-
16th June 2014, 12:38 PM
#321
கண்மணி ராஜாவில்
"ஓடம் கடல் ஓரம் அது சொல்லும் கதை என்ன "
பாடல் பற்றி சொல்லி இருந்தர்கள்
அதில் பாலாவின் இன்னொரு பாடல் ஒன்று உண்டு அல்லவே
"காதல் விளையாட கட்டில் இடு கண்ணே துய மகள் ஆகா
தொட்டில் இடு கண்ணே
எண்ணங்களில் இன்ப நடனம் " பாலா வித் சுசில்
beautiful விசில் மற்றும் flute
ஹே ஹே ஹா ஹா ஹம்மிங்
-
16th June 2014 12:38 PM
# ADS
Circuit advertisement
-
16th June 2014, 12:42 PM
#322
வெற்றிவேல் production 1974
பணத்துக்காக
செந்தில்நாதன் direction
சிவகுமார் ஜெயசித்ரா,கமல்,ஸ்ரீகாந்த்,சசிகுமார்
"யாருமில்லே இங்கே இடம் இடம் இது சுகம் தரும்
ஆசை மனம் அங்கே தரும் தரும் அது தரும் வரை கொஞ்சம் பொரும்"
பாலா வித் சுசில்
-
16th June 2014, 12:43 PM
#323
-
16th June 2014, 12:45 PM
#324
Senior Member
Diamond Hubber
நூற்றுக்கு நூறு உண்மை சார்.
சிலோன் வானொலி சிலோன் வானொலிதான். டாக்சி டிரைவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடியது இலங்கை வானொலி
-
16th June 2014, 12:51 PM
#325
ஒரே வானம் ஒரே பூமி 1979
1.ஜேசுதாஸ் சோலோ மெலடி
"வளமான பூமியில் சுகமான கலைகள்
அழகான காதல் அது விளையாடும் நிலைகள் "
"அந்நாளில் அவள் ஒரு கார்கால பறவை
இந்நாளில் தந்தாளே எனக்கே தன உறவை
புது மஞ்சள் புது ரோஜா அவள் ஆகினாள்"
2.பாலா வித் சுசீல்
"சொர்கத்திலே நாம் அடி எடுத்தோம் வெகு சுகமோ சுகமாக "
3. tms
ஒரே வானம் ஒரே பூமி
ஒரே ஜாதி ஒரே நீதி
விச்சுவின் favourite சாக்ஸ் பீஸ்
-
16th June 2014, 12:54 PM
#326
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்

"யாருமில்லே இங்கே
இடம் இடம் இது சுகம் சுகம்
தினம் தரும் தரும்"
அடடா! என்னுடைய நெஞ்சமெல்லாம் நிறைந்த பாடல்.
'பார்க்கலாம் பேசலாம் ஆடலாம் பாடலாம்' பல்லாண்டு வரிகள் முடிந்தவுடன் 'டங் டங் டங்' என்ற பேசிக் கிடாரின் இன்பத்தை உரைக்க ஏது வார்த்தைகள்? இதே பேசிக் கிடாரின் இன்பத்தை 'அவள்' திரைப்படத்தில் 'கீதா... ஒரு நாள் பழகும் உறவல்ல' பாடலில் 'உனக்காகப் பிறந்தேனே உயிரோடு கலந்தேனே வா' என்னும் வரிகளை சுசீலாம்மா பாடி முடித்தவுடன் இரட்டையர்கள் சாரி கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ் அள்ளித் தருவார்கள்.
இப்படத்தில் இன்னொரு விஷேசம் உண்டு. கமலும் ஸ்ரீப்ரியாவும் கடலில் குளிப்பார்கள். அப்போது ஓரிரு நிமிடங்கள் பி.ஜி.எம்மில் பின்னி எடுத்திருப்பார் மன்னர்.
Last edited by vasudevan31355; 16th June 2014 at 12:57 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
16th June 2014, 01:00 PM
#327
வாசு சார்
நீங்கள் சொல்வது போல் பேஸ் கிடார் விச்சு மற்றும் SG ,வி குமார் எல்லோருமே உபயோகித்து இருப்பார்கள்
ஆனால் சமீப காலத்தில் நெட்இல் நிறைய artcile மொட்டை வந்த பிறகு தான் கிடார் usage தெரிய வந்தது என்பது போல் நிறைய விவாதங்கள் நடை பெற்று வருகின்றன
-
16th June 2014, 01:06 PM
#328
Senior Member
Diamond Hubber

'ஒரே வானம் ஓரே பூமி'
ஜெய், புன்னகை அரசி தவிர
ஒரே மலையாள வாடை.
ரவிக்குமார், சீமா, விதுபாலா(கௌரவ வேடமா) என்று நிறைய பேர்.
பூபந்தல் பொன்னான வீடு
புதுவெள்ளம் பெண் மான்களோடு
எல்லார்க்கும் எல்லாம் உண்டு
ஆனந்தம் பனி விளையாட்டு
இது என்ன புது விளையாட்டு
என்னென்ன இன்பம் இன்று
அடடா! இளமை உலகம்
அழகில் இதுதான் சிகரம்
பாடல்களிலும் இது சிகரம்தான்.
மெல்லிசை மன்னர் உயிர் கொடுத்து கரை சேர்ப்பார்.
படம் கொஞ்சம் பொறுமை சோதித்தது உண்மை.
-
16th June 2014, 01:08 PM
#329
அதே போல் saxophone ரஹ்மான் வந்த பிறகு தான் அதிலும் டூயட் படத்திற்கு பிறகு தான் சினிமாவில் உபயோகிக்க ஆரம்பித்தது போல் சிலர் எழுதி கொண்டு இருக்கின்றனர்
"நினைத்தாலே இனிக்கும் "
"யாதும் ஊரே யாவரும் கேளிர் அன்பே எங்கள் உலக தத்துவம்
நண்பர் உண்டு பகைவர் இல்லை நன்மை உண்டு தீமை இல்லை
இனிகோகோ சந்தா மலேசிய
அரௌண்ட் தி வேர்ல்ட் பிரிஎண்ட்ஷிப் welcomes யு "
பாடலுக்கு முன் வரும் ஸ்டார்டிங் சாக்ஸ் இசைக்கு ஈடு உண்டா சார்
-
16th June 2014, 01:12 PM
#330
ஒரே வானம் ஒரே பூமி உண்மையில் மலையாள படம் தான்
"ஏழாம் கடலில் அக்கர" என்று மலையாளத்திலும் ஒரே சமயத்தில் எடுத்தது என்று கேள்வி
சசி direction
புன்னைகை அரசிக்கு ஜோடி ஒரு நயாகரா டாக்டர் (வயாகரா)
"லக்ஷ்மி திஸ் இஸ் நயாகரா பால்ல்ஸ் "
ஜாலி இன் "ந ந" "ந ந "
Bookmarks