-
28th April 2014, 07:42 AM
#1321
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan Filmography Series
84. Chitor Rani Padmini சித்தூர் ராணி பத்மினி
தணிக்கை16.01.1963
வெளியீடு 09.02.1963
தயாரிப்பு – உமா பிக்சர்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வைஜயந்தி மாலா, டி.எஸ்.பாலய்யா, எம்.என்.நம்பியார், டி.பாலசுப்ரமணியம், காகா ராதாகிருஷ்ணன், ருஷ்யேந்திர மணி, டி.பி.முத்துலக்ஷ்மி மற்றும் பலர்
நடனம் – ராகினி, ஹெலன்
திரைக்கதை வசனம் – இளங்கோவன், ஸ்ரீதர்
நடன அமைப்பு – வி.எஸ்.முத்துசாமி பிள்ளை, ஸோஹன் லால்
உடைகள் – பி.ராமகிருஷ்ணன், கே.ஏ.ரஹ்மான்
மேக்கப் – ரங்கசாமி, என். சிவராம், என்.ஆர். தேவ்
ஸ்டில்ஸ் – வெங்கடாச்சாரி
விளம்பரம் – ரவி பப்ளிசிட்டி சர்வீஸ்
ஸ்டண்ட் – ஸ்டண்ட் சோமு அண்ட் பார்ட்டி
ப்ராசஸிங் – விஜயா லேபரட்டரி
ஸ்டூடியோ – கோல்டன், வாஹினி
ஒலிப்பதிவு ஆர். கண்ணன் – ரேவதி (மதராஸ்)
எடிட்டிங் – எம்.ஏ. பெருமாள்
உதவி டைரக்டர் – கே.எம். கோவிந்த்ராஜன்
ஒளிப்பதிவு – பொம்மன் இரானி, வி.குமார தேவன்
கலை – ஏ.கே. சேகர்
இசை – ஜி.ராமநாதன்
தயாரிப்பாளர் – ஆர்எம். ராமநாதன்
இயக்கம் – சிஹெச். நாராயணமூர்த்தி
விளம்பர நிழற்படங்கள் – ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து
பாடல் விவரங்கள்
1. தேவி விஜய பவானி – சுரபி - பி.சுசீலா
2. ஓஹோ நிலா ராணி – கு.மா. பாலசுப்ரமணியம் – சீர்காழி கோவிந்தராஜன்
3. பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் – உடுமலை நாராயண கவி – சீர்காழி கோவிந்தராஜன்
4. ஆ... ஹம் டேக்கா மேலே ஹாய் ... தஞ்சை ராமய்யா தாஸ் எஸ்.ஜானகி
5. சிட்டு சிரித்த்து போலே – கண்ணதாசன் – சீர்காழி கோவந்தராஜன், பி.சுசீலா
6. வானத்தில் மீனொன்று கண்டான் – சுரபி – சூலமங்கலம் ராஜலட்சுமி
7. ஆடல் பாடல் காணும் போது – கு.மா.பாலசுப்ரமணியம் – எஸ்.ஜானகி
8. வானத்தில் சூழ்ந்த்து மேகம் – அ. மருதகாசி – பி.சுசீலா
Last edited by RAGHAVENDRA; 28th April 2014 at 08:07 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th April 2014 07:42 AM
# ADS
Circuit advertisement
-
28th April 2014, 07:46 AM
#1322
Senior Member
Seasoned Hubber
சித்தூர் ராணி பத்மினி - பாடல் காட்சிகள்
தேவி விஜய பவானி
ஓஹோ நிலா ராணி
பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்
சிட்டு சிரிப்பது போலே
நடிகர் திலகத்திற்கு சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அபூர்வமான டூயட் பாடல் இடம் பெற்ற படம் சித்தூர் ராணி பத்மினி. இப்பாடல் இசை மேதை ஜி.ராமநாதனின் புகழ்க் கிரீடத்தில் மற்றுமோர் வைரமாய் மின்னுவதாகும். துவக்கத்தில் வரும் ஹம்மிங் நம்மை மெய்மறக்கச் செய்யும். கண்ணதாசனின் வரிகளை சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி.சுசீலா பாடியுள்ளனர்.
-
இயற்கையான நடிப்பு மட்டுமல்ல இயற்கையான அழகிற்கும் சொந்தக் காரர் நடிகர் திலகம் என்பதை நிரூபிக்கும் படங்களில் சித்தூர் ராணி பத்மினி குறிப்பிடத் தக்கதாகும். ராஜா ராணி பாத்திரங்களை யாரோ குத்தகைக்கு எடுத்தது போல் வர்ணித்து வந்த மீடியாக்களின் கூற்றுக்களைத் தவிடு பொடியாக்குவது சித்தூர் ராணி பத்மினியில் நடிகர் திலகத்தின் அட்டகாசமான தோற்றம். இப்பாடல் காட்சியில் அருகே வந்தால் என்ற வரிகளின் போது ஒரு புன்னகை புரிவார் பாருங்கள்... ராஜா ராணி வேடங்களைப் பற்றியும் நடிகர்களைப் பற்றியும் பாரபட்சமாக எழுத நினைக்கக் கூடிய மீடியாக்களுக்கு இது ஒரு பாடமாகும்.
வானத்தில் மீனொன்று கண்டேன்
ஹெலன் .. இந்தியத் திரையுலகின் கனவுக் கன்னியாக அந்தக் காலத்தில் ஏராளமான ரசிகர்களின் தூக்கத்தைக் கலைத்தவர் என்று புகழ் பெற்றவர். இவர் பல தமிழ்ப் படங்களில் நடனமாடியுள்ளார். இவற்றில் இசை மேதை ஜி.ராமனாதன் அவர்கள் இசையமைத்த பாடல்கள் பல அடங்கும். அப்படிப் பட்ட ஒரு பாடலை நீங்கள் பார்க்க உள்ளீர்கள்.
ஆடல் பாடல் இருக்கும் போது வீரம் தேவையா என நடன மங்கை கேட்பதாக பாடல் காட்சி. 1963ம் ஆண்டு வெளிவந்த சித்தூர் ராணி பத்மினி திரைப்படத்தில் இப்பாடல் இடம் பெற்றது. இப்படம் ஜி.ஆர். அவர்களின் இசை வரலாற்றில் மிகவும் முக்கியமானதாகும். வெறும் பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையிலும் தான் மேதை என நிரூபித்த படங்களில் இதுவும் ஒன்று.
இப்பாடலில் ஒலிக்கும் இசைக் கருவிகள் பாடலின் சூழலைத் தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் தேர்வு செய்யப் பட்டு இசைக்கப் பட்டுள்ளன. இந்திய இசையை மேல்நாட்டுக் கருவிகளில் அருமையாகக் கொண்டு வருவது ஜி.ஆர். அவர்களின் சிறப்பு. இதில் அவர் முன்னோடியாவார். இப்பாடல் அதற்கு ஒரு சான்று. நாகம் நடனமாடுவது போன்றி இசைக்கு க்ளாரினெட் மற்றும் வயலின்கள் ஒலிப்பது மிகவும் சிறப்பாக உள்ளது. பாடலின் வேகம், எஸ்.ஜானகியின் மயக்கும் குரல், ஹெலனின் வேகமான நடனம், இடையிடையே நடிகர் திலகத்தின் மயக்கும் புன்னகை என இப்பாடல் என்றென்றும் மறக்க முடியாத பாடலாக என் மனதில் இடம் பிடித்துள்ளது. பின்னணி இசையில் வயலின்களின் இணைப்பில் கிறங்க வைக்கும் உணர்வைக் கொண்டு வந்திருப்பது ஜி.ஆர். அவர்களின் திறமைக்கு சான்று.
Last edited by RAGHAVENDRA; 28th April 2014 at 07:56 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd May 2014, 07:23 AM
#1323
Senior Member
Seasoned Hubber
அடுத்து இங்கே இடம் பெறப் போகும் திரைப்படம்..
"நிறுத்துங்க... அதான் எனக்குத் தெரியுமே" என்கிறீர்களா...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
2nd May 2014, 07:44 AM
#1324
Junior Member
Newbie Hubber
ஸ்ரீதரிடம் கதை கேட்டார் உமா பிக்சர் அதிபர். கல்யாண பரிசு கதை சொல்ல பட்டது. திருப்தி அடையாத அதிபர்,ஏதேனும் சரித்திர கதையாக சொல்லுங்கள்.சிவாஜி சாரை வைத்து பண்ண போகிறேன் என்றார். சித்தூர் ராணி பத்மினி விதை ஊன்ற பட்டது 1958-59 வாக்கில். நீண்ட நாள் தயாரிப்பு.என்னுடைய பிடித்தமான அந்த கால இயக்குனர்களில் ஒருவர் சி.எச்.நாராயண மூர்த்தி (அன்னையின் ஆணை இயக்குனர்).மற்றவர் டி.பிரகாஷ் ராவ்.(உத்தம புத்திரன்) . ஸ்ரீதர், சி.எச்.நாராயண மூர்த்தி,ஜி.ராமநாதன் என்ற திறமையாளர்கள். சிவாஜி -வைஜயந்தி என்ற அற்புத ஸ்டார் ஜோடி. நல்ல படம். என்ற போதும் ,பருவம் தவறி , ராஜா-ராணி கதை வழக்கொழிந்து ,குடும்ப-பொழுதுபோக்கு படங்கள் ரசிக்கப்பட்ட நேரத்தில் வந்து மாட்டி கொண்டது.அந்த தயாரிப்பின் கடைசி படமானது.
இருந்தாலும் ,இன்றும் ரசிக்க தக்க படமே.
-
2nd May 2014, 08:01 AM
#1325
Junior Member
Senior Hubber
Originally Posted by
RAGHAVENDRA
அடுத்து இங்கே இடம் பெறப் போகும் திரைப்படம்..
"நிறுத்துங்க... அதான் எனக்குத் தெரியுமே" என்கிறீர்களா...
raghavender sir I feel answers for earlier NT quiz questions not published. please let us know and also whether the programe is discintined or what/ pl clarify.
-
2nd May 2014, 10:49 AM
#1326
Junior Member
Newbie Hubber
அறிவாளி- 1963.
சபாபதி,தூக்கு தூக்கி, முதலிய படங்களில் பங்கு பெற்ற ஏ.டி.கிருஷ்ணசாமி எழுதி தயாரித்த வெற்றி படம் அறிவாளி. இவர் ஆங்கில இலக்கிய,சினிமா அறிவு நிரம்பிய நகைச்சுவை உணர்வுள்ளவர்.மெல்லிய நகைச்சுவை கொண்ட பொழுது போக்கு படங்களில் வல்லவர்.
taming of the shrew என்ற shakspere நாடகம் அறிவாளி என்று transcreat ஆனது.ஓஹோ என்று இல்லாவிட்டாலும் குடும்பத்தோடு ரசிக்க கூடிய ஜாலி படம். இதன் ஒலி சித்திரம் கூட பெரும் வரவேற்பை பெற்றது. சிவாஜி-பானுமதி காமெடி, தங்கவேல்-சரோஜா காமெடி எல்லாம் அன்றைய காலகட்டத்தில் பெரும் வரவேற்பு பெற்றது.
நல்ல ஒரு கருத்தையும் அழகாக சொன்ன ,துளி கூட ஆபாசம்,வன்முறை,காதல்,கூடுதல் உணர்ச்சி வெள்ளம்(melodrama ) எதுவும் கலக்காத casual &clean entertainer .
-
2nd May 2014, 10:04 PM
#1327
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan Filmography Series
85. Arivali அறிவாளி
தணிக்கை 19.02.1963
வெளியீடு 01.03.1963
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – ஆளவந்தான்
பி.பானுமதி – மனோரமா
டி.எஸ்.பாலையா – நல்லமுத்து நாயக்கர்
கே.ஏ.தங்கவேலு – முத்துவேல்
கே.சாரங்கபாணி – தண்டபாணி பிள்ளை
டி.ஆர்.ராமச்சந்திரன் – டாம் குமார்
எஸ்.வி.ராமதாஸ் – ஜமீன்தார் அழகு சிங்காரம்
எம்.சரோஜா – இந்தியா
டி.பி.முத்துலட்சுமி – தங்கலட்சுமி
ஜெமினி சந்திரா மோகினி
கன்னையா - கந்தசாமி
திரைக்கதை வசனம்- ஏ.டி கிருஷ்ணசுவாமி
ஒளிப்பதிவு – கே.பாலு
ஒலிப்பதிவு – பாடல்கள் – வி.எஸ்.ராகவன். ஈ.ஐ.,ஜீவா, டி.எஸ்.ரங்கசாமி, கண்ணன்
வசனம் – ஜி.வெங்கட்ராமன்
Recorded on வெஸ்ட்ரெக்ஸ் ரிகார்டிங் சிஸ்டம்
இசை அமைப்பு – எஸ்.வி.வெங்கட்டராமன்
பாடல்கள் பாபநாசம் சிவன் மருதகாசி
பின்னணி பாடியவர்கள் ட்டி.எம்.சௌந்ர்ராஜன், எஸ்.வி. வெங்கட்டராமன், ராதா ஜெயலட்சுமி, லீலா, ஜமுனா ராணி, கே.ராணி
கலை – வி.எம்.
செட் ப்ராபர்டீஸ் – சினி கிராப்ட்ஸ்
உடைகள் ராமகிருஷ்ணன், பிரான்ஸிஸ்
எடிட்டிங் வி.எஸ்.ராஜன், வாசு
ஒப்பனை ரங்கசாமி, கஜபதி, பீதாம்பரம், ராமதாஸ், சொர்ணப்பா, பெரியசாமி, நாராயணசாமி, நவநீதம்
நடனம் சாயி சுப்புலட்சுமி
நடன அமைப்பு பி.எஸ்.கோபாலகிருஷ்ணன்
ஸ்டில்ஸ் ஆர்.என்.நாகராஜ ராவ்
விளம்பர டிசைன்கள் ஜி.ஹெச்.ராவ்
பத்திரிகை விளம்பரம் அருணா அண்ட் கோ
ப்ராஸ்ஸிங் விஜயா லேபரட்டரி எஸ்.ரங்கநாதன்
ஸ்டுடியோ நிர்வாகம் – வாஹினி – சி.எஸ்.பிரகாஷ் ராவ், எம்.ஜி.ராமதாஸ், பி.சுந்தரம் பரணி – சண்முகம்
ஸ்டூடியோ – வாஹினி, பரணி, மெஜஸ்டிக், ரேவதி
தயாரிப்பு நிர்வாகம் – என்.வி.ஸ்ரீராமன்
தயாரிப்பு டைரக்ஷன் ஏ.டி.கிருஷ்ணசுவாமி
Last edited by RAGHAVENDRA; 6th May 2014 at 07:55 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd May 2014, 10:23 PM
#1328
Senior Member
Seasoned Hubber
அறிவாளி – சிறப்புச் செய்திகள்
உலகப் புகழ் பெற்ற இலக்கிய மேதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் டேமிங் தி த ஷ்ரூ (Taming of the Shrew) நாடகம், பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்களுக்கு அடித்தளமாய் அமைந்த சிறப்பான கதையமைப்பைக் கொண்டது. . இந் நாடகம் திரு ஒய்.ஜி.பார்த்தசாரதி அவர்களின் யூ.ஏ.ஏ. குழுவினரால் ஓ வாட் எ கேர்ள் என்ற பெயரில் நாடகமாக நடிக்கப் பட்டது. இந் நாடகத்தில் ஜெயலலிதா அவர்களின் தாயார் சந்தியா அவர்களும் அவருடைய சகோதரி வித்யாவதி அவர்களும் நடித்திருந்தனர். ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகத்தை திரு ஏ.டி.கே. என்கிற ஏ.டி. கிருஷ்ணசாமி அவர்கள் தமிழுக்கேற்றவாறு நாடகமாக்கம் செய்திருந்தார். இதற்கு கிடைத்த நல்ல வரவேற்பு இதனைத் திரைப்படமாக்கும் எண்ணத்தை அவருக்குள் தூண்டியது.
முதலில் வேறு ஒரு நடிகரை வைத்து இப்படத்தை தயாரிக்கத் திட்டமிட்டிருந்தனர். பல்வேறு காரணங்களால் இத்தயாரிப்பு கைவிடப் பட்டது. பின்னர் நடிகர் திலகத்திடம் கேட்டு அவர் சம்மதித்த பின்னர் ஓரிரு ஆண்டுகள் கழித்து துவக்கப் பட்டது. அருணா பிலிம்ஸ் தூக்குத் தூக்கி தயாரான போதே இப்படமும் துவக்கப் பட்டதாகவும் அக்காலத்தில் பேசப் பட்டது.
நீண்ட கால தாமதத்திற்குப் பின்னர் ஒரு வழியாக 1963ம் ஆண்டு வெளியான அறிவாளி, ஒரு வெற்றித் திரைப்படமாகும். நடிகர் திலகத்தின் ஸ்டைலுடன் கூடிய நகைச்சுவை நடிப்பு, பானுமதியின் துடுக்கான பாத்திரப் படைப்பு, கே.ஏ.தங்கவேலு டி.பி.முத்துலட்சுமி இணையாக நடித்து புகழ் பெற்ற அதான் எனக்குத் தெரியுமே காட்சி, எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் இனிமையான பாடல்கள் அனைத்தும் இன்றளவும் அறிவாளி திரைப்படத்தை மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக வைத்துள்ளன.
குறிப்பாக ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடல் அதற்குப் பின் வந்த பல படங்களில் பழமொழியாக இடம் பெறும் அளவிற்கு பிரபலமானது என்று கூறுவர்.
இதே போல கண்ணாலே காணாமல் பாடலில் இடம் பெற்ற கம்பீரமானவன்டி, அழகானவன்டி என்று முடியும் வரிகள் பின்னாளில் சகல கலா வல்லவன் திரைப்படத்தில் இடம் பெற்ற கட்டவண்டி பாடலுக்கு Inspiration ஆகத் திகழ்ந்தன என்றால் மிகையில்லை.
தொடக்கம் முதல் இறுதி வரை நகைச்சுவை, விறுவிறுப்பு, இசை என அலுக்காமல் செல்லும் படம் அறிவாளி.
அறிவாளி திரைப்படத்தின் ஒரிஜினலான, ஓ வாட் ஏ கேர்ள் நாடகத்தின் சில நிழற்படங்கள் தங்கள் பார்வைக்கு இணையத்தில் முதன் முதலாக.
Last edited by RAGHAVENDRA; 2nd May 2014 at 10:27 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd May 2014, 10:30 PM
#1329
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd May 2014, 10:31 PM
#1330
Senior Member
Seasoned Hubber
அறிவாளி திரைப்படத்தின் பாடல்களைப் பற்றிய விவரங்கள்
1. கூவாத இன்பக் குயில் கூவும்- மருதகாசி – பி.பானுமதி
2. பட்டுப் போல் மேனி பளபளக்கும் – மருதகாசி – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பானுமதி
3. ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும் – மருதகாசி – டி.எம்.சௌந்தர்ராஜன்
4. அறிவுக்கு விருந்தாகும் – மருதகாசி டி.எம்.சௌந்தர்ராஜன்
5. வாழிய நீடூழி புவிமீதிலே – மருதகாசி – ராதா ஜெயலக்ஷ்மி, பி.லீலா
6. வெங்கடரமணா பங்கஜ சரணா – பாபநாசம் சிவன் – பி.பானுமதி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks