-
15th June 2014, 01:24 PM
#11
Senior Member
Veteran Hubber
பொதுவுடைமைக் கொள்கையை வலியுறுத்தும் 'சிவப்பு மல்லி' படத்தில் ஒரு அழகான டூயட். இன்னிசை இரட்டையர் சங்கர்-கணேஷ் இசையில், யேசுதாஸ்-சுசீலா (படத்தில் சந்திரசேகர்-சாந்திகிருஷ்ணா).
1981- ல் மெல்லிசை மன்னருக்கும், இசைஞானிக்கும் இடையில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருந்த இரட்டையர்களிடமிருந்து அருமையான பாடல்கள் வெளிவந்து மனதைக்கவர்ந்தன. அவற்றில் ஒன்று இது....,
ரெண்டுகன்னம் சந்தன கிண்ணம்
தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை அள்ளி பூவை கையில் கொடுத்தபின்னும்
தொட்டு தந்த கையில் மனம் வீசுது இன்னும்
(கவிஞர் வைரமுத்துவுக்கு சாந்திகிருஷ்ணாவின் கன்னம் சந்தன கிண்ணமா?. அதுசரி, கவிதைக்கு பொய்யழகு. 'அண்ணியின்' உரல் இடையைப்பார்த்து 'இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது' என்று பாடிய கவிஞரின் வழி வந்தவர்கள்தானே)
சரணங்களில் வைரமுத்துவின் முத்திரை...
இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே
இருளே இவளின் துணையே...
-
15th June 2014 01:24 PM
# ADS
Circuit advertisement
Bookmarks