-
19th June 2014, 03:32 PM
#551
வாசு சார்
நன்றிகள் "பள பள "
சரணம் யாப்பா பாடல் நான் ரொம்ப ரசித்த பாடல்
சார் நான் 1974 இலிருந்து சபரிமலை சென்று கொண்டு இருக்கிறேன்
அப்ப சபரி பஜனையில் இந்த பாட்டு தான் famous
ஜேசுதாஸ் இன் தரங்கனி,வீரமணி எல்லாம் பின்னாடி தான் famous
பருவகாலம் படத்தில் டைட்டில் பார்த்திங்கநா
கமல் பேர் இறுதியில் தான் வரும்
-
19th June 2014 03:32 PM
# ADS
Circuit advertisement
-
19th June 2014, 03:36 PM
#552
இந்த படத்தில் எல்லோருமே ஸ்ரீகாந்த் தான் வில்லன் என்பார்கள்
இறுதியில் கமல் தான் culprit என்று தெரியும்
நெல்லை பர்வதியில் ரிலீஸ் சார்
-
19th June 2014, 04:06 PM
#553
நீ ஒரு மகாராணி 1976
சூரியாலய
(விஜய சூரி combines மு சூரிய நாராயணன் என்று நெல்லை நகரசபை தலிவர் ,நெல்லை திரைப்பட விநியோகஸ்தர் தலைவர் ஆக இருந்தவர்
மிசா கால கட்டத்தில் நெல்லை போலிசால் நய்ய புடைக்கபட்டவர்
மறுபிறவி,வைரம்,தங்கத்திலே வைரம் போன்ற படங்களை தயாரித்தவர் .இந்த படைத்தை சூரியாலய என்ற banneril தயாரித்தார் )
ஜெய்ஷங்கர் சுஜாதா ஸ்ரீப்ரிய ,தேங்காய் என்று பெருங்கூட்டம்
இன்னிசை வேந்தர்கள் பின்னிஇருப்பார்கள்
பாலா வித் சுசீலா
ஆரம்ப ஹம்மிங் "ல ல்ல லா "
"அவள் ஒரு பச்சை குழந்தை பாடும் பறவை பருவம் 16 (யாரு ஸ்ரீப்ரியா)
அவன் ஒரு ராஜகுமாரன் (ஜெய்) அழகிய மாறன் வழிய பல்லாண்டு
காதல் கீதங்கள் கோயில் தீபங்கள் மேள தாளங்கள் வாழ்த்துது "
செம பாடல் சார்
saxophone பங்கோ drum ஜாலரை என்று பலவித வாத்யங்கள் உருளும்
ஸ்ரீப்ரியா செம cute கன்ன குழி துண்டா தெரியும்
2.நீ ஒரு மகாராணி நான் ஒரு மகாராஜன்
நேரம் சொல்லுது நெருங்க நெருங்க என்று
காலம் சொல்லுது தொடங்கு தொடங்கு என்று
ஒ ராணி ஒ ராணி
ஜேசுதாஸ் வித் சுசீலா beautiful டூயட்
அதிலும் ஒ ராணி என்று ஜேசு சொல்லும்போதும்
ஒ ராஜா என்று சுசில் சொல்லும்போதும் ஒரு சந்தோசம் தெரியும்
அபபறும் சுசீலாவின் சோலோ
"பல்லாண்டு காலம் நீ vazha வேண்டும் பல கோடி பாடல் நான் பாட வேண்டும்"
ஜெய் ஸ்ரீப்ரியவை லவ் பண்ணி விட்டு சுஜாதாவை கல்யாணம் செய்து கொண்டு ஸ்ரீப்ரியாவை மறக்க முடியாமல் (ஸ்ரிப்ரியாக்கு கிட்டத்தட்ட வில்லி கேரக்டர் ) இறுதியில் சுஜாதாவின்
அன்புக்கு அடிமை ஆவர்
-
19th June 2014, 04:35 PM
#554
Senior Member
Diamond Hubber
ரோஜாரமணி மலையாளத்தில் நடித்து வெளிவந்த 'செம்பருத்தி' (நடிகை ரோஜா நடித்தது அல்ல. செம்பருத்திக்கும் ரோஜாவுக்கும் அப்படி என்ன ராசியோ!) தமிழில் பருவகாலமாக நேரிடையாகவே தயாரிக்கப்பட்டது. தெலுங்கிலும் அப்படியே! 'கன்னிவயசு' என்ற பெயரில் வெளியானது.


மூன்றிலுமே ரோஜாரமணிதான் கதாநாயகி. தன்னுடைய 13ஆம் வயதில் இவர் 'செம்பருத்தி' படத்தில் நாயகியாகக் களமிறங்கி சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் அவார்டை இப்படத்திற்காக 1972 ஆம் ஆண்டு பெற்றார்.
தமிழில் குழந்தை நட்சத்திரமாக நன்கு அறிமுகமானவர்.
'இருமலர்கள்' படத்தில் நடிகர் திலகம் கல்லூரியில் படிக்கையில் தன்னை மோசம் செய்துவிட்டுப் போன காதலியை!? (பத்மினி) தன் திருமண வாழ்க்கைக்குப் பின் (மனைவி கே.ஆர்.விஜயா) சந்திக்க நேரிடும். (தான் முன்னால் உயிருக்குயிராகக் காதலித்த பத்மினி தன்னை ஏமாற்றி விட்டதாக சூழ்நிலை காரணமாக நடிகர் திலகம் தவறாக எண்ணி விடுவார்) தன் மகள் ரோஜாரமணியின் டீச்சரான பத்மினியை மீண்டும் எதிர்பாராமல் நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்து, பின் பத்மினி வீட்டுக்கு சென்று, பத்மினி மேல் நெடுநாள் வைத்திருந்த தன் உள்ளக்குமுறலை ஆத்திரம் தொண்டை அடைக்க கொட்டித் தீர்ப்பாரே!
அப்போது தங்களுக்குள் நடக்கும் சம்பாஷணை தன் பிஞ்சு மகளான ரோஜாரமணிக்கு தெரியக்கூடாது என்று அதுவரை அங்கு நின்று கவனித்துக் கொண்டிருந்த ரோஜாரமணியை காரில் இருக்கும் தன்னுடைய சிகரெட் கேஸை எடுத்து வரச் சொல்லி அனுப்புவார்.
நடிகர் திலகம் பத்மினியை கடிந்து, கதறிக்கொண்டு இருக்கும் போதே (ஏன் இப்படிப் பட்ட மரம் மாதிரி நிக்கிறே?'... மறக்க முடியுமா என் தெய்வமே!!) இறுதியில் ரோஜாரமணி சீக்கிரமே அங்கு வந்து நடிகர் திலகத்திற்கும், பத்மினிக்கும் நடந்த உணர்ச்சிகரமான வாதப் பிரதிவாதங்களை எதேச்சையாகக் கேட்டு தன் தந்தையான நடிகர் திலகத்திற்கும், தன் டீச்சருக்கும் முன்னாலேயே ஏதோ தொடர்பிருக்கிறது என்று உணர்ந்து கொள்வார்.
அந்தக் காட்சியில் ரோஜாரமணி பிரதிபலிக்கும் முகபாவங்கள் வெகு அற்புதமாக இருக்கும். (உதட்டை சுழித்துக் காண்பிக்கும் அந்த சந்தேகப் பார்வை இன்னும் சூப்பர்) பின் காரில் நடிகர் திலகத்துடன் பேசாமல் அமர்ந்தபடி 'உம்' மென்று வருவதும் பின் நடிகர் திலகம் 'கீதா! நாம் உங்க டீச்சர் வீட்டுக்கு வந்தத பத்தி சம்பவங்களை அம்மாவிடம் (விஜயாவிடம்) சொல்லாதே" என்று சற்றே கடிந்து சொல்ல, 'என்னை பொய் சொல்ல சொல்றீங்களா?' என்று வெடுக்கென்று குத்துவதும், அதற்கப்புறம் வரும் காட்சிகளில் காட்டும் முறைப்பும், வெறுப்பும் ரோஜாரமணியை எப்போதும் மறக்க முடியாதபடி செய்து விட்டது.
