-
14th December 2013, 01:11 AM
#1451
Junior Member
Senior Hubber
-
14th December 2013 01:11 AM
# ADS
Circuit advertisement
-
22nd December 2013, 11:30 AM
#1452
Member
Regular Hubber
New Tamil Short Film 'SPL Biryani' Facebook Page: https://www.facebook.com/splbiryanishortfilm
Vaazhvathu edharku vaiyagathin sugangalai vaazhkaiyil perathaane!
-
23rd December 2013, 03:24 PM
#1453
Senior Member
Veteran Hubber
-
23rd December 2013, 05:03 PM
#1454
Senior Member
Veteran Hubber
ரூ.1 கோடி மோசடி: கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார் சென்னை: அமெரிக்க பாடகரை ஒப்பந்தம் செய்வதற்காக கொடுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணத்தை ஒப்பந்ததாரர்கள் மோசடி செய்துவிட்டதாக இயக்குநர் டி. ராஜேந்தர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.இன்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த அவர், குறள் டி.வி. கிரியேசன் நிறுவனம் சார்பில் இன்று புகார் மனு ஒன்றை கொடுத்தார்.அதில் அவரது மகனும் நடிகருமான சிம்பு பாடி இருக்கும் ‘லவ் ஆந்தம்' (காதல் கீதம்) என்ற இசை ஆல்பம் தொடர்பாக அமெரிக்க பாடகர் ஒருவரை ஒப்பந்தம் செய்து தருவதாக கூறி 2 பேர் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர் கூறியதாவது:எனது மகன் சிலம்பரசன் பாடி தயாரித்துள்ள ‘லவ் ஆந்தம்' என்ற இண்டர் நேஷனல் இசை ஆல்பத்துக்காக அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் ஏகானை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தோம். இதற்காக தமிழகத்தில் வசித்து வரும் ராம்ஜி சோமா மற்றும் கனடாவைச் சேர்ந்த டெரிபாத் ஆகியோருடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.அந்த ஒப்பந்தத்தின்படி பாடகர் ஏகானை அவர்கள் ‘புக்' செய்து தரவேண்டும். முடியாத பட்சத்தில் நான் கொடுக்கும் பணத்தை திருப்பி தர வேண்டும். ஆனால் இருவரும் அவர்கள் கூறியபடி நடந்து கொள்ளவில்லை. இதனால் அவர்களிடம் கொடுத்த 1 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டாலரை (ரூ.1 கோடி) திருப்பிக் கேட்டேன்.ஆனால் அவர்கள் திருப்பி தராமல் இழுத்தடித்தனர். இதற்கிடையே வேறு ஒரு நிறுவனத்தின் மூலம் பாடகர் ஏகானை நான் ஒப்பந்தம் செய்து அவரை சென்னைக்கு வரவழைத்து பாடல் பதிவுகளையும் முடித்து விட்டேன். இதன் பிறகுதான் ராம்ஜி சோமாவும், டெரிபாத்தும் மோசடி பேர்வழி என எனக்கு தெரியவந்தது.இதுதொடர்பாக நான் அனுப்பிய வக்கீல் நோட்டீசையும் வாங்கிக் கொள்ளாமல் அவர் திருப்பி அனுப்பி உள்ளனர். இதற்கிடையே வேறு சிலரையும் இதே போல் ஏமாற்ற நினைப்பது எனக்கு தெரிய வந்துள்ளது. எனவே இருவர் மீதும் இன்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன்.அவர்கள் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்து இழந்த எனது பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று பிரிந்து கிடக்கும் மனிதர்கள் இடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்குத்தான் இந்த இசை ஆல்பம் தயாரிக்கப்பட்டுள்ளது இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.
-
26th December 2013, 12:38 AM
#1455
Senior Member
Diamond Hubber
This is not a place for advertisement
.
-
27th December 2013, 08:49 PM
#1456
Junior Member
Senior Hubber
விக்ரம் பிரபுவின் இரண்டாவது படமான இவன் வேற மாதிரி அனேக சென்டர்களில் 3 வது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறதே வசூல் நிலவரம் தெரிந்தால் அறிந்து கொள்ள ஆசையாக உள்ளது.
-
28th December 2013, 06:20 PM
#1457
Senior Member
Seasoned Hubber
நலமுடன் வீடு திரும்பினார் இளையராஜா!
Saturday, December 28, 2013, 10:31 [IST]

நலமுடன் வீடு திரும்பினார் இளையராஜா! சென்னை:
இதய சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பினார் இளையராஜா. சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த திங்கள்கிழமை (டிசம்பர் -23) இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை செய்யப்பட்டது.
இரண்டு இடங்களில் இருந்த அடைப்புகள் நீக்கப்பட்டன. இளையராஜாவுக்கு பூரண ஓய்வு தேவைப்பட்டதால் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் செவ்வாய்க்கிழமை முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கி இளையராஜா ஓய்வெடுத்தார். இந் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் வீடு திரும்பினார். மலேசியாவில் இன்று மாலை நடக்கும் கிங் ஆப் கிங்ஸ் என்ற இசை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பதாக இருந்தது.
உடல்நிலை காரணமாக அவர் அதில் பங்கேற்கவில்லை. ஆனால் வீடியோ கான்பரென்சிங் முறையில் திரையில் தோன்று ரசிகர்களுடன் பேசுகிறார் ராஜா. சில வாரங்கள் கழித்து நேரில் சென்று மலேசிய மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளாராம்.
Read more at: http://tamil.oneindia.in/movies/news...ed-190400.html
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
-
28th December 2013, 06:24 PM
#1458
Senior Member
Seasoned Hubber
ஆகச் சிறந்த தமிழ்க் கலைஞரான இசையராஜா நூறாண்டுகள் வாழட்டும். எவ்விதத் தயக்கமும் இன்றி தமிழர்களால் நேசிக்கப்படும் ஒரே கலைஞன் ராஜாதான். கள்ளிகள் சூழ்ந்த வாழ்க்கைப் பாதையில் தேன் சொட்டும், மனம் பரப்பும் காற்றாய் அவர் தொடர்ந்து வாழட்டும்.
M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....
இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!
டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!
"The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."
-
31st December 2013, 02:33 PM
#1459
Senior Member
Veteran Hubber
கேரள மாப்பிள்ளையைக் கைப்பிடிக்கிறார் மீரா ஜாஸ்மின்.. மாண்டலின் ராஜேஷ்? திருவனந்தபுரம்: மாண்டலின் ராஜேஷுடன் காதல், இணைந்து வாழ்வதாக வந்த தகவல் ஆகியவற்றுக்கு மத்தியில் தற்போது கேரளாவைச் சேர்ந்த மலையாள மாப்பிள்ளை ஒருவருடன் நடிகை மீரா ஜாஸ்மினுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.இவர்களது திருமணம் பிப்ரவரி 12ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள சர்ச்சில் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதனால் மாண்டலின் ராஜேஷுடனான மீராவின் காதல் முறிந்து போய் விட்டது உறுதியாகியுள்ளது தற்போது கேரளத்து அனில் ஜான் டைட்டஸ் என்பவருடன் மீராவுக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. அனில் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்
-
2nd January 2014, 02:37 PM
#1460
Senior Member
Veteran Hubber

Originally Posted by
balaajee
கேரள மாப்பிள்ளையைக் கைப்பிடிக்கிறார் மீரா ஜாஸ்மின்.. மாண்டலின் ராஜேஷ்? திருவனந்தபுரம்: மாண்டலின் ராஜேஷுடன் காதல், இணைந்து வாழ்வதாக வந்த தகவல் ஆகியவற்றுக்கு மத்தியில் தற்போது கேரளாவைச் சேர்ந்த மலையாள மாப்பிள்ளை ஒருவருடன் நடிகை மீரா ஜாஸ்மினுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.இவர்களது திருமணம் பிப்ரவரி 12ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள சர்ச்சில் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதனால் மாண்டலின் ராஜேஷுடனான மீராவின் காதல் முறிந்து போய் விட்டது உறுதியாகியுள்ளது தற்போது கேரளத்து அனில் ஜான் டைட்டஸ் என்பவருடன் மீராவுக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. அனில் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்
ஆமாங்க... பிப் 12-ல் எனக்கு திருமணம்!- உறுதிப்படுத்திய மீரா ஜாஸ்மின்
Bookmarks