-
28th February 2014, 07:17 PM
#1421
Junior Member
Seasoned Hubber
படத்தின் கதையை பற்றி பார்த்தோம் , படத்தை பற்றி , அதில் நடித்தவர்களின் நடிப்பை பற்றி , இன்னும் பிற அம்சங்களை பற்றி இப்போது பார்க்கலாம்
இந்த படம் fantasy ,folkfore கதை தான் , இந்த படத்தின் கதை சின்ன அண்ணாமலை மற்றும் லட்சமணன் , சின்ன அண்ணாமலைக்கு அறிமுகம் தேவை இல்லை , சிவாஜி ரசிகர்களுக்கு , அவரை நன்கு பரிச்சியம் உண்டு , ரசிகர் மன்றத்தை நன்றாக ஒருகிணைத்தவர் , பிறகு ஜெனரல் சக்ரவர்த்தி , தர்மராஜா படங்களை தயாரித்தவர் , லட்சமணன் வித்வான் லட்சமணன் என்று நினைக்கிறன் சரியாக நினைவுஇல்லை
அதை போலே ஸ்டுன்ட் மாஸ்டர் பல்ராம் , அந்த காலத்தில் பெரிய fight மாஸ்டர் , ஒரே நேரத்தில் ஸ்டுன்ட் மாஸ்டராகவும் , நடன இயக்குனராகவும் இருந்தார் , துரதிஷ்டவசமாக ஒரு வெறி நாய் கடித்து இறந்து போனார் (MGR ஒரு சகப்தாம் என்ற நூலில் இருந்து )
இந்த மாதிரி படங்களில் action காட்சிகள் ஏராளம் ,சிவாஜி சார் முதல் முதலில் ஒரு taarzan படத்தில் நடிக்கிறார் , அதுவும் முதல் முதலில் தமிழில் வந்த taarzan படம், சண்டை காட்சிகள் படு பிரமாதம்
படம் ஆரம்பித்து 1 மணி நேரம் கழித்து தான் ஹீரோ introduction , 1952 ல் சினிமாவின் போக்கை தன் வசனம் பேசும் தமிழ் புலமையினால் ரசிகர்களை ஈர்த்த நபர் படம் ஆரம்பித்து 1 மணி நேரம் கழித்து தான் வருகிறார் , செம தில் தான் , இயகுனர்க்கும் , தயாரிப்பாளருக்கும் , என்ன டா இவன் சிவாஜி சாரின் பெயரை சொல்ல வில்லை என்று யோசிப்பது தெரிகிறது , நம்மவர் தான் கதைக்கு மட்டும் முக்கியத்துவம் தருவாரே , இல்லையென்றால் எதிர்பாராது படத்தில் வில்லன் வேடம் போடுவாரா அதுவும் மிகவும் கொடூர வில்லனாக .
-
28th February 2014 07:17 PM
# ADS
Circuit advertisement
-
28th February 2014, 07:17 PM
#1422
Junior Member
Seasoned Hubber
அவர் அறிமுகம் ஆகும் காட்சி முதலில் யானை மேல் அமர்ந்து trumpet போன்ற கருவியை ஊதும் போதே அவர் தோற்றம் நல்ல வித்தியாசம் தெரிகிறது , உடை ஒரு one பீஸ் லாங் டிரஸ் , பாதி மார்பு தெரிகிறது , காலும் நன்றாக தெரிகிறது , அதனால் டுப் போட்டால் நன்றாக தெரிகிறது
ரொம்ப நாளாக இன்றும் சிவாஜி சார்க்கு நடிப்பு மட்டும் வரும் சண்டை வராது என்று சொல்லும் நபர் நிறைய , அவர்களை இந்த படத்தை பார்க்க வைக்க வேண்டும் , ஜமுனாவை காப்பாற்ற அவர் சண்டை இடும் காட்சி எத்தனை வேகம் , இங்கே இருந்து அங்கே தாவி , பிறகு ஒரு உயரமான இடத்தில சண்டை போட்டு , அங்கே இருந்து குதித்து பாஞ்சு பாஞ்சு சண்டை போடுவார் பாருங்கள் , அதுவும் ஒரு பெரிய பாறையை தூக்கி ஜமுனாவை காப்பாற்றி சிரிப்பார் , ஒரு காட்டு மனிதரின் அசல் பிரதிபலிப்பு
ஊருக்குள் வரும் அந்த காட்டு மனிதர் சாப்பிடும் காட்சி நல்ல தமாஷ்
ஜமுனா சிவாஜி சாருக்கு தமிழ் கத்து கொடுக்கும் காட்சியில் அவர் பண்ணும் சேஷ்டைகள் டாப்
தன் காதலியின் தந்தை தன்னை அவமானம் செய்யும் பொது கத்தி யை எடுத்து விட்டு , உறையில் வைக்கும் காட்சியில் , அவர் முகத்தை காண கண் கோடி வேண்டும்
காட்டுக்கு வந்த உடன் தன் நண்பர்கள் (யானை ) உடன் பேசும் காட்சி விலங்குக்கும் பாசம் உண்டு என்பதை நிருபிகிறது
