-
30th December 2013, 10:47 PM
#1431
Senior Member
Senior Hubber
நன்றி ராக தேவரே..பாட்டு இனிமேல் தான் கேக்கணும்.. நான் சொன்ன ஏஷியா நெட் பொண் வேற். கொஞ்சம் விசாரிச்சு சொல்றேன்..
-
30th December 2013 10:47 PM
# ADS
Circuit advertisement
-
17th January 2014, 06:21 AM
#1432
Senior Member
Seasoned Hubber
படம்: புது புது அர்த்தங்கள் (1989)
இயக்குனர்: கே. பாலசந்தர்
வரிகள்: வாலி
இசை: இளையராஜா
நடிப்பு: ரஹ்மான், சித்தாரா & கீதா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடி ப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடி மீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே... தோடி
.........................................
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறை வைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள் தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடு தான்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்...
-
2nd February 2014, 08:57 AM
#1433
Senior Member
Veteran Hubber
Though I've heard this song so many times before, it made an emotional stir in my heart after hearing it in Sarath Santhosh's voice...beautiful!
Airtel Super Singer 4 - 2nd runner up title winner!
பாடல்: மழையே மழையே
திரைப்படம்: ஜூன் R
பாடியவர்: ஹரிஹரன்
இசை: சரத்
ரிம் ஜிம்...ரிம் ஜிம்...ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம்
மழையே மழையே நீரின் திரையே
வானம் தெளிக்கும்...வானம் தெளிக்கும்
கவிதை துளியே...கவிதை துளியே
மேகத்தின் சிரிப்பொலியே நீல வானமே
ஒரு தறியில்லாமல் நீரின் நூலில்
மழையெனும் சேலை நெய்ததே
இந்த நீரின் பாலம் வானம் மண்ணை
இணைக்கிறதே...இயற்கை...அழகே
ரிம் ஜிம்
மழையே மழையே நீரின் திரையே
பூமி தேகமே...அதில் விழும் மழைத்துளி
இந்த உலகின் ஜீவன் ஆகுமே
நெஞ்சம் எங்கும் நம்பிக்கை பூக்கள் தோன்றும்
வரண்ட பாலைகளே ஆகும் சோலைகளே
வானம் தந்த தானம் இந்த மழைநீர் தானே
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
மழையே...மழையே
ஆடை தாண்டியே...உடல் மனம் உயிர் தொடும்
இந்த மழையின் நீண்ட கைகளே
மழை தொடும் மண்ணுக்கும் வாசம் தோன்றும்
நதியும் குளிக்கின்றதே நனைய வா என்றதே
பார்த்த இன்பம் பாதி இன்பம் நனைவேன் நானே
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
மழையே மழையே நீரின் திரையே
வானம் தெளிக்கும்...வானம் தெளிக்கும்
கவிதை துளியே...கவிதை துளியே
மேகத்தின் சிரிப்பொலியே நீல வானமே
ஒரு தறியில்லாமல் நீரின் நூலில்
மழையெனும் சேலை நெய்ததே
இந்த நீரின் பாலம் வானம் மண்ணை
இணைக்கிறதே...இயற்கை...அழகே
ரிம் ஜிம்
Last edited by priya32; 13th February 2014 at 07:28 PM.
-
5th February 2014, 04:18 AM
#1434
Senior Member
Diamond Hubber
Originally Posted by
poem
Very Very Interesting song. இப்படி ஒரு பாடல் இருந்ததே / இருப்பதே தெரியாது. U-Tube ல் வேறு எதையோ தேட இது கிடைத்தது. " ரகசியமானது காதல் "என்பதைவிடவும் " மிக மிக சுவாரசியமானது காதல்" என்பதில் தான் முழு சுவாரசியமுமே உள்ளது.
இடம், பொருள், ஏவல் பார்க்காமல் கல் மனதா அல்லது கனிந்த மனதா என்றும் கூட புரியாமல் வருவதுதானே ..சாதாரணமான வார்த்தைகள் with very profound effect
) நாகர்கோவில் , திற்பரப்பு போன்ற இடங்களின் பசுமை மிகுந்த அழகு. அந்த பெண்ணுமே மிக அழகு. நல்ல ஒளிப்பதிவு. சிற்பியின் இசை. எழுதியவர் யார் என்று தெரியவில்லை !!.
கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத் தானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினைப் போல
விரல் தொடுவதில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளைப் போல
அதை உயிரினில் உணரணும் மெல்ல!!
முதல் முறை கேட்டதுமே ம்னதில் இடம் பிடித்த வரிகளைக் கொண்ட பாடல். இன்னமும் முணுமுணுக்க வைக்கும். ஒரு சில பாடல்களின் ஈர்ப்பு அதன் காணொளியைக் கண்டதும் மாயமாகி விடும். ஆனால் இதுவோ இன்னும் அதிகமாக மனதுக்குள் ஒட்டிக் கொண்டது. செதுக்கியது சிற்பி. மூலப் பொருளைத் தந்தவர் யாரென்று தெரிந்தவர்கள் சொன்னால் மகிழ்ச்சிதான்...
-
22nd February 2014, 09:53 PM
#1435
Senior Member
Veteran Hubber
movie has more fantastic numbers in the album
-
22nd February 2014, 10:46 PM
#1436
Senior Member
Veteran Hubber
//கருப்பு & வெள்ளையிலும் கூட மிக அழகாக இருக்கும் கதையின் நாயக நாயகியர்.//
poem, I always feel, profile/pic or videos look more chisled and finer in b/w shades much better than color pics. Eastman color was great in its own way. Even normal plain faces look prettier in black and white. Also the impact of character reaches with greater depth. That is why directors like balachander/Sridhar ,Ive heard, preferred b/w in initial days.
