து காட்டினாய் - உன் கொடையால் தமிழகம் வளர்த்தது - தன்னை வளர்த்துகொண்டது - இன்று U too Brutus என்று சொல்ல வைத்துள்ளது
ரஹீமாக உருவானாய் - அல்லாவின் கருணையால்
இஸ்லாமிய மதமே பெருமைகொண்டது
அன்பை காட்ட கற்றுகொண்டோம் - இன்றோ அதை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டு இருக்கிறோம்
அந்தோனியாக உரு மாறினாய் - ஏசுவின் அன்பால்
அமைதி கிடைத்தது எங்கள் எல்லோருக்கும் - கிடைத்த அமைதியை அருமையாக தொலைத்துவிட்டோம்
இன்று சிலையாக மாறினாய் - உன்னை அகற்றுவதில் தீவிரமாக உள்ளோம் - ஏன் தெரியுமா? - தமிழகத்திற்கு ஏன் இன்னும் பெருமை வேண்டும் என்றே !
இந்த நாட்டின் தலைவர்களை எங்கே மதிக்கிறோம் - சிலைகளை மதிபதற்க்கு - உன்னை மதிக்கிறோம் - மறக்க முடியவில்லை
உன் சிலை வெறும் பிறந்த நாளுக்கும் , மறைந்த நாளுக்கும் கட்டப்பட்டதில்லை - இந்த தமிழை வாழ வைத்ததற்காக , தேச பக்தியை ஊட்டி எங்களை வளர்ததிற்காக - எங்கள் உள்ளம் எல்லாம் நிறைந்து நிற்பதற்காக !!
எங்கள் உள்ளமல்லாம் நிறைந்த உனக்கு , சிலை தேவை இல்லைதான் - ஆனால் நாங்கள் நிரந்தரம் அல்லவே - எதிர்காலம் உன்னை நினைக்க வேண்டாமா ? நினைத்து போற்றவேன்டமா - இந்த தமிழகம் நாளை திருந்த வாய்ப்பு உள்ளதே !!
Ravi

-
15th December 2013, 07:46 PM
#659
Junior Member
Seasoned Hubber
கவிதையில் ஒரு நன்றி
இது முரளிக்காக
இங்கு போதனைகள் சொல்ல பலர் உண்டு - அதை செய் , இதை செய்யாதே என்று சொல்பவர்கள் மத்தியில் நீர் வேற மாதிரி - ஆணித்தரமாக சொல்ல நீர் ஒருவர் தானே இங்கு உண்டு -
எங்களுக்கு நீர் ஒரு பிரம்மாஸ்திரம் - அனால் துரதிஷ்ட வசமாக , பலதடவை உங்களை பிரயோகம் செய்ய வேண்டி உள்ளது - நாகாஸ்திரம் போல எங்களிடமே வந்து சேர்த்து விடுகிறீர்கள் - அதனால் எங்களக்கு கிடைப்பது மன நிம்மதி.
நீர் இருக்க பயம் ஏன் ? நாங்கள் எல்லோரும் நன்றாக உறங்குகையில், உண்மையை உறங்க விடாமல் பார்த்துகொள்ளும் பண்பு யாருக்கு வரும் ??
நீர் வாழ்க எல்லா வளமும் பெற்று !!
அன்புடன் ரவி :
smile2:
-
15th December 2013, 08:00 PM
#660
Junior Member
Seasoned Hubber
கவிதையில் ஒரு நன்றி - 2
இது நெய்வேலி வாசுவிர்காக
நக்கீரன் தமிழ் வளர்த்தான் என்று சொல்லுவார்கள் - கேட்டதுண்டு - இன்று பார்க்கிறோம் - உங்கள் நடையில்
கோவிலுக்கு சென்றால் ஆண்டவன் அருள் கிடைக்கும் - சொல்ல கேட்டதுண்டு - நடைமுறையில் உங்கள் பக்தியின் மூலம் உணர்கின்றோம்
உழைத்தால் தான் நிம்மதி கிடைக்கும் - சொல்ல புரிந்துகொண்டுள்ளோம் - உங்கள் பதிவுகள் மூலம் கிடைக்கின்ற நிம்மதியும், சந்தோஷமும் வேறு எங்கு கிடைக்கும் ?
சிலையை சிலையாக பார்க்கும் இந்த தமிழகத்தில் , பாராட்டுகளக்கும் பஞ்சம்தான் - நீங்கள் இந்த திரிக்கு திரும்பி வரும் அந்த நல்ல நாள் தான் - NT சிலையை அகற்ற வேண்டாம் என்று தீர்ப்பு வரும் நாளாக இருக்குமோ ?
எங்களுக்கும் அன்று தான் "Happy new year"
அன்புடன் ரவி :
smile2:
Bookmarks