பாடல் திரிக்கு சம்பந்தமில்லாவிட்டாலும் 'பருவகால' மங்கையை நினைவு படுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பு இந்தப் பதிவு.
அப்படியே எங்கள் குலதெய்வத்தையும் பூஜை செய்தாகி விட்டது.
Last edited by vasudevan31355; 19th June 2014 at 04:59 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
19th June 2014, 04:35 PM
#555
அவள் ஒரு பச்சை குழந்தை
வெரி வெரி யூத்புல் மற்றும் useful சாங்
நமபளையும் யூத் ஆ மாத்தும்
முதல் சரணத்தில்
பாலாவின் குரல்
"வாலை பருவம் கேட்டது கேள்வி
விடை தர இங்கே வந்தனள் தேவி
இளமையின் ரகசியம் எதுவென அறிந்தது நெஞ்சம் "
உடனே சுசீலா
"போகப் போக புரிவது என்ன
போதையில் ஏதோ வருவது என்ன
எனகன்னே அதிசயம் இதுவென விளக்கிடு கொஞ்சம் "
பின் பாலா
"இன்பத்தில் நீயும் நானும் ஊமை இல்லையோ "
உடனே சுசீலா
மிச்சங்கள் என்னென்ன நாளை என்று கூறவில்லையோ "
சுசீலாவின் பேஸ் வாய்ஸ்
"அவன் ஒரு ராஜகுமாரன் அழகிய மாறன் "
இரண்டாவது சரணம்
பாலா
"நீ இருக்கும் கண்ணில் நான் இருக்க வேண்டும்
கண்ணே கண்ணே என்னை ஏற்று கொள்வாயோ "
பின் சுசீலா
நினைவிருக்கும் நெஞ்சில் நானிருக்க வேண்டும்
நெஞ்சே நெஞ்சே என்னை அணைத்து கொள்வோயோ
பாலா
அச்சத்தை ஆசை வந்து வெல்ல கூடாதோ
சுசீலா
அம்மம்மா நாணத்தில் ஆடையிட்டு மூடக்கூடாதோ "
சுபெர்ப் lines
-
19th June 2014, 04:40 PM
#556
வாசு சார்
ரோஜா ரமணி திடீர்னு காணமல் போனவர்கள் பட்டியலில் இடம் பெற்றார்
ஏன் என்று தெரியவில்லை
இரு மலர்கள் செம performance
1980 க்கு அபபறும் எதாவது தமிழ் படம் நடித்தார்களா
நாம் அலசிய இரு நிலவுகள் படத்தில் கிராமத்து பொண்ணாக வருவர்
-
19th June 2014, 04:45 PM
#557
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,

'அவள் ஒரு பச்சைக் குழந்தை' பாடலைப் பற்றிப் பதிவிட்டு 'அவள் ஒரு பச்சைக் குழந்தை'யை ஞாபகப்படுத்தி விட்டீர்களே!
-
19th June 2014, 04:56 PM
#558
Senior Member
Diamond Hubber
'அவள் ஒரு பச்சைக்குழந்தை' பவானி அழகு.
'மாலை இளமனதில் ஆசைதனை தூண்டியது அதிகாலை
அந்த நினைவில் தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது
மாலை'
மொட்டை செம கலக்கல். சுரேந்தர், நம்ம ஷோபா சந்திரசேகர்தானே?
விஜய் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
அப்புறம்
'பொண்ணு பாக்க வந்தாரு மாப்பிள்ளை'
கேட்டிருக்கீகளா.?
'இளையராசாவ நினச்சு
இளச்சுப் போனேங்க தவிச்சு'
-
19th June 2014, 04:57 PM
#559
vasu sir
நீ ஒரு மஹராணி தொடர்ச்சி என்று போட்டு இருக்க வேண்டும்
அவசரத்தில் டைப் செய்ய மறந்து விட்டேன்
-
19th June 2014, 04:59 PM
#560
கரெக்ட் சார்
மொட்டை early மெலடி
சிலோன் ரேடியோ உபயம் செம ஹிட் பாடல்
விஜயகுமார் பவானி தானே சார் ஜோடி
Bookmarks