Yeah abs no denying. pazhaiya padalingaLin lyrics, meaning, tharam, inimai ellame vera level.
-
26th February 2014, 05:35 AM
#1437
Senior Member
Diamond Hubber
Originally Posted by
poem
ஹல்லோ அரவிந்த், "ரகசியமானது காதல்" பாடலை எழுதியவர் விஜய் கண்ணா என்பவர். 7 அல்லது 8 பாடல்கள் எழுதி உள்ளார். இந்த பாடல் மட்டுமே வெகு பிரசித்தம். மேலும் குகன் கிட்சென் இழையில் நீங்க போட்டு இருக்கும் பிள்ளயார் படம் வெகு அழகு.
ஆஹா.. கவிஞர் யாரென்று கவிதையே சொல்லும்போது மிக மிக மகிழ்ச்சிதான்..
நன்றி நன்றி Poem !
-
4th March 2014, 07:58 PM
#1438
Senior Member
Diamond Hubber
Originally Posted by
poem
யாரிடமாவது " மதி சேகரன் மகனே " என்ற பாபநாசம் சிவன் பாடல் இருக்கிறதா? இருந்தால் அதை இங்கே அல்லது U-Tubelil upload பண்ணவும் . மிகவும் நன்றி. இதை எங்கே போடுவது என்று தெரியாதால் இங்கே போஸ்ட் பண்ணுகிறேன். Sorry!
இது முதல் வரியா ? அல்லது பாடலின் நடுவில் வரும் வரியா ? ஏனெனில் ரீதிகௌளை ராகத்தில் அமைந்த "தத்வமறிய தரமா" என்ற பாடலின் சரணத்தில் இந்த வரி அமைந்திருக்கிறது.
மஹாராஜபுரம் சந்தானம் பாடிய இந்தப் பாடலின் லிங்க் இது
-
5th March 2014, 09:23 AM
#1439
Senior Member
Veteran Hubber
poem: In the 'Indian Classical Music' section there is one thread for Tamil compositions -' Lyrics,meaning and queries-Tamil'. You might want to post your queries there.
Many have sung 'thathvam ariya tharamaa'. Listen to Madurai Mani Iyer who uses 'madhi sekaran magane' for 'niraval' (raga exposition/exploration).
Originally Posted by
poem
யாரிடமாவது " மதி சேகரன் மகனே " என்ற பாபநாசம் சிவன் பாடல் இருக்கிறதா? இருந்தால் அதை இங்கே அல்லது U-Tubelil upload பண்ணவும் . மிகவும் நன்றி. இதை எங்கே போடுவது என்று தெரியாதால் இங்கே போஸ்ட் பண்ணுகிறேன். Sorry!
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
7th March 2014, 10:29 AM
#1440
Senior Member
Seasoned Hubber
I like this song very much; thanks to வைரமுத்து, ராஜா, எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி,
கே. பாக்யராஜ் (the actor) & கல்பனா; but I hate கே. பாக்யராஜ் (the director) for making such
a mess of the picturisation! I bet even I could have done it much better!
திரைப் படம்: சின்ன வீடு (1985)
தரதத் தத்தத்
தத்தத் தரதத் தத்தத்
தத்தத் தரதத் தரதத் தரதத்தா
தரதத் தத்தத்
தரதத் தத்தத்
தத்தத் தரதத்
தத்தத் தரதத் தரதத் தரதத்தா
தத்தத் தத்தத்
தரதத்
தத்தத் தத்தத்
தரதத்
தத்தத் தத்தத்
தரதத் தரதத் தரதத் தரதத்
தரதத் தரதா
சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே
சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே
சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தத்தை தத்தித் தவழும்
தோளைத் தொத்தித் தழுவும்
மெத்தை யுத்தம் நிகழும்
நித்தம் இன்பத் தருணம்
இன்பம் கொட்டித் தரணும்
என்றும் சரணம் சரணம்
இந்தக் கட்டில் கிளிதான் கட்டுப்படுமே
விட்டுத்தருமே அடடா
மச்சக் குருவி முத்தம் தருதே
உச்சந்தலையில் பித்தம் வருதே
முத்தச் சுவடு சிந்தும் உதடு
சுற்றுப் பயணம் எங்கும் வருமே
பட்டுச் சிறகுப் பறவை
பருவச் சுமையைப் பெறுமே
சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே
சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
நித்தம் எச்சில் இரவு
இன்பம் மட்டும் வரவு
முத்தம் மொத்தச் செலவு
மொட்டுக் கட்டும் அழகு
மெட்டுக் கட்டும் பொழுது
கிட்டத் தொட்டுப் பழகு
ஆஹா கள்ளக் கனியே அள்ளச் சுகமே
வெட்கப் பறவை விட்டுத் தருமோ
மன்னன் மகிழும் தெப்பக் குளமும்
செப்புக் குடமும் இவளே
அங்கம் முழுதும் தங்கப் புதையல்
மெத்தைக் கடலில் முத்துக் குளியல்
பட்டுச் சிறகுப் பறவை
பருவச் சுமையைப் பெறுமே
சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே
சிட்டுக்குருவி வெட்கப்படுது
பெட்டைக்குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே
சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி
வெட்கப்படுது
வெட்கப்படுது
பெட்டைக்குருவி
பெட்டைக்குருவி
கற்றுத் தருது
கற்றுத் தருது
தத்தத் தரதா
தத்தத் தரதா
தத்தத் தரதா
தத்தத் தரதா
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks