Page 69 of 401 FirstFirst ... 1959676869707179119169 ... LastLast
Results 681 to 690 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #681
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Fiji
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Gopal sir,I enjoyed your iruvar ullam coverage.You have specially mentioned the dialogues of Kalaignar.One more interesting dialogue is by Iyya theriyaadhaiyaa Ramarao.When someone asks him showing A.Karunanidhi,who is he,he replies that ,"I am husband to his daughter and he is my husband".At anyplace,anyday I laugh myself when I remember this dialogue.
    "AVAR PONNUKKU NAAN PURUSAN YENAKKU AVARU PURUSAN"

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #682
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like


    நடிகர்திலகம் சிவாஜி சிலை வழக்கில் நேற்று (17-12-2013) வழக்கறிஞர்களின் வாதம் முடிந்தது. ஏற்கனவே நான் இத்திரியில் குறிப்பிட்டிருந்த பல கருத்துக்களோடு, பல் வழக்குகளின் தீர்ப்புகளையும் மேற்கோளிட்டு, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் சார்பில் திரு.பிரபாகரன் வாதிட்டார். அவற்றில் சில:

    1) சென்னை மாநகரில், கடந்த 10 வருடங்களில் வருடந்தோறும், 5000 முதல் 10 ஆயிரம் வரை சாலை விபத்துக்கள் நடக்கின்றன. (காமராஜர் சாலை உட்பட சாலை வாரியாக நடைபெற்ற புள்ளி விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன) இவை ஓட்டுனரின் கவனக்குறைவு, சிக்னலை மதிக்காமை மற்றும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதாலேயே ஏற்படுகின்றன.

    2) சென்னையின் மிக முக்கிய சாலையான அண்ணா சாலை உட்பட தமிழகத்தின் பல்வேறு சாலைகளில் பல்வேறு சிலைகள் இருக்க, நடிகர்திலகத்தின் சிலை மட்டும் இடைஞ்சல் என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல. பொதுநலன் வழக்காக இதனைத் தொடர்ந்திருப்பவர் உன்மையிலேயே பொதுநலன் கருதியிருந்தால், எல்லா சிலைகள் குறித்தும் தொடர்ந்திருக்கவேண்டும். சிவாஜி சிலையை மட்டும் எதிர்த்திருப்பது உள்நோக்கம் கொண்டது.

    3) கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை வைரவிழாவையோட்டி சென்னை, கடற்கரை காமராஜர் சாலையில் ஒரு நினைவு வளைவு திறக்கப்பட்டது. அதனை எதிர்த்து ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு அதற்காக நீதிபதிகள் குறிப்பிட்ட காரணம்:

    அரசாங்கத்தின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது. இந்த சாலையில் வளைவு அமைப்பதற்காக, நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்துத் துறையிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது - என்று குறிப்பிட்டுள்ளார்கள்

    நடிகர்திலகம் சிலை வழக்கைப் பொறுத்தவரையில் மேற்குறிப்பிட்ட அனைத்து காரணங்களுமே பொருந்தும். நடிகர்திலகம் சிலை அமைப்பதற்காக நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்துத் துறையிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதனாலேயே அவர்கள் கொடுத்த தடையில்லா சான்றிதழும் மாறிவிடாது.

    இதேபோல, உச்சநீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகள் மற்றும், ஆந்திர உயர்நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பு உட்பட பல வழக்குகளின் தீர்ப்புகளை சமர்ப்பித்து, இந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடப்பட்டது.

    கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் வாதிட்ட வழக்கறிஞரின் வாதத்தின் சில முக்கிய பகுதிகளை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.

    தீர்ப்பு ஜனவரி முதல் வாரத்தில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

    பராசக்தியில் கல்யாணிக்காக நீதிமன்றத்தில் வழக்காடிய நடிகர்திலகத்தின் சிலை அதே இடத்தில் அமையும்படி தீர்ப்பு அமையும் என்று நம்புவோம். பராசக்தி வைரவிழா கொண்டாடிய இந்நேரத்தில், பராசக்தி குணசெகரனுக்காக நாம் நீதிமன்றம் சென்றிருக்கிறோம். நீதி வெல்லும்

    ஆதரவளித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி.



    Last edited by KCSHEKAR; 18th December 2013 at 02:54 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  4. #683
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Excellent arguments and news as well KC Sir - Predominantly the credit goes to you . Hope some wisdom will prevail over concerned and focus on more productive work of traffic management . I'm sure the new year 2014 will bring us more cheers and rejuvenate this thread as well .


  5. #684
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Thanks mr kc sir for the detailed write up about the NT statue case position.
    we can definitely expect positive verdict as we all know NT is a person whoneither
    did any thing bad to others nor thought of doing bad things;
    TRUTH ALWAYS SURVIVE IN THE END,
    YOUR EFFORTS WILL NOT GO WASTE.

  6. #685
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    ஆனந்த விகடன்- 25-12-2013 - பொக்கிஷம் - அன்று
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #686
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Location
    The Gambia
    Posts
    0
    Post Thanks / Like
    தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்"

    சினிமா உலகில் சிவாஜி கணேசனுக்கு என்று சிம்மாசனம் என்றைக்கும் உண்டு. ஆனால் அவர் அதை எப்படி அடைந்தார் என்று தெரியுமா?

    பேரறிஞர் அண்ணா சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்று ஒரு நாடகம் எழுதி இருந்தார். தி.மு.க மாநாட்டில் அது நடக்க வேண்டும். எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக, மராட்டிய மாமன்னன் சிவாஜியாக நடிக்க வேண்டும். மாநாட்டுக்கு ஒரு வாரம் இருக்கும் போது நடிக்க மறுத்துவிட்டார்.
    இனிப் போய் யாரைத் தேடுவது? அறிஞர் அண்ணாவிடம் இதைத் தெரிவித்ததும் மூக்கும் முழியுமா ஒரு பயலைப் பிடிங்கப்பா… என்று சொல்லிவிட்டுத் திரும்பியபோது கணேசன் (பிற்கால சிவாஜிகணேசன்!) கண்ணில் பட்டார். அவருக்கு முழியும் பெரிசு… மூக்கும் பெரிசு “கணேசா நீ நடிக்கிறியா?” என்றார் அண்ணா.

    “அண்ணா அது எவ்வளவு பெரிய வேஷம்… அண்ணன் நடிக்கிறதா இருந்தது… நான் எப்படி… நான் ரொம்ப சின்னவன்” என்று பணிவு காட்டியிருக்கிறார் கணேசன். “இனிமேல் போய் யாரைத் தேடறது… இந்தா இதுதான் சிவாஜி பாடம் (வசனம்) நீ படிச்சு வை. நான் சாப்பிட்டிட்டு வந்து கேக்கறேன்” என்று முடிவு சொல்லிவிட்டு நகர்ந்தார் அண்ணா. சாப்பிட்டு விட்டு, சின்ன தூக்கம் போட்டு விட்டு அண்ணா திரும்பியதும் ஆச்சர்யம் காத்திருந்தது. “அண்ணா இப்பிடி நாற்காலில உட்காருங்க” என்று அழுத்தி உட்கார வைத்துவிட்டு கணேசன் சிவாஜியாக வசனம் சொல்ல ஆரம்பித்தார். கொடுத்த பாடத்தை (நஸ்ரீழ்ண்ல்ற்)ப் பார்த்து படிக்கப் போகிறார் என்று எண்ணிய அண்ணா திகைத்துப் போனார்.

    மொத்த நாடகத்தில் சிவாஜி வேடத்துக்குரிய வசனம் முழுவதையும் (பலப்பல பக்கங்கள்) கிடுகிடுவென்று மனப் பாடத்துடன் நடித்துக் காட்டினார் கணேசன். முழுவசனமும் மனப்பாடம்…! நம்ப முடிகிறதா? “அப்புறம் படிக்கறேனே! கொஞ்சம் கொஞ்சமா படிக்கிறேனே…!” என்ற சோம்பல் அவரிடம் இல்லை. ஒரே மூச்சில் மனப்பாடம்… கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தும் கடின உழைப்பு…
    அதனால் தான் நாடகத்தைப் பார்த்துவிட்டு பரபரப்பாக மேடை ஏறி வந்த தந்தை பெரியார். “யாருப்பா அந்தப் பையன்… என்னமா நடிக்கிறான்” என்று புகழ்ந்தபோது “கணேசன்” என்று அறிமுகப்படுத்தினார்கள். “கணேசனா… இல்ல… இல்ல… இவன் சிவாஜிகணேசன்” என்று பட்டாபிஷேகம் செய்தார். திராவிட வசிட்டர் தமிழர் மகரிஷி தந்தை பெரியார்.

    எட்டு மணிக்கு ஷூட்டிங் என்றால் எட்டு மணிக்கு வந்து தயாராகும் இக்கால நடிகர்கள் போல அல்லர் அவர். எட்டு மணிக்கே மேக்கப்புடன் தயாராக இருப்பார். அதனால்தான் எட்டாத இடங்களை எட்ட முடிந்தது அவரால்!


    ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz

  8. #687
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    Quote Originally Posted by N.V.Raghavan View Post
    தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்"

    சினிமா உலகில் சிவாஜி கணேசனுக்கு என்று சிம்மாசனம் என்றைக்கும் உண்டு. ஆனால் அவர் அதை எப்படி அடைந்தார் என்று தெரியுமா?

    பேரறிஞர் அண்ணா சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்று ஒரு நாடகம் எழுதி இருந்தார். தி.மு.க மாநாட்டில் அது நடக்க வேண்டும். எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக, மராட்டிய மாமன்னன் சிவாஜியாக நடிக்க வேண்டும். மாநாட்டுக்கு ஒரு வாரம் இருக்கும் போது நடிக்க மறுத்துவிட்டார்.
    இனிப் போய் யாரைத் தேடுவது? அறிஞர் அண்ணாவிடம் இதைத் தெரிவித்ததும் மூக்கும் முழியுமா ஒரு பயலைப் பிடிங்கப்பா… என்று சொல்லிவிட்டுத் திரும்பியபோது கணேசன் (பிற்கால சிவாஜிகணேசன்!) கண்ணில் பட்டார். அவருக்கு முழியும் பெரிசு… மூக்கும் பெரிசு “கணேசா நீ நடிக்கிறியா?” என்றார் அண்ணா.

    “அண்ணா அது எவ்வளவு பெரிய வேஷம்… அண்ணன் நடிக்கிறதா இருந்தது… நான் எப்படி… நான் ரொம்ப சின்னவன்” என்று பணிவு காட்டியிருக்கிறார் கணேசன். “இனிமேல் போய் யாரைத் தேடறது… இந்தா இதுதான் சிவாஜி பாடம் (வசனம்) நீ படிச்சு வை. நான் சாப்பிட்டிட்டு வந்து கேக்கறேன்” என்று முடிவு சொல்லிவிட்டு நகர்ந்தார் அண்ணா. சாப்பிட்டு விட்டு, சின்ன தூக்கம் போட்டு விட்டு அண்ணா திரும்பியதும் ஆச்சர்யம் காத்திருந்தது. “அண்ணா இப்பிடி நாற்காலில உட்காருங்க” என்று அழுத்தி உட்கார வைத்துவிட்டு கணேசன் சிவாஜியாக வசனம் சொல்ல ஆரம்பித்தார். கொடுத்த பாடத்தை (நஸ்ரீழ்ண்ல்ற்)ப் பார்த்து படிக்கப் போகிறார் என்று எண்ணிய அண்ணா திகைத்துப் போனார்.

    மொத்த நாடகத்தில் சிவாஜி வேடத்துக்குரிய வசனம் முழுவதையும் (பலப்பல பக்கங்கள்) கிடுகிடுவென்று மனப் பாடத்துடன் நடித்துக் காட்டினார் கணேசன். முழுவசனமும் மனப்பாடம்…! நம்ப முடிகிறதா? “அப்புறம் படிக்கறேனே! கொஞ்சம் கொஞ்சமா படிக்கிறேனே…!” என்ற சோம்பல் அவரிடம் இல்லை. ஒரே மூச்சில் மனப்பாடம்… கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தும் கடின உழைப்பு…
    அதனால் தான் நாடகத்தைப் பார்த்துவிட்டு பரபரப்பாக மேடை ஏறி வந்த தந்தை பெரியார். “யாருப்பா அந்தப் பையன்… என்னமா நடிக்கிறான்” என்று புகழ்ந்தபோது “கணேசன்” என்று அறிமுகப்படுத்தினார்கள். “கணேசனா… இல்ல… இல்ல… இவன் சிவாஜிகணேசன்” என்று பட்டாபிஷேகம் செய்தார். திராவிட வசிட்டர் தமிழர் மகரிஷி தந்தை பெரியார்.

    எட்டு மணிக்கு ஷூட்டிங் என்றால் எட்டு மணிக்கு வந்து தயாராகும் இக்கால நடிகர்கள் போல அல்லர் அவர். எட்டு மணிக்கே மேக்கப்புடன் தயாராக இருப்பார். அதனால்தான் எட்டாத இடங்களை எட்ட முடிந்தது அவரால்!


    ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz
    எனக்குத் தெரிந்து "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் (அல்லது) சந்திரமோகன் " நாடகம் அண்ணாவால் 1948-இலேயே போடப்பட்டது. அதற்கு எம்ஜியார் முதலில் நடிக்க இருந்தார் என்பது புதிய , இதுவரை கேள்விப்படாத செய்தி. 1948-இல் தி.கதான் இருந்தது!
    திமுக செப்டம்பர் 1949-இல் துவக்கப்பட்டது!

    திமுக துவக்கிய பிறகு பெரியாரும் அண்னாவும் சுமுகமாகப் பேசிக் கொள்ளவே பல ஆண்டுகள் ஆகின!

    தி.க காலத்திலேயே நடந்த நிகழ்வு இது. பெரியார் எனும் மனிதர் இல்லாவிட்டால் தமிழினம் தன் அடையாளத்தைக் கண்டுகொள்ளவே நூற்றாண்டுகள் ஆகியிருக்கும்!
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  9. #688
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் - சிவாஜி கணேசனை தமிழ் உலகுக்கு அறிமுகம் செய்த மாபெரும் கலைப் பெட்டகம். அதன் இயங்கு தளம் குறித்து தெரிந்து கொள்ள :

    மராத்திய சிவாஜியும் மூன்று கோணங்களும்



    "......மண்ணின் மைந்தனாக சிவாஜி எழுந்து போராடினார் என்பதும் உண்மை. முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப்பை எதிர்த்துக் களம் கண்டார் என்பதும் உண்மை. ஆனால் இரண்டு உண்மை களுக்கும் இடையில் புதைந்து கிடந்த இன்னொரு உண்மையை, அறிஞர் அண்ணா அவர்கள்தான் திராவிட இயக்கப் பார்வையோடு வெளிக் கொண்டுவந்தார். எதிரியோடு போராடி வெற்றி பெற்று தன் சொந்த மண்ணை அவர் மீட்டெடுத்தார் என்றாலும், அம்மண்ணிற்கு அரசனாக அவர் முடிசூடிக்கொள்வதற்கு ஆயிரம் தடைகள் இருந்தன.

    வர் பிறந்த குலம் ஆளப்பிறந்த குலம் அன்று என்று சொல்லி, ஒருநாளும் அவர் மன்னராக முடியாது என்று வைதீகப் பார்ப்பனர்கள் வாதிட்டனர். ஒரு சூத்திரன் எப்படி நாடாளலாம் என்று கேள்வி எழுப்பினர். போரிலே புலியாக இருந்தாலும், வைதீக புரியிலே சிவாஜி எலியாகச் சிக்கிக் கொண்டார். மாவீரன், மராட்டியம் பெற்றெடுத்த வீரன், களத்திலே சூரன் சிவாஜி, காகப்பட்டரிடம் அடைக்கலம் புகுந்த பின்பே அரியாசனம் ஏற முடிந்தது என்னும் உண்மையைத் தன் நாடாகத்தின் மூலம் அனைவரும் அறிய வைத்தார் அண்ணா.

    சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்னும் நாடகத்தில், வெளிவராத பல வரலாற்று உண்மைகளை விளக்கிக் காட்டினார். அதற்குப் பிறகே சிவாஜியின் மூன்றாவது பக்கத்தை ஊரும் உலகமும் அறிந்து கொண்டது.


    மராத்திய மண்டலத்தைக் கமண்டல நீர் தெளித்து அவர்கள் உருவாக்கவில்லை. மராத்தியர்கள் ரத்தம் சிந்திய பிறகே அந்த மண்டலம் உருவாயிற்று. ஆனால் அதுவரை காத்திருந்த பார்ப்பனர்கள், ஆட்சி பீடம் ஏறும்தருவாயில் தங்கள் சூழ்ச்சி வலைகளை விரித்தனர். வேறு வழியின்றி சிவாஜியும் அதற்கு ஆட்பட்டார், அடிமைப்பட்டார். இதுதான் அண்ணா வடித்துத் தந்த சித்திரம்.

    இந்தச் சித்திரத்திற்குள்தான் இந்தியா முழுவதும் விரிந்து கிடந்த வருணாசிர தர்மத்தின் வலைப்பின்னல்கள் மக்களுக்கு விளக்கப்பட்டன.
    ஜோதிராவ் பூலேக்குப் பார்ப்பனிய ஆதிக்கம் புரியாத புதிர் இல்லை. அய்யா பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் அரைநூற்றாண்டிற்கும் முன்பாகவே அதனை உலகிற்கு எடுத்துக்காட்டிய உன்னத மனிதர் ஜோதிராவ் பூலே. எனினும் சிவாஜியின் வீரத்தை எடுத்துக்காட்டி, அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராட வேண்டிய ஆவேசத்தின் குறியீடாய் சிவாஜியை அவர் பார்த்தார்.

    அதே பார்வையை அவர் மக்களுக்கும் ஊட்டினார். அந்த ஊக்கமும் உணர்வும் வரப்பெற்றால்தான், அடிமைத்தளையை அறுத்தெறிந்து, விடுதலைக்காக மக்கள் வீறுகொண்டு எழுவார்கள் என்று பூலே கருதினார்.

    ஒரு கோணத்தில் பூலேயின் பார்வை சரிதான் என்றாலும், வருணசாதி அமைப்பையே சமூக அமைப்பாகக் கொண்டிருக்கிற இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினார் அண்ணா. அதற்குக் கலை இலக்கியத் தளமே மிக உகந்தது என்பது அவர் கருத்தாக இருந்தது. அதனால் அண்ணாவும் அவரோடு இணைந்து பணியாற்றிய திராவிட இயக்கத் தலைவர்கள் பலரும் தங்கள் பார்வையைக் கலை இலக்கியங்கள் மூலம் நிலைநாட்டினர்.

    திராவிட இயக்கம், 1940 தொடங்கி கலை இலக்கியத் தளங்களை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. முதன் முதலாகப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும், அவரைத் தொடர்ந்து அறிஞர் அண்ணாவும் திரைத்துறைக்குள் நுழைந்தனர். பிறகு கலைஞர், ஜலகண்ட புரம் கண்ணன், கண்ணதாசன் என ஒரு எழுத்துப்பட்டாளமே கலைத்துறையில் காலடி எடுத்து வைத்தது. நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி, நடிகவேள் எம்.ஆர். இராதா, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகமணி டி.வி. நாராயணசாமி, இலட்சிய நடிகர் எஸ்.எஸ். இராசேந்திரன் எனத் திரைப்பட நடிகர்களின் வரிசையயான்றும் நீண்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், தொடக்கத்தில், இப்பட்டியலில் இடம் பெற்றிருந்தார். இவ்வாறு கலை, இலக்கிய அரங்குகளில் கால் பதித்த திராவிட இயக்கம், கொள்கை பரப்புவதைக் குறிக்கோளாய்க் கொண்டது.

    அந்த வகையில், அண்ணாவின் நாடகமான சந்திரமோகன், ஆரம்ப காலத்திலேயே அரங்கேற்றப்பட்ட ஒன்று. வேலைக்காரி, சொர்க்கவாசல், பராசக்தி, ரத்தக் கண்ணீர், மனோகரா போன்ற பல திரைப்படங்கள் பிற்காலத்தில் வெளியாகி, திராவிட இயக்கக் கோட்பாடுகளைத் தமிழக மக்களிடம் எளிதாகக் கொண்டுசென்றன. அவற்றுக்கெல்லாம் முன்பாக, 1945ஆம் ஆண்டே மேடையேற்றப்பட்ட நாடகம்தான் சிவாஜி பற்றிய அண்ணாவின் நாடகம்.

    சாதாரண மனிதனைத்தான் சதுர்வருணம் பிடித்தாட்டுகிறது என்று எண்ண வேண்டாம். சாம்ராஜ்யத்தையே ஆளவந்தாலும், காகப்பட்டர்களினன் காலடிகளில்தான், சூத்திரர்கள் என அழைக்கப்பட்டவர்கள் சுயமரியாதையற்றுச் சுருண்டு போனார்கள் என்பதை நாடகம், எல்லோர்க்கும் புரியும் வகையில் புலப்படுத்தியது.

    தப்பித்தவறி ராஜாக்களாகச் சில சூத்திரர்கள் வந்துவிட்டாலும், ராஜகுருக்கள்களாகப் பார்ப்பனர்கள்தாம் இருப்பார்கள் என்பதுதான் இன்றுவரை நம் அரசியலாக உள்ளது. இதைத்தான், 67 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணாவின் நாடகம் அழுத்தமாய்ச் சொல்லியது.............."
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  10. #689
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    நடிகர்திலகம் சிலை வழக்கில் நான் எடுத்த முயற்சிகளுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல தீர்ப்பு வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #690
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    In Murasu TV

    Today at 7.30pm - annada kaneer
    Tom at 7.30 pm - Rajapart Rangadurai


Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •