-
3rd March 2014, 08:36 PM
#1451
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
sivaa
தற்போழுதுஎன்னால் image பதிவிடமுடிகிறது
ரவி சார் தங்கள்மூலம் என்னுடைய பிரச்சினைக்கு
முடிவு வந்துள்ளது என நினைக்கின்றேன்
உதவிய அனைவருக்கும் நன்றி
டியர் சிவா - நன்றி நெய்வேலி வாசுவிர்க்கே செல்லவேண்டும் - இன்னும் ஒரு short கட் உள்ளது - இந்த பதிவு மூலம் மற்ற இணைய நண்பர்களுக்கு இது உதவியாக இருந்தால் என்னை விட அதிகம் மகிழ்ச்சி அடைபவர் யாரும் இருக்க முடியாது
Steps Involved
1. Visit www .photobucket.com
2. Get yourself registered
3. After registering , you can now upload the images saved on your desktop
4. Now click the image saved in your login page
5. The image will expand
6. On right hand side there is a profile of URLs – select the URL under image
7. Just paste the HTTP stings in the Mayyam page you have opened in the thread for posting
8. Before submitting go to advance view and see the picture – it is relatively bigger
9. Don’t use attachment option in Mayyam for images – you will encounter capacity constraint
You can send me a PM in case you could not succeed in this attempt
-
3rd March 2014 08:36 PM
# ADS
Circuit advertisement
-
4th March 2014, 06:38 AM
#1452
Senior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th March 2014, 06:45 AM
#1453
Senior Member
Devoted Hubber

Originally Posted by
g94127302
டியர் சிவா - நன்றி நெய்வேலி வாசுவிர்க்கே செல்லவேண்டும் - இன்னும் ஒரு short கட் உள்ளது - இந்த பதிவு மூலம் மற்ற இணைய நண்பர்களுக்கு இது உதவியாக இருந்தால் என்னை விட அதிகம் மகிழ்ச்சி அடைபவர் யாரும் இருக்க முடியாது
Steps Involved
1. Visit www .photobucket.com
2. Get yourself registered
3. After registering , you can now upload the images saved on your desktop
4. Now click the image saved in your login page
5. The image will expand
6. On right hand side there is a profile of URLs – select the URL under image
7. Just paste the HTTP stings in the Mayyam page you have opened in the thread for posting
8. Before submitting go to advance view and see the picture – it is relatively bigger
9. Don’t use attachment option in Mayyam for images – you will encounter capacity constraint
You can send me a PM in case you could not succeed in this attempt
ரவி சார் வணக்கம்
தங்களின் வழிகாட்டலுக்கு மிகவும் நன்றி
நெய்வேலி வாசு சார் தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி
-
4th March 2014, 08:26 AM
#1454
Senior Member
Devoted Hubber

Originally Posted by
RavikiranSurya
இனிய நண்பர் சிவா அவர்களுக்கு
!
ரவிகிரண்சூரியா சார்
மற்றவர்களை இழுத்து இகழவேண்டும் என்று நான் நினைக்கவில்லை
இமேஜில் இருந்து அந்த வசனம் என்னுடையதல்ல
அத்துடன் அது 1982 ஆம் ஆண்டு தியாகி படத்தின் வெளியீட்டின்போது
வெளியிடப்பட்ட மலரில் இருந்து எடுக்கப்பட்டது
முன்னர் சிவாஜி எம் ஜீ ஆர் ரசிகர்கள் வெளியிட்ட மலர் நோட்டீஸ்
போன்றவற்றில் இப்படித்தான் ஒருவரை ஒருவர் இழுத்து எழுதிக்கொண்டிருந்தார்கள்
அவற்றையாவது விட்டுவடலாம் தற்போழுது வெளிவந்துகொண்டிருக்கும்
ஒலிக்கிறது உரிமைக்குரல் எம் ஜி ஆர் ரசிகர்களிடம் வாங்கி படித்து பாருங்கள்
என்னவெல்லாம் எழுதியிருக்கிறார்கள என்று தெரியும்
;
ஒரு படித்த மேதாவியாம்
எழுதுகிறார் ப்ராப்தம் பட சந்திரகலா வைர நெஞ்சம் பத்மபிரியா
பற்றி எழுதச்சொல்லி
அங்கே அவர் சொல்லும் விடயம் என்ன?
எலலாவற்றையும் விட்டுவிடுங்கள்
உங்கள் பரந்தமனபான்மைக்கு பாராட்டுக்கள்
-
4th March 2014, 08:40 AM
#1455
Senior Member
Devoted Hubber
-
4th March 2014, 10:09 AM
#1456
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
sivaa
Thank you Siva sir for detailed authentic records of our Nadigar Thilagam.
-
4th March 2014, 10:11 AM
#1457
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
sivaa
Thank you Siva sir for records of Vellai Roja... another super hit 80s movies of NT.
-
4th March 2014, 11:21 AM
#1458
Junior Member
Veteran Hubber

Originally Posted by
sivaa
ரவிகிரண்சூரியா சார்
தற்போழுது வெளிவந்துகொண்டிருக்கும்
ஒலிக்கிறது உரிமைக்குரல் எம் ஜி ஆர் ரசிகர்களிடம் வாங்கி படித்து பாருங்கள்
என்னவெல்லாம் எழுதியிருக்கிறார்கள என்று தெரியும்
;
ஒரு படித்த மேதாவியாம்
எழுதுகிறார் ப்ராப்தம் பட சந்திரகலா வைர நெஞ்சம் பத்மபிரியா
பற்றி எழுதச்சொல்லி
அங்கே அவர் சொல்லும் விடயம் என்ன?
mgr - sivaji ரசிகர்கள் ஒருவரை ஒருவர் இன்னும் திட்டிக்கொண்டும் தூற்றிக்கொண்டும் தான் இறக்கும் வரை இருக்க வேண்டுமா ? -
நல்ல உள்ளம் கொண்ட பல mgr ரசிகர்களை தனது பத்திரிகை வாயிலாக தேவையில்லாமல் தூண்டிவிடும் உரிமைக்குரல் பத்திரிகை மற்றும் vcd dvd உரிமையாளர் பன்முகம் கொண்ட திரு b s ராஜு அவர்களுக்கு இரு திலகங்களின் ஒத்த கருத்துடைய பல ரசிகர்களின் சார்பாக கேள்வி. !
சமீபத்தில் வெளிவந்த உரிமைக்குரல் பதிவில் mgr ரசிகர்கள் சிவாஜி ரசிகர்களுக்கு குடைபிடிக்கிறார்கள் என்ற தொனியில் இதன் ஆசிரியர் திரு ராஜு அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
இவருக்கு அனைத்து நல்லுள்ளங்கள் சார்பாக இந்த கேள்விகள் !
1) இரு திலக ரசிகர்களும் இறக்கும் வரையில் ஒருவரை ஒருவர் இழித்துகொண்டும், பழித்துகொண்டும்தான் இருக்கவேண்டுமா ?
2) நல்ல எண்ணத்துடன் இருவரும் நட்பு பாராட்டுவதில் உமக்கு என்னையா அவ்வளவு வயிதெரிச்சல் ?
3) நீங்கள் முதலில் ஒரு ஞாயவாதியாக நடந்ததுண்டா ? வியாபாரம் என்று வரும்போது, பத்திரிகையில் சிவாஜி பற்றி தவறான தகவலுடன், இழித்தும் பழ்ழித்தும் கீழ்த்தரமாக எழுதுவது தான் பத்திரிகை தர்மமா ?
4) தங்களுடைய cd மற்றும் dvd நிறுவனமாம் uk மூவீஸ் மற்றும் uk கோல்டன் மொவீஸ் மற்றும் akshi வீடியோ ஆகிய நிறுவனங்கள் மூலம் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் திரைகாவியங்களான நானே ராஜா, தாய் , எங்கள் தங்கராஜா , சத்ரபதி சிவாஜி (பக்த துகாரம் தெலுகு படம் மொழிபெயர்ப்பு ) மேலும் பல சிவாஜி படங்கள் வெளியிட்டு லக்ஷங்கள் சம்பாதித்து அந்த நன்றி விஸ்வாசம் துளி கூட இல்லாமல், இப்படி பத்திரிகையில் சிவாஜி பற்றி தூற்றுவதும், mgr - sivaji ரசிகர்களை தன்னுடைய சுய லாபத்திற்காக தூண்டிவிட்டு வேடிக்கை பார்பதை இத்துடன் தயவு செய்து நிறுத்திகொள்ளுங்கள் !
சிவாஜியை தூற்றி எழுதினால்தான், mgr sivaji ரசிகர்களை தூண்டிவிட்டு சண்டைபோட செய்தால் தான் mgr அவர்கள் புகழ் மேலும் பரவும் என்ற தவறான ஒரு துர்போதனை செய்வது ஒரு கேவலமான ஈன செயல் என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள். காலம் இப்படியே சென்றுவிடாது ! ஒரு நாள் நல்ல உள்ளம் கொண்ட அனைத்து mgr ரசிகர்களும் உண்மையை உணரும் போது உங்கள் நிலை எவ்வளவு பரிதாபத்திற்கு உரியதாகிவிடும் என்று இப்போதே எண்ணி பார்த்தல் நலம் !
இரண்டு ஆடுகளை மோதவிட்டு அதிலிருந்து வடியும் ரத்தம் குடிக்கும் வழக்கம் கொண்ட நரிகுணம் என்றுமே வெற்றிகொண்டதில்லை !
வாழ்க இரு திலகங்களின் புகழ் ! ஒழிக நரிகுணம் கொண்ட மனிதர்கள் !
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th March 2014, 01:41 PM
#1459
Senior Member
Devoted Hubber
நான் சுவாசிக்கும் சிவாஜி (22) - ஒய்.ஜி. மகேந்திரன்
சிவாஜியிடம் உள்ள முக்கிய சிறப்பு என்னவென்றால், தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு, தங்கள் நடிப்புத் திறனை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுப்பார். ஆனால், கடைசியில் ஏதாவது ஒரு புதுமை செய்து, பார்ப்பவர்களின் மொத்த கவனத்தையும், தன் பக்கம் இழுத்து விடுவார். இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். பாசமலர் படத்தில், சிவாஜி கம்பெனி முதலாளி; அவரிடம் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்காக சண்டை போடும் ஜெமினி கணேசன், கேள்வி மேல கேள்வி கேட்பார். பதிலுக்கு எதுவும் பேசாமல், ஒரு பென்சிலை கத்தியால் சீவிக் கொண்டே இருப்பார் சிவாஜி. ஜெமினி பேசப் பேச, சிவாஜிக்கு கோபம் அதிகமாகும். ஆனால், எதுவும் பேசாமல், பென்சிலை சீவுவதிலேயே கவனமாக இருப்பார். ஆனால், ஜெமினி கணேசன் பேசி முடித்ததும், கோபமாக அவரைப் பார்த்து, 'வெளியே போ... தொழிற்சாலையை இழுத்து மூடினாலும், ஒரு மெழுகுவர்த்தி வச்சு, இந்த ராஜூ வேலை செய்வான்...' என்று, ஒரே வரி வசனம் மட்டும் பேசுவார்; தியேட்டரே அதிரும்.
மற்றொரு காட்சியில், சிவாஜி வீட்டுக்கு வருவார். தோட்டத்திலே, அவரது தங்கை சாவித்திரியும், காதலன் ஜெமினி கணேசனும் பேசிக் கொண்டிருப்பர். பணக்காரருக்குரிய ஆணவத்தில், பீரோவிலிருந்து ரிவால்வரை எடுத்துக் கொண்டு, ஆவேசத்துடன் வேகமாக வருவார் சிவாஜி. அப்போது, ஜெமினியிடம், 'எங்க அண்ணாவை எதிர்த்து தான், வாழ்க்கை நடத்தணும்ன்னா, அந்த வாழ்க்கை எனக்கு தேவையே இல்லை. அவரோட முழு சம்மதத்தோடு, ஆசிர்வாதத்தோடு, நாம் சேருவதை தான், நான் ஒத்துக் கொள்வேன்...' என்று, சாவித்திரி சொல்வதை கேட்பார். பாசத்தில் கண்ணீர் வழியும்.
தான் கொண்டு வந்த ரிவால்வரை வைத்து, கண்ணீரை துடைக்கும் அந்த, ஒரு காட்சியிலேயே, தன் மன ஓட்டத்தை அழுத்தமாக காட்டியிருப்பார்.
சிவாஜியை பற்றி, குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம்... அவர் நடித்த பல படங்கள், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள். தன்னை விட கதாநாயகிக்கு தான், முக்கியத்துவம் அதிகம் என்று தெரிந்தும், முழு மனதோடு, நடிக்க ஒப்புக் கொள்வார்.
அந்த வரிசையில், கை கொடுத்த தெய்வம், படம் முழுக்க முழுக்க நடிகை சாவித்திரியின் படம். அந்த மாதிரி படங்களிலும், தன் தனித்தன்மையை காண்பித்து, ஆடியன்சை, தன் பக்கம் திருப்பி விடுவார் சிவாஜி. இப்படத்திற்கு, கதை, வசனம், எழுதி, பிரமாதமாக இயக்கியிருப்பார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
நடிகை சாவித்திரிக்கு, நானும் மிகப் பெரிய விசிறி. என் மகள் மதுவந்தியின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு சிவாஜியை அழைக்க, அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். 'யார்ரா அந்த அதிர்ஷ்டக்கார மாப்பிள்ளை?' என்றார்.
'நடிகை சாவித்திரியின் பேரன்...' என்றேன். சிவாஜியின் முகம் மலர்ந்து, 'ஓ, அப்படியா வெரி குட்...' என்றார். தேதியை சொன்னதும், 'என்னடா இது, இப்படி செய்துட்டே... அன்னிக்கு, நான் தஞ்சாவூரிலே இருக்கிறனேடா...' என்றார். 'அதெல்லாம் எனக்கு தெரியாது. நீங்க கண்டிப்பாக பங்ஷனுக்கு வர்றீங்க...' என்று, உரிமையுடன் சொல்லி விட்டு, கிளம்பினேன்.
நிச்சயதார்த்த விழா விற்கு, தஞ்சாவூரிலிருந்து, காரிலேயே சென்னைக்கு வந்து, தன் வீட்டிற்கு கூட போகாமல், நேராக விழாவிற்கு வந்து விட்டனர் சிவாஜியும், அவரது மனைவி கமலா அம்மாவும். விழா முடியும் வரை, அங்கேயே இருந்து மணமக்களை வாழ்த்தினர்.
கடந்த, 1964ல் ஏ.பி.நாகராஜனின் இயக்கத் தில், சிவாஜி ஒன்பது வேடங்களில் நடித்த, நவராத்திரி திரைப்படம் வெளியானது. நடிப்பில், முகபாவத்தில், பல கேரக்டர்களை வித்தியாசப்படுத்தி காண்பித்திருப்பார் சிவாஜி. சாவித்திரியை கைது செய்து, மருத்துவமனைக்கு அழைத்து வரும் காட்சியில், சிவாஜி மனநோய் மருத்துவராக வருவார்.
இரண்டு கைகளையும் பின்புறம் கட்டி, மெதுவாக நடந்து செல்லும் சிவாஜி, கருணை சிரிப்போடு, ஒரு நிலையில் நிற்பார்; பின் திரும்பி வருவார். மேஜை மீது இருக்கும் ஸ்டெதஸ்கோப்பை லாவகமாக எடுத்து கழுத்தில் மாட்டி, திரும்பி போவார். அதாவது, வந்திருக்கும் பேஷன்ட் மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்ல, நல்ல நிலையில் இருப்பவர் தான் என்பதை, டயலாக் எதுவும் பேசாமல், தன் நடையாலேயே வெளிப்படுத்தி, ரசிகர்களின் கைத் தட்டலை வாங்கி விடுவார்.
சிவாஜிக்கு மிகவும் நெருக்கமானவர் மேஜர் சுந்தர்ராஜன். அவர் மேடையில் நடித்த ஞான ஒளி, கல்தூண் போன்ற நாடகங்கள், பின் சிவாஜி நடிப்பில், வெற்றிப் படங்களாக ஆகியிருக்கின்றன. சிவாஜியுடன் உயர்ந்த மனிதன், ஞான ஒளி மற்றும் பாரத விலாஸ் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தலைவராக, சிவாஜி கணேசன், பணி ஆற்றிய போது, அவருக்கு வலது கரமாக, நடிகர் சங்கத்தின் காரியதரிசியாக பணி ஆற்றியிருக்கிறார் மேஜர் சுந்தர்ராஜன். நடிகர் சங்கத்திற்கு, சென்னை தி.நகர் ஹபிபுல்லா சாலையில், இடம் வாங்கி, கட்டடம் கட்டி, அதில், நாடக அரங்கு, சிறிய தியேட்டர் எல்லாம் உருவாக சிவாஜியும், மேஜரும், விகே.ராமசாமியும் முக்கிய காரணகர்த்தாக்கள். இப்போது, கட்டடங்கள் இடிக்கப்பட்டு, நடிகர் சங்க இடம் வெறிச்சோடி இருக்கிறது என்பது, எல்லா நடிகர், நடிகைகளுக்கும் வருத்தம் தரக் கூடிய விஷயம்.
— தொடரும்.
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
4th March 2014, 07:05 PM
#1460
Junior Member
Seasoned Hubber
பார்த்ததில் பிடித்தது -14
நடிகர் திலகத்தின் ராஜா ராணி படங்கள் என்று சொன்னால் நம்மில் பலருக்கு நினைவுக்கு வரும் படம் எது ? உத்தமபுத்திரன்
எனக்கும் அப்படி தான் , ஆனால் அந்த நினைப்பு நான் எழுத போகும் படத்தை பார்த்ததும் சற்று மாறியது , காரணம் ?
நடிகர் திலகத்தின் படங்களில் நாம் அவரிடம் இருந்து என்னை எதிர்பார்ப்போம் ? அதுவும் அவர் ராஜா ராணி கதையில் தோன்றி உள்ளார் என்று அறிந்து
பிரமாண்டமான அரங்கு அமைப்பு , நட்சத்திர பட்டாளம் , சண்டைகள் ,
இது தான் உங்கள் விருப்பம் என்றல் நீங்கள் நான் எழுதி இருக்கும்
மருதநாட்டு வீரன் படத்தை மிகவும் ரசிப்பீர்கள்
Bookmarks