அதுவும் அவர் பெயர் வைக்கும் காட்சி அருமை , ஒரு யானைக்கு கணேசன் என்று பெயர் வைத்து விட்டு அவர் சிரிக்கும் சிரிப்பில் தான் எத்தனை அர்த்தங்கள்
வயசானவராக மாறிய உடன் அவர் குரல் , body language ல் தான் எத்தனை மாற்றங்கள்
For a change நம்பியார் நல்லவர் , அதனால் ஏக பட்ட கஷ்டங்களை அனுபவிக்கிறார் , PSV தான் நம்பியார் உருவம் மாறி அவர் சிரிக்கும் காட்சி பலே
TR ராஜகுமாரி - என்ன ஒரு வில்லத்தனம்
ஜமுனா - கடைசி சில காட்சிகளில் மட்டுமே நன்றாக நடிக்க வாய்ப்பு
மோகினியாக -சரோஜா தேவி பார்க்க நன்றாக இருக்கிறது
ஒரே ஷாட் ல் சிவாஜி சார் நடக்கும் பொது - பல யானைகள் நிற்கும் காட்சியில் - ஒளிபதிவாளர் GK ராமு வின் திறமை தெரிகிறது (இவர் நாடோடி மன்னன் படத்தில் இரண்டு MGR கை குலுக்கும் காட்சி , ஒருவர் சுற்றி வர , ஒருத்தர் உக்கார்ந்து இருக்கும் காட்சி , இன்னும் பல காட்சிகளை எடுத்து காட்டி இருப்பார் )
இது பாதி கலர் என்று கேள்வி பட்டேன் , ஆனால் நான் பார்த்த பிரிண்ட் அப்படி இல்லை , அதுவும் , படம் நன்றாக போகும் பொது TR ராமசந்திரன் காமெடி (பெரிய காது காமெடி ) மட்டுமே ஏமாற்றம்
வித்தியாசமான படத்தை எல்லோரும் ரசிக்கலாம்
-
28th February 2014, 07:18 PM
#1423
Junior Member
Seasoned Hubber
-
28th February 2014, 08:18 PM
#1424
Junior Member
Junior Hubber
என்னுடைய முகநூல் பக்கத்தில் நான் இன்று பகிர்ந்த ஒரு சிறு பதிவு.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே -
உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் வரும் இப்பாடல் முரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
எனக்கும் அந்த நாள் ஞாபகம் இப்பொழுது வந்தது. நடிகர் திலகம் திரை உலகத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த அந்த 40 வருடங்களுக்கும் மேலான காலத்தை என்னவென்று சொல்வது?
அவரின் ஒவ்வொரு திரைப்படமும் கண்களுக்கு விருந்து மட்டுமல்ல. ஒரு குடும்பம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் - தாய், தந்தை பாசம் ( தெய்வ மகன் ), சகோதரர்களுக்கு இடையிலான உறவு, விட்டுக்கொடுக்கும் சுபாவம் ( படித்தால் மட்டும் போதுமா, பந்த பாசம் ) , சகோதரர், சகோதரி பாசம் ( பாசமலரைத் தவிர வேறு எந்தப் படத்தைக் குறிப்பிடுவது? அத்துடன் தங்கை, ), குடும்ப உறவு ( வியட்னாம் வீடு, பாரத விலாஸ் ), தன்மானம் ( கௌரவம், சவாலே சமாளி ), தவறு செய்தால் தன் மனைவியே ஆயினும் தண்டிப்பது ( கவரிமான் ).
மேலும் வீரத்திற்கு வீரபாண்டிய கட்டபொம்மன், மனோகரா, தேசப்பற்றுக்கு கப்பலோட்டிய தமிழன், பக்திக்கு திருவருட்செல்வர், திருமால் பெருமை, காதலுக்கு வசந்த மாளிகை, அன்பு மிக்க நேசத்துக்கு பாலும் பழமும், நகைச்சுவைக்கு சபாஷ்மீனா, கலாட்டா கல்யாணம், பலே பாண்டியா, ஊட்டி வரை உறவு, தான் செய்துவிட்ட தவறுக்காக துடிப்பதில் எதிரொலி, நீதி, புதிய பறவை , அழகான மெல்லிய நடிப்புக்கு முதல் மரியாதை, தீபம், தொழிலாளர் தோழனாக இரும்புத் திரை, உணர்ச்சி மிக்க நடிப்புக்கு அவன் தான் மனிதன், எங்கிருந்தோ வந்தாள், எங்க ஊர் ராஜா, பட்டிக்காட பட்டணமா, கீழ் வானம் சிவக்கும், நீதிபதி.
மிடுக்கான காவல் துறை அதிகாரியாக தங்கப் பதக்கம், வேடிக்கையான காவல் துறை அதிகாரியாக வெள்ளை ரோஜா, கலாய்க்கும் காவல் துறை அதிகாரியாக விடுதலை, பன்முக நடிப்புக்கு நவராத்திரி, ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் தங்கச் சுரங்கம், ராஜா.
இப்படிப் பல பல படங்களில் நம்மை மகிழ்வித்த அந்த நடிப்புலக வித்தகனைப் போல் இனி ஒருவர் வருவரோ?
அவரின் திரைப்படங்களுக்குத்தான் ஈடு இணைதான் உண்டோ?
இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவர் தம் படங்கள் நம் வழி வழி சந்ததியினரையும் மகிழ்விக்கும் என்றால் அது மிகையில்லை.
-
28th February 2014, 11:33 PM
#1425
Junior Member
Seasoned Hubber
இணைய நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் - எவ்வளவோ வேலைகளுக்கு நடுவில் கிடைத்த இடைப்பட்ட நேரத்தில் , NT யின் மீது உள்ள பாசத்தினாலும் , மரியாதையினாலும் நாம் நம் பதிவுகளை -போடுகிறோம் - பதிவுகளை பார்த்தாலே அதில் எவ்வளவு உழைப்பு இருக்கு என்பது தெரியும் - போடும் பதிவுகளை பாராட்ட வேண்டாம் - குறைந்த பட்சம் அந்த பதிவுகளை அலசலாமே - அதன் மூலம் பல கருத்துக்களை பரிமாற வாய்ப்பு கிடைக்குமே - திரியின் வேகமும் அதிகரிக்கும் - அலசல்கள் முடியும் முன் துளிக்கூட சம்பந்தமே இல்லாமல் ஏன் மற்ற பதிவுகளை போடவேண்டும் ? இதனால் எடுத்துக்கொண்ட நல்ல படங்களும் சரியாக அலசபடுவதில்லை - போடும் பதிவாளர்களுக்கும் எதற்காக இப்படி உழைத்து பதிவுகளை போட வேண்டும் - மற்றவர்களை போல சும்மா படித்துவிட்டோ அல்லது ஒன்று இரண்டு வரிகள் எழுதிவிட்டு இருந்துவிடலாமே என்ற எண்ணம் கண்டிப்பாக வரும் - இந்த செயல் இந்த திரிக்கு ஆரோக்கியம் தரக்கூடியது அல்ல - மற்ற திரிகளை பாருங்கள் - எந்த பதிவும் மற்றவர்களின் எண்ண பரிமாரணம் இல்லாமல் இருப்பதில்லை - பாராட்டுவதை விடுங்கள் - ஒருவர் எழுதுவதை மற்றவர்கள் வரவேற்கிறார்கள் , எழுதுபவரை உற்சாகப்படுத்துகிண்டார்கள் - எழுதபவரின் பதிவுகளை அலசின பின்பே , புதிய பதிவுகள் வருகின்றன - அங்கு உள்ள ஒவ்வருவருக்கும் குறைந்தது 1000 பதிவுகளாவது குறைந்த காலகட்டத்தில் போடவேண்டும் என்று கனவு உள்ளது - சரியான விஷயங்கள் இல்லாவிட்டாலும் அங்கே எப்படியாவது , எதாவது போடவேண்டும் என்ற எண்ணம் ஒவ்வருவருக்கும் இருகின்றது - ஆனால் - இங்கே நம்மிடம் எழுத பல நல்ல விஷயங்கள் உள்ளன ; அலச பல பதிவுகள் உள்ளன - ஆனால் நமக்குதான் எழுத மனம் வருவதில்லை , அப்படியே எழுதினாலும் முந்தைய பதிவுகளுக்கு கொஞ்சம் கூட connect இல்லாமல் பதிவுகளை போடுகிறோம் -
முக்கியமாக ஒன்றை எல்லோரும் நம்ப வேண்டும் - இங்கு , மற்றவர்கள் பாராட்டவேண்டும் என்று யாருமே எழுத வில்லை - அப்படி பாராட்டுக்கள் கிடைத்தால் நல்லது - இன்னும் எழுத தெம்பு வரலாம் -ஆனால் எழுதுவது ஒரு ஆத்ம திருப்திக்காக தான் - நம் தலைவருக்கு ஒரு புஷ்பாஞ்சலி - அவள்ளவு எல்லோரும் சேர்ந்து இழுக்க தேர் ஓடவேண்டும் - ஒருவர் பதிவு போடும் போது அதை முறியடிக்கும் மாதிரி நாம் நம் கருத்துக்களை திணிக்கும் போது திரி கண்டிப்பாக தொய்வை சந்திக்க வேண்டிருக்கும்
எல்லோரும் எழுதுங்கள் - தட்டி கொடுத்த வண்ணம் முன்னே செல்வோம் - யாருமே போட்ட பதிவுகளை படிப்பதில்லை என்ற எண்ணத்தை எழுதபவர்களுக்கு உண்டாக்கவேண்டாம் - மற்றவர்கள் தன கருத்துக்களை முழுவதும் சொல்லிவிட்டாரா எண்டு தெரிந்துகொண்டபின் புதிய பதிவுகளை போட்டால் இந்த திரி மிகவும் ஆரோக்கியமாக முன்னே செல்லும் - இது என் தாழ்மையான கருத்து - யாரையும் புண் படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் இதை எழுதவில்லை ---
அன்புடன் ரவி
-
1st March 2014, 06:35 AM
#1426
Senior Member
Seasoned Hubber

Regards
-
1st March 2014, 08:51 AM
#1427
Junior Member
Newbie Hubber
நண்பர்களே,
வேலை பளுவின் காரணமாக பதிவிட இயலாவிடினும் படிக்க தவறுவதில்லை.இங்கு பதிவிடும் அனைத்து நண்பர்களின் பதிவுகளையும் ரசித்து வருபவன். நான் ஏதாவது சொன்னால் விபரீதமாகி விடுகிறது என்பதால் நகைச்சுவை,கிண்டல்,அறிவுரை,முதலியவற்றை தவிர்த்து என் பாட்டில் எழுதவே இருக்கிறேன். இதை தயவு செய்து உதாசீனம் என்று எண்ணவே தேவையில்லை. வாசு சார்,ராகவேந்திரா சார் கூடிய விரைவில் இணைவார்கள்.
-
1st March 2014, 09:57 AM
#1428
Junior Member
Senior Hubber
RAVI sir
Your message to NT fans really a heart toching one all of us are closely following the thread and enjoying the stuff always with lot of interest and speed, perhaps due to personal reasons or lack of time acknowlegements has come down and no other reason otherwise. please continue the good wok as usual.
blessings.
-
1st March 2014, 10:12 AM
#1429
Junior Member
Veteran Hubber
Dear Ravi sir and Ragularam sir,
I have been wanting to respond to all your posts for quite sometime.
The posts that I have been publishing here is done either using my mobile or by using tab, most of the times during my travel in train or bus.
Today, I thought i should pen it from my system which is more flexible than the above two gadgets.
Coming back to the posts of Ragulram sir and Ravi sir....
First things first - It is certainly not a ordinary effort in sharing every enjoyment of yours here. Highly appreciable ! 3 cheers to both of you !
The way your description and analysis of the film and the performance of lead stars in equal footing is something not seen for quite sometime other than Neyveli Vasudevan Sir !
We do miss the Class writeups of Neyveli Vasudevan sir and though, i wanted to continue in the thread eagarai, I have forgotten the password of my login.
The class of writing , needless to say that it is our domain !
Ragulram sir's analysis of film and the lead stars is a "Badam Gheer" ! While Ravi sir's analysis of film and the lead stars is "Rasa Malai" ! Irendumae Thigattaadhadhu !
The "Nadai" both of you adapts is something superb and makes everyone enjoyable ! Most of the times, it makes most of us to feel that our writing is not up to the mark as both of you and may be that's
one reason of guilt that's preventing many of us from commenting even !
Both of you are spending quite a lot of time of value and contributing to the benefit of this thread and am sure, our "Appa's" blessing will always be with us.
3 cheers once again to both of you and my sincere thanks for your contribution to the glory of our APPA !
-
1st March 2014, 10:14 AM
#1430
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
நண்பர்களே,
வேலை பளுவின் காரணமாக பதிவிட இயலாவிடினும் படிக்க தவறுவதில்லை.இங்கு பதிவிடும் அனைத்து நண்பர்களின் பதிவுகளையும் ரசித்து வருபவன். நான் ஏதாவது சொன்னால் விபரீதமாகி விடுகிறது என்பதால் நகைச்சுவை,கிண்டல்,அறிவுரை,முதலியவற்றை தவிர்த்து என் பாட்டில் எழுதவே இருக்கிறேன். இதை தயவு செய்து உதாசீனம் என்று எண்ணவே தேவையில்லை. வாசு சார்,ராகவேந்திரா சார் கூடிய விரைவில் இணைவார்கள்.
Gopal Sir,
Hearty Welcome once again sir !
We wish and would be glad to see your GOWRAVAMAANA PADHIVUGAL always !
We are after all fans of your writing sir !
Thanks for understanding us !
Bookmarks