Page 8 of 400 FirstFirst ... 6789101858108 ... LastLast
Results 71 to 80 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #71
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள வாசுதேவன் சார்,

    தங்கள் மகத்தான வரவேற்புக்கு மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்டதுபோல நான் வீறுகொண்டெல்லாம் வரவில்லை. அடிபட்டு நொந்துபோய் நொண்டிக்கொண்டு வந்திருக்கிறேன். அப்படி வந்தவனுக்கு இளைப்பாறக் கிடைத்த திண்ணைகளாக ஜெய், ரவி, முத்து, மற்றும் மதுரகானம் திரிகள் கிடைத்தன. இங்கு இருக்க விட்டார்களென்றால் இருப்பேன். இல்லையென்றால் மீண்டும் நொண்டிக்கொண்டு வீடு நோக்கிப்போய் சேருவேன்.

    இதயம் நிறைந்த வார்த்தைகளால் வரவேற்ற தங்களுக்கும், ராகவேந்தர் சாருக்கும், வினோத் சாருக்கும் நன்றி.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #72
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    கதாநாயகியரின் போதைப் பாடல்கள் (2)

    ‘அவளுக்கென்று ஓர் மனம்’ புதுமை இயக்குனர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் மலர்ந்த அழகிய வண்ண ஓவியம். ஆனால் ரொம்ப சீரியஸான படம். அதனால்தானோ என்னவோ படத்தில் காமெடி நடிகர்களோ, காமெடி ட்ராக்கோ கிடையாது. சின்ன படங்களில் கதாநாயகன் மற்றும் பெரிய நடிகர்கள் படங்களில் இரண்டாம் கதாநாயகனாக நடித்து வந்த முத்துராமன் அப்போது சில படங்களில் வில்லனாகவும் நடித்தார். அவற்றில் இந்தப்படமும் ஒன்று (மற்றவை பெண்தெய்வம், மாணவன் போன்ற சில).

    மெல்லிசை மன்னரின் இசையில் பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டின. 'ஆயிரம் மனது ஆயிரம் நினவு', 'மங்கையரில் மகராணி' பாடல்களில் பாலா கொஞ்சினார். இதுபோக மூன்று இசையரசிகளுக்கும் வஞ்சனையின்றி மூன்று அருமையான தனிப்பாடல்களைக் கொடுத்து 'நான் எல்லோருக்கும் நல்லவன்' என்று காட்டிக்கொண்டார் மெல்லிசை மன்னர். அதன் விளைவாக நமக்குக் கிடைத்தவை அருமையான பாடல்கள்.

    சுசீலாவுக்கு "மலர் எது என் கண்கள்தானென்று சொல்வேனடி"
    ஜானகிக்கு "உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்"
    ஈஸ்வரிக்கு "எல்லோரும் பார்க்க என் உல்லாச வாழ்க்கை"

    தங்கவேலுவுக்கு மட்டுமல்ல நமக்கும் 'ஆஹா.. ஓஹோ... பேஷ் பேஷ்'

    காஞ்சனாவின் வாழ்க்கையில் பழைய காதலன் முத்துராமனால் ஏற்படவிருக்கும் பிரச்சினையை தீர்க்க முற்படும் பாரதி அதற்கு விலையாக தன் வாழ்க்கையையே பணயம் வைத்து, முத்துராமனின் கைப்பாவைக்கிறார். அவர் சொன்னபடியெல்லாம் ஆடுகிறார். அந்த பொம்மலாட்டத்தின் ஒரு பகுதிதான் பாரதி கிளப்பில் பாடியாடும் இந்த அருமையான பாடல். ஈஸ்வரி அவருக்கே உரிய பல்வேறு குரல் வித்தைகளுடன் அசத்தினார்.

    எல்லோரும் பார்க்க என் உல்லாச வாழ்க்கை
    சரிதான் போ போ இனி ஏன் நாணம்
    கண்ணீரில் என்னை
    ஆடச் சொல்லுங்கள் எல்லோரின் முன்னே

    பூச்சுடும் கூந்தல் கண்டேன், பூமாலை மனமும் கண்டேன்
    கல்யாணப் பெண்ணைப்போலே கனவொன்று நானும் கண்டேன்
    கைதொட்ட துணையைக்கண்டு கண்ணா நீ யாரோ என்றேன்
    விதியென்னும் தேவன் விளையாட வந்தேனென்றான்

    (இந்த கண்ணதாசனை என்ன செஞ்சால் தகும்?)

    நண்பர்களே, வீடியோ ப்ளீஸ்...

  4. Likes chinnakkannan liked this post
  5. #73
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

    ஆரம்பத்திலிருந்து ரசித்துக் கொண்டு தான் இருக்கிறேன்..ம்ம் சரி..க ப க இ..(கண்ணில் பட்ட கடைசி இடுகை..)ம்ம் கார்த்திக்.. அமர்க்களம்..எல்லோரும் பார்க்க உல்லாச வாழ்க்கை..(பாரதிக்கு முழுக்கை கொடுக்க வேண்டும் என்று யார் சொல்லியிருப்பார்களோ..ம்ம்) போதையில் இல்லாமலேயே பார்ப்பவரை போதை கொள வைக்கும் இன்னொரு பாட்டு இருக்குங்காணும்..அதே படத்திலே..எப்படி விட்டீர்.. மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி..

  6. #74
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    முன்பு வேறொரு இழையில் எழுதிப் பார்த்தது..

    **

    தேவகோட்டையில் என் ஒன்றுவிட்ட அக்காவின் கணவர் இருந்தார்..இப்போது இல்லை. அவர் என்னவேலையெல்லாம் செய்தார் என்றெல்லாம் தெரியாது...அவருக்கு ஐந்து குழந்தைகள்..அத்தனையும் பெண்..

    என் சின்ன வயதில் மதுரை ஒருதரம் வந்திருந்த போது நைட் ஷோ போலாம் வா என்று கூட்டிக் கொண்டு போனார்..கருப்பு வெள்ளைப்படம்..

    ஹோவென்று ரயில் ஓட டைட்டிலுடன் பாடல்..பயணம்..பயணம்..
    அப்போது கேட்டு மனதில் பச்சக் என்று பதிந்த வரிகள்..

    புகை வண்டி ஓட்டிட ஒருவன் அதுசெல்லும் வழிசொல்ல ஒருவன்
    அந்த இருவரை நம்பிய மனிதன்..
    அவர்களை நடத்துபவன் தான் இறைவன்
    இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
    எவரை எவர் வெல்லுவாரோ...(அஃப்கோர்ஸ் இறைவன் தான்)(எம்.எஸ்.வி யின் கணீர்க் குரல்..)

    நிற்க.. எழுதப் போவது இந்தப் பாட்டு அல்ல..இடம் பெற்ற இன்னொரு பாட்டு..அதைப் பற்றிச் சொல்லும் முன்:

    பயணம் படத்தின் கதை கொஞ்சம் புகையாகத் தான் நினைவில். ரயிலில் செல்லும் பயணிகள் சிலரின் வாழ்க்கை அனுபவங்கள்..செந்தாமரை, விஜயகுமார், ஜெயச்சித்ரா போன்றோர் மட்டும் நினைவில்..கொஞ்சம் ஓ.க்கேயாகத் தான் இருக்கும்..

    ரயில், பயணிகளின் கதை என மாறி மாறி ப் பயணிக்கும் திரைக்கதையில் இடைவேளைக்கு அப்புறம் திடீரென ஜெயச்சித்ராவும் விஜயகுமாரும் (படத்தில் ராணுவ வீரன் என்று சொல்வார்கள்) டூயட் பாடுவார்கள்..அன்யூஸ்வலாக நல்ல மெலடி.
    .
    வரிகளும் பிற்காலத்தில் கேட்ட போது கொஞ்சம் கவர்ந்தது..

    ஒரு ஆண் பெண் காதல் வசப்படுவதற்குக் காரணம் - காரணமே இல்லை என்று சொல்ல முடியாது. இருவருக்குள்ளும் ஒரு common இண்ட்ரெஸ்ட் இருந்திருக்கும் அல்லது காமன் இண்ட்ரெஸ்ட் உருவாகியிருக்கும்...என நினைக்கிறேன் (கண்ணா..நல்லா சிலேடை சொல்ற போ..)

    அதை அழகாகப் பாடல் வரியில் பிடித்திருப்பார் கவிஞர் (கண்ணதாசன் என நினைக்கிறேன்..ஐயம் நாட் ஷ்யூர்)

    படக்கென்று ஆரம்பித்து அழகாக முடிந்து இன்னும் நீண்டிருக்கலாமோ எனத் தோன்ற வைக்கும்பாடல்..(எவ்வளவு தமிழ்)

    இரண்டு வரிகள் ஆண் இரண்டு வரிகள் பெண் என மாறி மாறி வரும் டூயட்..ஜேசுதாஸ் வாணிஜெயராம்..கலக்கியிருப்பார்கள்..

    **
    ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்
    அதுதான் காதல் பண்பாடு....

    ஆனபின்னாலே இருபக்க மேளம்
    அதுதான் வாழ்க்கை அன்போடு....

    தேவாமிர்தம் தேனிதழ்கள்
    தேவர்கள் இல்லை நான் வந்தேன்

    மார்பின் அகலம் குன்றங்கள்
    மலர்கள் இல்லை நான் வந்தேன்

    மஞ்சள் ரோஜா தென்றல் பட்டு
    அஞ்சக் கண்டேன் நான் வந்தேன்

    மாலைகள் ஏந்து மங்களச் சாந்து
    மார்பினில் நீந்து என்னைத் தந்தேன்..

    நாடக மேடை திரை இல்லை
    நாயகி வந்தாள் கவிபாடி

    நாயகியுடனே துணை இல்லை
    நாயகன் வந்தான் துணை தேடி

    மின்னல் ரோஜா பொன்னில் ஊற்றி
    கையில் வந்தது உறவாடி

    கண்ணன் ராதா ராமன் சீதா
    வந்தார் இங்கே நம்மைத் தேடி

    ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்
    அதுதான் காதல் பண்பாடு....

    ஆனபின்னாலே இருபக்க மேளம்
    அதுதான் வாழ்க்கை அன்போடு....


  7. #75
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    கார்த்திக்.. அமர்க்களம்..எல்லோரும் பார்க்க உல்லாச வாழ்க்கை..(பாரதிக்கு முழுக்கை கொடுக்க வேண்டும் என்று யார் சொல்லியிருப்பார்களோ..ம்ம்) போதையில் இல்லாமலேயே பார்ப்பவரை போதை கொள வைக்கும் இன்னொரு பாட்டு இருக்குங்காணும்..அதே படத்திலே..எப்படி விட்டீர்.. மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி..
    அன்புள்ள சின்னக்கண்ணரே,

    அந்தப்பாட்டை நான் விடவில்லை. குறிப்பிட்டிருக்கிறேன். கொஞ்சம் பெரிய கண்கொண்டு பாருங்கள்.

    பாராட்டுக்கு நன்றி.

  8. #76
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்புள்ள வாசுதேவன் சார்
    மனதை மயக்கும் மதுர கானங்கள் திரிக்கு அடியேனின் வாழ்த்துக்கள்

  9. #77
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கார்த்திக் ஜி.. ஆமாம்..ம்ம் கொஞ்சம் நழுவி விட்டது மனமும் கண்ணும்.. மன்னிக்க..

  10. #78
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    அன்புள்ள வாசுதேவன் சார்,

    அப்படி வந்தவனுக்கு இளைப்பாறக் கிடைத்த திண்ணைகளாக ரவி,ஜெய், முத்து,மதுபானம் திரிகள் கிடைத்தன.
    Kaarthik Sir,

    ஒன்று அற்புதமான வெளிநாட்டு ஒயின்.(மலேசியா ).ஒன்று கேவலமான கண்ணை குருடாக்கும் மெத்தில் சாராயம். மற்றொன்று எதிலும் சேராத சுவையற்ற எதோ ஒரு பானம்.(அக்காமாலா)
    Last edited by Gopal.s; 11th June 2014 at 05:48 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #79
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    ஐயா கோபாலரே,

    நான் மதுவருந்தும் பழக்கம் இல்லாதவன். அதை அடியோடு வெறுப்பவன். இதனாலேயே வசந்த மாளிகை போன்ற படங்களை என பேவரைட் லிஸ்ட்டில் வைக்காதவன். இதை மஞ்சுளாவின் இரங்கல் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன். எனவே எனது பதிவை மேற்கோள் காட்டியதில் உள்ள உங்கள் குறும்புத்தனத்தை நீக்கி விடுங்கள். அது 'மதுபானம்' அல்ல 'மதுரகானம்'.

  12. #80
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    ஐயா கோபாலரே,

    நான் மதுவருந்தும் பழக்கம் இல்லாதவன். குறும்புத்தனத்தை நீக்கி விடுங்கள். அது 'மதுபானம்' அல்ல 'மதுரகானம்'.
    நீக்கியாச்சு. மூன்று மதுர கானங்களில் ஒன்று உல்லாச மயக்கும் பாடல்.இன்னொன்று ராப்பிச்சை காரனின் கூக்குரல்.மற்றொன்று சகிக்க முடியாத ஒப்பாரி.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Page 8 of 400 FirstFirst ... 6789101858108 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •